உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது

கடலூர்: 

                    புதுச்சேரியிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு அரசு பஸ்சில் சூட்கேஸ் மற்றும் பைகளில் 250 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனன், ஏட்டு அமிர்தலிங்கம் ஆகியோர் நேற்று ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் இரண்டு சூட்கேஸ் மற்றும் இரண்டு பைகளில் மது பாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது. உடன் சந்தேக நபர்கள் நான்கு பேரை பஸ்சிலிருந்து இறக்கி விசாரணை செய்தனர். இதில் விழுப்புரம் மாவட்டம் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் சிங்காரவேல் (30), ராமராஜன் மகன் பாலகுரு (30) ஆகியோர் என்பதும். இவர்கள் இருவரும் புதுச்சேரியிலிருந்து ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்காக மது பாட்டில்களை பஸ்சில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 250 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர் .இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சிங்காரவேல், பாலகுரு ஆகியோரை கைது செய்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior