உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

போலீஸ் காவல் விசாரணை முடிந்து குற்றவாளி கோர்ட்டில் ஆஜர்


கடலூர் : 

                    தி.மு.க., பிரமுகர் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட் டவர் நேற்று கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டார். கடலூர் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அடுத்த  நல்லாத்தூரைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் சுப்புராம். கடந்த 13ம் தேதி  திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல்  இவரது வீட்டிற்குச் சென்று அங்கிருந்தவர் களை கத்தியை காட்டி மிரட்டி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சென்னை திருவள்ளூர் போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் பேச்சியப்பன் (24) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் தூக்கணாம் பாக்கம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து திருவள்ளூர் போலீசார் தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தூக்கணாம்பாக்கம் போலீசார்  பேச்சியப் பனை கடலூருக்கு அழைத்து வந்து மாஜிஸ் திரேட் கோர்ட் 1ல் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீஸ் காவல் முடிவடைவதால் நேற்று மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.1ல் மாஜிஸ் திரேட் சுதா முன் ஆஜர்படுத்தினர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior