உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

இந்து மக்கள் கட்சியினர் கடலூரில் உண்ணாவிரதம்


கடலூர்:

                          கடலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. பண்ருட்டி 'லிங்க்' ரோட்டில் பல ஆண்டுகளாக பட்டா இடத்தில் காட்டுநாயக்கன் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களை துன்புறுத்தி வரும் குமார் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்திற்கு  மாவட்ட தலைவர் பழனி முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் துரைகண்ணு முன்னிலை வகித்தார். மாநில நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்புரையாற்றினார். மக்கள் ஜனநாயக இளைஞரணி கருணாநிதி, காட்டுநாயக்கன் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு செயலாளர் சுஜிசாமி, தேவா, கந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior