உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

மத்திய அமைச்சரிடம் பிற்பட்டோர் பேரவை கோரிக்கை மனு

 கடலூர் : 

                    என்.எல்.சி., விரிவாக்கத்திற்கு நிலம், வீடுகளை கொடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. 

நெய்வேலிக்கு வருகை தந்த மத்திய நிலக்கரி மற்றும் புள்ளியியல் துறை ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலிடம் பேரவை பொதுச் செயலாளர் வீர வன்னியராஜா கொடுத்துள்ள மனு:

                      டில்லியில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒப்பந்தபடி  கான்ட்ராக்ட் தொழிலாளர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும். பணியின் போது இறந்த என்.எல்.சி., தொழிலாளர்களின் வாரிசுகள் மற்றும் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கும், என்.எல்.சி., விரிவாக்கத்திற்காக நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். என்.எல்.சி., மருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவக் கல்லூரியாக கொண்டு வர வேண்டும். சுற்றியுள்ள  கிராமங் களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior