உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

விபத்தில்லாத நாள்களே இல்லை: மரணச்சாலையாக மாறும் கிழக்கு கடற்கரைச் சாலை...


கடலூரில் போலீஸ் சோதனையில் விதிகளை மீறியதாக பிடிபட்ட ஆட்டோக்கள்.
 
கடலூர்:

              கிழக்கு கடற்கரைச் சாலை தற்போது மரணச் சாலையாக மாறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையான கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதுவை- கடலூர் இடைப்பட்ட 22 கி.மீ. பகுதியில் (45ஏ) அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் மக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

                  இது கடலூர் மாவட்ட மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் இறந்தவர்களில் மூவர் சாலையோரம் நின்றிருந்த பாதசாரிகள். புதுவை- கடலூர் இடையே இரு சக்கர வாகனங்களில் செல்வோர், துணிச்சல் மிக்கவராகவும், உயிரைப் பற்றி கவலைப்படாதவராகவும்தான் இருக்க முடியும் என்பது, இப்பகுதி மக்களின் கருத்து. சராசரியாக ஆண்டுக்கு 500 விபத்துகள் கடலூர்- புதுவை இடையே நடக்கின்றன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகிறார்கள். புதுவை பகுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பதற்காக 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தினமும் கடலூரில் இருந்து புதுவை மாநில எல்லைக்குள் 5 கி.மீ தூரம் வரைச் சென்று திரும்புகின்றனர். 

             மேலும் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனைகள், அரவிந்த் கண் மருத்துவமனை, தொழிற்சாலைகள், பள்ளிகள் என்று பலவற்றுக்கும் கடலூர் மற்றும் கடலூரைச் சுற்றியுள்ள மக்கள் தினமும் கடலூர்-புதுவை சாலையில் சென்றுவர வேண்டிய கட்டாயம் உள்ளது. கோயில் விழாவுக்கு நேர்ச்சைக்காகச் செல்பவர்கள்போல், புதுவை மாநில எல்லையில் உள்ள பிராந்திக் கடைகள் சாராயக் கடைகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். இதனால் கடலூர்- புதுவை சாலையில் குறிப்பாக கடலூர்- முள்ளோடை இடையே 6 கி.மீ. தூரம் போக்குரத்து நெரிசல் கடுமையாகி வருகிறது. இப்பகுதியில் விபத்து நடக்காத நாள்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டு, பல அப்பாவி உயிர்கள் பலியாவதால் இது மரணச் சாலையாக மாறிவிட்டது.  

              இந்த 6 கி.மீ. தூரத்துக்குள் சாலை குறுகி இருப்பது, விளக்குகள் இன்றி இருண்டு கிடப்பது, இரு இடங்களில் வளைவுகள், பெரிய கங்கனாங்குப்பம் பகுதியில் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ந்துள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டும் காணாததுபோல் இருப்பதுதான் கோர விபத்துகளுக்குக் காரணம். மாலை 4 மணிக்கு மேல் அதிவேகத்தில் பறக்கும் ஷேர் ஆட்டோக்கள் பெரும்பாலானவை உரிமம் பெறாதவைகளாகவும், சாராயக் கடைக்கும் பிராந்திக் கடைக்கும் செல்வோரைச் சுமந்து செல்பவைகளாகவும் உள்ளன. ஒவ்வொரு ஷேர் ஆட்டோ மூலமும்  மாமூல் போக, உரிமையாளருக்கு ரூ.300, ஓட்டுநருக்கு ரூ.700-ம் நாள்தோறும் சம்பாதிக்கிறார்கள் என்றால், இவற்றில் பயணிப்போரின் எண்ணிக்கையையும், அவை செல்லும் வேகத்தையும் ஊகித்துக் கொள்ளலாம் என்கிறார்கள் பொதுமக்கள். புதுவை - கடலூர் இடையே இயக்கப்படும் பஸ்களில் குடிகாரர்களின் தொல்லை காரணமாக கடலூரில் இருந்து முள்ளோடை வரை உள்ள பகுதிகளில் பயணிகள் யாரையும் ஏற்றிக் கொள்வது இல்லை. 


இப்பிரச்னை குறித்து கடலூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதாணன் கூறுகையில்

               கடலூர்- புதுவை சாலையில் சுமார் 6 கி.மீ. தூரத்துக்கு உடனடியாக, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ÷கனரக வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது, போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை எல்லையில் இருந்து கடலூருக்கு ஆங்கிலேயர் காலத்தில் இருந்த, மாற்றுப் பாதையை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்றார்.

                ""பெண்ணையாற்றுப் பாலம் அருகே இரு தணிக்கைச் சாவடிகள் உள்ளன. இப்பகுதியில் நெருக்கடியைப் போக்க, சதுக்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஏற்றுக் கொண்டும், நகராட்சியும் மாநில நெடுஞ்சாலைத் துறையும் நிலம் அளிக்காததால், அப்பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பெண்ணையாற்றுப் பாலம் முதல் பாகூர் சாலை பிரிவு வரை, சாலை நடுவே டிவைடர் அமைக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலையின் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இவைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

Read more »

கோவை அண்ணா பல்கலை. முதுநிலை படிப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த மே-ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட எம்.இ, எம்டெக், எம்சிஏ, எம்.எஸ்ஸி படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் இணையதளம் (www.ann​auniv.ac.in) மூலமாக தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற இணையதளத்தின் (www.ann​auniv.ac.in) மூலமாக ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.கருணாகரன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Read more »

உணவு தானியங்களைப் பாதுகாக்க உதவும் மரக்களஞ்சியம்




தமிழகத்தில் இன்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் மரக்களஞ்சியம்.
 
 
சிதம்பரம்:
 
           உணவு தானியங்களை இயற்கை முறையில் பாதுகாக்க "மரக்களஞ்சியம்' எனும் முறை விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.
 
              உணவு தானிய விற்பனை சந்தைகளில் ஏற்படும் தொடர்ச்சியான விலை ஏற்ற, இறக்கங்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதார நலன்களை  வெகுவாக பாதிக்கச் செய்கிறது. நெல் மற்றும் சிறு தானியங்கள் விளைச்சல் முடிந்து அறுவடைக் காலத்தில் குறைந்த விலையே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. அடுத்த சில மாதங்களில் அறுவடைக்கு பிந்தைய வரத்துகள் வெகுவாக குறைந்த நிலையில் உணவு தானியங்களின் விலை கடுமையாக உயருகிறது. இடைத்தரகர்கள், வியாபாரிகள், தனியார் வேளாண் நிறுவனங்களே அதிகளவு பொருளாதார லாபங்களை பெரும் நடைமுறை சூழல் நிலவுகிறது. இத்தகைய நடைமுறை சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள், நலன்களை பாதுகாக்க பாரம்பரியமிக்க மரக்களஞ்சியம்  பெரிதும் உதவியாக இருக்கும்.
 
சேமிப்பு முறைகள்: 
 
               இயற்கை முறையில் உணவு தானியங்களை மரக்களஞ்சியம் மூலம் பாதுகாக்கலாம். சிறு மற்றும் குறு விவசாயிகள் வேளாண் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மரக்களஞ்சியங்களை தேர்வு செய்து விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டும். முதலில் மரக்களஞ்சியம் உறுதியான மரத்தால் செய்யப்பட்டு துவாரங்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும். மரக்களஞ்சியம் வடிவமைப்புகள் மாறுபட்டாலும் விவசாயிகள் தங்கள் பண்ணை வீடுகளில் மற்றும் சிறு வீடுகளில் எளிதாக வைக்கும் வண்ணம் உள்ள வடிவமைப்புகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது.  சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள மரங்களைக் கொண்டு தச்சர்கள் மூலம் தேவைக்கேற்ப மரக்களஞ்சியங்களை தேவையான வடிவமைப்பில் செய்து கொள்ளலாம்.
 
                சாகுபடி பணி முடிந்து அறுவடைப் பணிகள் துவங்கும் போது விவசாயிகள் மரக்களஞ்சியத்தை நன்றாக சுத்தம் செய்து வெயிலில் வைக்க வேண்டும். பின்னர் புங்கன் எண்ணெய்யை ஒரு துணி கொண்டு மரக்களஞ்சியத்தின் உள்ளே நன்றாக தடவ வேண்டும். புங்கன் எண்ணெய் வாசனையே பல உணவு தானியங்களை தாக்கும் சேமிப்பு பூச்சிகளை  விரட்டிவிடும் தன்மை கொண்டது. பின்னர் நன்றாக வெயிலில் காய வைக்கப்பட்ட பதர் இல்லாத உணவு தானியங்கள் வேப்ப இலை, புங்கன் இலை அல்லது நொச்சி இலைகளுடன் கலந்து மரக்களஞ்சியங்களில் பல பருவங்களுக்கு சேமித்து வைக்கலாம். மிக நீண்ட காலத்துக்கு உணவு தானியங்களை விவசாயிகள் சேமிக்க விரும்பினால் மரக்களஞ்சியங்களில் இருந்து வெளியில் எடுத்து நன்றாக சுத்தம் செய்துவிட்ட காய்ந்த நொச்சி, வேம்பு மற்றும் மஞ்சள் (சிறிய துண்டுகள்) போட்டு மீண்டும் மூடிவிட வேண்டும். மரக்களஞ்சியத்தை விவசாயிகள் தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் மண் தொடர்பு இல்லாத வகையில் அமைக்க வேண்டும்.
 
பிற பயன்கள்: 
 
                சிறு விவசாயிகள் வேளாண் பொருள்களை குறைந்த செலவில் இயற்கை முறையில் பாதுகாத்து வேளாண் சந்தைகளில் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம். பெரு விவசாயிகள் மரக்களஞ்சியம் வாயிலாக விதை நெல்லை எளிதாக பாதுகாத்து பயன்பெறலாம். சிறு மற்றும் குறு தானியங்கள் மரக்களஞ்சியம் வாயிலாக நீண்டநாள் பாதுகாத்து வியாபாரிகள் விற்பனை செய்ய முடியும். எனவே தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று தரும் மரக்களஞ்சியத்தை பயன்படுத்தி வளம் பெறலாம் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன்.

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவில் நுழைவு போராட்டம் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 473 பேர் கைது

சிதம்பரம்:

             சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாயில் நுழைவு போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட மா.கம்யூ., எம்.எல்.ஏ., மகேந்திரன் உள் ளிட்ட 473 பேர் கைது செய்யப் பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் சென்ற தெற்கு வாயில் அடைக்கப்பட்டு கிடப் பதை கண்டித்து, தெற்கு வாயில் வழியாக கோவிலுக்குள் செல்லும் போராட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் அறிவித்தனர்.

              அதன்படி நேற்று சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு அருகில் இருந்து மாநில தலைவர் சம்பத் தலைமையில் பெரம்பூர் எம்.எல்.ஏ., மகேந்திரன், விவசாயிகள் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், மா.கம்யூ., மாநிலக் குழு உறுப்பினர்கள் தனசேகரன், மூசா, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு மாவட்ட அமைப்பாளர் துரைராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி ஸ்ரீரங்கன் பிரகாஷ், மனித உரிமை கட்சி விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

              அவர்களை நடராஜர் கோவில் தெற்கு வாயிலில் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், தடையை மீறி கோவிலுக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.தீர்வு ஏற்படாத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென தெற்கு வீதியில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்ததை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 57 பெண்கள் உள்ளிட்ட 473 பேரை போலீசார் கைது செய்து, போக்குவரத்தை சரி செய்தனர்.

Read more »

திட்டக்குடி வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணி தாமதம்! மாற்று வழி ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை

திட்டக்குடி: 

              திட்டக்குடி வெலிங்டன் ஏரி கரைகள் சீரமைப்பு பணி பருவமழைக்கு முன்னதாக நிறைவடையுமா என விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். 

               திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள 2580 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டு வெலிங்டன் ஏரி மூலம் திட்டக்குடி, விருத் தாசலம் தாலுகாக்களை சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களும், 15 ஆயிரம் விவசாய தொழிலாளர்களும், பயனடைந்து வந்தனர். 

                    நீர் வரத்து காரணமாக ஏரி தூர்ந்ததால் நீர் பிடிப்பு 1485.72 மில்லியன் கன அடியாக குறைந்தது. கடந்த 2008 ஜனவரி 3ம் தேதி வெலிங்டன் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்ட அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னு, ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்திட தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கரைகள் பலப்படுத்தி கான்கிரீட் தளத்துடன் கூடிய திருகு ஷட்டர்கள் அமைத்து , பாசன வாய்க்கால்கள் சீரமைக்கப்பட உள்ளது என்றார். அதன்படி பாசன ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால் களை சீரமைக்க மாவட்ட பொது நிதியிலிருந்து 1.40 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.

               இந்நிலையில் தமிழக அரசு வெலிங்க்டன் ஏரியில் வலுவிழந்த 800 மீட்டர் தூர் கரையை பலப்படுத்தி சீரமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அதனையொட்டி கரை சீரமைப்பு பணிக்கு கடந்த 2009 மே மாதம் 5ம் தேதி பூமி பூஜை போடப்பட் டது. கரை சீரமைப்பு பணிக்காக 18 மாதங்கள் ஏரியில் நீர் பிடிப்பு நிறுத் தப்படும் என அறிவிக் கப்பட்டது. மேலும் ஏரியில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி ஏரியின் உட்புறம் தற்காலிக தடுப்பு சுவரான "காப்பர் டேம்' ( சவுக்கு மரங்கள், மணல் மூட்டைகள் அடுக்கிய) அமைக்கப் பட்டது. இதற்காக கரையின் வெளிப்பகுதியில் அதிகளவு மணல் தோண்டியதால் 400 மீட்டர் தூரத் திற்கு கரை உள்வாங்கியது. இதனால் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவானது.

                 இதுகுறித்து எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை முதல்வரிடம் முறையிட்டதை தொடர்ந்து பொதுப் பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஜெயராமன் தலைமையிலான சிறப்புக் குழுவினர் ஏரியின் கரைப் பகுதிகளை ஆய்வு செய்த பின் பணிகள் தொடர்ந்தன.இந்நிலையில் கரையை பலப்படுத்த கீழ்ச்செருவாய், ஆக்கனூர் உள் ளிட்ட பகுதிகளிலிருந்து களிமண் எடுத்து வருவதாலும், சீரமைப்பு தூரம் 83 மீட்டர் அதிகரித்துள்ளதாலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒப்பந்ததாரர் சில வாரங்களுக்கு முன் பணியை நிறுத் தினார்.அதிருப்தியடைந்த விவசாயிகள் இப் பிரச்னை குறித்து அரசின் கவனத் திற்கு கொண்டு சென்றனர். ஏரியை பார் வையிட்ட பொதுப்பணித் துறை முதன்மை பொறியாளர் ராமசுந்தரம், கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்க சில மாதங்களே உள்ளதால் கரைப்பகுதி முழுமையாக சீரமைத்து நீர்ப்பிடிப்பு செய்யப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
 
                தற்போது கரையின் உட்புறம் கருங்கல் பதிக் கும் பணி 300 மீட்டருக்கும், மேல்புறம் 8.5 அடிக்கு களிமண் கொட்டி கரையை பலப்படுத்தும் பணியும் மீதமுள்ளது. இப் பணிகள் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், விவசாயிகள் ஏற்க மறுக்கின்றனர். இரண்டு ஆண்டாக ஏரியில் தண்ணீர் இல்லாததால் நிலங்களில் பயிரிட முடியாமல் பாதிக்கப் பட்ட இப்பகுதி விவசாயிகள், இந்த ஆண்டும் நீர்ப்பிடிப்பு செய்ய முடியாத நிலை ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர். எனவே மாற்று வழியாக விவசாய நிலங்களில் மின்இணைப்பு கோரி மனு அளித்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை, பம்பு செட்டுகள் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண் டும். நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச "ஆயில் எஞ்சின்' பயன்படுத்த நினைக்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வங்கிகள் மூலம் வழங்கிட மாவட்ட நிர்வாகம், அரசுக்கு பரிந் தரை செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

சொன்னதை மறந்த எம்.எல்.ஏ.,!

               வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணி பல்வேறு காரணங்களால் தடைபட்டு மீண்டும் நடைபெற்று வருகிறது. இதில் திருப்தியடையாத விவசாயிகள், பாசன சங்கத் தலைவர்கள் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகையிடம் முறையிட்டனர். அதன்பேரில் கடந்த மாதம் ஏரிக்கரை சீரமைப்பு பணியை நேரில் பார்வையிட்ட எம்.எல்.ஏ., பணியை ஜூலை 8ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இல்லை எனில் திட்டக்குடி பகுதி விவசாயிகளை திரட்டி, ஏரி சீரமைப்பு பணியை டெண்டர் எடுத்துள்ள காண்ட்ராக்டர் வீடு நோக்கி நடைபயணம் நடத்தப்படும் என எச்சரித்திருந்தார். அவர் விடுத்த காலக்கெடு முடிந்து ஓரு வாரமாகியும் பணிகள் இன்னமும் முடிந்தபாடில்லை.

Read more »

சேத்தியாத்தோப்பில் தரமற்ற விதை நெல் நடவடிக்கை எடுக்க கோரி மனு

சேத்தியாத்தோப்பு: 

                சேத்தியாத்தோப்பில் தரமற்ற விதை நெல் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க., மாவட்ட விவசாய பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க., விவசாய பிரிவு இணை செயலாளர் அப்பாதுரை, கலெக்டர் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: 

                சேத்தியாத்தோப்பில் விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் தனியார் கடைகளில் அரசு சான்றிதழ் பெறாத மற்றும் தரமற்ற விதைகள் கவர்ச்சியான கவர்களில் பேக் செய்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சில கடை உரிமையாளர்கள் வேளாண்மைத் துறை அதிகாரிகளின் துணையுடன் அவர்களிடமிருந்து விதைகளைப் பெற்று விவசாயிகளிடம் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். அதேப் போன்று பூச்சிக் கொல்லி மருந்துகளில் காலாவதியான மருந்துகள், போலி மருந்துகளை விவசாயிகளிடம் கொடுத்து ஏமாற்றி வருகின்றனர்.

                  இதனால் அப்பாவி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் கை தெளிப் பான் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங் கப்படும் பொருள்கள் யாவும் இந்த தனியார் மருந்து கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இப்பிரச்னையில் உரிய சோதனைகளை மேற்கொண்டு போலி விதை மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்வோர் மீது உரிய விசாரணை செய்து அவர்களின் உரிமத்தை ரத்து செய்திடவும் நடவடிக்கை எடுத்து இப்பகுதி அப்பாவி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலோரக் காவல்படை ஐ.ஜி. கடலூர் துறைமுகத்தில் ஆய்வு

கடலூர்:

              கடலோரக் காவல்படை ஐ.ஜி. ராஜேஷ் தாஸ், புதன்கிழமை கடலூரில் ஆய்வுப் பணி மேற்கொண்டார்.  கடலோரக் காவல் படை ஐ.ஜி.யை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் வரவேற்றார். பின்னர் கடலூர் துறைமுகத்துக்குச் சென்று, கடலோரக் காவல் பணிகளை ஆய்வு செய்தார். கடலோரக் காவல்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

கடலோரக் காவல் கண்காணிப்புக் பணிகளுக்காக வழங்கப்பட்டு உள்ள அதிநவீனப் படகையும் ஐ.ஜி. பார்வையிட்டார். பின்னர் ஐ.ஜி. செய்தியாளர்களிடம் கூறியது: 

                   கடலூர் முதல் தரங்கம்பாடி வரை கடற்பகுதியில் முழு ஆய்வு செய்ய இருக்கிறேன். கடலோரக் காவல் படையினரின் பணிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் போலீசாரும்  உறுதுணையாக உள்ளனர். கடலோரக் காவல் நிலையங்கள் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. தேவைப்பட்டால் உடனடியாகத் திறக்கப்படும்.  

                 கடலோரக் காவல் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது இல்லை. அவ்வப்போது தேவைப்பட்டால் விசாரணை மட்டுமே செய்கிறோம்.  நாட்டின் பாதுகாப்புக்கு முழுமையாக மீனவர்களையே நம்பி இருக்கிறோம். அவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது, சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் கடலோரக் காவல் படையினருக்கு உடனடியாக 1093 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். நமது கடலோப் பகுதி தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார் ஐ.ஜி.

Read more »

கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு

கடலூர்:

           பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த, தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                அனைத்துப் பள்ளி, கல்லூரி வாகனங்களிலும் அவற்றில் பயணம் செய்யும் மானவர்களின் நலன் கருதி, வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதன்படி 10-12-2010-க்குள் அனைத்து கல்வி நிலைய வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும். அதிகபட்ச வேகமாக 50 கி.மீ. மட்டுமே இருக்கும் வகையில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டது என்று, தமிழிலும் ஆங்கிலத்திலும் வாகனத்தின் முன் பின் கண்ணாடிகளில் எழுதப்பட வேண்டும்.புதிதாக பதிவு செய்யும் கல்வி நிலைய வாகனங்களில் கட்டாயம் இக்கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். கல்வி நிலையங்களுக்கு பயணிக்கும் மற்ற டாக்ஸி, மேக்ஸிகேப், ஆம்னிபஸ் போன்ற வாகனங்களிலும் இக்கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.போக்குவரத்துக் கருவி பொருத்தப்பட்டு இருப்பின் போக்குவரத்து அலுவலகத்தில் அவற்றில் சீல் வைக்கப்பட வேண்டும் என்றும் அரசாணை எண் 563 உள்துறை நாள் 10-6-2010 ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள் இருவர் பதவி நீக்கம்

கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இரு ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

             கடலூர் மாவட்டத்தில் கிளாவடி நத்தம், தட்டாம்பாளையம் ஆகிய இரு ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் குமார், ஊரக வேலை உறுதித்திட்டத்தில் போலியாக (சிறையில் இருப்பவர்கள், விபத்தில் இறந்தவர்கள், குற்றவாளிகளை ஜாமீனில் எடுக்கச் சென்றவர்கள் போன்றோர்) பெயர் பட்டியலில் சேர்த்து போலி ஆவணம் தயாரித்து பணம் எடுத்துக் கொண்டுள்ளார். அரசின் நிதியைக் கையாடல் செய்துள்ளார். ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வேலையை தட்டிப்பறித்து உள்ளார். அதனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

               தட்டாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வேணுகோபால், ஊராட்சி கணக்குகளை சரியாகப் பராமரிக்கவில்லை. பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. அரசு நிதியை அரசாணைக்கு மாறாக செலவு செய்துள்ளார். ஊராட்சி நிதியைக் கையாடல் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. வேணுகோபால் அரசுக்கு மேல்முறையீடு செய்தார். அந்த விசாரணையிலும் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டன. அவரைப் பதவிநீக்கம் செய்த உத்தரவை, அரசு உறுதி செய்து உள்ளது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூர் மாவட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக சார்பில் 4 பேர் போட்டியின்றித் தேர்வு

கடலூர்:

               கடலூர் மாவட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 4 பேர் போட்டியின்றித் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு  22-ம் தேதி தேர்தல் நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற புதன்கிழமை கடைசிநாள். ஒரு நகராட்சி உறுப்பினர் பதவி, ஒரு பேரூராட்சி உறுப்பினர் பதவி உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு 100 பேர் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் 35 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். 40 பேர் போட்டியின்றித் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். 

                சிதம்பரம் நகராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தியாகு என்ற தியாகராஜன் (திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), புவனகிரி போரூராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பி.ஜி.கே.முத்து என்ற கோவிந்தசாமி (திமுக), அண்ணா கிராமம் ஒன்றியம் 16-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பழநியம்மாள் (திமுக), மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி 14வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ரா.கோவிந்தசாமி (திமுக) ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கடலூர் மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல்வேறு பதவிகளுக்கும் 36 பேர் போட்டியின்றித் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். இறுதியாக 2 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் மற்றும் 6 உறுப்பினர் பதவிகளுக்கு 19 பேர் போட்டியிடுகின்றனர்.

Read more »

பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் இலவச "டிவி' வழங்கும் விழா

பண்ருட்டி: 

              தொரப்பாடியில் 2035 பயனாளிகளுக்கு இலவச "டிவி'க்களை எம்.எல்.ஏ., வழங்கினார். பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு சேர்மன் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். தாசில்தார் பன்னீர்செல்வம், துயர்துடைப்பு தாசில்தார் மங்கலம் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் அருணாசலம் வரவேற்றார். எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் 2035 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி'க்களை வழங்கினார். னழாவில் அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், முன்னாள் செயலாளர் பலராமன், பேரூர் செயலாளர் கலியமூர்த்தி, பண்ரடக் கோட்டை ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், ராகவன், கவுன்சிலர்கள் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

செம்மை நெல் சாகுபடி காலத்தில் இடு பொருட்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கடலூர்: 

            செம்மை நெல் சாகுபடி நேரத்தில் இடு பொருட்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் செம்மண்டலம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட் புக் கூட்டம் நடந்தது. இணை இயக்குநர் இளங்கோவன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் அண்ணாகிராம பகுதியைச் சேர்ந்த விவசாயி வரதன், 

               'உளுந்து பயிருக்கு காலத்தில் மானியம் வழங்க வேண்டும். காலத்தில் வழங்காததால் விவசாயிகளுக்கு திட்டம் பயனற்று போகிறது. எனவே, மானியத்தை விரை வாக வழங்க வேண்டும்' என தெரிவித்தார்.

மேல்பட்டாம்பாக்கம் விவசாயி சேகர், 

             "செம்மை நெல் சாகுபடிக்கு குறிப்பிட்ட நேரத்தில் இடு பொருட்கள் வழங்காததால் விவசாயம் பாதிக்கும். எனவே, சாகுபடி நேரத்தில் வழங்க வேண் டும்' என்றார்.

திருக்கண்டேஸ்வரம் விவசாயி கோபிநாத், 

              "குறைந்த விதையில் சாகுபடி முறையை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செம்மை நெல் சாகுபடி முறை அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. இதற் கான விதை ஏக்கருக்கு 5 கிலோ மட்டும் தேவை எனக் கேட்டால் 50 கிலோ தான் உள்ளது என வழங்குகின்றனர். தேவையான அளவு விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

Read more »

வடலூர் ஓ.பி.ஆர்., நினைவு கல்வியியல் கல்லூரி 3ம் ஆண்டு பட்டமளிப்பு

குறிஞ்சிப்பாடி:

            வடலூர் ஓ.பி.ஆர்., நினைவு கல்வியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் 17ம் தேதி நடக்கிறது. வடலூர் ஓ.பி.ஆர்., நினைவு கல்வியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் சனிக்கிழமை 17ம் தேதி காலை 11 மணிக்கு அருட் செல்வர் டாக்டர் மகாலிங்கம் கலையரங்கத்தில் நடக்கிறது. 

               ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் செல்வராஜ் வரவேற்கிறார். என்.எல்.சி., நில எடுப்புத் துறை பொது மேலாளர் ராமலிங்கம் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி பதிவாளர் முனைவர் ஏ.ஆர்.வீரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். ஏற்பாடுகளை ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

Read more »

சிதம்பரம் அம்பலத்தடி மடம் தெரு நகராட்சி பள்ளியில் இலவச காஸ் அடுப்பு வழங்கல்

சிதம்பரம்: 

                சிதம்பரம் அம்பலத்தடி மடம் தெரு நகராட்சி பள்ளியில் அரசு இலவச காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கவுன்சிலர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இலவச காஸ் அடுப்புகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, நகர அவைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், துணைச் செயலாளர்கள் பன்னீர் செல்வம், பாலசுப்ரமணியன், பிரதிநிதிகள் ராஜ், ரமேஷ், புரு‌ஷோத்தமன், சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Read more »

பழைய தலைமை செயலகம் முன்பு மறியல் வேலையில்லா தமிழாசிரியர் சங்கம் முடிவு

திட்டக்குடி: 

              பழைய தலைமை செயலகம் முன்பு நடக்க உள்ள மறியலில் பங்கேற்க வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க செயற்குழு முடிவு செய் துள்ளது. வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் பெண்ணாடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். பொருளாளர் சபாநாயகம், செயலாளர் ராயதுரை முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ராமு விளக்கி பேசினர். 

               கூட்டத்தில் வரும் 19ல் சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி நூலகமான பழைய தலைமை செயலகம் முன் நடைபெறும் மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக பங்கேற்பது. செம்மொழி மாநாட்டில் வேலையில்லா தமிழாசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டுமென கூறிய காங்., தமிழக தலைவர் தங்கபாலுவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கணிதம், ஆங்கில பாடத்திற்கு இணையாக தமிழ் பாடத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் நேரடி நியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்

நடுவீரப்பட்டு: 

               நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன் முதலில் அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தை பிறந்தது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டு 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. 

                கடந்த 11ம் தேதி காலை 10 மணிக்கு குறவன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் மனைவி சாந்தியை (27) பிரசவத்திற்காக நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பரிசோதனையில் சுக பிரசவத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

Read more »

நடராஜர் கோவிலில் 8வது முறையாக உண்டியல் திறப்பு : ரூ.25 லட்சம் உண்டியல் வருமானம்




சிதம்பரம் : 

           சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஒன்றரை ஆண்டுகளில், எட்டாவது முறையாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் உண்டியல் காணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரை 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்துள்ளது.

             கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில், கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிப்ரவரி 5ம் தேதி அறநிலையத்துறை சார்பில் முதல் முறையாக நடராஜர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஒரு உண்டியல் வைக்கப்பட்டது. உண்டியல் வருமானம் அதிகரித்ததால் கோவிலில் அடுத்தடுத்து பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. தற்போது கோவிலில் மொத்தம் ஒன்பது உண்டியல்கள் உள்ளன. ஐந்தாவது முறையாக கடந்த ஜனவரி 9ம் தேதி உண்டியல் திறந்தபோது, 2009 வரை மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ரூபாய் வருமானம் கிடைத்தது. கடந்த மார்ச் 10ம் தேதி ஆறாவது முறையாக உண்டியல் திறந்ததில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாயும், ஏழாவது முறையாக மே 13ம் தேதி திறந்தபோது 4 லட்சத்து 17 ஆயிரத்து 751 ரூபாய் இருந்தது. நேற்று எட்டாவது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. அறநிலையத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 30 பேர் எண்ணினர். இதில் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருந்தது.

               கோவில், அரசு கட்டுப்பாட்டிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில், உண்டியல் மூலம் மட்டும் 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் (வெளிநாட்டு கரன்சி மற்றும் வெள்ளி, தங்க நகைகள் போக) வருமானம் கிடைத்துள்ளது.

Read more »

மாணவர் குடித்து தற்கொலை முயற்சி : கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மறியல்

குறிஞ்சிப்பாடி : 

             குறிஞ்சிப்பாடியில் கல்லூரி மாணவர் பூச்சி மருந்து குடித்ததை தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதித்தது. 

             கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டையைச்சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பாலாஜி (20). இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி வகுப்பறையில் சில மாணவிகளை கேலி செய்ததாக வந்த புகாரின் பேரில், மாணவர் பாலாஜியை நான்கு நாட்களுக்கு இடை நீக்கம் செய்து, பெற்றோரை அழைத்து வருமாறு கல்லூரி நிர்வாகம் கூறியது.

                       மனமுடைந்த மாணவர் பாலாஜி நேற்று முன்தினம் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகார் குறித்து விசாரிக்காமல் கல்லூரி நிர்வாகம் அதிரடியாக இடைநீக்கம் செய்ததால் மாணவர் பாலாஜி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி சக மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் ஊர்வலமாக வந்து கடலூர் சாலையில் மீனாட்சிபேட்டையில் காலை 11.40 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
 
                  குறிஞ்சிப்பாடி போலீசார் மாணவர்களை சமாதானம் செய்தனர். அதனையேற்று பகல் 12.10 மணிக்கு மாணவர்கள் மறியலை விலக்கிக் கொண்டனர். தொடர்ந்து கல்லூரியில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்ததையேற்று மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்.

Read more »

Gearing up to keep watch on Cuddalore coast


New vessel: Rajesh Doss, Inspector General of Police, Coastal Security Group, and Superintendent of Police Ashwin Kotnis taking out a trial run in the newly acquired surveillance vessel in Cuddalore on Wednesday. 
 
CUDDALORE: 

            Rajesh Doss, Inspector General of Police, Coastal Security Group (CSG), along with Superintendent of Police Ashwin Kotnis, took out a trial run in the newly acquired “fast interceptor boat” of the Marine Police from Cuddalore Port on Wednesday.

            Before the trial run, Mr. Doss told reporters that it was an exercise to get familiarised with the terrain. The vessel would be utilised by the Marine Police for mounting surveillance on the movement of boats and preventing any possible attempt to infiltrate into the coast. The Marine Police would work in close coordination with Village Vigilance Committees comprising local fishermen and police. Terming the toll-free number 1093 as a “magic number,” Mr. Doss said that it would establish immediate contact with the CSG to reach out help to the fishermen in distress and weed out any undisclosed objects.

           On occasional clashes between the fishermen and the coastal security personnel on the high seas, Mr. Doss said it could be owing to frayed tempers because of working in harsh conditions for long hours. He acknowledged the fact that it was a question of how to get along with the fishermen rather than confronting them. The personnel should get “little more friendly” with the fishermen, he said.

           Mr. Doss denied that language barrier could be the reason for such friction because Tamil-speaking personnel too were on board. As for coastal security, Mr. Doss said that it was being done in a traditional and cost-effective manner. While Mr. Doss continued his voyage up to Poomphuhar, Mr. Kotnis cut his trip at Sirkazhi and returned to Cuddalore. Mr. Kotnis said that at certain points they halted to interact with fishermen. The CSG had already acquired all-terrain vehicles and the acquisition of the fast interceptor boat would add more striking power to the force, he said. The 12-seater vessel with well equipped cabin could attain a speed of 35 knots. At present, the boat was being operated by specially recruited drivers who retired from the Navy and the Coast Guard.

              The personnel drawn from the local police station did not have much of sea-faring experience and were trained only in swimming pool. They would now get exposure to the sea and its vicissitudes, Mr. Kotnis added.

Read more »

Over 400 arrested for staging protest, released at Chidambaram

CUDDALORE: 

             Defying police orders, activists of the Untouchability Eradication Front on Wednesday made an attempt to enter the Nataraja Temple at Chidambaram to demolish a wall that “stands testimony to the prevalence of the worst form of discrimination in a holy place.”

      However, police stalled their attempt, resulting in a tussle. When a section of activists tried to break through the police cordon, they were stopped. Block traffic Later, the front members squatted on the road blocking traffic for about half an hour in protest against police action. The police took 475 protestors, including 57 women, into preventive custody. All of them were released in the evening. Those who courted arrest included Perambur MLA S.K. Mahendran, State committee member of the Communist Party of India (Marxist) S. Dhanasekaran, party district secretary T. Arumugham, State president of the All India Kisan Sabha K. Balakrishnan, State organiser of the Front S. Durariraj, Ambedkar Indhiya Kudiyarasu Katchi's A.T. Srirangan Prakash and Human Rights Party's L.R.Viswanathan. Earlier, the Front took out a procession from the B.R.Ambedkar statue on North Street to the south entrance.

Read more »

Over Rs. 300 crore for development works in Cuddalore district

CUDDALORE:

           K.S. Alagiri, MP, who headed the Vigilance and Monitoring Committee meeting here on Tuesday, said that a total of Rs. 308.56 crore had been allotted by both the Central and State governments for undertaking various development works in Cuddalore district in 2010-11.

            Of these, works to the extent of Rs. 52.96 crore have been completed. The prominent among them is the Mahatma Gandhi National Rural Employment Guarantee Programme, Indira Awaz Yojana and complete sanitation programme. Mr. Alagiri called upon officials and elected representatives of local bodies to keep vigil over the execution of works. Collector P. Seetharaman, MLAs G.Aiyappan and Saba.Rajendran, and, Project Officer (DRDA) R. Rajashri participated in the meeting.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior