உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

மருத்துவமனை ஊழியருக்கு டெங்கு காய்ச்சல்

பரங்கிப்பேட்டை :

           பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை ஊழியர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டுள்ளார்.

                 கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருபவர் அருள்பிகாசம் (40). கடந்த 18ம் தேதி பணியில் இருக்கும் போது திடீரென மயக்கமடைந்து விழுந்தார். அவரை கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சுய நினைவு திரும்பாததால்,மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்ததில் டெங்கு காய்ச்சல் தாக்கியிருப்பது தெரியவந்தது.  அவரை, தனி அறையில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Read more »

சிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

சிதம்பரம் :

             சிதம்பரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது.

                சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை பகுதிக்குட்பட்ட வேணுகோபல் பிள்ளை தெரு, பஸ் நிலைய சாலை மற்றும் எஸ்.பி., கோவில் தெரு பகுதிகளில் போக் குவரத்துக்கு இடையூராக சாலை யோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்திருந் தது. பஸ் நிலையம் எதிரில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வந்த புகாரையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து நேற்று அகற்றியது. அறிவிப்பின்படி ஏற்கனவே பெரும் பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற் றிக்கொண்டனர். மேலும் பொக்லைன் இயந்திரம் மூல மும், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மூலமும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read more »

குடியரசு தின விழாவையொட்டி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

கடலூர் :

            கடலூரில் நாளை குடியரசு தின விழா நடைபெறவுள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.

                 குடியரசு தினவிழாவின் போது அசம்பாவிதங்களை ஏற்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனையொட்டி கடலூரில் நாளை மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா நடைபெறவுள்ள அண்ணா விளையாட்டரங்கில் நேற்று வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் கண்ணி வெடிகளை கண்டறியும்  "மைன் சூப்பர்' என்ற நவீனரக கருவியை கொண்டு சோதனை மேற்கொண்டனர்.  மேலும், மோப்ப நாய் சாண்டி வரவழைத்து  தனியாக சோதனை நடத்தப்பட்டது. அதேபோன்று பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோவில்களில் சோதனை மேற்கொண்டனர்.

Read more »

வேன் மோதி இருவர் படுகாயம்

புவனகிரி :

               மினி வேன் மோதி இருவர் படுகாயமடைந்தனர். புவனகிரி மேலமணக்குடியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் இளவரசன்(21). இவரும் அதே பகுதியை சேர்ந்த  செந்தாமரைக்கண்ணன் (25) என்பவரும் நேற்று முன்தினம் காலை புவனகிரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்தனர். வடக்கு திட்டை அருகே வந்தபோது, எதிரே வந்த மினி வேன் மோதியது. அதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

Read more »

விஷ வண்டு தாக்கி ஐந்து பேர் காயம்

சிறுபாக்கம் :

               வேப்பூர் அருகே பலா மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.

                  வேப்பூர் அடுத்த புல் லூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நேரு. இவரது நிலத்தில் உள்ள பலா மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி வழியில் செல் வோரை கடித்து அச்சுறுத்தி வந்தது. விஷவண்டு கொட்டியதில் நேரு, ராயப்பன் உட்பட ஐந்து பேர் காயமடைந்து, தொழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று விஷ வண்டுகளை தீப்பந்தம் கொண்டு அழித்தனர்.

Read more »

வைத்தியநாத சுவாமி கோவில் தீர்த்தகுளத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை

திட்டக்குடி :

                       திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்திட அறநிலையத் துறை முன்வர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த் துள்ளனர்.

                             திட்டக்குடியில் பழமை வாய்ந்த அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத் தியநாத சுவாமி கோவில் உள்ளது. புகழ்பெற்ற இக்கோவிலில் பங்குனி மாத திருவிழாவில் விநாயகர், அம் மன், வைத்தியநாத சுவாமி தேர்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மூன்று தேர்களும் பல ஆண்டிற்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து பழுதடைந்தன. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ததால், தேர்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
             
                       இந்த கோவிலுக்கு எதிரில் 200 அடி தூரத்தில் தெப்பக்குளம் உள்ளது. குளத்திலிருந்து கோவிலுக்கு செல்ல சுரங்கப்பாதையும் உள்ளது. இவ்வழியாக குளத்தில் நீராடிவிட்டு சுரங்கப்பாதை வழியாக மன்னர்கள் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. திருவிழா காலங்களில் குளத்தில் தீர்த்தவாரி,  தெப்பத்திருவிழாவும்  விமர்சையாக நடந்து வந் துள்ளது. தற்போது திருக் குளம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது.  இக்கோவிலுக்கு மீண் டும் கும்பாபிஷேகம் நடத் தும் பொருட்டு துவங் கப் பட்ட கோவில் சீரமைப்பு பணி என்ன காரணத்தினாலோ தடைபட்டது. இதனால் கடந்த 2008ம் ஆண்டு கேரள நம்பூதிரி களை வரவழைத்து தேவபிரசன்னம் பார்க்கப் பட்டது. அதில் தீர்த்தகுளம் (திருக்குளம்) பராமரிப்பு இன்றி பாழடைந் துள்ளது. தேர் எரிந்து அக்னி தோஷம், வழிபாடு முறைகள் மீறல் உட்பட பதினோறு தோஷங்கள் உள்ளதால் திருப்பணி தடைபட்டுள்ளதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தீர்த்தகுளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோவில் நிர்வாக குழுவினர் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த மாதம் பக்தர்கள், சிவனடியார்கள் இணைந்து தீர்த்தகுளத்தை சீரமைக்க முயன்றபோது, மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட் டது.  இது குறித்து திட்டக்குடிக்கு வந்திருந்த அறநிலைய ஆட்சித் துறை இணை ஆணையர் திருமகளிடம் முறையிட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் திருக்குளத்தை சுத்தம் செய்யலாம் என தெரிவித் தார். மேலும் அனைத்து சிவனடியார்கள் ஒருங்கிணைந்த திருப்பணிக்குழுவினர் கலெக்டரை சந்தித் தும் மனு கொடுத்துள்ளனர். புகழ் வாய்ந்த இந்த கோவில் திருப்பணியை விரைந்து முடித்திடவும், கோவில் தீர்த்தகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்திட மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சேத்தியாத்தோப்பு வெள்ள தடுப்பணை பராமரிப்பின்றி பாழாகி வருகிறது

சேத்தியாத்தோப்பு :

                சேத்தியாத்தோப்பில் உள்ள வெள்ளத் தடுப்பணை பாலம் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது.

                  சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றின் குறுக்கே 1856ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் வெள்ளத் தடுப்பணையுடன் கூடிய பாலம் கட்டப்பட்டு கடந்த 1995ம் ஆண்டு வரை சென்னை - கும்பகோணம் சாலையின் போக்குவரத்திற்கான பிரதான பாலமாக இருந்து வந்தது. பெருகிவிட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்திற்காக தனியாக பாலம் கட்டப்பட்டது. அதன்பின்னர் வெள்ள தடுப்பணை பாலம் பராமரிக்கப் படவில்லை. அவ்வப்போது பாலத்தில் உள்ள ஷெட்டர்களை மட்டும் சரி செய்யும், பொதுப்பணித்துறையினர் சாலையை கண்டுக் கொள்வதில்லை.

                    இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லவில்லை என்றாலும், தினசரி 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களில் சென்று வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள இந்த பாலத்தில் தற்போது பல இடங்களில் பெரும் பள்ளங்கள் மற்றும் விரிசல்  ஏற்பட்டு வலுவிழந்து கொண்டிருக்கிறது. எனவே வெள்ளத் தடுப்பணையுடன் கூடிய சேத்தியாத்தோப்பு பழைய பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கொத்தட்டை கிராமத்தில் கலர் 'டிவி' வழங்கும் விழா

பரங்கிப்பேட்டை :
         
                    கொத்தட்டை கிராமத் தில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது.

                   ஒன்றிய ஆணையர்  சுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். 1081 பயனாளிகளுக்கு சேர்மன் முத்துப்பெருமாள் அரசு இலவச கலர் "டிவி' வழங்கினார். விழாவில் ஒன்றிய ஆணையர் சுலோக்சனா, வருவாய் ஆய்வாளர் ஹேமாஆனந்தி, தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் ராஜாராமன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், மக்கள் நலப்பணியா ளர் சரவணன், ஊராட்சி எழுத்தர் முருகேசன் பங் கேற்றனர். கொத்தட்டை கிராமத்தில் நடந்த கலர் "டிவி' வழங்கும் விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பழனி பங்கேற்காமல் புறக்கணித்தார்.

Read more »

ராமநத்தத்தில் வேலைவாய்ப்பு முகாம்

ராமநத்தம் :

                மங்களூர் ஒன்றிய வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாமில் 535 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

                ராமநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மங்களூர் ஒன்றிய வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வறுமை ஒழிப்பு சங்கத்தின் கீழ் வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. ராமநத்தம் இந் தியன் வங்கி கிளை மேலாளர் கணேசன் தலைமை தாங்கினார். உதவி திட்ட மேலா ளர்கள் சிட்டிபாபு, நாராயணன் முன்னிலை வகித்தனர். அடரி அணித்தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். முகாமில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட அலுவலர் நித் யானந்தம் தேர்வு செய்யும் பணிகளை மேற் கொண்டார். இதில் டி.வி.எஸ்., நோக்கியா, விஸ்வம் (பொக்லைன் பயிற்சி), சி.என்.சி., எல். அன்.டி., இன்டிமேட் பேஷன் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு  535 பேரை தேர்வு செய்தனர்.

Read more »

பண்ருட்டி பகுதிகளில் காலிபிளவர் அறுவடை சீசன் துவங்கியது

பண்ருட்டி :

              பண்ருட்டி பகுதியில் முட்டைகோஸ், காளிபிளவர் அறுவடை காரணமாக வரத்து அதிகரித்துள்ளது.

                       பண்ருட்டி அடுத்த கள்ளிப்பட்டு, குச்சிப்பாளையம்,திருத்துறையூர், கட்டமுத்துப்பாளையம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் பெங்களூரு பகுதியில் அதிகம் விளையும் காளிபிளவர்,முட்டை கோஸ் ஆகியவற்றை  கடந்த 7ஆண்டுகளாக பயிரிட்டு வருகின்றனர். துவக்கத்தில்   தோட்டக்கலைத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடன்  அண்ணாகிராம தோட்டக்கலைத்துறை வட்டாரத்தில் 200 ஏக்கர் அளவில் விவசாயிகள் பயிரிட்டு லாபம் ஈட்டினர்.

                 கட்டமுத்துப்பாளையம், கள்ளிப்பட்டு,குச்சிப்பாளையம் ஆகிய கிராமங்களில் ஐனவரி,பிப்ரவரி மாதங்களில் மினி பெங்களூரு கிராமங்கள் போன்று பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இதனால்  பண்ருட்டி காய்கனி மார்க்கெட் டிற்கு தினந்தோறும் 200 மூட்டை அளவில் கோஸ் மற்றும் காளிபிளவர் விற்பனைக்கு வந்தன. ஆனால் தோட்டக்கலைத்துறையினரின் வழிகாட்டுதல் குறைவினால் கடந்த இருஆண்டுகளாக முட்டைகோஸ், காளிபிளவர்  நாற்றாங்கல் கூட வழங்கவில்லை. இதனால் பல சிறு விவசாயிகள் காளிபிளவர் நாற்றங்கால் இல்லாமல் தக்காளி, கத்திரி,வெண்டை போன்ற மாற்று பயிர் செய்ய துவங்கி விட்டனர். இதனால் இந்த ஆண்டு 50 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே காளிபிளவர்,கோஸ் நாற்றுக்களை ஓசூர் பண்ணையில் இருந்து வாங்கி விவசாயிகள் பயிரிட்டனர்.

                  கடந்த ஆண்டு முட்டைகோஸ் ஒருகிலோ 1க்கும், காளிபிளவர் 5 ரூபாய்க்கும்“விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி குறைவு காரணமாக பண்ருட்டி மார்க்கெட்டில் ஒரு காளிபிளவர் 8 ரூபாய்க்கும், மூட்டை கோஸ் 4 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

Read more »

கோவில் திருப்பணிகளுக்கு அரசு நிதியுதவி

பண்ருட்டி :

                 பண்ருட்டி பகுதியில் உள்ள இரு கோவில்களின் திருப்பணிக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

              பண்ருட்டி பகுதியில் ஆதிதிராவிடர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கோவில்களை சீரமைத் திட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.  இத் திட்டத்தில் பண் ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையம் மாரியம்மன் கோவில், தொரப்பாடி மாரியம்மன் கோவில் திருப்பணிக்காக  தமிழக அரசு நிதி தலா 25,000 ரூபாயை கிராம முக்கியஸ்தர்களிடம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன் நாதன் வழங்கினார். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம், ஆய்வாளர் பாலகிருஷ்ணன், எழுத்தாளர் கள் நாராயணசாமி, ஏழுமலை  பங்கேற்றனர்.

Read more »

இலவச தியான பயிற்சி வகுப்பு கீரப்பாளையத்தில் துவக்கம்

புவனகிரி :

                 கீரப்பாளையத்தில் விஜயகுமார சுவாமிகளின் இலவச தியான பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது.

              சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் சமுதாய நலக் கூடத்தில் ஏழு வாரங்களுக்கான இலவச தியான பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. பயிற்சி வகுப்பை தோப் புக்கொல்லை விஜயகுமார சுவாமிகள் துவக்கி வைத்தார். அதில் புவனகிரி, கீரப்பாளையம், சிதம்பரம் மற்றும் கடலூர் பகுதியில் திரளானவர்கள்  பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தங் களது உடல் உபாதைகளில் இருந்து விடுபட கை விரல்கள் மூலம் தியான பயிற்சி அளிக்கப்பட்டது. ஏழு வாரங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் மட் டும் பயிற்சி வகுப்பு நடக்கிறது.  பயிற்சி வகுப்பு ஏற்பாடுகளை திருமலைராஜன், ராஜப்பா, பாலு செய்திருந்தனர்.

Read more »

இலவச தியான பயிற்சி வகுப்பு கீரப்பாளையத்தில் துவக்கம்

புவனகிரி :

                 கீரப்பாளையத்தில் விஜயகுமார சுவாமிகளின் இலவச தியான பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது.

              சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் சமுதாய நலக் கூடத்தில் ஏழு வாரங்களுக்கான இலவச தியான பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. பயிற்சி வகுப்பை தோப் புக்கொல்லை விஜயகுமார சுவாமிகள் துவக்கி வைத்தார். அதில் புவனகிரி, கீரப்பாளையம், சிதம்பரம் மற்றும் கடலூர் பகுதியில் திரளானவர்கள்  பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தங் களது உடல் உபாதைகளில் இருந்து விடுபட கை விரல்கள் மூலம் தியான பயிற்சி அளிக்கப்பட்டது. ஏழு வாரங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் மட் டும் பயிற்சி வகுப்பு நடக்கிறது.  பயிற்சி வகுப்பு ஏற்பாடுகளை திருமலைராஜன், ராஜப்பா, பாலு செய்திருந்தனர்.

Read more »

பள்ளிகளுக்கு இலவச தேசிய கொடிகள்

ஸ்ரீமுஷ்ணம் :

               ஸ்ரீமுஷ்ணம் பகுதி பள்ளிகளுக்கு வெற்றிக் கொடிகட்டு திட்டத்தில் இலவச தேசிய கொடிகள் வழங்கப்பட்டன.

                       ஸ்ரீமுஷ்ணம்  ஜேசீஸ் பிரிவுகள் சார்பில் குடியரசு தின விழாவையொட்டி வெற்றிக் கொடி கட்டு மெகா திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதில், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள 32க்கும் மேற்பட்ட அரசு துவக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட 40 ஆயிரம் பேருக்கு இலவசமாக தேசியகொடிகள் வழங்கப்பட்டன. நாச்சியார் பேட்டை, ஸ்ரீமுஷ்ணம் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையங்களில் நடந்த கொடி வழங்கும் விழாவில் காட்டுமன்னார் கோவில் வட்டார வள மேற்பார்வையாளர் காமராஜ்  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தேசிய கொடிகளை வழங்கினார். இதில், ஜேசீஸ் தலைவர் கிரி, சாசன தலைவர் முத்துராமலிங்கம், மண்டல இயக்குனர் வேல்முருகன், மண்டல பயிற்றுனர் சிவமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கொடிகளை பள்ளி மற்றும் கல்வி நிறுவன தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினர். மேலும்,  25, 26 தேதிகளில் ஸ்ரீமுஷ் ணத்தில் பத்து இடங்கள் மற்றும் அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாக சென்று இலவசமாக தேசியக் கொடி வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

Read more »

ஏழைகள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் :

                  ஸ்ரீமுஷ்ணத்தில் ஏழைகள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம் நடந்தது.

                 கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோயில் ஒன்றிய செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அர்ச்சுனன் சிறப்புரையாற்றினார். இதில் என்.எல்.சி., நிறுவன சுரங்கப் பணிகளால் நீர் மட்டம் குறைந்து வரும் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டிமடம், சேத்தியாத்தோப்பு, சோழத் தரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் என்.எல்.சி., நிறுவனம் இலவச குடிநீர் வழங்க வேண்டும். தாலுகாவில் உள்ள அனைத்து தாழ்த் தப்பட்ட மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ஆகிய மூன்று அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீராம், கீரப்பாளையம் ஒன்றிய துணைத்தலைவர் தம்பியாப்பிள்ளை, கட்சி நிர்வாகிகள் பீட்டர், எட்வர்டுராஜ், ஆசீர்வாதம், பாலு, ஜோசப் ராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர துணை தலைவர் மாயகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Read more »

வேளாண் இணை இயக்குனர் ஆய்வு

சிதம்பரம் :

               சிதம்பரம் உழவர் சந்தையை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

                 சிதம்பரம் வடக்கு மெயின்ரோட்டில் இயங் கும் உழவர் சந்தையில் காய்கறிகள்,பழங்கள், உணவு காளான் விற் பனை செய்யப்படுகிறது. சந்தையின் செயல்பாடுகள் குறித்து வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம், துணை இயக்குனர் தனவேல் உள் ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  பின்னர் உழவர் சந்தையின் புதிய செயல்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ., ராமராஜூ, தாசில்தார் காமராஜ் ஆகியோர்களிடம் ஆலோசனை நடத்தினர். அப் போது வேளாண் அலுவலர்கள் சித்ரா, சுரேஷ், உதவி வேளாண் அலுவலர் கள் வேலு, கலியமூர்த்தி, ராயர் முத்துசரவணன் உடனிருந்தனர். விவசாயிகளுக்கு புதிய  அடையாள அட்டை வழங்குவதுடன் நுகர் வோர்களை உழவர் சந் தைக்கு  அதிகளவில் வரவழைக்கும் வகையில் சிதம்பரம் சுற்றுப்பகுதியில் உள்ள 20 கிராமங் களை தேர்வு செய்து புதிய முயற்சிகளை தோட்டக்கலையுடன் இணைந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Read more »

நரியன் ஓடை மேம்பாலப்பணி ரிசர்ச் ஸ்டேஷன் இயக்குனர் ஆய்வு

நடுவீரப்பட்டு :

                நடுவீரப்பட்டு-சி.என். பாளையம் இடையே நரியன் ஓடையில் கட்டப் பட்டு வரும் பாலத்தை சென்னை நெடுஞ்சாலை ரிசர்ச் ஸ்டேஷன் இயக்குனர் ஆய்வு செய்தார்.

                  பண்ருட்டி அடுத்த  நடுவீரப்பட்டு-சி.என். பாளையம் இடையே நரியன் ஓடையில் நெடுஞ் சாலை மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 12 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இப்பாலத்தை சென்னை நெடுஞ்சாலை ரிசர்ச் ஸ்டேஷன் இயக்குனர் சேகர் நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தார். அப்போது  துணை இயக்குனர் மணி, கோட்டப் பொறியாளர்(பொறுப்பு) பழனிசாமி, கிராம சாலைகள் மற்றும் நபார்டு கோட்டப்பொறியாளர் உத்திராபதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Read more »

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கலை இலக்கிய விழா

ஸ்ரீமுஷ்ணம் :

               ஸ்ரீமுஷ்ணம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கலை இலக்கிய விழா நடந்தது.

                  ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கலை இலக்கிய விழா நடந்தது.  ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். பொறுப்பு முதல்வர் தண்டபாணி வரவேற்றார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் பத்மநாபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, நடனம், கவிதை உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

                   த.வீ.செ. மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலை இலக்கிய விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கள் மனோரஞ்சிதம் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்சி முதல்வர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பியூலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

Read more »

தோட்டப்பட்டில் இலவச காஸ் வழங்கல்



கடலூர் :

                    கடலூர் அடுத்த தோட்டப்பட்டு கிராமத்தில் 289 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கப் பட்டது.

                      எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு "காஸ்' அடுப்பு வழங்கினார். தனி தாசில் தார் (குடிமைபொருள்) ராஜசேகர், பி.டி.ஓ., க்கள் சீனுவாசன், பத்மநாபன், ஊராட்சி தலைவர்கள் தோட்டப்பட்டு கிருஷ்ணவேணி, மதலப்பட்டு ஜெயமூர்த்தி, வெள்ளப் பாக்கம் குணசேகரன், மருதாடு அருள் மங்கை, கவுன்சிலர்கள் இளங்கோவன், வனிதா, கோண்டூர் மணிமொழி , கீழ்குமாரமங்களம் ராஜேந்திரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜெயபால், ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்களுடன் ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் போலீஸ்  நிலையத்தில்  கேபிள்  "டிவி' ஆப்ரேட்டர்களுக்கு  டி.எஸ்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

                    விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., உத்தரவின் பேரில்  கேபிள்  "டிவி' ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ராஜசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்   வெள்ளி, சனி, ஞாயிறு   ஆகிய நாட்களில் நள்ளிரவு நேரங்களில்  ஒளிபரப்பாகும் (பி.இ.எச்) ஆபாச காட்சிகள் உள்ள சேனல்களை வெளியிட கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் பசுபதி, கேபிள்  "டிவி' ஆப்ரேட்டர்கள்  சங்கம் சார்பில்  நகர தலைவர் ராமதாஸ், செயலாளர் ஜெயசங்கர், ஒன்றிய  தலைவர் ராஜ்குமார், செயலாளர் சிவமூர்த்தி மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read more »

கண்தானம்

சிதம்பரம் :

                   சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் கண்தானம் வழங்கப்பட்டது.

              சிதம்பரம் விழல்கட்டி பிள்ளையார்கோவில்தெரு வசந்தா நேற்று முன்தினம் இறந்தார். அவரது கண்களை தானம் செய்ய அவரது கணவர் இளங்கோவன் முன்வந்தார். தகவல் அறிந்த காஸ்மோபாலிட்டன் அரிமா சங்க தலைவர் கமல்கிஷோர் ஜெயின், செயலாளர் விஜயகுமார் தாலேடா, பொருளாளர் மனோகர், ராமச்சந்திரன் முன்னின்று  டாக்டர் பவித்ரா உதவியுடன் தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

Read more »

ரோட்ராக்ட் சார்பில் கையெழுத்து போட்டி

கடலூர் : 

                கடலூர்  சில்வர் பீச் ரோட்ராக்ட் சங்கம் சார்பில் நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் கையெழுத்து போட்டி நடந்தது.

                    விழாவிற்கு தலைமை ஆசிரியர் உதயகுமார்சாம் தலைமை தாங்கினார். ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் குமார், நீலகண்டன், வேல்பிரகாஷ், டாக்டர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், அரையாண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோட்டரி சங்க மாவட்ட இணை செயலாளர் நடராஜன்  பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.

Read more »

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

சேத்தியாத்தோப்பு :

         வீரமுடையாநத்தத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சிட்டிபாபு தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வாசுகி முன்னிலை வகித்தார். பாலமுருகன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சேத்தியாத் தோப்பு இன்ஸ்பெக்டர் பிரபாகரன் பரிசு வழங்கினார். அமுல்சேகர், நீதி, சுப்ரமணியன், வரதமுருகேசன் வாழ்த்துரை வழங்கினர். ஊராட்சி எழுத்தர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Read more »

கலந்தாய்வு கூட்டம்

சிறுபாக்கம் :

                  மங்களூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

                   ஆணையர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். ஆணையர் புஸ்பராஜ் முன்னிலை வகித் தார். துணை ஆணையர் சுந்தரம் வரவேற்றார். கூட்டத்தில் வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகளை தொடங்குதல், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பணியாளர்களின் கூலித் தொகை நிர்ணயித்தல், குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட் டம் நடத்துதல் உள்பட பல் வேறு திட்டப் பணிகள் குறித்து கலந்தாய்வு நடந்தது.

                    கூட்டத்தில் பொறியாளர் மணிவேல், மேலாளர் கண்ணன், திட்ட மேற்பார்வையா ளர் சங்கர், கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப் பாளர் குணசேகரன், ஊராட்சி தலைவர்கள் பொன்முடி, ராஜபெருமாள், ராஜேந்திரன், முத்துசாமி, வரதராஜன், தங்கவேல், கந்தசாமி, சந்திரா, மாரியம்மாள், ரமேஷ், கண்ணகி கலந்து கொண்டனர்.

Read more »

கோணாங்குப்பத்தில் ஆடம்பர தேர்பவனி : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

விருத்தாசலம் :

                  கோணாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய ஆண்டு திருவிழாவின் ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு வெகு விமர்சையாக நடந்தது.

                  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோணாங்குப்பம் கிராமத்தில் இத்தாலி நாட் டைச் சேர்ந்த வீரமாமுனிவர் மேற்பார்வையில் 1720ம் ஆண்டு புனித பெரியநாயகி அன்னை ஆலயம் கட் டப்பட்டது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜன வரி 14ம் தேதி கொடியேற் றத்துடன் தொடங்கி ஜனவரி 23ம் தேதி வரை ஆண்டு திருவிழா நடைபெறும். அதன்படி 2010ம் ஆண்டுக் கான ஆண்டு திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 22ம் தேதி வரை தினமும் திருப்பலி, நற்கருணை ஆராதனைகள், தேர்பவனிகள் நடைபெற்றன.

                நிகழ்ச்சியில் முக்கிய விழா வான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு பேராயர் டாக்டர் அந் தோணி ஆனந்தராயர் தலைமையில் நடந்தது. அலங்காரம் செய்யப்பட்ட பெரியநாயகி அன்னை மின்விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்தார்.

          வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. பாளையக்காரர் பாலதண்டாயுதம்,  பங்குதந்தை வின்சென்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை, வேளாங் கண்ணி, நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல மதங்களை சார்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Read more »

மணல் லாரி டிரைவர்களிடம் 'அடாவடி' வசூல் : பண்ருட்டி அருகே தொடரும் அவலம்

பண்ருட்டி :

              பண்ருட்டி அடுத்த எனதிரிமங் கலம் மணல் குவாரியில் இருந்து வரும் மணல் லாரி டிரைவர்களிடம் அடாவடி வசூல் தொடர்ந்து நடந்து வருகிறது.

                         பண்ருட்டி அடுத்த எனதிரிமங் கலம் தென்பெண்ணையாறு மணல் குவாரியில் இருந்து தினந் தோறும்  ஏராளமான லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு உள்ளிட்ட பிறமாவட்டங்களுக்கு செல்கின்றன.  லாரிகள்  எனதிரிமங்கலத்தில் இருந்து  கொரத்தி, வேலங்காடு, திருத்துறையூர், கயப்பாக்கம், கள்ளிப்பட்டு, கட்டமுத்துப்பாளையம், ஒறையூர், கண்டரக் காட்டை, பூண்டி உள்ளிட்ட 12 இடங்களில் தலா 20 ரூபாய்  கோவில் நன்கொடை, கிராம பொதுநலநிதி என "அடாவடி' வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

                    இதுகுறித்து கடந்த மாதம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து கடந்த 18ம்தேதி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில்  மணல் லாரிகளால் பாதிப்பு ஏற்படும் ஊராட்சி தலைவர்கள்  கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் சார்பில் லாரிகளுக்கு நுழைவு வரி வசூல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு ஆர்.டி.ஓ., செல்வராஜ் இது குறித்து கலெக்டரின் பரிசீலனைக்கு கொண்டு செல்வதாக கூறினார். மேலும் ஊராட்சியில் லாரி டிரைவர்களிடம் "அடாவடி' வசூலில் யாரும் ஈடுபடக்கூடாது. மீறி யாராவது செயல்பட்டால் அவர் கள் குறித்து வருவாய்துறைக்கும், போலீசுக்கும் ஊராட்சி தலைவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என எச்சரித்தனர்.

                   ஆனால் வருவாய்த்துறையின் உத்தரவுகளை ஒருவரும் மதிக்காமல் மீண்டும் "அடாவடி' வசூல் வேட்டை நேற்றும் தொடர்ந்து நடந்தது.  இதற்கு ஊராட்சி தலைவர்கள் உள்ளூரில் கோவில் நிதி வசூல் செய்வதை போலீசார் தான் தடுக்க வேண்டும். நாங்கள் கூறினால் யாரும் கட்டுப்படுவதில்லை என கூறுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

Read more »

மேட்டூர் தண்ணீரை வெள்ளாற்றில் இணைத்திட திட்டக்குடியில் சிறப்பு ஆலோசனை கூட்டம்

திட்டக்குடி :

             திட்டக்குடியில் நான்கு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் தண்ணீரை வெள் ளாற்றில் இணைத்திட சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

              கடலூர் மாவட்டம், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலில் தமிழக சிறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சிறப்பு ஆலோசனை கூட் டம் நடந்தது. நிறுவன தலைவர் தங்கராஜூ தலைமை தாங்கினார். வெலிங்டன் நீர்ப்பாசன சங்க தலைவர்கள் வடிவேல், வேணுகோபால், மருதாச்சலம், தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராமலிங்கம் வரவேற்றார்.

              கடலூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங் களை சேர்ந்த ஒரு கோடி ஏக்கர் பாசன விளை நிலங் கள் பயன்பெறும் வகையில் மேட்டூரிலிருந்து சங்ககிரி, மகுடஞ்சாவடி, அயோத்தியாபட்டினம், காரிப்பட்டி வழியாக 20 கி.மீ., தூரத்திற்கு வாய்க் கால் அமைக்க வேண்டும். அதன் மூலம் சேலம் மாவட்டம் பெத்தநாயக் கன்பாளையம் வெள்ளாற் றில் மேட்டூர் நீர் பாய்ந்து ஓடுவதற்கு வாய்ப்புள்ளது.

              இதனால் நான்கு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் நிரந்தரமாக விவசாயம் செய்வதற்கும், விவசாயத்தை காப்பாற்றவும் வழிவகை உள்ளது. எனவே, நான்கு மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள், அரசியல் பிரமுகர்கள் ஒருங்கிணைந்து சேலம் மாவட்ட கலெக்டரிடம் முறையிடுவதென தீர்மானிக்கப் பட்டது. கூட்டத்தில் திட்டக்குடி பேரூராட்சி தலைவர் மன்னன், காங்., மாவட்ட பொதுச்செயலாளர் இளவழகன், பாசன சங்க தலைவர்கள் ரங்கநாதன், கண்ணுசாமி, பொன்னுசாமி கலந்து கொண்டனர்.

Read more »

கடலூரில் மாரத்தான் ஓட்டப்போட்டி மாணவ, மாணவிகள் 405 பேர் பங்கேற்பு

கடலூர் :

                               தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், என்.எல்.சி., சார்பில் நடந்த மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டப் போட்டியில் 405 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

                                    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அடுத்த மாதம் சென்னையில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங் கேற்பதற்காக மாவட்ட அளவில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதனையொட்டி கடலூர் மாவட்ட வீரர்களுக்கான தேர்வு போட்டி நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.

                                    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் நடந்த மாரத்தான் ஓட்டப் போட்டி துவக்க விழாவிற்கு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன், டி.எஸ்.பி., ஸ்டாலின், டாக்டர் கணபதி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

                                 போட்டியில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் உட்பட 405 பேர் பங்கேற்றனர். சீனியர் ஆண்கள் 15 கி.மீ., தூரம் ( அண்ணா விளையாட்டரங்கம் முதல்- திருவந்திபுரம் சென்று  திரும்பி வர வேண்டும்) பிரிவில் விருத்தாசலம் வெங்கடேசன், அண்ணாமலை பல்கலைக்கழக செந்தமிழ் செல்வன், காராமணிக் குப்பம் சாமிநாதன் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

                                சீனியர் பெண்கள்  10 கி.மீ., (அண்ணா விளையாட்டரங்கம் முதல் கே.என்.பேட்டை சென்று திரும்பி வர வேண்டும்) பிரிவில் கடலூர் பெரியார் கல்லூரி மாணவி அன்புச்செல்வி, அண்ணாமலை பல்கலைக் கழக மாணவி மாதவி, திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பாரதி முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

                          ஜூனியர் ஆண்கள் ( 5 கி.மீ.,) பிரிவில் விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் தமிழரசு, என்.எல்.சி., பள்ளி மாணவர் கார்த்திக், நடுவீரப் பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் துரையும், மாணவிகள் பிரிவில் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி குணா,  நெய் வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீதேவி, புதுப் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி  மோனிஷா முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

                                சீனியர் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே 5000, 3000 மற்றும் 2 ஆயிரம் ரூபாயும், ஜூனியர் பிரிவிற்கு முறையே 3000, 2000, 1000 ரூபாயும், மேலும் அனைத்து பிரிவிலும் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா 500 ரூபாய் நாளை (26ம் தேதி) நடைபெறும் குடியரசு தினவிழாவில் பரிசு வழங்கப்படுகிறது.

                     முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான மாரத்தான் ஓட்ட போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Read more »

கடலூரில் நாளை நடைபெற இருந்த கறுப்பு கொடி போராட்டம் வாபஸ்

கடலூர் :

                 பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக் காததைக் கண்டித்து பொது நல இயக்கங்கள் சார்பில் கடலூரில் நாளை நடைபெற இருந்த கறுப்புக் கொடி போராட்டம், அதிகாரிகளின் சமாதான முயற்சியால் வாபஸ் பெறப்பட்டது.

                     கடலூரில் ஆமை வேகத் தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணியால் அனைத்து சாலைகளும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாகியுள்ளது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

                         பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைக்கக் கோரி நகரில் உள்ள 45 பொது நல இயக் கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும் அதில் அதிகாரிகள் அக்கறை செலுத்தாதைக் கண்டித்து குடியரசு தினமான நாளை (26ம் தேதி) கடலூரில் கறுப்பு கொடியுடன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

                    அதனைத் தொடர்ந்து நேற்று போராட்டக்குழுக் களுடன் சமாதான பேச்சுவார்த்தை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஆர். டி.ஓ., செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த கூட் டத்தில் சேர்மன் தங்கராசு, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ரகுநாதன், நெடுஞ்சாலை, நகராட்சி பொறியாளர்கள், டி.எஸ்.பி., ஸ்டாலின், தாசில்தார் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளும், போராட்டக்குழு ஏ.ஐ.டி.யு.சி., சேகர், இந்திய கம்யூ., சம்பந்தம், குளோப், வெண்புறா குமார், திருமாறன், தனியார் பஸ் தொழிலாளர் சங்க குருராமலிங்கம், பண்டரிநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

                       கூட்டத்தில் நெடுஞ் சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட வண்டிப்பாளையம் ரோடு, போடி செட்டி தெரு, சஞ்சீவி ராயன் கோவில் தெரு ரோடு, தேரடித் தெரு  சாலைகளை வரும் மார்ச் 15ம் தேதிக்குள்ளும், நெல் லிக்குப்பம் சாலை,  பஸ் நிலையம் இணைப்பு சாலை புதுப் பிக்கும் பணி நாளை (இன்று) துவங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று பொதுநல அமைப்புகள் கறுப்புக் கொடி போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

அதிகாரிகளுக்குள் மோதல்!

                     சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைவரும் சாலைகள் மிக மோசமாக இருப்பதற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ரகுநாதன், 9 ரோடுகள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு 2 கோடி பணம் வழங் கப்பட்டுள்ளது என்றார். அதற்கு நெடுஞ்சாலை துறை பொறியாளர் தற்போதுதான் சாலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

                          உடன் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் ரகுநாதன், பொய்யான தகவலை கூறாதீர்கள். நீங்கள் யார், ஏன் உங்கள் உயர் அதிகாரி வராமல் நீங்கள் வந்துள்ளீர்கள் என வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய ரகுநாதன் மூன்று மாதத்திற்கு முன் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சாலைகளை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்ததற்கான ஆதாரத்தை எடுத்து காட்டினார். கூட்டத்தில் நகராட்சி, நெடுஞ்சாலை துறை, குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசினர்.

Read more »

மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை வழங்குவதில் சிக்கல்! அதிகாரிகளின் அலட்சியத்தால் குழப்பம் நீடிப்பு

நெல்லிக்குப்பம் :

                         தமிழக அரசின் காப் பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

                    தமிழக அரசு உயிர்காக் கும் உயர் சிகிச்சை காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தனியார் நிறுவனம் மூலம்  செயல்படுத்தப்படும்  இத் திட்டத்திற்கு தமிழக அரசு 816 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தொழிலாளர், விவசாயிகள் நல வாரியங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட வாரியங்களில் உறுப்பினர் களாக உள்ளவர்கள் மற் றும் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய முடியும்.

                    இத்திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்த ஒரு குடும் பத்துக்கு நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவிலான சிகிச் சையை அந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக பெறலாம். இருதய நோய், புற்றுநோய், மூட்டு சம்பந் தப் பட்டது உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும். இதற்கான அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக் கும் பணி கடலூர் மாவட்டத்தில் முடிந்துள்ளது. வாரியங்களில் உறுப்பினர் களாக உள்ளவர்கள் அந்த அடையாள அட்டையை காண்பித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

                        மற்றவர்கள் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற் குள் உள்ளது என வி.ஏ.ஓ.,விடம் சான்று பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்ததால் அனைவருக்கும் வி.ஏ.ஓ., சான்று வழங்க முடியாது என்பதால், ரேஷன் கார்டை காண்பித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.  புகைப்படம் எடுக்க வந்தவர்களின் வருமானத்தை பற்றி கவலைப்படவில்லை.

                            இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் 90 சதவீதத்திற்கும் மேலானோர்  புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஆண் டக்கு பல லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் கூட இலவசமாக சிகிச்சை பெறலாம் என்ற ஆசையில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். காப்பீட்டு திட்டத்தை நடத்தும் தனியார் நிறுவனம் அரசு கூறியது போல் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே அடை யாள அட்டை வழங்க வேண்டுமென கூறியுள்ளனர்.

                       இந்நிலையில் புகைப்படம் எடுத்த அனைவருக் கும் அடையாள அட்டை வருவாய் துறையிடம் வந் துள்ளது. காப்பீட்டு நிறுவனம் கண்டிப்பாக உள்ளதால், அதிக வருமானம் உள்ளவர்களின் அடையாள அட்டையை வழங் கக் கூடாது என கலெக்டர் கூறியுள்ளார். அனைவரும் அடையாள அட்டை கிடைக்கும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

                     வருமானத்தை காரணம் கூறி அடையாள அட்டை வழங்காவிட் டால் பிரச்னை வரும் என்பதால் யாருக்கும் வழங்காமல் உள்ளனர். புகைப்படம் எடுக்கும் பொழுதே சரியான விதிமுறைகளை பின்பற்றியிருந் தால் இதுபோன்ற குழப்பங்களை தவிர்த்திருக்கலாம். அதிகாரிகளின் அலட்சியத்தால் தகுதியான நபர்களுக்கு கூட அடையாள அட்டை கிடைக்காமல் உள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior