உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிட்டவில்லை

 கடலூர்:

                     பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்னமும் சமூகநீதி கிடைக்கவில்லை என்று,​​ பண்ருட்டி எம்.எல்.ஏ.​ தி.வேல்முருகன் தெரிவித்தார். அஞ்சல்துறை இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.​ 

பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.​ தி.வேல்முருகன் பேசியது:​ ​  

                 இந்தியாவில் 70 முதல் 80 சதம் வரை இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.​ ஆனால் இவர்களுக்கு அரசு உயர் அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை.​ உயர் பதவிகளில் எல்லாம் உயர் சாதியினர்தான் உள்ளனர். மண்டல் கமிஷன் பரிந்துரை என்னவாயிற்று இதற்காகத்தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி வருகிறோம். 

                   இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மருத்துவர் ராமதாஸ் ஈடுபட்டார்.​ ஆனால் முடியவில்லை.​ தேர்தல் வந்ததும் அனைவரும் சிதறி ஓடிவிடுகிறார்கள்.​ அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்.​ தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரச்னை என்றால் 125 எம்.பிக்கள் திரள்கிறார்கள்.​ ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பேச நாதியில்லை என்றார் வேல்முருகன்.​ ​ கூட்டத்துக்கு அஞ்சல்துறை இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச் சங்க மாநில உதவித் தலைவர் உதசூரியக் கண்ணன் தலைமை தாங்கினார்.​ சங்கத்தின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்து பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி பேசினார். மாவட்டத் தலைவர் ஜோதிகுமரன் மற்றும் நிர்வாகிகள் ஆர்.முனுசாமி,​​ ஹேமந்த் குமார்,​​ புருசோத்தமன்,​​ வழக்கறிஞர் மன்றவாணன் உள்ளிட்ட பலர் பேசினர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior