உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

'குடிகார குரங்கு: வனத்துறையினர் திணறல்


நெல்லிக்குப்பம் : 

                     நெல்லிக்குப்பத்தில் சுற்றித் திரியும் குரங்கை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

                      நெல்லிக்குப்பத்தில் கடந்த ஆறு மாதமாக சுற்றித் திரியும் குரங்கு நகர பகுதியில் உள்ள கடைகளில் நுழைந்து பொருட்களை எடுத்து செல்வதும்,  துரத்தினால் கடிக்க பாய்வதால் பயந்து ஓடும் நிலை உள்ளது. சில மாதங்களுக்கு முன் சமூக விரோதிகள் குரங்குக்கு மது குடிக்க  கற்றுக் கொடுத்தனர். அப்போது முதல் வெறி டித்த குரங்கு, தினமும் பலரை கடித்து வருகிறது. வனத்துறையினர் 10 நாட்களாக குரங்கை பிடிக்க கூண்டு வைத்தும் பிடிக்க முடியவில்லை. கால் நடை மருத்துவர் தமிழ்செல்வி, மயக்க ஊசி போட்டு குரங்கு இறந்து விடும் என்பதால் மயக்க மாத்திரையை பாலில் கலந்து வைக்க றினார். ஆனால், மாத்திரை கலந்த பாலை குடித்த குரங்குக்கு மயக்கம் வரவில்லை. இரண்டு மணிநேரம் னத்துறையினரை அலைக்கழித்த குரங்கு மீண்டும் மரத்தின் மீது ஏறி அமர்ந்தது. இன்று நரிக்குறவர்களைக் கொண்டு குரங்கை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior