உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

கோஷ்டி மோதல்: மூன்று பேர் கைது

 விருத்தாசலம்  : 

                   சாத்தியம் கிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து (40). இவரது உறவினர் மகன் பூவராகவனும், அதே ஊரைச் சேர்ந்த வேலுசாமி மகள் சுப்புலட்சுமியும் சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக சுப்புலட்சுமி மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து இறந்தார். இதுகுறித்து சென்னை போலீசார் வழக்கு பதிந்து 8ம் தேதி பூவராகவனை கைது செய்தனர். சுப்புலட்சுமியின் உடலை அவரது தந்தை வேலுசாமி மற்றும் உறவினர்கள் சொந்த ஊரான சாத்தியத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
 
            இந்நிலையில் பூவராகவனின் உறவினர்களான பச்சமுத்து, லட்சுமி, அன்னதானம், நாகம்மாள், மல்லிகா ஆகியோர் பச்சமுத்து வீட்டின் முன் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுப்புலட்சுமியின் தந்தை வேலுசாமி மற்றும் அவரது உறவினர்கள், பச்சமுத்துவையும் அவருடன் பேசிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கினர். இதுகுறித்து பச்சமுத்து கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து வேலுசாமி (45), வெங்கடேசன் (28), தங்கதுரை (36) ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும், முருகானந்தம், ரவி, ராதாகிருஷ்ணன், கண்ணதாசன், ராஜி, வீரதமிழன் உள்ளிட்ட ஆறு பேரை தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior