உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 17, 2009

தக​வல் எது​வும் தெரி​யாத ​ கட்​டுப்​பாட்டு அறை

கட​லூர்,​​ டிச.​ 16:​ 

                          மழை காலங்​க​ளில் கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் செயல்​ப​டும் கட்​டுப்​பாட்டு அறை​யிóல் இருந்து,​​ பொது​மக்​கள் எந்​த​வித தக​வ​லை​யும் கேட்​டுப்​பெற முடி​யாத நிலை உள்​ளது.​

                          வ​ட​ கி​ழக்​குப் பருவ மழை​கா​லத்​தில் 24 மணி நேர​மும் செயல்​ப​டுóம் கட்​டுப்​பாட்டு அறை மாவட்ட ஆட்​சி​ய​ரால் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.​ ​ புயல் வெள்​ளம் போன்ற அவ​சர காலங்​க​ளில் கட்​டுப்​பாட்டு அறைக்கு பொது​மக்​கள் தொடர்பு கொள்​ளும் வகை​யில் கட்​ட​ண​மில்லா தொலை​பேசி எண் அறி​விக்​கப்​பட்டு உள்​ளது.​ இந்​தத் தொலை​பே​சி​யில் தொடர்​பு​கொ​ணடு பொது​மக்​கள் தக​வல் பெற​லாம்,​​ தெரி​விக்​க​லாம் என்​றும் மாவட்ட ஆட்​சி​யர் அறி​வித்​தி​ருந்​தார்.​ 

                         ஆனால்,​​ கட்​டுப்​ப​பாட்டு அறை​யு​டன் பொது​மக்​கள் தொடர்பு கொண்​டால் எந்​த​வித தக​வ​லும் தெரி​விப்​பது இல்லை.​ தொலை​பே​சி​யில் தொடர்​பு​கொண்​டால்,​​ இப்​பி​ரி​வில் ​ பணி​பு​ரி​யும் ஊழிர்​கள் பெரும்​பா​லான வேளை​க​ளில் தொலை​பே​சியை எடுப்​பதே இல்லை என்று பொது​மக்​கள் புகார் தெரி​விக்​கின்​ற​னர்.​ ​÷மே​லும்,​​ செய்​தி​யா​ளர்​கள் தொடர்பு கொண்​டா​லும் அவர்​க​ளுக்​கும் இதே நிலை​தான்.​ 

                              கட​லூர் மாவட்​டத்​தில் மிகுந்த பர​பப்​பா​கப் பேசப்​ப​டும் வீரா​ணம் ஏரி​யின் இன்​றைய நிலை என்ன ​ நீர் மட்​டம் எவ்​வ​ளவு ஏரிக்கு ​ அதி​கப்​ப​டி​யாக நீர் வரு​கி​றதா மக்​கள் பாது​காப்​பான இடங்​க​ளுக்​குச் செல்ல வேண்​டிய நிலை இருக்​கி​றதா போன்ற கேள்​வி​க​ளுக்கு கட்​டுப்​பாட்டு அறை​யில் இருந்து கிடைக்​கும் ஒரே பதில் தெரி​யாது,​​ தெரி​யாது என்​ப​து​தான்.​ ​ நீர் நிலை​கள்,​​ ஏரி​க​ளின் நீóர் மட்​டம்,​​ அவற்​றில் இருந்து வெளி​யேற்​றப்​ப​டும் உபரி நீரால் மக்​க​ளுக்​குப் பாதிப்பு ஏற்​ப​டுமா ​ போன்ற விவ​ரங்​கள் எல்​லாம்,​​ நாங்​கள் தெரிந்து வைத்து இருப்​பது இல்லை என்​றும் ஊழி​யர்​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​ அதற்​காக இந்​தப் பிரிவு ஏற்​ப​டுத்​தப் பட​வில்லை என்​றும் கட்​டுப்​பாட்டு அறை ஊழி​யர்​கள் உறு​தி​யு​டன் தெரி​வித்​த​னர்.​ ​ 

                      மக்​கள் வரிப் பணத்​தில் ஊதி​யம் பெறும் ஊழி​யர்​க​ளைக் ​ கொண்ட கட்​டுப்​பாட்டு அறை,​​ ​ மக்​க​ளுக்​குப் பயன்​ப​டா​மல்,​​ ​ குறைந்​த​பட்​சம் செய்​தி​யா​ளர்​க​ளுக்​குக் கூட தக​வல் தெரி​விக்க இய​லாத நிலை​யில் உள்​ளது.​

Read more »

அண்​ணா​மலை பல்​கலை பட்​ட​ம​ளிப்பு விழா​ 22-ம் தேதி ஆளு​நர் வருகை:​ ஏற்​பாடு குறித்து ஆட்​சி​யர் ஆய்வு

சிதம்​ப​ரம்,​ டிச.​ 16:​ 

                      சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் இம் மாதம் 22-ம் தேதி நடை​பெ​றும் 77-வது பட்​ட​ம​ளிப்பு விழா​வில் தமி​ழக ஆளு​ந​ரும்,​​ பல்​க​லைக்​க​ழக வேந்​த​ரு​மான சுர்​ஜித் சிங் பர்​னாலா பங்​கேற்று மாணவ,​​ மாண​வி​க​ளுக்கு பட்​டங்​களை வழங்​கு​கி​றார்.​ 

                      இ​தற்​காக அவர் அன்று காலை சென்​னையி​லி​ருந்து ஹெலி​காப்​டர் மூலம் சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லை​ந​கர் வரு​கி​றார்.​ இதை​யொட்டி,​​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.​ சீதா​ரா​மன் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக வேளாண் கல்​லூரி வளா​கத்​தில் உள்ள ஹெலி​பேடு இடத்தை புதன்​கி​ழமை நேரில் பார்​வை​யிட்டு ஆய்வு மேற்​கொண்​டார். பின்​னர்,​​ துணை​வேந்​தர் பங்​க​ளா​வில் அனைத்​துத் துறை அதி​கா​ரி​கள் கூட்​டம் ​ நடை​பெற்​றது.​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.​ நட​ரா​ஜன்,​​ துணை​வேந்​தர் டாக்​டர் எம்.​ ராம​நா​தன்,​​ பதி​வா​ளர் எம்.​ ரத்​தி​ன​ச​பா​பதி,​​ பல்​க​லைக்​க​ழக மக்​கள்-​ தொடர்பு அலு​வ​லர் எஸ்.​ செல்​வம்,​​ டி.எஸ்.பி.​ மா.​ மூவேந்​தன் பல்​வேறு துறை​க​ளைச் சேர்ந்த அதி​கா​ரி​கள் பங்​கேற்​ற​னர்.​
       
                   ஆ​ளு​நர் வரு​கை​யை​யொட்டி,​​ பாது​காப்பு குறித்​தும்,​​ ​ சாலை வசதி,​​ குடி​நீர்,​​ மின்​சார வசதி ஆகி​ய​வற்றை தயார்​நி​லை​யில் இருக்க வேண்​டும் என அதி​கா​ரி​க​ளுக்கு ஆட்​சி​யர் உத்​தி​ர​விட்​டார்.

Read more »

காலவரம்பற்ற உண்ணாவிரதம்​ ஆட்​சி​ய​ரின் முயற்​சி​யால் வாபஸ்

கட​லூர்,​​ டிச.​ 16: ​ 

                   கட​லூர் லாரன்ஸ் சாலை​யில் ரயில்வே சுரங்​கப் பாதை அமைக்​கக் கோரி புதன்​கி​ழமை தொடங்​க​வி​ருந்த கால​வ​ரம்​பற்ற உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் பெ.​ சீதா​ரா​மன் மேற்​கொண்ட முயற்​சி​யால் கைவி​டப்​பட்​டது.​

                      க​ட​லூர் லாரன்ஸ் சாலை​யில் உள்ள ரயில்வே கேட்​டால்,​​ போக்​கு​வ​ரத்து நெரி​சல் ஏற்​ப​டு​வ​தைத் தவிர்க்க சுரங்​கப்​பாதை அமைக்க வேண​டும் என்​பது கட​லூர் மக்​க​ளின் நீண்​ட​கால கோரிக்கை.​ இதில் வணி​கர்​கள் ஒரு கருத்​தை​யும் வேறு சிலர் மாற்​றுக் கருத்​து​க​ளை​யும் தெரி​வித்து வரு​வ​தால் இத் திட்​டம் கிணற்​றில் போடப்​பட்ட கல்​லாக மாறி​யது.​ ​ இது​கு​றித்து பல்​வேறு துறை அதி​கா​ரி​க​ளும் மாறு​பட்ட கருத்​துக்​களை தெரி​வித்து வந்​த​னர்.​ ​ ​​ ​ 

                        சுரங்​கப் பாதைக்​காக கட​லூர் பொது​நல அமைப்​பு​க​ளின் கூட்​ட​மைப்பு பல்​வேறு போராட்​டங்​களை நடத்​தி​யுள்​ளது.​ இறு​தி​யாக பொது​நல அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள் புதன்​கி​ழமை கால​வ​ரம்​பற்ற உண்​ணா​வி​ர​தம் தொடங்​கு​வ​தாக அறி​வித்​த​னர்.​ ஆனால்,​​ இதற்கு காவல் துறை அனு​மதி அளிக்​க​வில்லை.​
  
                       இந்​நி​லை​யில்,​​ புதன்​கி​ழமை காலை கொட்​டும் மழை​யை​யும் பொருள்​ப​டுத்​தா​மல்,​​ உண்​ணா​வி​ர​தத்​தைத் தொடங்​கு​வ​தற்​காக மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​கம் முன் திரண்டு வந்​த​னர்.​ பந்​த​லும் போடப்​பட்​டிந்​தது.​

                     மா​வட்ட நுகர்​வோர் பாது​காப்​புப் பேரவை பொதுச் செய​லர் நிஜா​மு​தீன்,​​ வெண்​புறா பேர​வைத் தலை​வர் குமார்,​​ நக​ரக் குடி​யி​ருப்​போர் நலச் சங்​கக் கூட்​ட​மைப்​பின் பொதுச் செய​லர் மரு​த​வா​ணன் மற்​றும் பல்​வேறு அமைப்​பு​க​ளச் சேர்ந்த வழக்​க​றி​ஞர்​கள் திரு​மார்​பன்,​​ மன்​ற​வா​ணன் உள்​ளிட்ட பல​ரும் ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் உண்​ணா​வி​ர​தம் தொடங்க இருந்​த​னர்.​ ​​ இந்​நி​லை​யில்,​​ கட​லூர் எம்.எல்.ஏ.​ அய்​யப்​பன்,​​ மாவட்ட ஆட்​சி​யர் பெ.​ சீதா​ரா​மன் ஆகி​யோர் போராட்ட ஒருங்​கி​ணைப்​பா​ளர் நிஜா​மு​தீ​னைத் தொடர்பு கொண்டு,​​ சுரங்​கப் பாதைத் திட்​டம் நிறை​வேற நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்​ற​னர்.​ எனவே,​​ உண்​ணா​வி​ர​தம் இருக்க வேண்​டாம் என்று கேட்​டுக் கொண்​ட​னர்.​ மேலும்,​​ இப்​பி​ரச்னை தொடர்​பாக பிற்​ப​கல் 3 மணிக்​குப் பேச​லாம் என்று மாவட்ட ஆட்​சி​யர் தெரி​வித்​தார்.​ இதன்​படி மாலை மாவட்ட ஆட்​சி​யர் தலை​மை​யில் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.​ இதில் பொது​நல அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள்,​​ நெடுஞ்​சா​லைத் துறை அதி​கா​ரி​கள் வரு​வாய்த் துறை அதி​கா​ரி​கள் கலந்​து​கொண்​ட​னர்.​

                      மா​வட்ட ஆட்​சி​யர் ரயில்வ உயர் அதி​கா​ரி​கள் நெடுஞ்​சா​லைத்​துறை அதி​கா​ரி​க​ளு​டன் பேசி சுரங்​கப்​பா​தைத் திட்​டத்​தின் தற்​போ​தைய நிலை குறித்து விளக்​கி​னார்.​ சுரங்​கப்​பாதை அமைக்க ஆயத்​தப் பணி​கள் முடிந்​து​விட்​டன.​ கட்​டு​மா​னப் பணி விரை​வில் தொடங்​கும்.​ இப்​ப​ணி​யைக் கண்​கா​ணிக்க நெடுஞ்​சா​லைத்​துறை,​​ வரு​வாய்த்​துறை ரயில்வே துறை அலு​வ​லர்​கள் கொண்ட கண்​கா​ணிப்​புக் குழு அமைக்​கப்​ப​டும் என்​றும் மாவட்ட ஆட்​சி​யர் உறு​தி​யத்​த​தைத் தொடர்ந்து உண​ணா​வி​ர​தப் போராட்​டம் கைவி​டப்​பட்​ட​தாக அறி​விக்​கப்​பட்​டது.​

Read more »

மாண​வர்​க​ளுக்கு இல​வச சீருடை

நெய்வேலி, ​​ டிச.​ 16: ​ 

                  இந்​தி​ரா​ந​க​ரில் உள்ள ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்​ளி​யில் பயி​லும் ஏழை மாணவ,​ மாண​வி​க​ளுக்கு இல​வச சீருடை மற்​றும் நோட்​டுப் புத்​த​கங்​கள் வழங்​கும் நிகழ்ச்சி திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​

             நெய்வேலி மக​ளிர் மன்​றம் சார்​பில் நடை​பெற்ற இந்​நி​கழ்ச்​சி​யில் நெய்வேலி மக​ளிர் மன்​றத் தலை​வி​யும்,​​ என்.எல்.சி.​ நிறு​வன தலை​வ​ரின் மனை​வி​யு​மான கிஷ்​வர் சுல்​தான் கலந்​து​கொண்டு 170 மாணவ,​மாண​வி​க​ளுக்கு இல​வச சீரு​டை​க​ளை​யும்,​​ ​ 210 மாண​வர்​க​ளுக்கு தனது சொந்த செல​வில் ​ நோட்​டுப்​ புத்​த​கங்​க​ளை​யும் வழங்​கி​னார்.​ ​நெய்வேலி மக​ளிர் மன்ற நிர்​வா​கி​கள் உஷா சேகர்,​​ காவோரி சிவ​ஞா​னம்,​​ தன​லட்​சுமி,​​ சுஜாதா உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்.​

Read more »

ஆய்வு ரயில் முன் மறி​யல் போராட்​டம்

கடலூர்,​​ ​ டிச.​ ​ 16 :​ ​ 
 
                 கட​லூ​ரில் புதன்​கி​ழமை ஆய்​வுக்கு வந்த ரயில் முன் மறி​யல் போராட்​டம் நடத்​திய விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யைச் சேர்ந்த 50 பேரை போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ கட​லூ​ரில் ரயில்வே சுரங்​கப் பாதை திட்​டத்தை நிறை​வேற்ற வலி​யு​றுத்தி இப் போராட்​டம் நடத்​தப்​பட்​டது.​÷க​ட​லூர் லாரன்ஸ் சாலை​யில் சுர​ங்​கப் பாதை அமைக்க வேண​டும் என்ற கோரிக்​கைக்​காக போராட்​டங்​கள் வலு​வ​டைந்து வரு​கின்​றன.​ ​​      
 
                  சுரங்​கப் பாதை அமைக்க வேண்​டும் திட்​டம் எந்த அள​விóல் உள்​ளது என்​பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளி​யிட வேண்​டும்;​ இல்லை​யேல்,​​ ரயில் மறி​யல் போராட்​டம் நடத்​தப்​ப​டும் என ​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் அறி​விக்​கப்​பட்டு இருந்​தது.​ வி​ழுப்​பு​ரம்-​ மயி​லா​டு​துறை அக​லப் பாதைத் திட்​டம் நிறை​வேற்​றப்​பட்டு வரு​வ​தால்,​​ இத் தடத்​தில் ரயில்​கள் இயக்​கம் கடந்த 3 ஆண்​டு​க​ளாக ​ நிறுத்​தப்​பட்டு உள்​ளது.​ 
 
                 எ​னவே,​​ விடு​த​லைச் சிறுத்​தை​க​ளின் ரயில் மறி​யல் போராட்​டம் எப்​போது நடை​பெ​றும் என்ற கேள்வி எழா​மல் இருந்​தது.​ ​
 
                     இந் ​நி​லை​யில்,​​ திருச்சி கோட்ட ரயில்வே மேலா​ளர் மற்​றும் அலு​வ​லர்​கள் ரயில் தண்​ட​வா​ளங்​கள் ஆய்​வுப் பணிக்​கா​கத் தனி ரயி​லில் புதன்​கி​ழமை மயி​லா​டு​து​றை​யில் இருந்து வந்து கொண்​டி​ருப்​ப​தாக தக​வ​ல​றிந்த விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​னர் திருப்​பாப்பு​லி​யூர் ரயில்வே கேட் அருகே ஆய்வு ரயில் முன் மறி​யல் போராட்​டம் நடத்​தி​னர்.​ இ​தற்கு கட்​சி​யின் ​ கட​லூர் மாவட்​டச் செய​லர் சு.​ திரு​மா​றன் தலைமை வகித்​தார்.​ கட்சி நிர்​வா​கி​கள் அறி​வுக்​க​ரசு,​​ சொக்க​லிங்​கம்,​​ ​ கிட்டு,​​ ஜெய​ரா​மன்,​​ சுரேஷ்,​​ புலிக்​கொ​டி​யான் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்.​
 
               ம​றி​யல் போராட்​டம் கார​ண​மாக ஆய்வு ரயில் திருப்​பாப்பு​லி​யூர் ரயில் நிலை​யத்​தைக் கடந்து செல்​வ​தில் 20 ​ நிமி​டம் தாம​தம் ஏற்​பட்​டது.​ மறிய​லில் ஈடு​பட்ட 50 பேரை போலீ​ஸôôர் கைது செய்​த​னர்.​ கைது​செய்​யப்​பட்ட அனை​வ​ரும் மாலை விடு​தலை செய்​யப்​பட்​ட​னர்.

Read more »

பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​க​ளுக்கு கணினி பயிற்சி

விருத்தா​ச​லம்,​​ ​ டிச.16:​ 

                    விருத்​தா​ச​லத்​தில் அனை​வ​ருக்​கும் கல்வி திட்​டத்​தின்​கீழ் பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​க​ளுக்கு அடிப்​படை கணினி பயிற்சி திங்​கள்​கி​ழமை தொடங்​கி​யது.​

                 வி​ருத்​தா​ச​லம் கல்வி மாவட்​டத்​தின் சார்​பாக அனை​வ​ருக்​கும் இடை​நி​லைக் கல்​வித் திட்​டத்​தின்​கீழ் 9,​ 10-ம் வகுப்பு பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​கள் 120 பேருக்கு,​விருத்​தா​ச​லம் பாத்​திமா மெட்​ரிக் பள்ளி உட்​பட மூன்று மையங்​க​ளில் அடிப்​படை கணினி பயிற்சி திங்​கள்​கி​ழமை முதல் 5 நாள்​க​ளுக்கு நடை​பெ​று​கி​றது.​ ​

                      வி​ருத்​தா​ச​லம் பாத்​திமா மெட்​ரிக் பள்​ளி​யில் நடை​பெ​றும் செய்​முறை பயிற்​சியை அப்​பள்ளி முதல்​வர் அருள்​மேரி தொடங்கி வைத்​தார்.​ இப்​பள்​ளி​யில் 48 ஆசி​ரி​யர்​கள் பயிற்சி பெற்று வரு​கின்​ற​னர்.​ பெ​ரிய நெச​ளூர் பள்ளி தலைமை ஆசி​ரி​யர் இளங்​கோ​வன் விருத்​தா​ச​லம் கல்வி மாவட்ட,​​ திட்ட ஒருங்​கி​ணைப்​பா​ள​ரா​க​வும்,​இப்​ப​யிற்​சி​யின் நோக்​கம் பற்றி மாநில அள​வில் பயிற்சி பெற்று வந்த கணினி ஆசி​ரி​யர்​கள் அமிர்​த​ராஜ்,​தேவேந்​தி​ரன் ஆகி​யோர் கருத்​தா​ளர்​க​ளா​க​வும் இருந்து வரு​கின்​ற​னர்.​

                     இப்​ப​யிற்​சி​யா​னது உண்டு உறை​வி​டப் பயிற்​சி​யாக 18-ம் தேதி வரை ஐந்து நாள்​கள் நடை​பெ​றும் என விருத்​தா​ச​லம் கல்வி மாவட்ட திட்ட ஒருங்​கி​ணைப்​பா​ளர் இளங்​கோ​வன் தெரி​வித்​தார்.​

Read more »

தண்​ணீ​ரில் தத்​த​ளிக்​கும் எல்.என்.​ புரம் ஊராட்சி

பண்ருட்டி,​​ டிச.​ 16: ​ 

                 பண்​ருட்டி வட்​டம் எல்.என்.புரம் ஊராட்​சிப் பகு​தி​யில் உள்ள குடி​யி​ருப்பு பகு​தி​யில் மழை நீர் சூழ்ந்து தேங்கி நிற்​ப​தால் அப்​ப​கு​தி​யில் வசிக்​கும் பொது மக்​கள் பெரி​தும் பாதிக்​கப்​பட்​டுள்​ள​னர்.​

                     பண்​ருட்டி நக​ரின் அரு​கா​மை​யில் சென்னை சாலை​யில் எல்.என்.புரம் ஊராட்சி அமைந்​துள்​ளது.​ இதில் ஆர்.எஸ்.​ மணி நகர்,​​ தேவன் நகர்,​​ தர்​மேஸ்​வ​ரர் நகர்,​​ ​ உசேன் நகர்,​​ ஷா உசேன் தர்கா நகர்,​​ திரு​மலை நகர்,​​ சின்​னம்​மாள் நகர்,​​ ​ கண​பதி நகர்,​​ ராஜன் நகர் உள்​ளிட்ட 10-ம் மேற்​பட்ட நகர்​கள் உள்​ளன.​ பண் ​ருட்டி நக​ரின் மிக அரு​கா​மை​யில் அமைந்​துள்​ள​தால் சுமார் 1500-ம் மேற்​பட்ட குடும்​பங்​கள் மேற்​கண்ட பகு​தி​யில் வசித்து வரு​கின்​ற​னர்.​ தாழ்​வான பகுதி என்​ப​தா​லும்,​​ முறை​யான சாலை மற்​றும் கழிவு நீர் கால்​வாய் இல்​லா​த​தா​லும் மழை காலத்​தில் இப்​ப​கு​தி​க​ளில் மழை நீர் சூழ்ந்து வீட்​டிற்​குள் புகுந்து சேதத்தை ​ ஏற்​ப​டுத்​து​வது வழக்​கம்.​ 

                            மழைக் காலத்​தில் பாதிக்​கப்​ப​டும் போது ஒவ்​வொரு முறை​யும் அரசு அதி​கா​ரி​கள் பார்​வை​யி​டு​வ​து​டன் சரி.​ மழைக்​கா​லம் முடிந்து தண்​ணீர் வற்​றி​விட்​டால் பின்​னர் இதை பற்றி யாரும் கண்​டுக்​கொள்​வ​தில்லை.​ தற்​போது இடை​வி​டாது பெய்த கன மழை​யால் எல்.என்.புரம் ஊராட்​சி​யல் உள்ள மேற்​கண்ட நகர் பகு​தி​யில் உள்ள வீடு​களை மழை நீர் சூழ்ந்து வெள்​ளக்​கா​டாக காட்சி அளித்​தது.​ சுமார் 10-ம் மேற்​பட்ட வீடு​க​ளுக்​குள் தண்​ணீர் புகுந்​த​தால் அதில் வசிப்​ப​வர்​கள் பாதிப்​ப​டைந்​துள்​ள​னர்.​மழை நீரு​டன் கழிவு நீர் கலந்து தேங்​கி​யுள்​ள​தால் அப்​ப​கு​தி​யில் நோய் பர​வும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது.​ மேலும் பல்​வேறு பகு​தி​யில் சாலை​யின் குறுக்கே பள்​ளம் வெட்டி தண்​ணீர் வெளி​யேற்​றப்​ப​டு​கி​றது.​      

                  சாலையே தெரி​யாத அள​வில் தண்​ணீர் தேங்​கி​யுள்​ள​தா​லும்,​​ குறுக்கே பள்​ளங்​கள் வெட்​டப்​பட்​டுள்​ள​தா​லும் பொது மக்​கள் நடந்​துக் கூட செல்ல முடி​யாத நிலை வாகன போக்​கு​வ​ரத்​தும் தடை​பட்​டுள்​ளது.​ இந்​நி​லை​யில் அவ​ச​ரக் காலத்​தில் மருத்​து​வ​ம​னைக்கு கூட அப்​ப​குதி மக்​களை வெளிக் கொண்டு வர முடி​யாத நிலை​யில் ஏற்​பட்​டுள்​ளது.​    

                       இது​கு​றித்து தக​வல் அறிந்த வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​​ வட்​டார வளர்ச்சி அலு​வ​லர்​கள் எஸ்.கல்​யா​ண​சுந்​த​ரம்,​​ எல்.​ ரீட்டா,​​ உத​விப் பொறி​யா​ளர் பி.ஆனந்தி ஆகி​யோர் மழை நீரால் சூழப்​பட்ட பகு​தி​களை பார்​வை​யிட்​ட​னர்.​ ​ தேங்​கிய மழை நீரை வெளி​யேற்ற சில இடத்​தில் சாலை​க​ளின் குறுக்கே வாய்க்​கால் வெட்​டப்​பட்​டது.​ 

                 பின் ​னர்,​​ இது​கு​றித்து ஊராட்சி மன்​றத் தலை​வர் சேகர் கூறு​கை​யில்,​​ இங்​குள்ள மக்​களை வெள்ள பாதிப்​பில் இருந்து பாது​காக்க உரிய நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ மேலும் இப்​ப​கு​தி​யில் நோய் பர​வா​மல் இருக்க தேவை​யான நட​வ​டிக்​கையை சுகா​தா​ரத் துறை எடுக்க வேண்​டும் என்​றார்.​

Read more »

சர்க்​கரை நோய் விழிப்​பு​ணர்வு கருத்​த​ரங்​கம்

விருத்​தா​ச​லம்,​​ டிச.16:​ 

                விருத்​தா​ச​லத்​தில் ரோட்​டரி சங்​கம் சார்​பாக சர்க்​கரை நோய் தடுப்பு முறை பற்​றிய விழிப்​பு​ணர்வு கருத்​த​ரங்​கம் அண்​மை​யில் நடை​பெற்​றது.​÷ ​ கருத்​த​ரங்​கில் பொது​மக்​கள் உணவு பழக்​கத்தை எவ்​வாறு கடை​பி​டிக்க வேண்​டும் என்​ப​தை​யும்,​நோய் அறி​கு​றி​கள் பற்​றி​யும் திரை​வ​டி​வம் மூலம் மருத்​து​வர்​கள் விளக்​கி​னர்.​சர்க் ​கரை நோய் பற்றி மக்​கள் கேட்ட சந்​தே​கங்​க​ளுக்கு மருத்​து​வர்​கள் செல்​வம்,​​ ராஜ​கோ​பா​லன் ஆகி​யோர் விளக்​க​ம​ளித்​த​னர்.​

            இந்​நி​ கழ்ச்​சி​யில் ரோட்​டரி சங்​கத் தலை​வர் ஆசைத்​தம்பி தலைமை ஏற்​றார்.​ ஜெய​ரா​மன் வர​வேற்​றார்.​ மாவட்​டத் தலை​வர் கணேஷ் நிகழ்ச்​சி​யினை தொடங்கி வைத்​தார். நிர்​வா​கி​கள் அம்​ரு​தீன்,​​ குமார்,​ஆனந்த்,​​ ஜாகிர் உசேன் உட்​பட பலர் கலந்து கொண்​ட​னர்.​ ​ ரோட்​டரி சங்​கச் செய​லர் அன்​ப​ழ​கன் நன்றி கூறி​னார்.​

Read more »

நெய்​வே​லி​யில் சுரங்​கப் பணி பாதிப்பு

நெய்வேலி,​​ டிச.​ 16: ​ 

                  கடந்த 3 தினங்​க​ளாக தொடர்ந்து பெய்​து​வ​ரும் கன மழை​யால் நெய்​வே​லி​யில் சுரங்​கப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.​​ நெய்​வே​லி​யில் என்.எல்.சி.​ நிறு​வ​னத்​தின் சார்​பில் 3 திறந்​த​வெளி பழுப்பு நிலக்​கரி சுரங்​கங்​க​ளும்,​​ 3 அனல்​மின் நிலை​யங்​க​ளும் இயங்​கி​வ​ரு​கின்​றன.​ 

                  இந்த அனல்​மின் நிலை​யங்​கள் மூலம் 2 ஆயி​ரத்து 490 மெகா​வாட் மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​பட்டு,​​ தமி​ழ​கம் உள்​ளிட்ட தென்​மா​நி​லங்​க​ளுக்கு விநி​யோ​கிக்​கப்​ப​டு​கி​றது.​​ ​ இந்​நி​லை​யில்,​​ கட​லூர் மாவட்​டத்​தில் தொடர்ந்து பெய்​து​வ​ரும் கன மழை​யால் திறந்​த​வெளி சுரங்​கங்​க​ளில் பழுப்பு நிலக்​கரி வெட்​ட​மு​டி​யாத சூழல் உரு​வா​கி​யுள்​ளது.​

                    சுரங்க இயந்​தி​ரங்​கள் ஒரு இடத்தை வேறு இடத்​திற்கு நகர முடி​யாத அள​வுக்கு சுரங்​கத்​தி​னுள் சேறும்,​​ சக​தி​யு​மா​கக் காணப்​ப​டு​வ​தால்,​​ சிறப்பு சுரங்க இயந்​தி​ரங்​க​ளின் இயக்​கம் முற்​றி​லு​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.​​ மாறாக,​​ சுரங்​கத்​தி​னுள் மழை​நீரை சேமிக்க பயன்​ப​டுத்​தப்​ப​டும் சிறு குட்​டை​க​ளில்,​​ தேங்​கி​யுள்ள நீரை ராட்​சத பம்​பு​க​ளைக் கொண்டு வெளி​யேற்​றும் பணி தீவி​ர​மாக நடை​பெற்​று​வ​ரு​கி​றது.​ இத​னால்,​​ பழுப்பு நிலக்​கரி வெட்​டி​யெ​டுக்​கும் பணி​யும் தடை​பட்​டுள்​ளது.​​ இருப்​பி​னும்,​​ பழுப்பு நிலக்​கரி சேமிப்​புக் கிடங்​கு​க​ளில் உள்ள பழுப்பு நிலக்​க​ரியை பயன்​ப​டுத்தி அந்​தந்த அனல்​மின் நிலை​யங்​க​ளில் மின்​னுற்​பத்தி தொடர்ந்து நடை​பெற்​று​வ​ரு​வ​தாக அன்ல்​மின் நிலைய அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.​

Read more »

ஜன​வரி 15 முதல் பய​ணி​கள் ரயில்

சிதம்​ப​ரம்,​​ டிச.​ 16:​ 

                   மயி​லா​டு​துறை-​ விழுப்​பு​ரம் இடையே அகல ரயில்​பாதை அமைக்​கும் பணி முடி​வு​றும் தரு​வா​யில் உள்​ளது.​ வியா​ழக்​கி​ழமை முதல் ​(டிசம்​பர் 17) சரக்கு ரயில்​கள் இயக்​கப்​ப​டும் என்​றும்,​​ ஜன​வரி.15-ம் தேதி முதல் பய​ணி​கள் ரயில்​கள் இயக்​கப்​ப​டும் என தென்​னக ரயில்வே நிர்​வா​கம் அறி​வித்​துள்​ளது.​ இத​னி​டையே,​​ மயி​லா​டு​துறை-​விழுப்​பு​ரம் இடையே புதன்​கி​ழமை 60 கி.மீ.​ வேகத்​தில் 2 பெட்​டி​கள் கொண்ட சோதனை ஓட்ட ரயில் இயக்​கப்​பட்​டது.​ திருச்சி கோட்ட கூடு​தல் ரயில்வே மேலா​ளர் செல்​வ​ராஜ் தலை​மை​யி​லான குழு​வி​னர் இந்த வேக சோதனை ஓட்ட ஆய்வை மேற்​கொண்​ட​னர்.​

                   மீட்​டர்​கேஜ் பாதை அகற்றி அகல ரயில்​பாதை அமைக்க மயி​லா​டு​துறை-​ விழுப்​பு​ரம் இடையே ஜன​வரி 2006-ம் ஆண்டு ரயில்​கள் நிறுத்​தப்​பட்​டது.​ தற்​போது வியா​ழக்​கி​ழமை முதல் சரக்கு ரயில்​கள் இயக்​கப்​ப​டு​வ​தால் கட​லூர்,​​ விழுப்​பு​ரம்,​​ நாகை மாவட்ட மக்​கள் மகிழ்ச்​சி​ய​டைந்​துள்​ளர்.​ மேலும்,​​ உட​ன​டி​யாக பொது​மக்​கள் நலன் கருதி மயி​லா​டு​துறை-​ விழுப்​பு​ரம் இடையே பாசஞ்​சர் ரயில்​களை இயக்க ரயில்வே நிர்​வா​கம் நட​வ​டிக்கை மேற்​கொள்ள வேண்​டுóம்.​ எக்ஸ்​பி​ரஸ் ரயில்​களை ஜன.15 முதல் இயக்​க​லாம் என தமிழ்​நாடு நுகர்​வோர் குழு​மச் செய​லா​ளர் சி.டி.அப்​பாவு திருச்சி கோட்ட மேலா​ள​ருக்கு கோரிக்கை விடுத்​துள்​ளார்.​மாண​வர்​க​ளுக்கு தனி முன்​ப​திவு கவுண்​டர் அமைக்க கோரிக்கை:​ சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பல்​வேறு மாநி​லங்​க​ளைச் சேர்ந்த மாணவ,​​ மாண​வி​யர்​கள் சுமார் 1500க்கும் மேற்​பட்​டோர் பயி​லு​கின்​ற​னர்.​ இவை​யல்​லா​மல் தமி​ழ​கத்​தில் பல்​வேறு மாவட்​டங்​க​ளைச் சேர்ந்த மாண​வர்​க​ளும் பயி​லு​கின்​ற​னர்.​ இவர்​கள் ரயில்​நி​லை​யத்​தில் டிக்​கட் முன்​ப​திவு செய்ய நீண்ட கியூ வரி​சை​யில் நிற்​ப​தால் உள்​ளூர் மக்​கள் முன்​ப​திவு செய்ய முடி​ய​வில்லை.​ என மாண​வர்​க​ளுக்கு என தனி முன்​ப​திவு கவுண்​டர் திறக்க வேண்​டும் என பொது​ந​லத் தொண்​டர் வே.கலி​ய​மூர்த்தி கோரிக்கை விடுத்​துள்​ளார்.​

Read more »

பண்​ருட்டி: குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்தது வெள்ளம்

பண்ருட்டி,​​ டிச.​ 16: ​ 

                தொடர் மழை​யின் கார​ண​மாக அண்ணா கிரா​மம் ஒன்​றிய கிரா​மங்​க​ளைச் சேர்ந்த சுமார் 5 ஆயி​ரம் ஏக்​கர் நிலப்​ப​ரப்​பில் பயி​ரி​டப்​பட்​டி​ருந்த நெற்​ப​யிர்​கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்​துள்​ளன.​

                          பண்​ருட்டி வட்​டம் அண்​ணா​கி​ரா​மம் ஒன்​றி​யத்தை சேர்ந்த பைத்​தாம்​பாடி,​​ காவ​னூர்,​​ சத்​தி​ரம்,​​ உளுத்​தாம்​பட்டு,​​ என​தி​ரி​மங்​க​லம்,​​ ஏ.பி.குப்​பம்,​​ அவி​ய​னூர்,​​ ரெட்​டிக்​குப்​பம்,​​ கரும்​பூர் உள்​ளிட்ட பல கிரா​மங்​கள் உள்​ளன.​ 

                           இக் ​கி​ரா​மத்​தில் உள்ள ஆயி​ரக்​க​ணக்​கான ஏக்​கர் பரப்​ப​ளவு உள்ள விவ​சாய நிலங்​கள்,​​ விழுப்​பு​ரம் மாவட்​டம் திருக்​கோ​வி​லூர் தென்​பெண்ணை ஆற்​றில் உள்ள ஏர​ளூர் எல்​லீர் சத்​தி​ரம் அணைக்​கட்​டில் இருந்து வரும் பைத்​தாம்​பாடி கால்​வாய் மூலம் பாசன வசதி பெறு​கின்​றன.​ க​டந்த 3 ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் சென்னை-​திருச்சி தேசிய நெடுஞ்​சாலை விரி​வாக்​கத்​தின் போது ​ விழுப்​பு​ரம் மாவட்​டம் பேரங்​கி​யூர் அருகே இருந்த ​ கலங்கு மற்​றும் உபரி நீர் ஆற்​றுக்​குச் செல்​லும் வழியை அடைத்து சாலை அமைத்து விட்​ட​தால் மழைக்​கா​லத்​தில் ஏற்​ப​டும் வெள்ள நீரால் மேற்​கண்ட கிரா​மத்​தில் உள்ள விவ​சாய நிலங்​கள் மூழ்கி பாதிப்​ப​டைந்து வரு​கின்​றன.​ க​டந்த 5 நாள்​க​ளாக பெய்து வரும் தொடர் மழை​யின் கார​ண​மாக மேற்​கண்ட கிரா​மத்தை சேர்ந்த சுமார் 5 ஆயி​ரம் ஏக்​கர் நிலப்​ப​ரப்​பில் பயி​ரி​டப்​பட்​டி​ருந்த சம்பா நெற்​ப​யிர்​கள் பாதிப்​ப​டைந்​துள்​ளன.​

                  இ​து​கு​றித்து தமிழ்​நாடு விவ​சா​யி​கள் சங்க மாவட்​டத் தலை​வர் நாரா​ய​ணன் கூறி​யது:​ 

                        பண் ​ருட்டி வட்​டம்,​​ அண்​ணா​கி​ரா​மம் ஒன்​றி​யத்தை சேர்ந்​தச் பைத்​தாம்​பாடி,​​ காவ​னூர்,​​ சத்​தி​ரம்,​​ என​தி​ரி​மங்​க​லம்,​​ சத்​தி​ரம்,​​ உள்​ளிட்ட 10-ம் மேற்​பட்ட கிரா​மங்​க​ளில் உள்ள விளை நிலங்​கள் ஒவ்​வொரு ஆண்​டும் ஏற்​ப​டும் மழை வெள்​ளத்​தால் பாதிக்​கப்​ப​டு​கி​றது.​ தற்​போது பெய்து வரும் மழை​யின் கார​ண​மாக 10,​ 15 நாள்​க​ளில் அறு​வடை செய்ய வேண்​டிய சுமார் 5 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட ஏக்​கர் நிலப்​ப​ரப்​பில் பயி​ரி​டப்​பட்​டி​ருந்த சம்பா நெல் பயிர்​கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்​துள்​ளன.​ ​ இத​னால் விவ​சா​யி​கள் பெருத்த நட்​டம் அடைந்​துள்​ள​த​னர்.​ எ​னவே,​​ பாதிக்​கப்​பட்ட விவ​சாய நிலங்​களை தமி​ழக அரசு பார்​வை​யிட்டு,​​ ஏக்​கர் ஒன்​றுக்கு தலா ரூ.10 ஆயி​ரம் நட்ட ஈடு வழங்க ​ உரிய நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்​றார்.​

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior