உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

மக்கள் நலனில் அக்கறை காட்டுபவர் கருணாநிதி : அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு


சிறுபாக்கம் : 

                   தி.மு.க., எதிர் கட்சியாக இருந்த போதும் மக்களுக்காக போராடியவர் கருணாநிதி என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

                 மங்களூர் ஒன்றிய தி.மு. க., சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம், அடரி அண்ணா திடலில் நடந்தது. மாவட்ட  துணை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். துணை சேர் மன் சின்னசாமி முன் னிலை வகித்தார். இளைஞரணி ஜெயராமன் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய தலைவர் அமிர்தலிங்கம், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, ஞானமுத்து, திட்டக்குடி பேரூராட்சி சேர்மன் மன் னன், நகர செயலாளர்கள் பரமகுரு, குமரவேல், ஒன் றிய துணை செயலாளர்கள் அண்ணா துரை, முத்துராமன், செல்வாம்பாள், செங்குட்டுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: 

                     அ.தி.மு.க., ஆட்சி யில் நிதிநிலை பொதுக்கூட் டத்தை அவர் கள் நடத்தியதில்லை. ஆனால் தி.மு.க., அரசு க்கள் நலத்திட்டங் களை செயல்படுத்தி வருவதால், துணிச்சலாக பட் ஜெட்டில் அறிவித்த சலுகைகளை கூட்டம் போட்டு பேசுகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி முதல் கான்கிரீட் வீட்டு திட்டம் வரை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அண்மையில் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்கும் போது மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந் தது. தி.மு.க., எதிர் கட்சியாக இருந்த போதும் மக்கள் நலனில் கருணாநிதி அக்கறை காட்டினார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior