உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

Useful Information

A useful piece of information.

Never, put your banana in the refrigerator!!!
 
This is interesting.
 
After reading this, you'll never look at a banana in the same way again .

Bananas contain three natural sugars - sucrose, fructose and glucose combined with fiber. A banana gives an instant, sustained and substantial boost of energy.

Research has proven that just two bananas provide enough energy for a strenuous 90-minute workout. No wonder the banana is the number one fruit with the world's leading athletes.

But energy isn't the only way a banana can help us keep fit.

It can also help overcome or prevent a substantial number of illnesses and conditions, making it a must to add to our daily diet.

Depression: According to a recent survey undertaken by MIND amongst people suffering from depression, many felt much better after eating a banana. This is because bananas contain tryptophan, a type of protein that the body converts into serotonin, known to make you relax, improve your mood and generally make you feel happier.

PMS: Forget the pills - eat a banana. The vitamin B6 it contains regulates blood glucose levels, which can affect your mood.

Anemia: High in iron, bananas can stimulate the production of hemoglobin in the blood and so helps in cases of anemia.

Blood Pressure: This unique tropical fruit is extremely high in potassium yet low in salt, making it perfect to beat blood pressure. So much so, the US Food and Drug Administration has just allowed the banana industry to make official claims for the fruit's ability to reduce the risk of blood pressure and stroke.

Brain Power: 200 students at a Twickenham (Middlesex) school were helped through their exams this year by eating bananas at breakfast, break, and lunch in a bid to boost their brain power. Research has shown that the potassium-packed fruit can assist learning by making pupils more alert.

Constipation: High in fiber, including bananas in the diet can help restore normal bowel action, helping to overcome the problem without resorting to laxatives.

Hangovers: One of the quickest ways of curing a hangover is to make a banana milkshake, sweetened with honey. The banana calms the stomach and, with the help of the honey, builds up depleted blood sugar levels, while the milk soothes and re-hydrates your system.

Heartburn: Bananas have a natural antacid effect in the body, so if you suffer from heartburn, try eating a banana for soothing relief.

Morning Sickness: Snacking on bananas between meals helps to keep blood sugar levels up and avoid morning sickness.

Mosquito bites: Before reaching for the insect bite cream, try rubbing the affected area with the inside of a banana skin. Many people find it amazingly successful at reducing swelling and irritation.

Nerves: Bananas are high in B vitamins that help calm the nervous system.

Overweight and at work? Studies at the Institute of Psychology in Austria found pressure at work leads to gorging on comfort food like chocolate and crisps. Looking at 5,000 hospital patients, researchers found the most obese were more likely to be in high-pressure jobs. The report concluded that, to avoid panic-induced food cravings, we need to control our blood sugar levels by snacking on high carbohydrate foods every two hours to keep levels steady.
Ulcers: The banana is used as the dietary food against intestinal disorders because of its soft texture and smoothness. It is the only raw fruit that can be eaten without distress in over-chronicler cases. It also neutralizes over-acidity and reduces irritation by coating the lining of the stomach.

Temperature control: Many other cultures see bananas as a "cooling" fruit that can lower both the physical and emotional temperature of expectant mothers. In Thailand, for example, pregnant women eat bananas to ensure their baby is born with a cool temperature.

Seasonal Affective Disorder (SAD): Bananas can help SAD sufferers because they contain the natural mood enhancer tryptophan.

Smoking & Tobacco Use: Bananas can also help people trying to give up smoking. The B6, B12 they contain, as well as the potassiu! m and ma gnesium found in them, help the body recover from the effects of nicotine withdrawal.

Stress: Potassium is a vital mineral, which helps normalize the heartbeat, sends oxygen to the brain and regulates your body's water balance. When we are stressed, our metabolic rate rises, thereby reducing our potassium levels. These can be rebalanced with the help of a high-potassium banana snack.

Strokes: According to research in "The New England Journal of Medicine, 'eating bananas as part of a regular diet can cut the risk of death by strokes by as much as 40%!

Warts: Those keen on natural alternatives swear that if you want to kill off a wart, take a piece of banana skin and place it on the wart, with the yellow side out. Carefully hold the skin in place with a plaster or surgical tape!

So, a banana really is a natural remedy for many ills. When you compare it to an apple, it has four times the protein, twice the carbohydrate, three times the phosphorus, five times the vitamin A and iron, and twice the other vitamins and minerals. It is also rich in potassium and is one of the best value foods around So maybe its time to change that well-known phrase so that we say, "A banana a day keeps the doctor away!"

PS: Bananas must be the reason monkeys are so happy all the time!
We will add one here; want a quick shine on our shoes??
Take the INSIDE of the banana skin, and rub directly on the shoe...polish with dry cloth.

Amazing fruit.

Read more »

Service activities to be intensified: vice-chairman

CUDDALORE: 

              R.M. Swethakumar of Chidambaram Lions Club has been elected as the vice-chairman of the Lions 324A3 district.

               The Lions district comprises a total of 83 Lions Clubs functioning at places such as Chidambaram, Cuddalore, Neyveli, Panruti, Tindivanam, Villupuram, Vriddhachalam and Puducherry.

              In a statement Mr. Swethakumar stated that these clubs were already involved in conducting health camps, arranging awareness campaigns on blood donation, rendering educational services, and, undertaking relief and rehabilitation works in the disaster-prone areas. He said that these activities would be further intensified so as to render the required help to the target group.

Read more »

Consumer Guild's plea

CUDDALORE:

        The Consumer Guild of Tamil Nadu has appealed to District Collector P. Seetharaman to arrange for proper verification of ration cards and issue new cards for the deserving persons.

        In a representation handed over to the Collector the Guild secretary C.D. Appavu stated that even in those areas where the verification was purportedly completed many authentic ration cards were cancelled as bogus cards. If such a situation prevails it would lead to a slew of litigations. Even the applications seeking new ration cards were returned without assigning any valid reason.

Read more »

மின்கம்பங்கள் 'டமால், டமால்' சிதம்பரத்தில் மக்கள் ஓட்டம்

சிதம்பரம்: 
 
                 சிதம்பரத்தில் பொதுமக்கள் நடமாட் டம் உள்ள பகுதியில் இரண்டு மின் கம்பங்கள் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் வடக்கு வீதி தில்லையம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே இரண்டு மின் கம்பங்கள் கீழ் பகுதியில் செரித்த நிலையில் இருந்தது. நேற்று மதியம் 2 மணியளவில் இரண்டு மின்கம்பங்களும் திடீரென கீழே விழுந்தன. அப்போது மின்சாரம் இருந்ததால் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டது.

               இதனைக் கண்டு பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்த மின் துறையினர் மின்சாரத்தை துண்டித்து, மின்கம்பத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னரே சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மின் கம்பம் விழுந்த வழியாக தில்லைக் காளி கோவிலுக்கு செல்ல வேண்டும். பிரபல தனியார் பள்ளி உள்ளது. முக்கிய நகர் பகுதிக்கு அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் சாலை எப்போதும் பிசியாக இருக்கும். மின்கம்பம் விழுந்த நேரத்தில் யாரும் செல்லாததால் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதே போன்று இரண்டு ஆண்டுக்கு முன்பு தெற்கு வீதியில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் நடந்தது. சிதம்பரம் நகரில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை கணக்கெடுத்து உடனடியாக மாற்ற மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி உற்சவம்

கடலூர்:

                      கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று (13ம் தேதி) மகா சிவராத்திரி விழா நடக்கிறது. விழாக்களில் முதன்மையும், பெருமையும் கொண் டது மகா சிவராத்திரி விழா. பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் அருள்பாலிக்கும் பொருட்டு சிவபெருமான் சிவலிங்கமேனி கொண்ட காலமே மகா சிவராத்திரி என்றும், அன்று இரவு நான்கு ஜாமத் திலும் சிவபெருமானை உமா தேவி வழிபட்டதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.சிவராத்திரி என்பது துக் கங்களை போக்கி சுகம் கொடுப்பதாகும். அன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரருக்கு நான்கு கால சிறப்பு பூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை இந்து அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ஜெகன் னாதன், செயல் அலுவலர் மேனகா மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர் கள் செய்து வருகின்றனர். 
 
திருவதிகை:

                    வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று (13ம்தேதி) காலை 6 மணிக்கு அம்பாள் பெரியநாயகி, வீரட்டானேஸ்வர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடக்கிறது.விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சரக் கொன்றைநாதர் சுவாமிக்கு பஞ்ச தீர்த்தங்களால் பக்தர் களே நேரடியாக அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய் யப்பட் டுள்ளது. மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்பாள் சுவாமிக்கு இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11மணிக்கு 2ம் கால பூஜையும், 2 மணிக்கு 3ம் கால பூஜையும், 4மணிக்கு 4ம் கால பூஜையும், நாளை விடியற்காலை தீபாராதனை நடக்கிறது.

Read more »

மாற்று திறன் படைத்தோருக்கு உதவி தொகைகலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

விருத்தாசலம்: 

             விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மாற்று திறன் படைத்தோருக்கு உதவி தொகை வழங்குவது குறித்து அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

               மாவட்ட வருவாய் அதிகாரி நடராஜன் முன்னிலை வகித்தார். தாசில் தார் ஜெயராமன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் நித்தியானந் தம், பி.டி.ஓ., க்கள், ஆர்.ஐ.,கள் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரிகள், அரசு டாக்டர்கள் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில், 

மாற்று திறன் படைத்தோர் 18 வயதில் இருந்து 64 வயதிற்குள்ளும், ஊனம் 80 சதவீதம் இருக்க வேண் டும். வயதிற்கான ஆதாரம், ஊனத் திற்காக மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலரிடமிருந்து பெறப் பட்ட அடையாள அட்டை, வறுமைக்கோடு பட்டியல் நகல் இருக்க வேண்டும்.

          இவ்வாறு தகுதி வாய்ந்த மாற்று திறன் படைத்தோர் உதவி தொகை வேண்டி மனுக்களை எழுதி தங்கள் பகுதிக்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., பி.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், சமூக பாதுகாப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் கொடுக்கலாம்.  மனுக்களை பரிசீலித்து உதவி தொகை வழங்கப்படும் என பேசினார்.
பின்னர் அவர்  கூறியதாவது:
                    மாற்று திறன் படைத்தோருக்கு உதவி தொகை வழங்கும் வாரம் வரும் 15 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை நடக்கிறது. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் விருத்தாசலம், காட்டுமன்னார்குடி, நல்லூர், மங்களூர் ஒன்றியங்களில் செயல்படுகிறது.

             இதில் 8,207 பேர் மாற்று திறன் படைத்தோர் என பட்டியலிடப்பட் டுள்ளது. கம்மாபுரம் ஒன்றியத்தை சேர்த்தால் 10 ஆயிரம் பேர் பட்டியலில் இடம் பெறுவர். இவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Read more »

சிதம்பரத்தில் இன்று நாட்டியாஞ்சலி துவக்கம் : பிரபல கலைஞர்கள் குவிந்தனர்

சிதம்பரம்:

                  சிதம்பரம் நடராஜர் கோவிலில் 29வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா இன்று (13ம் தேதி) துவங்குகிறது. பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் பரதம் ஆடுகிறார். நாட்டியாஞ் சலியில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து கலைஞர்கள் சிதம்பரம் வந்துள்ளனர். நடராஜ பெருமான் நாட்டி யமாடிய சிதம்பரத்தில், 1981ம் ஆண்டு அறக்கட்டளை துவங்கி, கடந்த 28 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது.

                       இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் நாட்டிய கலைஞர்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். மகா சிவராத்திரியான இன்று (13ம் தேதி) 29வது நாட்டியாஞ்சலி விழா துவங்கி, 17ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் ராமநாதன், என்.எல்.சி., சேர்மன் அன்சாரி ஆகியோர் விழாவை துவக்கி வைக்கின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியான இன்று சிவராத்திரி என்பதால், மாலை 5.30 மணிக்கு துவங்கி, மறுநாள் 14ம் தேதி காலை 5 மணி வரை தொடர்ந்து நடக்கிறது. நாட்டியாஞ்சலி இன்று துவங்குவதையொட்டி, கோவில் வெளிப்பிரகாரத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

Read more »

மளிகை கடைகளில் சுகாதார துறையினர் சோதனை

கடலூர்:

              மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் கலப்பட பொருள் விற்கப்படுகிறதா என சுகாதார துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் மீரா உத்தரவின் பேரில், வடலூர் வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் வடலூர் பேரூராட்சி பகுதியிலும், கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் புவனகிரி பகுதியிலும், சுகாதார மேற்பார்வையாளர் ராமதாஸ் தலைமையில் பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளிலும்,  காடாம்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மலர்விழி தலைமையிலான குழுவினர் அங்குசெட்டிப்பாளையம், எல்.என்.புரம், பூங்குணம் பகுதிகளிலும், ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அறிவொளி தலைமையிலான குழுவினர் புதுப் பேட்டை பேரூராட்சி பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். 
 
                         அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ள துவரை, கடலை, உளுந்து, கேசரி பருப்பு உள்ளிட்டவைகளில் கலப்படம் உள்ளதா என சோதனை செய்தனர். சில கடைகளில் பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளை மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கடை உரிமையாளர்களை அறிவுறுத் தினர்.

Read more »

ஊனமுற்றோருக்கு கடன் வழங்க ஆலோசனை முகாம்


சிதம்பரம்: 

         சிதம்பரத்தில் ஊனமுற்றோர்க்கு வங்கி கடன் வழங்குவது தொடர்பான முகாம்  நடத்தப்பட்டது.
 
                     தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் மூலமாக ஊனமுற்ற நபர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் ஊனமுற்றோர் அலுவலகம் மூலம் சிதம்பரத்தில் முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மிருணாளினி தலைமை தாங்கினார். மாவட்ட ஊனமுற்றோர் நல அலுவலர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். மத்திய வங்கி உதவி பொதுமேலாளர் மோகன் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பேசி விண்ணப் பங்களை வழங்கினார். துணைப்பதிவாளர் இளஞ்செழியன், மேலாளர் சீனுவாசன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.

Read more »

கிள்ளை ரயில் நிலையத்தில் தண்டவாளம் சீரமைப்பு பணி


கிள்ளை: 

              சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையத்தில் தண்டவாளம் சீரமைப்பு பணி நடந்தது.

                 விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்துள்ள நிலையில் பயணிகள் ரயில் இயக்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு கடந்த 27ம் தேதி தண்டவாளங்கள், ரயில் நிலைய கட்டடங்கள், கிராசிங் பாயிண்ட்கள், பாலங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்தார்.ரயில்வே சாலையில் குறைந்த அளவில் ஜல்லிகள் கொட்டப்பட்டும், சில இடங்களில் ஜல்லிகளை பரப்பாமல் ஆங்காங்கே திட்டுத்திட்டாக கொட்டப் பட்டிருந்தது. கூடுதல் ஜல்லிகளை தண்டவாளங்களின் சிலிப்பர் கட்டைகளுக்கிடையில் கொட்டி நிரப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று கிள்ளை ரயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகளுக்கு இடையில் ஜல்லிகளை கொட்டி தண்டவாளம் சீரமைப்பு பணி நடந்தது.

Read more »

நடராஜர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி


சிதம்பரம்: 

                சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி விடிய, விடிய பூஜைகள் நடக்கிறது.பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி இன்று காலை கால பூஜைகள் முடிந்து பிறகு மாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து விடிய, விடிய கால பூஜைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடக்கிறது.அதே போல் சிவதொண் டர்கள், பொதுமக்கள் விரதமிருந்து திருமுறை பாராயணம் பாடியபடி சிவஜோதி எடுத்து காலை 6மணி முதல் மாலை 6மணி வரை மகா சிவாலய தரிசனமும் நடக் கிறது.

                    நடராஜர் கோவிலில் இருந்து தரிசனத்தை துவக்கி நடைபயணமாக ஈசான்ய லிங்கம், இந்திர லிங்கம், கமலீஸ்வரன் கோவில், உமாபதி சிவமடம், சிவபுரி, திருக்கழிப்பாலை, உசுப்பூர், புலிமேடு, அக்னி லிங்கம், இமய லிங்கம், நிருதி லிங்கம், இளமையாக்கினார் கோவில், அழகேஸ்வரர் கோவில், நந்தனார் கோவில், துர்வாசர் மடம், அனந்தீஸ்வரர் கோவில், பிரம்பராயர் கோவில், சிங்காரத்தோப்பு, அவதூதசுவாமிகள் அரிஷ் டானம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மாணிக்கவாசகர் மடம் ஆகியவற்றை தரிசத்துவிட்டு குருநமச்சிவாயர் கோவிலில் சிவாலய தரிசனத்தை முடிக்கின்றனர். சிதம்பம் சைவ திருச்சபை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

Read more »

தனியார் பஸ்களில் மறைமுக கட்டண உயர்வு கடும் நடவடிக்கை: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை


கடலூர்: 

              தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.

               கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சேத்தியாத்தோப்பு, நெல்லிக்குப்பம், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அரசு உத்தரவு ஏதுமின்றி தனியார் பஸ்களில் திடீரென மறைமுகமாக கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை காரணம் காட்டி சாதாரண மற்றும் மினி பஸ்களில் குறைந்த பட்சம் 2 ரூபாயை 3ஆகவும், 3.50ஐ 4 ரூபாயாகவும், 5.50ஐ 6 ரூபாயாகவும், 7.50ஐ 8 ரூபாயாக உயர்த்தி கட்டணம் வசூலிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில் 

                       "மாவட்டத்தில் 366 தனியார் பஸ்களும், 472 அரசு பஸ்கள் மற்றும் 121 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்களில் கட்டணங்கள் உயர்த்தப் பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருவதோடு திடீர் ஆய்வும் மேற் கொள்ள இருக்கின்றோம். சோதனையின் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதேப்போன்று சரக்கு ஏற்றும் மினி லாரிகளில் ஆட்களை ஏற்றிச் சென்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம், விருத்தாசலம், கடலூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில் 4 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. மேலும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் 12ம் தேதி வரை சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தியதற்காக 10 டிரைவர்கள் உரிமத்தை 6 மாதகாலம் தற்காலிக ரத்து செய்தும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 24 பேர் உரிமம் முழுமையாகவும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறினார்.

Read more »

சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் அதிகாரி கைது


கடலூர்: 

                 சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய விற்பனையாளரிடம் மூவாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

                  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(35). நெய்வேலி டாஸ்மாக் கடை விற்பனையாளரான இவர், முறைகேடு செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இதனை ரத்து செய்து மீண்டும் பணியாணை வழங்க டாஸ்மாக் நிறுவன மாவட்ட உதவி மேலாளர் பட்டுசாமி (57) 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். ராஜமாணிக்கம் 2,000 ரூபாய் கொடுத்தார். மேலும், 3,000 ரூபாய் கொடுத்தால் தான் பணியாணை வழங்கப்படும் என பட்டுசாமி கூறினார். இதுகுறித்து ராஜமாணிக்கம், கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில், ராஜமாணிக்கம் நேற்று மதியம் 3,000 ரூபாயுடன், கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள டாஸ் மாக் அலுவலகத்திற்கு சென்று, உதவி மேலாளர் பட்டுசாமியிடம் கொடுத்தார். அங்கு கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., வேதரத்தினம், இன்ஸ்பெக்டர்கள் திருமால், பழனி உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கிய உதவி மேலாளர் பட்டுசாமியை கையும், களவுமாக பிடித்தனர். அவரிடம் 4,000 ரூபாய் இருந்தது. இது குறித்து விசாரணை செய்ததில், ஏற்கனவே, மீய்ச்சுவல் பணி மாற்றத்திற்காக இருவரிடம் தலா 500 ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது. லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, பட்டுசாமியை கைது செய்து கடலூர் மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Read more »

பாம்புகளுடன் விவசாயி வந்ததால் சர்க்கரை ஆலையில் பரபரப்பு

நெல்லிக்குப்பம்: 

                   கரும்பை எரித்து வெட்டுவதற்கு ஆலை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த விவசாயி வயலில் இருந்த பாம்புகளை பிடித்து வந்து ஆலை வளாகத்தில் போட்டதால், பரபரப்பு ஏற் பட்டது.

                கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்ய பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு பயிரிடப்படுகிறது. கரும்பில் கொடிகள் ஏறியிருந்தால் வெட்டுவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால், விவசாயிகள் கரும்பு தோட்டத்தை தீ வைத்து கொளுத்திவிட்டு வெட்டுவது வழக்கம். தீயில் எரிந்த கரும்புகளை சப்ளை செய்வதால் ஆலைக்கு சிறிதளவு இழப்பு ஏற்படும். இதனால், எரித்த கரும்புகளை எடுத்து வரக்கூடாது என ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

                   இந்நிலையில், மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த ஆறுமுகத்திற்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப் பட்டிருந்த கரும்பை வெட்ட ஆலை நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதன்பேரில், கீழ்கவரப்பட்டு அரிகடல் என்பவர் கரும்பு வெட்டும் பணியை துவங்கினார். கரும்பு வயலில் பாம்புகள் அதிகமாக இருந்தது. அதனால் கரும்பு வயலை எரித்து விட்டு வெட்ட அரிகடல் அனுமதி கேட்டார். ஆலை நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்தனர்.ஆத்திரமடைந்த அரிகடல், நிலத்தில் இருந்த இரண்டு சாரைப் பாம்பு, 10க்கும் மேற்பட்ட பச்சை பாம்புகளை அடித்து சாக்கு பையில் போட்டு நேற்று சர்க்கரை ஆலைக்கு எடுத்து வந்தார். அந்த பாம்புகளை பிரித்து வைத்து, "இதற்காக தான் தீ வைக்க அனுமதி கேட்டேன்' என்று கூறினார். பாம்புகளை பார்க்க கூட்டம் கூடியது. பாம்புகளை எடுத்து வந்த அரிகடலை, அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர். இச்சம்பவத்தால், ஆலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

கடலூர் பிளஸ் 2 தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர்கள் அதிரடி மாற்றம்


கடலூர்: 

              கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளர் உட்பட 25 அறை கண் காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

                பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த ஒன்றாம் தேதி துவங்கியது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பருவதராஜ குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் முறைகேடுகள் நடப் பதாக பள்ளிக் கல்வி இயக்குனரகத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கடந்த 8ம் தேதி நடந்த இயற்பியல் தேர்வின் போது பறக்கும் படையைச் சேர்ந்த 30 பேர் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து 10ம் தேதி இரவோடு இரவாக அப் பள்ளியில் பணியில் ஈடுபட்ட 25 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உள்ள ஐந்து மையங்களின் தலைமை கண் காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் வேறு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

                   இந்நிலையில் 11ம் தேதி நடந்த வேதியியல் தேர்வின் போது தொடக்கக் கல்வி இணை இயக்குனர் கருணாகரன் கடலூர், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அதில் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் அறை கண் காணிப்பாளர்களாக நியமித்திருப்பதை அறிந்து, அனைவரையும் வேறு மையத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று அம்மையத்தின் முதன்மை கண் காணிப்பாளர், துறை அலுவலர், மூன்று கூடுதல் துறை அலுவலர் கள் மற்றும் 25 அறை கண்காணிப்பாளர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு தேர்வின் போதும் கண் காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more »

பேக்கரியில் தீ விபத்து

கடலூர்: 

             கடலூர் முதுநகரில் நேற்று இரவு பேக்கரி எரிந்து சேதமடைந்தது. கடலூர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் மதிவாணன். இவர் வீட்டின் ஒரு பகுதியில் பேக்கரி வைத்துள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் மின் விளக்கு திடீரென வெடித்ததால் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக கூரை தீ பிடித்து எரிந்தது. கடலூர் சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

Read more »

விரிவுரையாளர்கள் போராட்டம்


கிள்ளை: 

          சி.முட்லூர் அரசு கல் லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
 
              அரசு கல்லூரிகளில் உள்ள கவுரவ விரிவுரையாளர்கள் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8ம் தேதியில் இருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சி.முட்லூர் அரசு கல்லூரியில் நேற்று சங்க கிளை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் கவுரவ விரிவுரையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more »

என்.எல்.சி., சுரங்கத்தில் திருட முயற்சி துப்பாக்கி சூடு; பொருட்கள் தப்பியது


நெய்வேலி: 

                     என்.எல்.சி., சுரங்க வளாகத்தில் திருட முயன்ற கும்பலிடமிருந்து, துப்பாக்கி சூடு நடத்தி பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டது. நெய்வேலி - வடலூருக்கு இடையே உள்ள பெரியாகுறிச்சி வீரன் கோவிலின் பின்புறம் வழியாக என்.எல்.சி., முதல் சுரங்கத்திற்குள் நேற்று அதிகாலை 3 மணியளவில் இறங்கிய 20க்கும் மேற்பட்ட கும்பல் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு, காப்பர் உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டு தப்பிக்க முயன்றனர்.

                      அதை பார்த்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் தேவதாஸ், பொருட்களை கீழே போடுமாறு எச்சரித்தார். அந்த கும்பல் தேவதாசை கத்தியால் வெட்ட முயன்றது. சுதாரித்துக் கொண்ட தேவதாஸ், தான் வைத்திருந்த "இன்சாப்' வகை துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டார். திருடிய பொருட்களை போட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். தகவலறிந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். திருட முயற்சி மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நெய்வேலி தர்மல் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய கும்பலை தேடிவருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more »

மீன் பிடிக்க வரமறுத்ததால் வாலிபர் அடித்துக்கொலை: இருவருக்கு வலை

கடலூர்: 

                மீன் பிடிக்க வரமறுத்ததால் வாலிபரை அடுத்து குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் தேடிவருகின்றனர். சிதம்பரம் அடுத்த காயல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபு (37). அதே ஊர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22), குறிஞ்சிப்பாடி அடுத்த பொட்டவெளியைச் சேர்ந்தவர் சஞ்சீவி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக காயல்பட்டில் வசித்து வருகின்றார். நேற்று அதே பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிப்பதற்காக மணிகண்டன், சஞ்சீவி இருவரும் பிரபுவை அழைத்துள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித் தார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட் டுள்ளது. பின்னர் மீன் பிடிப்பதற்கு வலையை யாவது கொடு என கேட்டும், பிரபு மறுத்ததால் ஆத்திரமடைந்த மணிகண்டன், சஞ்சீவி இருவரும் சேர்ந்து பிரபுவை தாக்கியுள்ளனர். பின்னர் அருகில் உள்ள குளத்திற்கு இழுத்துச் சென்று தண்ணீரில் முழ்கடித்தனர். இதை பிரபுவின் தம்பி தணிகாசலத்தின் மகன் ரியாஸ் பார்த்து கூச்சலிட்டதும் இருவரும் தப்பியோடி விட்டனர். பின் ஊரில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது பிரபு தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தணிகாசலம் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் கொலை வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், சஞ்சீவி ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior