உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

ரூ.60 லட்சத்தில் புதுப்​பிக்கும் பணி தொடக்​கம்

சிதம் ​ப​ரம்,​ நவ. 22:​
கட​லூர் மாவட்​டம் காட்​டு​மன்​னார்​கோ​வில் அருகே கீழக்​க​டம்​பூ​ரில் உள்ள ருத்ர கோடீஸ்​வ​ரர் கோயில் சிதைந்த நிலை​யில் உள்​ளது. 9-ம் நூற்​றாண்​டில் கட்​டப்​பட்ட பழமை வாய்ந்த இந்த கோயிலை மத்​திய அர​சின் தொல்​லி​யல்​துறை ஆய்வு செய்து ரூ.60 லட்​சம் செல​வில் ஆல​யத்தை புதுப்​பிக்​கும் பணி தொடங்​கப்​பட்​டுள்​ளது.​ ​ ஆலய புதுப்​பிக்​கும் பணியை கனி​மொழி எம்.பி., பள்​ளிக்​கல்​வித்​துறை அமைச்​சர் தங்​கம் தென்​ன​ரசு ஆகி​யோர் சனிக்​கி​ழமை பார்​வை​யிட்​ட​னர்.​ ​ இந்த ஆல​யம் குறித்து தொல்​லி​யல்​துறை கல்​வெட்டு ஆராய்ச்​சி​யா​ளர் சீனு​வா​சன் தெரி​வித்​தது:​ இந்த கோயில் 9-ம் நூற்​றாண்​டில் கட்​டப்​பட்ட பழமை வாய்ந்த ஆல​ய​மா​கும். இந்த கோயி​லில் தெற்கு வடக்​காக 4 அடி அக​லத்​துக்கு படி​க​ளு​டன் அமைந்​துள்ள சுரங்​கம் ஒன்று உள்​ளது. இச்​சு​ரங்​கத்​தின் மூலம் அரு​கில் உள்ள மேலக்​க​டம்​பூர் அமிர்​த​க​டேஸ்​வ​ரர் ஆலய பணிக்கு தொழி​லா​ளர்​கள் சென்​றி​ருக்​க​லாம் எனக்​கூ​றப்​ப​டு​கி​றது. ஆல​யத்தை சுற்றி சைவம் வளர்த்த பெரி​யோர்​க​ளின் 10க்கும் மேற்​பட்ட சிலை​கள் உள்​ளன. கரு​வ​றை​யின் பின் சூரி​யன் சிலை வடி​வில் காட்​சி​ய​ளிக்​கி​றார். மேலக்​க​டம்​பூர் அமிர்​த​க​டேஸ்​வர் ஆல​யத்​துக்​கான சிலை​கள் இங்கு செய்​யப்​பட்​டுள்​ளன. சிலை​க​ளைச் செய்​யும் போது அனைத்து சிலை​க​ளும் உடைந்​த​துள்​ளது. அந்த சிலை​கள் வெளிப் பிர​கா​ரத்​தில் தற்​போ​தும் உள்​ளன. திரு​ம​ணம் ஆகா​த​வர்​கள் இந்த கோயி​லுக்​குச் சென்று வழி​பட்​டால் திரு​ம​ணம் நடை​பெ​றும் என்​பது ஆல​யத்​தின் ஐதீ​க​மா​கும். மேலக்​க​டம்​பூர் அமிர்​த​க​டேஸ்​வ​ரர் ஆல​யம் கட்​டு​வ​தற்கு வந்த சிற்​பி​கள் மற்​றும் தொழி​லா​ளர்​கள் வழி​ப​டு​வ​தற்​காக இந்த ஆல​யம் நிறு​வப்​பட்​டி​ருக்​க​லாம் என ஆராய்ச்​சி​யா​ளர் சீனு​வா​சன் தெரி​வித்​தார்.​ ​ சிறப்​பு​வாய்ந்த இந்த ஆல​யம் சித​ல​ம​டைந்​துள்​ள​தால் தனி​யார் ஒப்​பந்​தக்​கா​ரர்​கள் மூலம் தொல்​லி​யல்​துறை ​ ரூ.60 லட்​சம் செல​வில் புதுப்​பிக்​கும் பணியை தொடங்​கி​யுள்​ளது. இந்த சீர​மைப்பு பணி முடி​வுற 6 மாதங்​கள் ஆகும் எனக் கூறப்​ப​டு​கி​றது. ஆல​யத்​தின் அடித்​த​ளம் வரை அப்​பு​றப்​ப​டுத்​தப்​பட்டு மீண்​டும் அதே இடத்​தில் தொல்​லி​யல் துறை​யால் வழங்​கப்​பட்​டுள்ள மாதிரி வரை​ப​டத்​தைக் கொண்டு புதிய ஆல​யம் கட்​டப்​பட உள்​ளது என ஊராட்சி மன்​றத் தலை​வர் ஜோதி தெரி​வித்​தார்.

Read more »

ஊரை​விட்டு ஒதுக்கி வைக்​கப்​பட்​ட​வர் பிரச்னை வட்டாட்​சி​யர் தலை​மை​யில் அமை​திக் கூட்​டம்

சிதம்​ப​ரம்,​ நவ.22:

சிதம்​ப​ரம் அருகே தலித் சமு​தா​யத்​தைச் சேர்ந்த விரி​வு​ரை​யா​ளர் குடும்​பம் ​ ஊரை​விட்டு ஒதுக்கி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக வந்த புகா​ரின் பேரில் சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் சனிக்​கி​ழமை பஞ்​சா​யத்​தார் முன்​னி​லை​யில் அமை​திக் கூட்​டம் நடை​பெற்​றது.​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த கொடிப்​பள்​ளம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் த.சர​வ​ணக்​கு​மார். தலித் சமு​தா​யத்​தைச் சேர்ந்த இவர் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக் கழ​கத்​தில் பொரு​ளா​தா​ரத் துறை​யில் விரி​வு​ரை​யா​ள​ராக உள்​ளார். ​ இவர் கொடிப்​பள்​ளம் அருகே உள்ள பின்​னத்​தூர் மேற்கு கிரா​மத்​தைச் சேர்ந்த ஒளி​மு​க​மது என்​ப​வ​ருக்​குச் சொந்​த​மான நிலத்தை 2005-ம் ஆண்டு முதல் குத்​த​கைக்கு எடுத்து பயி​ரிட்டு வந்​துள்​ளார். அந்த நிலத்தை ஆதி​தி​ரா​வி​டர்​க​ளுக்கு பட்டா வழங்​கு​வ​தற்​காக ஆதி​தி​ரா​விட நலத்​துறை மூலம் கிரா​மப் பஞ்​சா​யத்​தார் நட​வ​டிக்கை மேற்​கொண்​ட​னர். இத​னி​டையே ஒளி​மு​க​மது நிலத்தை விற்​பனை செய்ய முன்​வந்த போது அந்த நிலத்தை சர​வ​ணக்​கு​மார் வாங்​கி​யுள்​ளார். இந்​நி​லை​யில் அக்​கி​ரா​மத்​தைச் சேர்ந்த சிலர் ஊர் மக்​க​ளுக்கு வீட்டு மனைப்​பட்டா வழங்க வேண்​டும் என்​ப​தற்​காக அந்த நிலத்​தைத் தரு​மாறு கேட்​ட​னர். அதற்கு சர​வ​ணக்​கு​மார் மறுத்​த​தால் கிராம பஞ்​சா​யத்​துக்கு அழைத்து இந்த நிலத்தை ஊருக்​காக விட்​டுக் கொடுக்க வேண்​டும் எனக்​கோ​ரி​னர். அதற்​கும் சர​வ​ணக்​கு​மார் மறுத்​த​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ இது குறித்து சர​வ​ணக் குமார் காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​துள்​ளார். அதில்அவர் தெரி​வித்​துள்​ள​தா​வது:​ "17-11-09ல் ஊர்​பஞ்​சா​யத்​தைக் கூட்டி அந்த நிலத்​தில் நான் பயி​ரி​டக்​கூ​டாது,​ எனது வீட்​டுக்கு யாரும் செல்​லக்​கூ​டாது,​ எனக்கு கடை​க​ளில் மளிகை சாமான் கொடுக்​கக்​கூ​டாது,​ என்​னு​டன் யாரும் உறவு வைத்​துக் கொள்​ளக்​கூ​டாது என்று தெரி​வித்​த​தோடு மீறி தொடர்பு கொண்​டால் ரூ.5 ஆயி​ரம் அப​ரா​தம் போட்​டுள்​ள​னர். இத​னால் தனி​ம​னித உரிமை பாதிக்​கப்​பட்டு நான் மிகுந்த மன உளச்​ச​லுக்கு ஆளா​கி​யுள்​ளேன்' என்று ​ கிள்ளை காவல் நிலை​யத்​தில் வியா​ழக்​கி​ழமை புகார் அளித்​துள்​ளார். கிள்ளை போலீ​ஸôர் புகா​ரைப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ள​னர்.​ ​ மேலும் இது​கு​றித்து சென்னை மனித உரிமை ஆணை​யம்,​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர்,​ ஆதி​தி​ரா​விட நலத்​துறை செய​லா​ளர் ஆகி​யோ​ருக்கு கடி​தம் அனுப்​பி​யுள்​ள​தாக சர​வ​ணக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.​ இந்​நி​லை​யில் சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் தலை​மை​யில் அமை​திக் கூட்​டம் சனிக்​கி​ழமை நடந்​தது. கூட்​டத்​தில் கிராம பஞ்​சா​யத்​தார் மற்​றும் சர​வ​ணக்​கு​மார்,​ கிள்ளை சப்-​இன்ஸ்​பெக்​டர் அஸ்​கர்அலி உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர். கட​லூர் மாவட்ட ஆதி​தி​ரா​வி​டர் நலத்​துறை மூலம் வீட்​டு​ம​னைப்​பட்டா வழங்க சர​வ​ணக்​கு​மார் வாங்​கி​யுள்ள நிலம் தேர்​வு​செய்ப்​பட்டு அரசு பரிந்​து​ரைக்கு சென்​றுள்​ளது. நில​ஆர்​ஜி​தம் செய்ய அர​சாணை வரும் வரை சர​வ​ணக்​கு​மார் நிலத்​தில் பயி​ரி​டு​வதை யாரும் தடுக்​கக்​கூ​டாது. அப்​படி தடுத்​தால் தடுப்​ப​வர்​கள் மீது கிரி​மி​னல் நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும். மேலும் நில​ஆர்​ஜி​தம் செய்​வ​தற்​கான முயற்​சி​களை ஆதி​தி​ரா​வி​டர் நலத்​துறை மூலம் விரைந்து முடிப்​பது என தீர்​மா​னிக்​கப்​பட்​டது.

Read more »

மசூதி நிலத்​தில் ஏர் ஓட்​டி​ய​தால் பர​ப​ரப்பு

பண் ​ருட்டி,​ நவ. 22: ​

மசூதி நிர்​வா​கத்​தால் குத்​தகை விவ​சா​யி​க​ளி​டம் இருந்து கைய​கப்​ப​டுத்தி வேலி அமைத்​தி​ருந்த நிலத்​தின் வேலியை அகற்றி குத்​தகை விவ​சா​யி​கள் ஞாயிற்​றுக்​கி​ழமை ஏர் ஓட்​டி​ய​தால் கானஞ்​சா​வடி கிரா​மத்​தில் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​ ​ பண்​ருட்டி வட்​டம் கானஞ்​சா​வடி கிரா​மத்​தில் மசூ​திக்கு சொந்​த​மான சுமார் 100 ஏக்​கர் நிலம் உள்​ளது. இந்த நிலத்​தில் அக்​கி​ரா​மத்தை சேர்ந்த குத்​தகை விவ​சா​யி​கள் பலர் கடந்த மூன்று தலை​மு​றை​யாக விவ​சா​யம் செய்து வரு​கின்​ற​னர். இந்​நி​லை​யில் ​ சிதம்​ப​ரத்​தைச் சேர்ந்த மீர்​அ​மீது,​ அமீர்​பாஷா ஆகி​யோர் மசூதி பரா​ம​ரிப்பு நிலத்தை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்டு கடந்த சில வாரங்​க​ளுக்கு முன் போலீஸ் உத​வி​யு​டன் நிலத்​தைச் சுற்றி கம்பி வேலி அமைத்​த​னர். இந்​நி​லை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை 20க்கும் மேற்​பட்ட குத்​தகை விவ​சா​யி​கள் கம்பி வேலியை அகற்றி ஏர் ஓட்​டி​ய​தால் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது. தக​வல் அறிந்த காடாம்பு​லி​யூர் சப்-​இன்ஸ்​பெக்​டர் சுப்​பையா உள்​ளிட்ட போலீ​ஸôர் சம்​பவ இடத்​துக்​குச் சென்று குத்​தகை விவ​சா​யி​களை கலைந்து போக செய்​த​னர்.​

Read more »

இலக்​கிய மன்ற விழா

பண் ​ருட்டி,​ நவ.22:​

பண்​ருட்டி வட்​டம் காடாம்பு​லி​யூர் இரா​ஜ​குரு மழ​லை​யர் மற்​றும் தொடக்​கப் பள்​ளி​யில் இலக்​கிய மன்ற விழா வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​ பள்ளி தாளா​ள​ரும் செய​ல​ரு​மான எஸ்.குரு​நா​தன் தலைமை தாங்​கி​னார். அண்​ணா​மலை பல்​க​லைக் கழக ஆங்​கில விரி​வு​ரை​யா​ளர் ஜி.அற்​பு​த​வேல்​ராஜா வர​வேற்​றார். புல​வர் இரா.சஞ்​சீ​வி​ரா​யர் சிறப்​பு​ரை​யாற்​றி​னார்.​ ​ திருக்​கு​றள் ஒப்​பு​வித்​தல் போட்​டி​யில் வெற்றி பெற்ற மாணவ,​ மாண​வி​க​ளுக்கு திருக்​கு​றள் செல்​வர் என்ற விருது வழங்கி சிறப்​பிக்​கப்​பட்​டது. இதில் ஆசிரியைகள் எஸ்.நர்​மதா,​ எல்.சிவ​காமி,​ ஆர்.தேவி,​ எல்.நித்​தியா,​ எஸ்,​அமலா,​ ஏ.இந்​துஜா, எஸ்.பாக்​கியா கலந்துகொண்டனர்.

Read more »

4 தினங்​க​ளுக்கு பின் சடலத்தை பெற்ற உற​வி​னர்கள்

நெய்வேலி, நவ. 22:​

என்​எல்சி சுரங்​கத்​தில் மார​டைப்பு கார​ண​மாக வியா​ழக்​கி​ழமை இறந்த ஒப்​பந்​தத் தொழி​லா​ளி​யின் சட​லத்தை உற​வி​னர்​கள் ஞாயிற்​றுக்​கி​ழமை பெற்​றுச்​சென்​ற​னர்.​ ​

என்​எல்சி முதல் சுரங்​கத்​தில் ஒப்​பந்​தத் தொழி​லா​ளி​யாக பணி​பு​ரிந்​த​வர் பழ​னி​வேல்​(47). இவர் கடந்த வியா​ழக்​கி​ழமை வழக்​கம்​போல் பணிக்கு வந்​துள்​ளார். அப்​போது பணி​யி​டத்​தில் நெஞ்​சுவலி ஏற்​பட்​ட​தா​கக் கூறி​யி​ருக்​கி​றார். உட​னி​ருந்த சக தொழி​லா​ளர்​கள் பழ​னி​வே​லுவை என்​எல்சி மருத்​து​வ​ம​னைக்கு கொண்டு சென்​ற​னர்.​ ​ பழ​னி​வே​லுவை பரி​சோ​தித்த டாக்​டர்​கள்,​ அவர் இறந்​து​விட்​ட​தா​கக் தெரி​வித்​துள்​ள​னர். இதை​ய​டுத்து சில தொழிற்​சங்க நிர்​வா​கி​க​ளும்,​ பழ​னி​வே​லு​வின் உற​வி​னர்​க​ளும்,​ பழ​னி​வே​லு​வின் குடும்​பத்​தில் ஒரு​வ​ருக்கு நிரந்​தர வேலை​யும்,​ ரூ.5 லட்​சம் இழப்​பீட்​டுத் தொகை​யும் கோரி​ய​தா​கத் தெரி​கி​றது.​ ​ ​ இதற்கு நிர்​வா​கம் ஒப்​புக்​கொள்ள மறுத்து,​ பழ​னி​வே​லு​வின் குடும்​பத்​துக்கு சட்ட ரீதி​யாக கிடைக்க வேண்​டிய சலு​கை​களை வழங்க முன்​வந்​தது. இதை தொழிற்​சங்க நிர்​வா​கத்​தி​னர் ஏற்​றுக்​கொண்​ட​னர். இருப்​பி​னும் பழ​னி​வே​லு​வின் உற​வி​னர்​கள் நிர்​வா​கத்​தின் உறு​தியை ஏற்க மறுத்து சட​லத்​தை​யும் வாங்க மறுத்​த​னர். இத​னால் கடந்த 4 தினங்​க​ளாக பழ​னி​வே​லு​வின் உடல் என்​எல்சி மருத்​து​வ​ம​னை​யின் பிண​வ​றை​யில் வைக்​கப்​பட்​டி​ருந்​தது.​ ​ இந்​நி​லை​யில் பாமக தொழிற்​சங்க செய​லர் தில​கர் தலை​யிட்டு,​ பழ​னி​வே​லு​வின் குடும்​பத்​தி​ன​ரி​டம் சம​ர​சப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இப்​பேச்​சின் முடி​வில் பழ​னி​வே​லு​வின் குடும்​பத்​தில் ஒரு​வ​ருக்கு ஒப்​பந்த அடிப்​ப​டை​யில் வேலை​யும்,​ ஒப்​பந்​த​தா​ரர் மூலம் ரூ.25 ஆயி​ரம் வழங்க நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக தில​கர் கூறி​ய​தை​ய​டுத்து பழ​னி​வே​லு​வின் உற​வி​னர்​கள் சட​லத்​தைப் பெற ஒப்​புக்​கொண்​ட​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ ​ இதை​ய​டுத்து பழ​னி​வே​லு​வின் உடல் பிரேத பரி​சோ​த​னைக்​காக பண்​ருட்டி அரசு மருத்​து​வ​ம​னைக்கு கொண்டு செல்​லப்​பட்டு பின்​னர் உற​வி​னர்​க​ளி​டம் ஒப்​ப​டைக்​கப்​பட்​டது. பழ​னி​வே​லு​வின் இறப்பு குறித்து நெய்வேலி தெர்​மல் போலீ​சார் வழக்​குப் பதி​வு​செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​ற​னர்.​

Read more »

நட​ரா​ஜர் கோயி​லில் வழி​பட்​டார் ராசாத்தி அம்​மாள்

சிதம் ​ப​ரம்,​ நவ. 22:​

தமி​ழக முதல்​வ​ரின் துணை​வி​யார் ராசாத்தி அம்​மாள் மற்​றும் கனி​மொழி எம்பி மக​னும்,​ முதல்​வ​ரின் பேர​னு​மான ஆதித்​யன் ஆகி​யோர் சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லில் ஞாயிற்​றுக்​கி​ழமை வழி​பட்​ட​னர்.​ ​ ஆலய செயல்​அ​லு​வ​லர் கே.சிவக்​கு​மார்,​ திமுக நக​ரச் செய​லா​ளர் கே.ஆர்.செந்​தில்​கு​மார்,​ பொதுக்​குழு உறுப்​பி​னர் ஏ.எஸ்.திரு​நா​வுக்​க​ரசு,​ இளை​ஞ​ரணி துணை அமைப்​பா​ளர் ஜேம்ஸ்​வி​ஜ​ய​ரா​க​வன்,​ நகர மாண​வ​ரணி அமைப்​பா​ளர் அப்​பு​சந்​தி​ர​சே​க​ரன்,​ பரங்​கிப்​பேட்டை ஒன்​றி​யச் செய​லா​ளர் முத்​து​பெ​ரு​மாள் ஆகி​யோர் சால்வை கொடுத்து வர​வேற்று கோயி​லுக்​குள் அழைத்​துச் சென்​ற​னர்.​ ​ பின்​னர் ராசாத்தி அம்​மாள்,​ ஆதித்​யன் ஆகி​யோர் கோயி​லுக்​குள் சென்று சிற்​றம்​ப​ல​மேடை மீது ஏறி சாமி தரி​ச​னம் செய்​த​னர். அவர்​க​ளுக்கு ஆலய பொது தீட்​சி​தர்​கள் சிறப்பு அர்ச்​சனை மற்​றும் ஆரா​தனை செய்து பிர​சா​தத்தை வழங்​கி​னர். ​ பின்​னர் ஆலய வளா​கத்​தில் உள்ள தில்​லை​கோ​விந்​த​ரா​ஜப் பெரு​மாள் ஆல​யம்,​ சர​பேஸ்​வ​ரர் சன்​னதி,​ ஊர்த்​து​வ​தாண்​ட​வர் சன்​னதி,​ ஆதி​மூ​ல​நா​தர் சன்​னதி,​ சிவ​கா​மி​அம்​மன் ஆல​யம் ஆகி​ய​வற்​றுக்​கும் சென்று தரி​ச​னம் செய்​த​னர். முன்​ன​தாக நக​ரின் எல்​லை​யில் உள்ள தில்​லைக்​கா​ளி​யம்​மன் கோயி​லுக்​கும் சென்று சாமி தரி​ச​னம் செய்​த​னர். பின்​னர் வட​லூ​ரில் நடை​பெற்று வரும் வேலை​வாய்ப்பு முகா​முக்கு புறப்​பட்​டுச் சென்​ற​னர்.​

Read more »

சொத்து பத்திர பாக்கி: ஆட்சியர் புது உத்தரவு

கட ​லூர்,​ நவ. 22:​

கட​லூர்,​ விழுப்​பு​ரம் மாவட்​டங்​க​ளில் உள்ள சார் பதி​வா​ளர் அலு​வ​ல​கங்​க​ளில் பதிவு செய்​யப்​பட்ட சொத்​துப் பத்​தி​ரங்​க​ளுக்​கா​னப் பாக்​கித் தொகையை செலுத்தி,​ பத்​தி​ரங்​க​ளைப் பெற்​றுக் கொள்​ள​லாம் என்று கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் சனிக்​கி​ழமை அறி​வித்​தார்.​ ​ அவர் வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு: ​​ ​

கட​லூர் மற்​றும் விழுப்​பு​ரம் மாவட்​டங்​க​ளில் உள்ள கட​லூர்,​ சிதம்​ப​ரம்,​ விருத்​தா​ச​லம்,​ கள்​ளக்​கு​றிச்சி,​ விழுப்​பு​ரம்,​ திண்​டி​வ​னம் ஆகிய சார் பதி​வா​ளர் அலு​வ​ல​கங்​க​ளில் குறைவு முத்​தி​ரைச் சட்ட வரு​வாய் திட்​டத்​தின் கீழ் அர​சுக்கு செலுத்​தப்​ப​டா​மல் நிலு​வை​யில் உள்ள பாக்​கி​தா​ரர் விவ​ரப்​பட்​டி​யல் தயார் செய்​யப்​பட்டு உள்​ளது,​ இந்த விவ​ரங்​கள் தேசிய தக​வல் மைய இணைய தளத்​தில் கட​லூர்,​ விழுப்​பு​ரம் மாவட்​டங்​க​ளுக்​கான பகு​தி​யில் வெளி​யி​டப்​பட்டு உள்​ளது. ​​ சம்​பந்​தப்​பட்ட பாக்​கி​தா​ரர்​கள்,​ இந்த சேவை​யைப் பயன்​ப​டுத்தி,​ தங்​கள் சொத்​துக்​குச் செலுத்த வேண்​டிய குறைவு முத்​தி​ரைக் கட்​ட​ணத் தொகையை தெரிந்து கொண்டு,​ 30-ம் தேதிக்​குள் பாக்​கித் தொகையை செலுத்தி தங்​கள் பத்​தி​ரங்​க​ளைப் பெற்​றுக் கொள்​ள​லாம்.​

Read more »

ஜாமீ​னில் வந்த கைதி தற்​கொலை

சிதம்​ப​ரம்,​ நவ. 22:​

சிதம்​ப​ரத்​தில் ஜாமீ​னில் வந்த கொலை வழக்கு கைதி தூக்​குப் போட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த கே.பஞ்​சக்​குப்​பத்​தைச் சேர்ந்​த​வர் குமார் ​(35). இவர் 3 மாதங்​க​ளுக்கு முன்பு அதே பகு​தி​யைச் சேர்ந்த மோகன் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் கைது செய்​யப்​பட்​டார். தற்​போது ஜாமீ​னில் வெளி​வந்த குமார் சிதம்​ப​ரம் வாகீ​ச​ந​க​ரில் உள்ள உற​வி​னர் சந்​தி​ரன் வீட்​டில் தங்கி தின​மும் சிதம்​ப​ரம் தாலுக்கா காவல் நிலை​யத்​தில் நிபந்​தனை ஜாமீன் கையெ​ழுத்​திட்டு வரு​கி​றார். ஞாயிற்​றுக்​கி​ழமை அதி​காலை சந்​தி​ரன் வீட்டு மாட்​டுக் கொட்​ட​கை​யில் குமார் தூக்கு போட்டு இறந்​தார். இது​கு​றித்து சந்​தி​ரன் அளித்த புகா​ரின் பேரில் நகர போலீஸ் சப்-​இன்ஸ்​பெக்​டர் மீனாம்​பிகை வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளார்.

Read more »

வடலூர் திமுக வேலைவாய்ப்பு முகாமில் 19 ஆயிரம் பேருக்கு வேலை

நெய்வேலி, நவ. 22:

திமுக சார்பில் வடலூரில் நடைபெற்ற 3 நாள் வேலைவாய்ப்பு முகாமில் 19 ஆயிரத்து 98 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முகமாக திமுக சார்பில் 3 நாள் வேலைவாய்ப்பு முகாம் வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இம்முகாம் குறித்து கனிமொழி கூறியது: மாவட்டத்தில் 16 மையங்களில் இருந்து 54 ஆயிரம் பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த 3 நாள்களில் 36 ஆயிரத்து 349 பேர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். முதல் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வில் 10 ஆயிரத்து 887 பேர் பங்கேற்றதில் 2271 பேருக்கு உடனடி நியமன ஆணையும், 3 ஆயிரத்து 959 பேருக்கு எழுத்துத் தேர்வும் நடைபெற்றுள்ளது. இரண்டாம் நாள் நடைபெற்ற டிப்ளமோ மற்றும் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வில் 9 ஆயிரத்து 943 பேர் பங்கேற்றதில் 5 ஆயிரத்து 772 பேருக்கு பணி நியமன ஆணையும், 2 ஆயிரத்து 209 பேருக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மூன்றாம் நாளில் 12 மற்றும் 10 வகுப்பு முடித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வில் 16 ஆயிரத்து 119 பேர் பங்கேற்றதில் 11 ஆயிரத்து 55 பேருக்கு பணி நியமன ஆணையும், 1849 பேருக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரை திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் 73 ஆயிரம் பேருக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தான் அதிகப்படியாக 19 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்றார் கனிமொழி.வேலைவாய்ப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர் போஸ்கோ ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 52 மி.மீ. மழை

கடலூர், நவ. 22:

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையிலும் கன மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கடலூரில் 52.3 மி.மீ. மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைநத 24 மணி நேரத்தில், மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

கடலூர் 52.3, பரங்கிப்பேட்டை 33, குப்பநத்தம் 25.2, காட்டுமன்னார்கோவில் 19, விருத்தாசலம் 19, கொத்தவாச்சேரி 16, வேப்பூர் 13, அண்ணாமலை நகர் 12, புவனகிரி 12, வானமாதேவி 5.2, பண்ருட்டி 5.

Read more »

நடராஜர் கோயிலில் நிரந்தரமாக கேமரா பொருத்த முடிவு

சிதம்பரம், நவ.22:

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கோபுர நுழைவு வாயில்களில் நிரந்தரமாக கேமரா பொருத்த கடலூர் மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் முக்கிய இடமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நிரந்தரமாக கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின் கோட்னீஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பேரில் சிதம்பரம் டிஎஸ்பி மா.மூவேந்தன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் கோயில் செயல்அலுவலர் கே.சிவக்குமாரிடம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

Read more »

ஊர் குளத்தில் புகுந்த முதலை பிடிபட்டது

சிதம்பரம், நவ. 22:

சிதம்பரம் அருகே உள்ள துரைப்பாடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு முதலை பிடிபட்டது. சிதம்பரம் அருகே உள்ள துரைப்பாடி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தில் முதலை ஒன்று புகுந்தது. இதனால் ஊர்மக்கள் குளத்திற்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர். பின்னர் தீயணைப்புத்துறை மூலம் குளத்தில் உள்ள நீரை ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றினர். அப்போது குளத்திலிருந்து வெளியேறிய 10 அடி நீளம், 500 கிலோ எடை கொண்ட முதலையை ஊர் மக்கள் பிடித்து கட்டி வைத்து சிதம்பரம் வனத்துறை அதிகாரி வி.விஜயனிடம் ஒப்படைத்தனர். அந்த முதலை வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை இந்த வாரத்தில் சிதம்பரம் பகுதியில் இளநாங்கூர், வேளக்குடி ஆகிய இடங்களில் 2 முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன. முதலை கடித்து வேளக்குடியைச் சேர்ந்த சாவித்திரி (45) என்ற பெண்மணி கடந்த வியாழக்கிழமை இறந்தார். தற்போது மூன்றாவதாக துரைப்பாடி கிராமத்தில் 10அடி நீள முதலை பிடிக்கப்பட்டுள்ளது. முதலைகள் அட்டகாசத்தினால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர் நிலைகளில் குளிக்கவோ, மாடுகளை குளிப்பாட்டவோ முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.

Read more »

கனமழை: காய்கறி தோட்டங்கள் சேதம்

பண்ருட்டி, நவ.21:

கனமழை காரணமாக பண்ருட்டி வட்டப் பகுதியில் பயிரிட்டிருந்த காய்கறி தோட்டங்கள் சேதம் அடைந்து உற்பத்தி குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பண்ருட்டி வட்டம் பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியத்தை சேர்ந்த கட்டமுத்துப்பாளையம், ராசாப்பாளையம், கண்டரக்கோட்டை, சாத்திப்பட்டு, பெரியகாட்டுப்பாளையம், விசூர், கருக்கை, மேலிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100-ம் மேற்பட்ட ஏக்கர் நிலப் பரப்பில் கத்திரிக்காய், வெண்டை, பாகல், முருங்கை, புடலை, பீர்கண், கொத்தவரை, முள்ளங்கி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. இந்த காய்கறிகளை பண்ருட்டி ரத்தினம்பிள்ளை மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் வாங்கி கடலூர், சிதம்பரம், நெய்வேலி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்வர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் காய்கறித் தோட்டத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் செடிகள் அழுகின. மேலும் மழையின் காரணமாக செடிகளில் இருந்த பூ மற்றும் பிஞ்சுகள் அழுகி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் பண்ருட்டி ரத்தினம்பிள்ளை மார்கெட்டுóக்கு உள்ளூர் காய்கறி வரத்து குறைந்துள்ளது. மேலும் வெளியூர்களில் இருந்து வரும் கேரட், கோஸ், பீன்ஸ், செüசெü உள்ளிட்ட காய்கறிகளின் வரத்தும் மழையால் குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேலும் இருநாட்கள் மழை பெய்யும் போது எஞ்சியுள்ள காய்கறி செடிகள் பாதிப்படையக் கூடும் என விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

Read more »

குழந்தைகள் தின விழா

பண்ருட்டி, நவ. 21:
சி.என்.பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை வி.மல்லிகா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் என்.வைத்திலிங்கம், 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் 125 பேருக்கு ஆங்கில அகராதி வழங்கி சிறப்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் எஸ்.நடராஜன் பங்கேற்றார். ஆசிரியர் டி.செல்வக்குமார் நன்றி கூறினார்.ஸ்வாசிகா மாணவர் இயக்கம்: ஸ்வாசிகா மாணவர் இயக்கம் சார்பில் குழந்தைகள் தின விழா புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் கொண்டாடப்பட்டது.தொரப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஸ்வாசிகா நிறுவனர் ஏ.முத்துக்குமரன் வரவேற்றார். விழாவில் மாணவர்களிடையே ஓவியப்போட்டி, மாறு வேடப்போட்டி மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடத்தப்பட்டு பரிசு அளிக்கப்பட்டது. விழாவில் ஆசிரியர் வ.கோவிந்தனுக்கு ஆன்மிக இலக்கிய எழுத்துச் சித்தர் பட்டமும், கல்வெட்டு ஆய்வாளர் அரங்க. தமிழரசனுக்கு தொல்பொருள் ஆராய்ச்சி திலகம் என்ற பட்டமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

Read more »

சான்றிதழ் வழங்கும் விழா

சிதம்பரம், நவ.21:

சிதம்பரம் வடக்குவீதி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மகளிர்களுக்கு இலவச தையல் பயற்சி 30 நாள்களுக்கு அளிக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மன்ற வளாகத்தில் நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஜயகுமாரி சான்றிதழ்களை வழங்கினார். தையல் பயிற்சி பள்ளி முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். ஜி.பர்வதவர்த்தனி வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலை. விரிவுரையாளர் டி.எஸ்.எஸ்.ஞானகுமார் வாழ்த்துரையாற்றினார்.

Read more »

நகராட்சி குப்பை வண்டி சிறைபிடிப்பு

பண்ருட்டி, நவ.21:

திருவதிகை சுடுகாட்டில் குப்பை கொட்டிய நகராட்சி குப்பை வண்டியை மக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனர். பண்ருட்டி நகரப் பகுதியில் நாள் ஒன்றுக்கு 6 டன் அளவுள்ள குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடவசதி இல்லாததால் அவை பல்வேறு இடத்தில் கொட்டப்படுகிறது. பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள சுடுகாடு முழுவதும் குப்பைகள் கொட்டப்பட்டு தற்போது பிணம் புதைக்க இடம் இல்லாததால் ஆற்றில் புதைத்து வருகின்றனர். குப்பைகளை கெடிலம் நதியில் கொட்டி வருவதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாள்களாக திருவதிகை சுடுகாட்டில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வந்தது. இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சுடுகாட்டில் குப்பை கொட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி சனிக்கிழமை குப்பை கொட்ட வந்த வண்டியை கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலர் பி.துரை தலைமையில் மக்கள் சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்த ஆணையர் கே.உமாமகேஸ்வரி, நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் ஆகியோர் மக்களிடம் சமரசம் பேசி குப்பை கொட்ட மாட்டோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் வண்டியை விடுவித்தனர்.

Read more »

ரூ. 5 கோடியில் துணை மின் நிலையம் கனிமொழி இன்று திறந்து வைக்கிறார்

கடலூர், நவ.21:

குறிஞ்சிப்பாடியில் ரூ. 5 கோடியில் அமைக்கப்பட்டு இருக்கும் துணை மின் நிலையத்தை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறிசிப்பாடியில் ரூ. 5.17 கோடியில் 110 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா காலை 10-30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு தகவல் மையத்தையும் கனிமொழி திறந்து வைக்கிறார்.

Read more »

வீணா​கும் நீரை சேமிக்க விவ​சா​யி​கள் கோரிக்கை

கட ​லூர். நவ.21:​

ஆண்​டு​தோ​றும் வீரா​ணம் ஏரிக்கு வரும் நீர் வீணாக்​கப்​ப​டு​கி​றது. வீணா​கும் நீரைச் சேமித்து விவ​சா​யத்​துக்​குப் பயன்​ப​டுத்த வேண்​டும் என்று விவ​சா​யி​கள் கோரிக்கை விடுத்​த​னர்.​ ​ கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தலை​மை​யில் வெள்​ளிக்​கி​ழமை நடந்​தது. கூட்​டத்​தில் விவ​சா​யி​கள் தெரி​வித்த கோரிக்​கை​கள்:​ ​​ ​ வீரா​ணம் ஏரிக்கு வட​கி​ழக்​குப் பரு​வ​ம​ழைக் காலத்​தில் காவி​ரி​யில் இருந்து தண்​ணீர் நிறுத்​தப்​பட்​டா​லும்,​ நீர்ப்​பி​டிப்​புப் பகு​தி​க​ளில் இருந்து 15 ஆயி​ரம் கன அடிக்கு மேல் நீர் கிடைக்​கி​றது. ஆனால் இந்த நீரைச் சேமிக்க முடி​யாத நிலை இருக்​கி​றது. ரூ.110 கோடி செல​வில் வீரா​ணம் ஏரி​யின் உய​ரத்தை 47.5 அடி​யாக உயர்த்​திய போதி​லும்,​ வட​கி​ழக்​குப் பரு​வ​மழை காலத்​தில் 44 அடிக்கு மேல் நீரைத் தேக்​கு​வது இல்லை. ​​ ​ வீரா​ணத்​தில் இருந்து தண்​ணீர் பெறும் சேத்​தி​யாத்​தோப்பு அணைக்​கட்​டின் உய​ரம் 7.5 அடி​யாக இருந்​தும் 4 அடி உய​ரத்​துக்கு மேல் தண்​ணீர் தேக்​கு​வது இல்லை. இத​னால் ஆண்​டு​தோ​றும் 12 ஆயி​ரம் ஏக்​கர் நிலங்​க​ளுக்​குத் தண்​ணீர் கிடைப்​பது அரி​தாகி விட்​டது. புதிய வீரா​ணம் திட்​டத்​தில் ரூ.40 கோடி செல​வி​டப்​ப​டா​மல் இருப்​ப​தா​கக் கூறு​கி​றார்​கள். அதில் வீரா​ணம் வடக்கு வடி​கால் மத​கைச் சீர​மைக்க ரூ.10 கோடி​யில் தயா​ரிக்​கப்​பட்ட திட்​டம் என்ன ஆயிற்று என்றே தெரி​ய​வில்லை. ​​ ​ அந்த மத​கைச் சீர​மைக்​கா​த​தால்,​ ஆண்​டு​தோ​றும் வடக்கு வடி​கால் மத​குப் பகு​தி​யில்,​ தண்​ணீர் வெளி​யே​றா​மல் இருக்க ரூ.2 லட்​சம் செல​விட்டு மணல் மூட்டை அடுக்​கு​வ​தும்,​ வீரா​ணம் நீர்​மட்​டம் உயர்ந்​த​தும்,​ அவ​ச​ர​மா​கத் தண்​ணீ​ரைத் திறந்​து​விட,​ மணல் மூட்​டை​களை அகற்​று​வ​து​மாக பொதுப் பணித்​துறை அதி​கா​ரி​கள் செயல்​ப​டு​கி​றார்​கள். ​​ ​
இதே​போல் கட​லூர்,​ நாகை மாவட்​டங்​க​ளின் டெல்டா பகு​தி​க​ளுக்கு காவிரி நீர் வழங்​கும் கொள்​ளி​டம் கீழ​ணை​யில் இருந்து அதி​க​பட்​சம் பாச​னத்​துக்கு 4300 கன​அடி நீர்​தான் எடுக்க முடி​யும். ஆனால் ஆண்​டு​தோ​றும் ​ சுமார் 100 டிஎம்.சி. நீர் கட​லில் கலந்து வீணா​கிக் கொண்டு இருக்​கி​றது. தண்​ணீ​ரைச் சேமித்து பாசன வச​தி​யைப் பெருக்க அரசு எந்த நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்​றார் சேத்​தி​யத்​தோப்பு விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் விஜ​ய​கு​மார். ​​ ​ பாச​முத்​தான் ஓடை விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன்:​ சிதம்​ப​ரம் புற​வ​ழிச் சாலை​யில் போதிய பாலங்​கள் கட்​டா​த​தால் 15 சதுர கி.மீ. பரப்​ப​ள​வில் வீரா​ணம் உபரி நீர் தேங்கி வடி​யா​மல் விளை நிலங்​க​ளில் தேங்கி,​ சம்பா நெல் பயிர்​க​ளைப் பாதிக்​கி​றது. மேலும் ஒரே பாலத்​தின் வழி​யாக அதிக தண்​ணீர் வழிந்​தோடி பாசி​முத்​தான் ஓடை​யின் கரை​களை உடைத்து விளை நிலங்​க​ளைச் சேதப்​ப​டுத்​து​கி​றது. சிதம்​ப​ரம் நக​ரக் கழி​வு​கள் பாசன வாய்க்​கா​லான கான்​சா​கிப் வாய்க்​கா​லில் கலப்​ப​தைத் தடுக்க வேண்​டும்.​ ​ விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்க மாவட்​டச் செய​லா​ளர் ரவீந்​தி​ரன்:​ 5 மாவட்​டங்​க​ளில் பெய்​யும் கன​ம​ழை​யில் இருந்து கிடைக்​கும் உப​ரி​நீர் முழு​வ​தும் கட​லூர் மாவட்​டம் வழி​யாக ஓடி,​ கட​லில் வீணா​கக் கலக்​கி​றது. கட​லூர் மாவட்​டத்​தில் வெள்​ளச் சேதங்​க​ளை​யும் ஏற்​ப​டுத்​து​கி​றது. ஏரி​கள் குளங்​கள் மரா​மத்து சரி​யாக நடக்​க​வில்லை. உபரி நீரைச் சேமித்து விவ​சா​யத்​துக்​குப் பயன்​ப​டுத்​தும் ஒருங்​கி​ணைந்த திட்​டம் வேண்​டும். ​​ ​ வெலிங்​டன் ஏரி பாசன விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் பெண்​ணா​டம் சோம​சுந்​த​ரம்:​ திட்​டக்​குடி தாலு​கா​வில் நிலங்​களை அளந்து பட்டா வழங்​கு​வது,​ நிலம் விற்​பனை செய்​யப்​பட்​ட​தும் பெயர் மாற்​றம் செய்​வது உள்​ளிட்ட பணி​கள் முறை​யாக நடக்க வில்லை. 400க்கும் மேற்​பட்ட மனுக்​கள் நிலு​வை​யில் உள்​ளன. 6-வது மாதம் அளிக்​கப்​பட்ட மனு​வுக்கு இது​வரை நட​வ​டிக்கை இல்லை. ஆனால் அண்​மை​யில் அளித்த மனு​மீது நட​வ​டிக்கை எடுத்து இருக்​கி​றார்​கள். இதற்​காக ரூ.4 ஆயி​ரம் வரை லஞ்​சம் பெறப்​ப​டு​கி​றது.​ ​ கூட்​டத்​தில் விவ​சாய சங்​கங்​க​ளின் பிர​தி​நி​தி​கள் பட்​டாம்​பாக்​கம் வெங்​க​ட​பதி,​ பகண்டை அரு​ணாச்​ச​லம்,​ கே.கோதண்​ட​ரா​மன்,​ கார்​மாங்​குடி வெங்​க​டே​சன் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்டு கோரிக்​கை​க​ளைத் தெரி​வித்​த​னர். மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​ வேளாண் இணை இயக்​கு​நர் பாபு,​ ஆட்​சி​ய​ரின் நேர்​முக உத​வி​யா​ளர் ​(வேளாண்மை)​ மணி உள்​ளிட்ட அதி​கா​ரி​கள் பல​ரும் கலந்து கொண்​ட​னர்.

Read more »

கடற்​கரை கிரா​மங்​க​ளில் வசிப்​ப​வர்​க​ளுக்கு அடை​யாள அட்டை

சிதம்​ப​ரம்,​ நவ. 21:​

கடற்​கரை கிரா​மங்​க​ளில் வசிப்​ப​வர்​க​ளுக்கு அடை​யாள அட்டை வழங்​கு​வ​தற்​காக சிதம்​ப​ரம் அருகே உள்ள கடற்​கரை கிரா​மங்​க​ளில் நவம்​பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்​பர் 30-ம் தேதி வரை புகைப்​ப​டம் எடுக்​கும் பணி நடை​பெ​று​கி​றது. எனவே அப்​ப​குதி மக்​கள் ஏற்​கெ​னவே கணக்​கெ​டுப்பு முடி​வுற்று அதற்​காக வழங்​கப்​பட்ட ஒப்​பு​தல் ரசீதை புகைப்​ப​டம் எடுக்​கும் மையத்​துக்கு எடுத்​துச் சென்று தங்​க​ளது கைரே​கையை பதிவு செய்து புகைப்​ப​டம் எடுத்​துக் கொள்ள வேண்​டும் என வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.​ ​ கடற்​கரை பாது​காப்பை பலப்​ப​டுத்​தும் ஒர் அங்​க​மாக கடற்​கரை கிரா​மங்​க​ளில் முதல் கட்​ட​மாக தேசிய மக்​கள் தொகை பதி​வேட்டை தயா​ரிக்க இந்​திய அரசு தீர்​மா​னித்​துள்​ளது. அதில் ஒவ்​வொரு தனி நப​ரைப் பற்​றிய புள்ளி விப​ரங்​கள்,​ 15 வயது,​ அதற்கு மேற்​பட்ட வய​து​டைய நபர்​க​ளி​டம் புகைப்​ப​டம்,​ கைரேகை சேக​ரிக்​கப்​பட்டு அடை​யாள அட்டை வழங்​கும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது என வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் தெரி​வித்​துள்​ளார்.​

Read more »

குடும்ப ஓய்​வூ​தி​யர்​கள் கவ​னத்​துக்கு....

​ சிதம்​ப​ரம்,​ நவ. 21:​

குடும்ப ஓய்வு ஊதி​யம் பெற்று வரும் ஒய்​வூ​தி​யர்​கள்,​ சிறப்பு மருத்​து​வம் மற்​றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல​வுத் தொகையை -​ குடும்ப ஓய்​வூ​தி​யர் மருத்​துவ நலத்​திட்​டத்​தின் கீழ் அர​சி​ட​மி​ருந்து திரும்​பப் பெற​லாம்.​ ​ இத்​திட்​டத்​தில் சேர அர​சுக்கு மாதம் ரூ.75 வீதம் கரு​வூ​லம் முலம் செலுத்த வேண்​டும். விருப்​பம் உள்​ள​வர்​கள் வரு​கிற 15-11-2009-க்குள் சிதம்​ப​ரம் துணைக் கரு​வூல அலு​வ​ல​கத்​தில் விண்​ணப்​பம் அளிக்க வேண்​டும் என ஓய்​வு​பெற்ற அலு​வ​லர் சங்​கப் பொரு​ளா​ளர் எஸ்.நம்​மாழ்​வார் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.​

Read more »

பண்ணைக் குட்டை அமைக்க மானி​யம்

பண் ​ருட்டி,​ நவ. 21:​

தமி​ழக அரசு அளித்த 2 ஏக்​கர் இல​வச நிலத்​தில் பண்ணை குட்​டை​கள் அமைக்க மானி​யம் அளிக்​கப்​ப​டும் என பண்​ருட்டி வேளாண்மை உதவி இயக்​கு​நர் பி.ஹரி​தாஸ் தெரி​வித்​துள்​ளார்.​

இது​கு​றித்து அவர் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்பு:​ ​

கட​லூர் மாவட்​டத்​தில் ஆண்​டுக்கு ஒரு ஹெக்​டே​ரில் ஒரு கோடி லிட்​ட​ருக்​கும் மேலான மழை நீர் பெய்​கி​றது. சுத்​த​மான மழை நீர் மூன்​றில் ஒரு பங்கு கட​லில் கலந்து வீணா​கி​றது.​ ஒவ்​வொரு வய​லி​லும் மழை நீர் வழிந்​தோ​டும் பகு​தி​யில் பண்ணை குட்டை அமைக்க வேண்​டும். 15 மீ நீளம்,​ 6 மீ அக​லம்,​ 1.5 மீ ஆழம் கொண்ட குட்​டை​யில் 1.35 லட்​சம் லிட்​ட​ரும்,​ 15 மீ நீளம்,​ 3 மீ அக​லம்,​ 1.5 மீ ஆழம் கொண்ட குட்​டை​யில் 67.5 ஆயி​ரம் லிட்​டர் தண்​ணீ​ரும் சேமிக்க முடி​யும். மேற்​கண்ட அள​வில் பண்ணை குட்டை அமைக்க,​ அர​சின் 2 ஏக்​கர் இல​வச நிலம் பெற்​றோர் ரூ. 4650-ம்,​ ரூ. 2750-யை மானி​ய​மாக பெற்று அமைக்​க​லாம்.​ வெட்​டிய மண்ணை வயல் வரப்பை உயர்த்​தல்,​ நிலத்தை சமப்​ப​டுத்​தல்,​ குட்​டையை சுற்றி அணை போட பயன்​ப​டுத்​த​லாம். இக் குட்​டை​க​ளால் மண் அரிப்பு தவிர்க்​கப்​பட்டு,​ வளம் கூடும்,​ வெள்​ளச் சேதம் குறைந்து,​ நிலத்​தடி நீர் உய​ரும்,​ சேமிக்​கப்​பட்ட மழை​நீர் கோடைக் காலத்​தில் சொட்டு நீர் பாச​னம்,​ நீர் ஊற்​று​தல் மற​றும் மருந்து தெளிக்க பயன்​ப​டும்.​ எனவே,​ ஒவ்​வொரு விவ​சா​யி​க​ளும் தங்​கள் நிலத்​தில் பண்ணை குட்டை அமைத்து மழை நீரை சேமித்து பயன் அடைய வேண்​டும் என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

Read more »

30-ல் கரும்பு விவ​சா​யி​கள் ஆர்ப்​பாட்​டம்

பண் ​ருட்டி,​நவ. 21:​

நெல்​லிக்​குப்​பம் பாரி சக்​கரை ஆலை முன் நவம்​பர் 30-ம் தேதி கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடத்த,​ தமிழ்​நாடு கரும்பு விவ​சா​யி​கள் சங்​கத்​தின் ஈஐடி பாரி சர்க்​கரை ஆலை மட்ட சங்​கக் கூட்​டத்​தில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது.​ ​ திரு​வந்​தி​பு​ரம் தொட்டி ஊராட்சி மன்​றத் துணை தலை​வர் என்.ஆறு​மு​கம் தலைமை தாங்​கி​னார். கரும்பு பிழி​தி​றன் 9.5 என்று இருப்​பதை மாற்றி 8.5 சதம் என்று மத்​திய அரசு அறி​விக்க வேண்​டும். கரும்பு விலையை டன் ஒன்​றுக்கு ரூ.2 ஆயி​ரம் என நிர்​ண​யம் செய்ய வேண்​டும் என்று கோரி 30.11.2009-ல் நெல்​லிக்​குப்​பம் சக்​கரை ஆலை முன் கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வது. டிசம்​பர் 9-ம் தேதி மது​ரை​யில் நடை​பெ​றும் மாநில மாநாட்​டில் கலந்​துக்​கொள்​வது என தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது.

Read more »

கூட்​டு​றவுச் சங்​கங்​க​ளுக்கு திமுக ஆட்​சி​யில்தான் புத்​து​ணர்வு

நெய்வேலி,​ நவ. 21:​

கூட்​டு​றவு சங்​கங்​க​ளுக்கு திமுக ஆட்​சி​யில் தான் புத்​து​ணர்வு கிடைத்​துள்​ளது. எனவே அனை​வ​ரும் கூட்​டு​றவு சங்​கங்​கள் மூலம் வளம் பெற்று வாழ வேண்​டும் என விருத்​தா​ச​லத்​தில் வியா​ழக்​கி​ழமை நடந்த கூட்​டு​றவு வார விழா​வில் மாநி​லங்​க​ளவை உறுப்​பி​னர் கனி​மொழி பேசி​னார்.​ ​

விவரம்:​

திமுக ஆட்சி ஏற்​பட்ட பிறகு தாயும்,​ சேயும் நல​மு​டன் இருக்​கும் நிலை உரு​வாகி உள்​ளது. கூட்​டு​றவு சங்​கங்​கள்,​ அச்​ச​கங்​கள் என 26 சங்​கங்​கள் நலி​வ​டைந்து வந்த வேளை​யில் திமுக ஆட்சி பொறுப்​பேற்று 24 சங்​கங்​கள் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளன.​ ​ மேலும் அர​வா​ணி​கள்,​ உல​மாக்​கள் என நலி​வ​டைந்​த​வர்​க​ளின் நல​னைக் கருத்​தில் கொண்டு அவர்​க​ளுக்கு பல நல்ல திட்​டங்​களை முதல்​வர் அறி​வித்​துள்​ளார் என்​றார் கனி​மொழி.​ ​ விழா​வில் மக்​கள் நல்​வாழ்​வுத்​துறை அமைச்​சர் எம்.ஆர்.கே.பன்​னீர்​செல்​வம் சிறப்பு விருந்​தி​ன​ரா​கக் கலந்​து​கொண்டார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior