உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டை ரூ.​ 3 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை

 கடலூர்:

                           ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.​ 1 லட்சத்தில் இருந்து,​​ ரூ.​ 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று,​​ தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. கடலூரில் திங்கள்கிழமை நடந்த இச் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.​ குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.​ 3500 வழங்க வேண்டும். மாதாந்திர மருத்துவப் படியை ரூ.​ 100ல இருந்து ரூ.​ 500 ஆக உயர்த்த வேண்டும்.​ ஓய்வூதியர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.​ 1.5 லட்சம் வழங்க வேண்டும்.​  ஒருமாத ஊதியத்தை போனஸôக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, ​​ ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பா.புருசோத்தமன் தலைமை தாங்கினார்.​ மாநிலச் செயலர் என்.வேலு முன்னிலை வகித்தார்.​ மாவட்ட இணைச் செயலாளர் கந்தசாமி வரவேற்றார். மாவட்டச் செயலர் வையாபுரி அறிக்கை சமர்ப்பித்தார்.​ மாவட்டப் பொருளர் ரகுபதி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior