உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம் :

       விருத்தாசலத்தில் மின் வாரியம் சார்பில் நடந்த மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


             செயற்பொறியாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் கள் சுகன்யா, பத்மாவதி, அசோக்பிரன்னா முன் னிலை வகித்தனர். ஊர்வலத்தில் மின் சிக்கனத்தை வலியுறுத்திய பாதகைகளை ஏந்தியபடி ஊழியர்கள் நகரின் முக்கிய வீதிகளில் சென்றனர். மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. உதவி செயற்பொறியா ளர்கள் கிருஷ்ணன், பாலசுப்ரமணியன், ஜெயகாந் தன் மற்றும் அனைத்து உதவி மின்பொறியாளர் கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  

Read more »

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலூர் :

       தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

              கடலூர் உழவர் சந்தை அருகில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலா ளர் மணிவாசகம் கோரிக் கைகளை விளக்கி பேசினார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட துணை செயலாளர் சேகர், மாநிலக்குழு நாகராஜன், கோவிந்தசாமி, பட்டுசாமி, சுப்ரமணியன், செல்வராசு, சம்பந்தம் உட்பட பலர் பேசினர். நகர செயலாளர் குளோப் நன்றி கூறினார்.

Read more »

கிணற்றில் விழுந்த பெண் பலி

நெல்லிக்குப்பம் :

              மனநலம் பாதித்த பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். நெல்லிக்குப்பம் அடுத்த மூலக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகள் சீதை (16). மனநலம் பாதித்த இவர், நேற்று  காலை தங்களது நிலத்திற்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். நெல்லிக்குப்பம் தீயணைப்பு  படை வீரர்கள் விரைந்து சென்று சீதாவின் உடலை மீட்டனர்.

Read more »

ஆற்றில் தவறி விழுந்தவர் உடல் கரை ஒதுங்கியது

நடுவீரப்பட்டு : 

         ஆற்றில் தவறி விழந்த ஜோசியரின் உடல் கரை ஒதுங்கியது. கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (55). ஜோசியரான இவர் நேற்று முன்தினம் மாலை வெளியூர் சென்று விட்டு தனது வீட்டிற்கு வர வானமாதேவி அணைக்கட்டு வழியாக கெடிலம் ஆற்றில் நடந்து வந்தார். அப்போது அணைக் கட்டு பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு இருந்ததால் அதில் ராஜரத்தினம் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார். தகவலறிந்த கிராம மக்கள் பல இடங்களில் தேடியும் ராஜரத்தினம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது. நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்.

Read more »

மணல் லாரிகளால் 11 மாதத்தில் பல்லாõங்குழியானது சாலைகள்

பண்ருட்டி :

                   எனதிரிமங்கலம் அரசு மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் கண்டரக் கோட்டை சாலை குண் டும், குழியுமாக மாறியுள் ளதால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

                பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் பெண்ணையாற்றில் கடந்தாண்டு அரசு மணல் குவாரி இயங் கியது. இங்கிருந்து மணல் ஏற்றிய லாரிகள் புதுப் பேட்டை, கண்டரக் கோட்டை கிராம சாலைகள் வழியாக சென்னை, கடலூர், விழுப்புரம் உள் ளிட்ட பல பகுதிகளுக்கு சென்றன. இதனால் கிராம சாலைகள் அனைத்தும் ஐல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே பெரிய பள் ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் குவாரியை மூட வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை புதுப்பிக்க கோரி மறியல் போராட்டம் நடத்தினர்.


                        அதனையேற்று குவாரி மூடப்பட்டது. கடந்த ஐனவரி மாதம் கண்டரக் கோட்டை- திருத்துறையூர் 4 கி.மீ., சாலை 44 லட்சம் ரூபாய் செலவிலும், புதுப் பேட்டை -எனதிரிமங்கலம் 12 கி.மீ., சாலை ஒரு கோடியே ஐந்து லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதுப்பிக் கப்பட்டன. இந்நிலையில் கடந்த 3ம்தேதி முதல் எனதிரிமங் கலம் பெண்ணையாற்றில் மீண்டும் மணல் குவாரி துவங்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றிக் கொண்டு செல்கின்றன.  கடந்த 6 நாளாக மழை பெய்து வரும் நிலையில் மணல் லாரிகளின் படையெடுப்பினால் சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. சாலையோர வீடுகளில் திருத்துறையூர் கடை வீதி சாலை மண் சாலையாக மாறியுள்ளது. கிராம சாலைகள் குறைந்த பட்சம் மூன்று ஆண்டிற்கு பிறகே சீரமைக்கப்படும். ஆனால் சாலை போட்டு 11 மாதத்திலேயே ஐல்லிகள் பெயர்ந்து வீணாகியுள்ளது.

                     இந்த சாலை வழியாக செல்லும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சாலையோரம் உள்ள வீடுகளில் சேறும், சகதியுமாக மாறியுள்ளன. இப்பகுதியில் வாகனங்கள் சென்று பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க இப்பகுதியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர். இதற்கு நெடுஞ் சாலை மற்றும் மாவட்ட நிர்வாகம் கிராம சாலைகளை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

தொழுதூர் அணைக்கட்டில் எரியாத மின்விளக்கால் ஊழியர்கள் அவதி

ராமநத்தம் : 

               தொழுதூர் அணைக் கட்டில் அமைக்கப்பட் டுள்ள எரியாத மின் விளக் குகளால்  பொதுப்பணித் துறை ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
 


                     ராமநத்தம் அடுத்த தொழுதூரில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்  வெள்ளாற்றின் குறுக்காக அணைக்கட்டு கட்டப் பட்டது. தற்போது இந்த அணைக்கட்டினை பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதார அமைப்பு பிரிவு பராமரித்து வருகிறது. இந்த அணைக்கட்டில் 16 ஷட்டர்கள் அமைக் கப் பட்டு ஒரு பகுதியில் வெலிங்டன் நீர்த்தேக்கத் திற்கு தண்ணீர் கொண்டு செல்லவும், மற்றொரு பகுதியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லவும் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 

                    மழை காலங்களில் அணைக்கட்டுக்கு தண்ணீர்  வரத்து அதிகம் உள்ளபோது பொதுப்பணித் துறை ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அணைக்கட்டு பகுதியில் தங்கி வெலிங்டன் வாய்க் கால் மற்றும் அணைக் கட்டு பகுதியில் உள்ள ஷட்டர்களை திறந்து, மூடிட இரவு பகல் பாராமல் செயல்படுவர்.
 

                  ஊழியர்களின் பாதுகாப்பு கருதி அணைக்கட் டின் மேற்பகுதியில் ஏழு மின் கம்பங்கள் அமைக் கப்பட்டு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மின்கம்பங்களில் இருந்த மின் விளக்குகள் மற்றும் சுவிட்சு போர்டுகள் உள்ளிட்டவைகள் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட் டுள் ளது. இதனால் ஊழியர்கள் இரவு நேரங்களில் அவதிப்பட்டு வருகின்றனர். அணைக்கட்டில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுத் தால்தான் ஊழியர்கள் பயமின்றி நடமாட முடியும்.

Read more »

இடிந்து விழும் நிலையில் குடிநீர் தேக்கத் தொட்டி

நெல்லிக்குப்பம் :

               எழுமேடு ஊராட்சியில் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அண்ணாகிராமம் ஒன்றியம் எழுமேடு ஊராட்சியில் 30 ஆண்டிற்கு முன் கட்டப் பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இத் தொட்டியின் தூண்கள் சேதமானதால் பழுது நீக்கும் பணி சில மாதங்களுக்கு முன் நடந்தது. பணி முடிந்த சில மாதங்களிலேயே தூண்களில் இருந்து சிமென்ட் கான்கிரீட்கள் பெயர்ந்து விழுந்தன. தற்போது தொட்டியின் தூண்களில் உள்ள கம்பிகள் வெளியே தெரிவதால், எந்த நேரத்திலும் தொட்டி இடிந்த விழும் அபாயம் உள்ளது. தொட்டியின் அருகிலேயே வீடுகளும், கோவிலும் உள்ளன. தொட்டி இடிந்து விழுந்தால் பலர் உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கொள்ளிடக் கரையோர சாலைகளைச் சீரமைக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு

 சிதம்பரம், டிச. 20: 

                    சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் உள்ள கொள்ளிடக் கரையோரச் சாலைகளை பலப்படுத்தி சீரமைக்க ரூ.108.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  

                          சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குமராட்சி, வல்லம்படுகை, நந்திமங்கலம், வேளக்குடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் கரையோரம் உள்ள சாலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையின் இடையே வடக்குராஜன் வாய்க்கால், பழைய கொள்ளிடம் ஆறு செல்கிறது. ஆற்று நீரால் சாலையின் இருபுறங்களும் அரிப்பெடுத்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வெள்ளக் காலங்களில் சாலை உடைப்பெடுத்து கிராமத்துக்குள் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளக் காலங்களில் பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சேதமடைந்த சாலைகளின் கரைகளில் தாற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.  

                            இந்நிலையில் கொள்ளிடக் கரையை பலப்படுத்தி சாலையை சீரமைக்க வேண்டும் என இம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் பொதுப்பணித் துறையினர் கொள்ளிடக்கரை சாலைகள் சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு முன்மாதிரி வரைவு திட்டத்தை தயாரித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பினர். தற்போது அதனடிப்படையில் மத்திய அரசு கொள்ளிடக்கரைகளை பலப்படுத்தி சாலைகளை சீரமைக்க ரூ.108.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பணி மார்ச் மாதம் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  


                                இவையல்லாமல் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர்-நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்படவுள்ளது. இப்பாலம் அமைந்தால் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடக்கரை சாலைகள் பலப்படுத்தப்படும். இதனால் கஞ்சன்கொல்லை, எய்யலூர், முட்டம், குஞ்சமேடு, தில்லைநாயகபுரம், நளன்புத்தூர், முள்ளங்குடி, வல்லம்படுகை, புளியங்குடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சாலை வசதி பெறும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

9 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்

 கடலூர், டிச. 20: 
 
                    காட்டாமணக்கு விதைகளை சாப்பிட்ட 9 குழந்தைகளுக்கு வாந்தி -மயக்கம் ஏற்பட்டது.  
 
                  கடலூர் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் மாதாகோயில் தெருவில் வசிப்பவர்கள் பழநி, வீராசாமி, ராமலிங்கம். இவர்களின் குழந்தைகள் அபர்ணா (6), அபிநயா (7), ஆசியா (11), அகல்யா (9), அனுசுயா (9), அனிதா (9), வைஷ்ணவி (6), சுபாஷினி (14), வாசுதேவன் (12).  
 
                            ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் இவர்கள் அருகில் உள்ள தோப்பில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது காட்டாமணக்கு விதைகளைப் பறித்து விதையில் வெண்மை நிறத்தில் இருந்த பருப்பை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 9 குழந்தைகளையும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more »

மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்கள்

 கடலூர், டிச. 20: 
 
                       காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை (வீராணம் ஏரியின் மேற்குக் கரை பகுதிகள்) கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் பார்வையிட்டார்.  
 
                            அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காட்டுமன்னார்கோவில் வட்டம் சித்தமல்லி, அகரப்புத்தூர், வீராணந்தபுரம், கண்டமங்கலம், நாட்டார் மங்கலம் ஆகிய கிராமங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக பெறப்பட்ட தகவல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். சித்தமல்லி, அகரபுத்தூர் கிராமங்களில் செங்கால்ஓடை நீரால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் மணிலாப் பயிர்களுக்கு விவசாயிகள் நிவாரணம் வழங்கக் கோரினர்.  
 
                            வயல்களில் தேங்கும் நீர் வடிய, புதிய வடிகால் வாய்க்கால் வெட்டித்தரக் கோரினர். செங்கால் ஓடை உபரிநீரை வெளியேற்ற அதிக கண்மாய்களைக் கொண்ட புதிய பாலம் அமைக்க வேண்டும், செங்கால் ஓடையைத் தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் கோரினர். இதுகுறித்து பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பிவைக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.  
 
                             இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள நெல், மணிலா சேதம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேளாண் இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் ஆய்வில் வேளாண் இணை இயக்குநர் பாபு, சிதம்பரம் கோட்டாட்சியர் ராமலிங்கம் மற்றும் பொதுப்பணித் துறை, வட்டார வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 

Read more »

மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது போலீஸில் புகார்

 சிதம்பரம்,  டிச. 20: 
 
                    மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுத் தலைவரைத் தாக்கியதாக கடலூர் (தெற்கு) மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
                        சிதம்பரம் எம்.கே.தோட்டத்தைச் சேர்ந்தவர் டி.கே.எம்.வினோபா. இவர் கடலூர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி., எஸ்டி பிரிவுத் தலைவராக உள்ளார். இவர் சனிக்கிழமை சிதம்பரம் சபாநாயகர் தெருவில் உள்ள ஒர்க் ஷாப்பில் தனது காரை பழுது பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடலூர் (தெற்கு) மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.சச்சிதானந்தம், வினோபாவை சட்டையைப் பிடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வினோபா அளித்த புகாரைப் பதிந்து நகர போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Read more »

தேடப்பட்டுவந்த ரவுடி கைது

 சிதம்பரம், டிச. 20: 
 
                        சிதம்பரம் அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை அண்ணாமலைநகர் போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.  
 
                              சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடியைச் சேர்ந்தவர் இளவரசன். வேளக்குடி அருகே சனிக்கிழமை வந்துகொண்டிருந்த இவரை வல்லம்படுகையைச் சேர்ந்த முக்கூட்டுமுருகன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.900 ரொக்கத்தை வழிபறி செய்ததாகக் கூறப்படுகிறது. முக்கூட்டு முருகன் மீது ஏற்கெனவே வடக்குமாங்குடியில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்கு உள்ளது. இவையல்லாமல் பல்வேறு காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகளும், 3 கொலை முயற்சி வழக்குகளும், 3 வழிப்பறி வழக்குகளும் உள்ளன.  
 
                           கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின்கோட்னீஷ் முக்கூட்டு முருகனை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கர் தலைமையிலான தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீஸôர் சனிக்கிழமை இரவு வல்லம்படுகை அருகே முக்கூட்டு முருகனை கைது செய்தனர். முக்கூட்டு முருகனைப் பிடித்த தனிப்படை போலீஸôருக்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் பாராட்டு தெரிவித்தார். 

Read more »

நகை வியாபாரி மீது துப்பாக்கி சூடு

 நெய்வேலி, டிச.20: 
 
                             வடலூரில் நகை வியாபாரியை துப்பாக்கியால் சுட்டு, கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீஸôர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.   
 
                           கடலூர்-விருத்தாசலம் சாலை மார்க்கத்தில் உள்ள வடலூர் நான்குமுனை சந்திப்பு பகுதியில் ஸ்ரீலக்ஷ்மி ஜூவல்லரி நடத்தி வருபவர் சிங்காரம் 52). இவர் சனிக்கிழமை வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு வடலூர் சீத்தாராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.   
 
                         கடையில் இருந்து சிறிது தூரம் சென்றதும், பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவர் சிங்காரத்தை வழிமறித்து, நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி கையில் இருக்கும் பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிங்காரம் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி கூச்சலிட்டுள்ளார்.   
 
                              சிங்காரத்தின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் பதற்றமடைந்த மர்மநபர்கள் சிங்காரத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், அவரது மார்பில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து மர்மநபர்கள், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு சிங்காரத்தின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.   
 
                          துப்பாக்கி குண்டுபாய்ந்ததில் படுகாயமடைந்த சிங்காரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மர்மநபர்களின் மோட்டார் சைக்கிளில் நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டுகள் எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவிருப்பதாக வடலூர் போலீஸôர் தெரிவித்தனர். 

Read more »

கடலோரப் பகுதிகளில் போலீஸ் அதிரடி சோதனை

 கடலூர், டிச. 20: 

                     கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் 3 நாள்களாக போலீஸôர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.  

                     கடல் மார்க்கமாக வந்து மும்பை தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் பிற நாடுகள் தளங்களை அமைத்துக் கொண்டு செயல்படுவதால், இந்தியப் பெருங்கடல் வழியாகவும் வங்கக் கடல் வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்ற அச்சம் இந்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே வங்கக் கடலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.  

                             அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கியூபிராஞ்ச் போலீஸôர், கடலோரக் காவல்படை போலீஸôர் மற்றும் உள்ளூர் போலீஸôர் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.  கடற்கரையில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரெட்டிச்சாவடி, கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கிள்ளை உள்ளிட்ட கடலோரக் காவல் நிலையங்கள் மூலமாக வாகன சோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  


                      கடலோர கிராமங்களில் யாரேனும் புதிய நபர்கள் காணப்பட்டாலோ, கடலில் வித்தியாசமான படகுகள் தென்பட்டாலோ போலீஸôருக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.  

                     கடலூர் மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஷ் தலைமையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.   

Read more »

அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக புகார் 100 மையங்களில் இன்று முதல் மறியல்

 கடலூர்,  டிச. 20: 
 
                              திட்டமிட்டு அரசுப் பள்ளிகள் அழிக்கப்படுவதைக் கண்டித்தும் வேறு பல கோரிக்கைகளை வலியுறுத்தியும், 100 மையங்களில் திங்கள்கிழமை முதல் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ச.அப்துல் மஜீது ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அவர் மேலும் கூறியது:  சமச்சீர் கல்வி முறையை வரவேற்கிறோம். ஆனால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இது பொருந்துமா, பயிற்றுமொழி எது என்று அரசு தெளிவு படுத்த வேண்டும். பயிற்றுமொழி தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும்.  
 
                               ஒன்று முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி மட்டும் அல்ல, மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து நிர்வாகங்களில் உள்ள பள்ளிகளிலும் இலவசக் கல்வி வழங்க வேண்டும். அதற்காக மெட்ரிக் மற்றும் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு ஊதியமும், பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு நிர்வாக மானியமும் வழங்க வேண்டும். தொலை தூரங்களில் இருந்து மாணவர்களை வாகனங்களில் அழைத்து வந்து, விபத்துகளில் குழந்தைகளைப் பறிகொடுக்கும் நிலையைத் தடுக்க மத்திய அரசு நிறைவேற்றி இருக்கும் அண்மைப் பள்ளித் திட்டத்தை அரசு உடனே அமல்படுத்த வேண்டும். காலை, மாலை வேளைகளில் மாணவர்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். தலைமை ஆசிரியர் இல்லாத 381 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தொடக்கக் கல்விக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ.11 லட்சம் கோடி கல்விக்கு ஒதுக்கப்பட்டும் அதன் பயன் மாணவர்களைச் சென்றடையவில்லை.  
 
                        6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்தியதில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே அவர்கள் பெற்றுவந்த ஊதியத்தில் ரூ. 200 முதல் ரூ.6,330 வரை குறைந்து விட்டது. இதுதொடர்பாக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைக்க முடியவில்லை.  எனவே ஒருநபர் கமிஷனால் பலன் இருப்பதாகத் தெரியவில்லை. 
 
                            எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி 21-12-2009 முதல் 13-1-2010 வரை 100 மையங்களில் ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்துவர். 21}ம் தேதி கடலூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து அனைத்து பிற மாவட்டங்களிலும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார் அப்துல் மஜீது.

Read more »

மளி​கைக் கடை​க​ளில் நக​ராட்சி அலு​வ​லர்​கள் திடீர் ஆய்வு

விருத்தா​ச​லம்,​​  டிச.​ 19:​ 
 
                          விருத்​தா​ச​லத்​தில் மளி​கைப் பொருள்​க​ளின் தரம் குறித்து வெள்​ளிக்​கி​ழ​மை​யன்று நக​ராட்சி அலு​வ​லர்​கள் ஆய்வு செய்​த​னர்.​
 
                                வி​ருத்​தா​ச​லத்​தில் உள்ள மளி​கைக் கடை​க​ளில் தர​மற்ற பொருள்​கள் விற்​கப்​ப​டு​வ​தா​கக் கிடைத்த தகவ​லின் பேரில்,​​ துப்​ப​ரவு அலு​வ​லர் பர​ம​சி​வம்,​​ ஆய்​வா​ளர்​கள் ராஜ்​கு​மார்,​​ சிவப்​பி​ர​கா​சம்,​​ பால​மு​ரு​கன்,​​ துப்​ப​ரவு மேற்​பார்​வை​யா​ளர்​கள் ஆறு​மு​கம்,​​ முத்​த​மி​ழன்,​​ செல்​வம்,​​ சுப்​பி​ர​ம​ணி​யன் ஆகி​யோர் வெள்​ளிக்​கி​ழமை ஆய்வு செய்​த​னர்.​   காய்​கறி மார்க்​கெட்,​​ பங்​களா வீதி,​​ பெரி​யார் நகர்,​​ காட்​டுக்​கூ​ட​லூர் சாலை உள்​ளிட்ட இடங்​க​ளில் ஆய்வு செய்​த​போது பல்​வேறு கடை​களி​லி​ருந்து 350 கிலோ எடை​யுள்ள,​​ சுமார் ரூ.25,000 மதிப்​பி​லான தர​மற்ற மிள​காய்த்​தூள்,​​ மல்​லிப்​பொடி உட்​பட பல்​வேறு பொருள்​க​ளைப் பறி​மு​தல் செய்​த​னர்.

Read more »

விழிப்​பு​ணர்வு கூட்​டம்

சிதம்ப​ரம்,​​  டிச.​ 19:​ 
 
                       சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஆசி​ரி​யர் மற்​றும் பணி​யா​ளர் கூட்டு நட​வ​டிக்கை குழு ​சார்​பில் விழிப்​பு​ணர்வு கூட்​டம் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​
 
                              பல் ​க​லைக்​க​ழ​கத்​தின் புக​ழை​யும்,​​ பெரு​மை​யை​யும் சீர்​கு​லைக்​கும் வகை​யில் திட்​ட​மிட்டு பரப்​பப்​பட்டு வரும் வீண் வதந்​தி​கள் குறித்​தும்,​​ பட்​ட​ம​ளிப்பு விழாவை சீர்​கு​லைக்க முயற்​சித்​தும் வரு​வதை எதிர்த்து நடை​பெற்ற இக் கூட்​டத்​தில் 6-வது ஊதி​யக் குழு​வின் நிலு​வைத் தொகை வழங்​கு​வது பற்​றிய உண்மை நிலை​கள்.​ 1996-க்கு பிறகு பணி​யில் சேர்ந்​த​வர்​க​ளுக்கு எதி​ரான கருத்​து​கள்,​​ தொன்று தொட்டு பல்​க​லைக்​க​ழ​கத்​தில் ஆசி​ரி​யர் மற்​றும் பணி​யா​ளர்​க​ளுக்கு வழங்​கப்​பட்டு வரும் பதவி உயர்வு,​​ பணிப்​ப​யன்​கள்,​​ வாரி​சு​க​ளுக்கு பணி,​​ குழந்​தை​க​ளுக்கு கல்​விச் சேர்க்கை,​​ கட்​ட​ணச் சலுகை உள்​ளிட்​டவை குறித்து விளக்​க​ம​ளித்து பேசி​னர்.​
 
                              இக்​கூட்​டத்​ தில் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஆசி​ரி​யர் நலச்​சங்​கம்,​​ அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ ஆசி​ரி​யர் முன்​னேற்​றச் சங்​கம்,​​ எஸ்.சி.,​​ எஸ்.டி.​ ஆசி​ரி​யர் அலு​வ​லர் நலச்​சங்​கம்,​தமிழ்​நாடு ஆதி​தி​ரா​வி​டர் மற்​றும் பழங்​கு​டி​யி​னர் நலச்​சங்​கம் உள்​ளிட்ட சங்​கங்​க​ளைச் சேர்ந்த நிர்​வா​கி​கள் பங்​கேற்று பேசி​னர்.​÷கூட்​டுக்​கு​ழு​வின் இந்த விழிப்​பு​ணர்வு பிர​சா​ரக் கூட்​டம் திங்கள்கிழமை வரை தொடர்ந்து நடை​பெ​றும் என அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.

Read more »

இந்​தி​யா​வில் நீரி​ழிவு நோயா​ளி​க​ளின் எண்​ணிக்கை 7 கோடி​யாக உய​ரக்​கூ​டும்

நெய்வேலி, ​​ டிச.​ 19:​ 

                                2015-ம் ஆண்​டில் நமது நாட்​டில் சிறு​நீ​ரக நோயா​ளி​க​ளின் சுமார் 7 கோடி அள​வுக்கு உய​ரக்​கூ​டும் என நெய்​வே​லி​யில் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்ற கருத்​த​ரங்​கில் செங்​கல்​பட்டு மருத்​து​வக் கல்​லூ​ரி​யைச் சேர்ந்த சிறு​நீ​ர​க​வி​யல் துறைத் தலை​வர் டாக்​டர் எட்​வின் பெர்​னாண்டோ தெரி​வித்​தார்.​ ​

                            இந்​தி​யப் பொறி​யா​ளர் கழ​கத்​தின் நெய்​வே​லிக் கிளை​யும்,​​ நெய்வேலி பொறி​யா​ளர் மற்​றும் அறி​வி​ய​லா​ளர் கழ​க​மும் இணைந்து சிறு​நீ​ர​கத்​தைப் பாது​காப்​பீர் எனும் தலைப்​பில் கருத்​த​ரங்கை வெள்​ளிக்​கி​ழமை நடத்​தி​னர்.​

                        இ​ தில் என்​எல்சி திட்​டம் மற்​றும் செய​லாக்​கத்​துறை இயக்​கு​நர் ஆர்.கந்​த​சாமி தலைமை வகித்​தார்.​ செங்​கல்​பட்டு மருத்​து​வக் கல்​லூ​ரி​யைச் சேர்ந்த சிறு​நீ​ர​க​வி​யல் துறைத் தலை​வர் டாக்​டர் எட்​வின் பெர்​னாண்டோ சிறப்பு அழைப்​பா​ள​ரா​கக் கலந்​து​கொண்டு பேசும் போது,​​ நமது நாட்​டில் பரம்​பரை மூல​மாக பர​வும் நோய்​கள் 43.5 சத​வீ​த​மாக இருக்​கை​யில்,​​ பிறர் மூலம் பர​வாத உயர் ரத்த அழுத்​தம்,​​ சர்க்​கரை வியாதி போன்​றவை 44 சத​வீ​த​மாக உயர்ந்​துள்​ளது.​ நமது வாழ்க்கை முறை​யும்,​​ உண​வுப் பழக்க வழக்​கங்​க​ளும் தான் இதற்கு முக்​கி​யக் கார​ணம்.​

                           க​டந்த 2004-ம் ஆண்டு கணக்​கின்​படி உலக அள​வில் தொற்​று​நோய் மூலம் 2 கோடி​பே​ரும்,​​ பிற​ரி​ட​மி​ருந்து பர​வாத நோய் மூலம் 3 கோடி பேரும் இறந்​துள்​ள​தாக ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​ நீ​ரி​ழிவு நோயால் பாதிக்​கப்​ப​டும் உறுப்​பு​க​ளில் முக்​கி​ய​மா​னது சிறு​நீ​ர​கம்.​ உயர் ரத்த அழுத்​தம்,​​ அதிக ரத்​தப் போக்கு,​​ சிறு​நீ​ர​கத்​தில் கட்டி,​​ அதிக எடை,​​ அதிக கொழுப்பு,​​ புகைப் பிடித்​தல் ஆகி​ய​வற்​றால் சிறு​நீ​ர​கம் பாதிக்​கப்​ப​டும் என்​றார் எட்​வின் பெர்னாண்டோ.​

                          முன்​ன​தாக நிகழ்ச்​சி​யில் பொறி​யா​ளர் கழகத் துணைத் தலை​வர் சக்​ர​வர்த்தி வர​வேற்​றார்,​​ பொறி​யா​ளர் மற்​றும் அறி​வி​ய​லா​ளர் கழகச் செய​லர் கென்​னடி நன்றி கூறி​னார்.​ நிகழ்ச்​சி​யில் 300-க்கும் மேற்​பட்ட பொறி​யா​ளர்​கள் பங்​கேற்​ற​னர்.​

Read more »

குற்​றங்​க​ளைத் தடுக்க போலீஸ் நட​வ​டிக்கை கட​லூ​ரில் கண்​கா​ணிப்​புக் கேமராக்​களை நிறுவ திட்​டம்

கட​லூர்,​​  டிச.​ 19:​ 

                           குற்​றங்​க​ளைத் தடுக்க கட​லூ​ரில் முக்​கிய இடங்​க​ளில் கண்​கா​ணிப்​புக் கேமராக்​க​ளைப் பொறுத்த திட்​ட​மிட்டு இருப்​ப​தாக கட​லூர் போலீஸ் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் ஸ்டா​லின் தெரி​வித்​தார்.​

                          குற் ​றங்​க​ளைத் தடுக்க எத்​த​கைய நடவ​டிக்​கை​களை மேற்​கொள்ள வேண்​டும் என்​பது குறித்து கட​லூர் நகர வணி​கர்​க​ளு​டன் காவல்​துறை ஆலோ​ச​னைக் கூட்​டம் சனிக்​கி​ழமை நடந்​தது.​÷கூட்​டத்​தில் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் ஸ்டா​லின் கூறி​யது:​ ​

                       தங்க நகை​க​ளின் விலை​கள் பெரு​ம​ள​வுக்கு உயர்ந்து விட்​டன.​ எனவே நகை​க​ளைப் பாது​காப்​ப​தில் கூடு​தல் கவ​னம் தேவை.​ மார்​கழி மாதம் தொடங்​கி​விட்​டால் அதி​கா​லை​யிலே எழுந்து பெண்​கள் கோலம் போடு​வது வழக்​கம்.​ எனவே அத்​த​கைய பெண்​கள் தங்​கள் அணி​க​லன்​கள் குறித்து பாது​காப்​பு​ட​னும் கவ​னத்​து​ட​னும் இருக்க வேண்​டும்.​ ​

                                     2011-ம் ஆண்டு வரை மக்​கள் தொகை கணக்​கெ​டுப்​புப் பணி​கள் நடக்​கி​றது.​ எனவே கூடு​தல் போலீஸ் நிலை​யங்​கள் அமைப்​பது குறித்து 2011 வரை முடிவு எடுக்க முடி​யாது.​ காவல்​துறை மூலம் தொடர்ந்து வாகன சோத​னை​கள் நடத்​தப்​ப​டு​கின்​றன.​ பொது​மக்​கள் ஒத்​து​ழைப்பு நல்க வேண்​டும்.​ ​
                   
                        நக​ரில் பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​க​ளில் கண்​கா​ணிப்​புக் கேமராக்​களை நிறுவ திட்​ட​மி​டப்​பட்டு உள்​ளது.​ இதற்​குக் கூடு​தல் செலவு பிடிக்​கும்.​ எனவே பொது​மக்​கள் பங்​க​ளிப்​பு​டன் இத்​திட்​டத்தை நிறை​வேற்ற ஆலோ​சனை நடத்தி வரு​கி​றோம்.​   குற்​றங்​க​ளைத் தடுக்க பொது​மக்​க​ளும் வணி​கர்​க​ளும் போலீ​ஸô​ருக்கு ஒத்​து​ழைப்பு அளிக்க வேண்​டும் என்​றார் ஸ்டா​லின்.​

                   வணி​கர்​கள் தரப்​பில் பேசி​ய​வர்​கள்,​​ "போலீ​ஸôர் திற​மை​யா​கச் செயல்​பட்டு வரு​கி​றார்​கள்​. குற்​றங்​கள் அதி​க​ரித்து வரு​கி​றது.​ காவல் நிலை​யங்​க​ளில் கூடு​த​லா​கக் காவ​லர்​களை நிய​மிக்க வேணும்.​ கட​லூர் கூத்​தப்​பாக்​கத்​தில் புதி​தா​கக் காவல் நிலை​யம் அமைக்க வேண்​டும்' என்​றும் கோரி​னர்.​ ​

                 கூட்​டத்​தில் வணி​கர்​கள் தரப்​பில் ஹோட்​டல் உரி​மை​யா​ளர்​கள் சங்க நிர்​வா​கி​கள் ஜனார்த்​த​னம்,​​ வெங்​க​ட​சுப்பு,​​ நகைக்​கடை உரி​மை​ய​ôளர்​கள் பாலு,​​ ராஜ​கோ​பால் உள்​ளிட்​டோர் பேசி​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior