உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

மக்கள் குறைகேட்பு தினக் கூட்டத்தில் 18 பேருக்கு ரூ 3.60 லட்சம் திருமண உதவி

 கடலூர் : 

                   கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு தினக் கூட்டத்தில் திருமண உதவித் திட்டத்தில் 18 பேருக்கு 3.60 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு தின கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில் குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், பட்டாமாற்றம் உட் பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 348 மனுக்களை கலெக்டர் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
 
          கடந்தவாரம் நடந்த  கூட்டத்தில் காட்டுமன்னார்கோவில் வட்டம், மேல்பாதியைச் சேர்ந்த நிக் கோலஸ் என்பவர் பட்டா மாறுதல் செய்து வழங்குமாறு கலெக்டரிடம் மனு கொடுத்தார். அம்மனுவின் மீது நடவடிக்கை எடுத்து அவருக்கு பட்டா மாறுதல் செய்து கலெக்டர் வழங்கினார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் 18 பேர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 3.60 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், தாட்கோ திட்டத்தின் கீழ் கலெக்டரின் தன் விருப்ப திட்ட நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளான நெய்வாசல் இளையராஜா,  தாமோதரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் கடனுதவி வழங்கினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior