உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் பள்ளத்தில் 10 ஆயிரம் வீடுகள்


கடலூர் தெளலத் நகரில் சாலைகள் மட்டம் உயர்ந்ததால், பள்ளத்தில் இருக்கும் கடைக்குள் மழைநீர் புகாமல் இருக்க அமைக்கப்பட்ட தடுப்புக் கட்டை.
 
கடலூர்:
 
           கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சாலை மட்டத்திலிருந்து 3 அடி வரை பள்ளத்துக்குள் போய்விட்டன.  2006-ம் ஆண்டு புதிய நகராட்சிக் கவுன்சில் பொறுப்பேற்றது.
 
             முந்தைய கவுன்சில் முயற்சியால் 2006-ல் நகரில் 100 சாலைகள் 4 கோடியில் அமைக்கப்பட்டன. தார்த் தளம் அமைப்பதற்குள், பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படுவதால், சாலைகள் போடக்கூடாது என்று, நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். சாலைகள் ஒரு அடி உயரம் உயர்ந்ததுதான மிச்சம், பணிகள் நிறுத்தப்பட்டன.பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக அனைத்து சாலைகளும் தோண்டி சிதைக்கப்பட்டன. 
 
              அதில் அகற்றப்பட்ட மண் முழுவதும் சாலைகளிலேயே கொட்டி நிரவப்பட்டது. மழை பெய்ததும் சாலைகள் அனைத்தும் உழுத வயல்கள் போல் மாறின. மக்கள் நடக்க முடியவில்லையே என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்ததால், கேப்பர் மலையில் இருந்து மீண்டும் களிமண் கலந்த சரளைக் கற்கள் கொண்டு வந்து சாலைகளில் கொட்டப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளால் சாலைகள் 2 அடி உயரத்துக்கு உயர்ந்து விட்டன. தற்போது மீண்டும் சாலைகள் அமைக்கும் திட்டத்தை நகராட்சி தொடங்க இருக்கிறது. 
 
                முதல் கட்டமாக 50 கி.மீ. நீளச் சாலைகள் (நகரின் சாலைகள் மொத்த நீளம் சுமார் 200 கி.மீ.) அமைக்கப்படும் என்று நகராட்சித் தலைவர் து.தங்கராசு அறிவித்து உள்ளார்.இச்சாலைகளும் 2 அடுக்கு சரளைக் கற்கள், 2 அடுக்கு 2 அங்குல ஜல்லிகள் பரப்பி அதன்மீது தார்த்தளம் அமைக்கப்படும் என்று நகராட்சி அறிவித்து இருக்கிறது. தார்ச்சாலை பழுதடைந்தால் அப்படியே தார்த்தளம் மட்டும் அமைக்க நகராட்சி காண்ட்ராக்டர்கள் வரமாட்டார்களாம். எப்போது சாலை அமைத்தாலும், 2 அடுக்கு சரளைக் கற்கள், 2 அடுக்கு 2 அங்குல கருங்கல் ஜல்லி, அதற்கு மேல் தார்த்தளம் என்ற சாலைகளை அமைக்கத்தான் காண்ட்ராக்டர்கள் முன் வருகிறார்கள் என்று நகராட்சி நிர்வாகம் கூறுகிறது.
 
                நகராட்சியின் இத்தகைய நிலைப்பாடு காரணமாக கடலூரில் உள்ள 40 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், சாலை மட்டத்தில் இருந்து 2 அடி முதல் 3 அடி வரை, பள்ளத்துக்குள் போய்விட்டன. நகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளது. தென் பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, உப்பனாறு ஆகியவை நகருக்குள் பாய்ந்து கடலில் சங்கமிக்கின்றன. சுனாமியின் போது கடற்கரையில் இருந்து 3 கி.மீ. தூரம் வரை ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. 
 
               வீட்டுக் கழிவுகளை இணைக்கும் வகையில், 10 அடி முதல் 20 அடி ஆழமுள்ள 25 ஆயிரம் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள் சாலைகளில் அமைக்கப்பட்டு, அவற்றில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு, மோட்டார் பம்புகளால் கழிவுநீர் உறிஞ்சப்படும் வகையில், பாதாளச் சாக்கடைத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் உள்ள கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  இனி, மனிதர்கள் சுத்தம் செய்ய மாட்டார்கள், தொட்டியில் அடைப்பு ஏற்படாதவாறு மக்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நகராட்சி அறிவித்து உள்ளது. 
 
              அடைப்பு ஏற்பட்டால் சாலைகளில் உள்ள சேகரிப்பு தொட்டிகளில் இருந்து, மனிதக் கழிவுகள் வழிந்தோடும் பட்சத்தில், பள்ளத்தில் அமைந்துள்ள வீடுகளுக்குள் அவை புகுவதை தடுக்க முடியாமல் போய்விடும் என்று, பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். கடலூரில் 4 அடி தோண்டினால் நீர் ஊற்றெடுக்கும். இதனால் பாதாளச் சாக்கடை சேகரிப்பு தொட்டிகளுக்குள் இப்போதே, 1 குதிரைத் திறன் மோட்டார் மூலம் இறைக்கும் வகையில் நீர் சுரக்கிறது. சுரக்கும் நீரும் கழவு நீரும் சேர்ந்தால் அவற்றை எத்தனை திறன்கொண்ட மோட்டாராலும் வெளியேற்ற முடியாது. 
 
கடலூர் நகரக் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் இதுகுறித்து கூறுகையில், 
 
                    சாலைகள் உயர்ந்ததால் எனது வீடும் 2 அடி பள்ளத்தில் போய்விட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்குப்பின்,  இதுபோன்ற நிலை சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இனி நீதிமன்றத்தை அணுக முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.

Read more »

குறுந்தகவல் மூலம் கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு விவரங்கள்

               மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என எல்காட் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு கூறினார். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் வெப் இன்டலிஜென்ஸ் எனும் தேசிய பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. 

இதனைத் தொடங்கி வைத்து எல்காட் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு பேசியது:

                பொறியாளராகத் தேர்ச்சி பெறும் ஒவ்வொருவரும் சமூக சிந்தனையுடன் கூடியவர்களாகத் தயாராக வேண்டும். நமது நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகியும் 30 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்கள் வறுமையைப் போக்குவதற்குத்தான் தமிழக அரசு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி அடித்தட்டு மக்களையும் சென்றடைய இ-கவர்னன்ஸ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

                  செல்போன் மூலம் தகவல்: பிற்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியருக்கு அரசால் அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்த விவரம் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும். இதற்காக 30 மாவட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்புடன் 1,500 கல்லூரிகளைச் சேர்ந்த 3 லட்சம் மாணவ, மாணவியரின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி உதவித் தொகை வழங்குவதில் வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்படும்.

Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

சிதம்பரம்:
 
            இதய அறுவை சிகிச்சைக்காக இளஞ்சிறார்களை சென்னை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நிகழ்ச்சிக்காக வியாழக்கிழமை சிதம்பரம் வந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
 
             மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகன் நலப் பிரிவு, பொதுப்பிரிவு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது மருத்துவமனை வளாகம் சுகாதார சீர்கேடாக உள்ளது குறித்து தலைமை மருத்துவரிடம் தெரிவித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். நகராட்சி ஆணையருக்கும் அறிவுரை வழங்கினார். 
 
             மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் உள்ளதை பார்த்த அமைச்சர் தலைமை மருத்துவரை அழைத்து கண்டித்தார்.மேலும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்து கழிப்பறைகளை பராமரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினரை அழைத்து கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
 
           சுகாதார சீர்கேட்டையும், துர்நாற்றத்தையும் ஏற்படுத்தி வந்த மருத்துவமனைக்கு அருகில் உள்ள சின்ன காய்கறி மார்க்கெட்டில் உள்ள மீன் மற்றும் கறிக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டார். மருத்துவமனைகள் வளாகத்தில் பூட்டப்பட்டுள்ள நோயாளிகள் காத்திருக்கும் கூடத்தை பார்வையிட்டு அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்குமாறும், புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புதிய கழிப்பறையை பார்வையிட்டு அதன் பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
 
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தது: 
 
                சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு வசதிகளுக்காக பல கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை சரியாக பராமரிப்பின்றி உள்ளன. சுகாதாரத்தை பேணிக்காக்க மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
                மேலும் இதுகுறித்து இம்மருத்துவமனை உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அமைச்சருடன் தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களின் மாநில இயக்குர் டாக்டர் ஆர்.டி.பொற்கைபாண்டியன், அரசு தலைமை மருத்துவர் கே.நடராஜன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் கே.ஆர்.செந்தில்குமார், இரா.மாமல்லன் ஆகியோர் உடன் வந்தனர்.

Read more »

கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டம் சந்தேகம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்: கடலூர் மாவட்ட ஆட்சியர்

கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில், இந்த ஆண்டு வீடு கட்டிக் கொடுப்பதற்கான பயனாளிகள் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் குடிசை வீடுகளுக்குப் பதில் நிலையான வீடுகள் கட்டிக் கொடுக்க, கடலூர் மாவட்டத்தில் 2,10,758 கூரை வீடுகளில்  கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. இது முறையாக ஆய்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டிக் கொடுக்கத் தகுதியானவை என 1,24,409 குடிசை வீடுகள் தேர்வு செய்யப்பட்டன. இப் பயனாளிகள் பட்டியல் முழுவிவரமும், தேசியத் தகவல் தொடர்பு மையத்தின் சிறப்பு மென்பொருள் மூலம் கணினியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

                    இத்திட்டத்தில் 2010-11 ஆம் ஆண்டுக்கு 26,119 பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பயனாளிகள் முன்னுரிமைப் பட்டியல் கிராம வாரியாக, சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. முன்னுரிமைப் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பதாக யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கலாம். விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

               இதுகுறித்து இலவசக் கட்டணத் தொலைபேசி எண் 1299 லும் புகார் தெரிவிக்கலாம். ஊரக வளர்ச்சி முகமை அலுவலக தொலைபேசி எண் 04142- 294278, 04142- 294159 

                  ஆகியவற்றிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் இதற்காக ஊராட்சி ஒன்றிய வாரியாக பொறுப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Read more »

கடலூரில் அன்னை தெரசா 100-வது பிறந்த நாள் விழா

கடலூர்:

            அன்னை தெரசா 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னை தெரசா பொதுநலச் சேவை இயக்கம் சார்பில் வியாழக்கிழமை இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர். 

              பொதுநல சேவை இயக்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 25 பேர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சிக்கு பொதுநலச் சேவை இயக்க மாவட்ட அவைத் தலைவர் அகஸ்டின் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ரத்தின சௌ ந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் ஆசைத் தாமஸ் முன்னிலை வகித்தார். முகைமை முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தொடங்கி வைத்தார்.
 
              பொதுச் சேவை இயக்கம் சார்பில் பண்ருட்டியில் நடைபாதை வியாபாரம் செய்யும் 100 பேருக்கும், கடலூர் லாரன்ஸ் சாலையில் நடைபாதை வியாபாரிகள் 100 பேருக்கும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொருளாளர் சண்முகம் துணைப் பொதுச் செயலாளர் கிருபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில்... 

               சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.  பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவும், பள்ளிக்கு 15 பிளாஸ்டிக் நாற்காலிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன் தலைமை வகித்தார். செயலாளர் அ.ராமச்சந்திரன் வரவேற்றார். வட்டாரத் தலைவர் எம்.கமல்கிஷோர் வாழ்த்துரையாற்றினார். பொருளாளர் எஸ்.பாலநாகசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Read more »

நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 30 முதல் பாதுகாப்பு வார விழா

நெய்வேலி:

            நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பாதுகாப்பு வார விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 முதல் தொடங்கவுள்ளது. 

                   மத்திய பொதுத் துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் தொழிலாளர்களின் பாதுகாப்பான பணியை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு வார விழாவை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு வார விழாவுக்கான ஏற்பாடுகள் நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் ஹாலில் நடைபெற்று வருகிறது. லிக்னைட் ஹால் வளாகத்தில் நிறுவனத்தின் ஒவ்வொரு துறை சார்பிலும் பிரம்மாண்டமான கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.

Read more »

மாவட்ட அளவிலான பைக்கா போட்டி: நாளை கடலூரில் துவக்கம்

கடலூர்:

             மாவட்ட அளவிலான பைக்கா திட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை மற்றும் 29ம் தேதிகளில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:

                மத்திய அரசின் பைக்கா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை 28, 29ம் தேதிகளில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.வாலிபால், கால்பந்து, கபடி, கூடைப்பந்து, கோ கோ, ஹாக்கி ஆகிய போட்டிகள் 28ம் தேதியும், இறகுப்பந்து, மேசைப்பந்து, பளு தூக்குதல், 100 மீ., ஓட்டம், 400, 800, 1500, 3000 மீ., "ரிலே' ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் 29ம் தேதியும் நடக்கிறது. போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

                        மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த போட்டிகளுக்காக கடந்த 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட் டுள்ளது. அதில் தடகள போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களும், குழுப் போட்டிகளில் சிறந்த வீரர்களையும் தேர்வு செய்து ஒன்றியம் சார் பில் கலந்து கொள்ளலாம். போட்டியில் 16 வயதிற் குட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

                  பங்கேற்க விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒன்றிய அளவில் விளையாட்டுப் போட்டி நடத்திய பள்ளி தலைமை ஆசிரியரின் கையெழுத்துடன் போட்டி துவக்க நாளன்று ஒப்படைக்க வேண்டும்.ஒன்றிய அளவில் நடத்தப்படாத கூடைப்பந்து, ஹாக்கி, மேசைப் பந்து, இறகுப் பந்து, பளு தூக்குதல் ஆகிய போட்டிகளுக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 16 வயதிற்குட்பட்டவர்களை போட்டிக்கு ஒருவரை தேர்வு செய்து பள்ளி மாணவர் எனில் தலைமை ஆசிரியரிடமும், மற்றவர்கள் ஊராட்சி தலைவரிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்று அனுப்பி வைக்க வேண்டும்.
 
                        போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 150 ரூபாயும், இரண்டாம் பரிசு 100 ரூபாய், மூன் றாம் பரிசு 75 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவிலான இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கும், அதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கும் அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்கள் மாயம்:ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்

கடலூர்:

              கடலூரிலிருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன ஐந்து மீனவர்களை, ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

              கடலூர் அடுத்த தம்னாம்பேட்டையைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி (47). இவருக்கு சொந்தமான விசை படகில், கடந்த 19ம் தேதி அதிகாலை கடலூர் முதுநகர் நஞ்சம்பேட்டை சங்கரன்(50), ஏழுமலை (53),பெரியக்குப்பம் கருப்பர்(55), சித்திரைப்பேட்டை சேகர்(55) உள்ளிட்ட 5 பேர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். படகின் உரிமையாளர் அஞ்சாபுலி கடந்த 20ம் தேதி மாலை மொபைல் போன்மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, வீராம்பட்டினத்திற்கு கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

                    இந்நிலையில் கடந்த 23ம் தேதி திரும்ப வேண்டிய படகு நேற்று மாலை வரை கரைக்கு திரும்பவில்லை. மீன் பிடிக்க சென்றபோது, படகில் 1,500 லிட்டர் டீசல் இருந்துள்ளது. இதனால் 23ம் தேதி வரையில் மட்டுமே டீசல் இருப்பு இருந்திருக்கும். தற்போதைய நிலையில் படகில் டீசலும் இருக்க வாய்ப்பில்லை என மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்.இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் காலை அஞ்சாபுலி மற்றும் தம்னாம்பேட்டை ஆறுமுகம் ஆகியோர் தனித்தனியே இரண்டு படகுகளில் சென்று காணாமல் போன மீனவர்களை கடலுக்குள் தேடினர். 

                     ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேற்று காலை கடலூர் மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள், ஊர்பிரமுகர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் சீத்தாராமனை சந்தித்து காணாமல் போன மீனவர்களை தேடித் தருமாறு மனு கொடுத்தனர். மேலும், தற்போதுள்ள நீரோட்டத்தில் படகு இலங் கையை நோக்கி காற்றில் அடித்து சென்றிருக்கும் என்பதால், இலங்கை கடல் பகுதியில் மீனவர்களை தேடவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடலூர் கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில்,

            "காணாமல் போன மீனவர்கள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கோஸ்டல் கார்டு ஹெலி காப்டர் ஒன்றும், ரோந்து கப்பல் ஒன்றும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது' என்றார்.

Read more »

திட்டக்குடியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பிறந்த நாள் விழா

திட்டக்குடி:

            திட்டக்குடியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 53வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

             பேரூராட்சி சேர்மன் மன்னன் தலைமையில் வதிஷ்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 150 மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. ஒன்றிய துணை செயலாளர் அண்ணா துரை, கவுன்சிலர்கள் ராஜேந்திரன், செல்வகுமார், முத்துவேல், செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். நகர அண்ணா துரை நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் சேர்மன் தேவேந்திரன் தலைமையில் முன்னாள் நகர செயலாளர் ராவணன் முன்னிலையில் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பால், பிரட், பழம் வழங்கப்பட்டது. கொடிக்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரேஷன் கடை தொ.மு.ச., மாநில துணைத்தலைவர் தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

               இதில் ஊராட்சி தலைவர் உமாராணி, அரசு வக்கீல் புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றனர். தொளார் ஊராட்சியில் தி.மு.க., மாவட்ட பிரதிநிதி மதியழகன் தலைமையில், ஊராட்சி தலைவர் ஜெயமணி முன்னிலையில் நடந்தது. பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் நகர செயலாளர் குமரவேல் தலைமையில், இளைஞரணி அமைப்பாளர் காதர் முன்னிலையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன், கவுன்சிலர் அருள், நிர்வாகிகள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், பாபு, ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நல்லூர் ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்

சிறுபாக்கம்:

             நல்லூர் ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் ஐம்பது பேர் தி.மு.க.,வில் இணைந்தனர். நல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த மாளிகைமேடு, கீழக்குறிச்சி கிராமங்களை சேர்ந்த தே.மு.தி.க., நிர் வாகிகள் ஐம்பது பேர் தங்கவேல், ராமசாமி, கண்ணன் ஆகியோர் தலைமையில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாவாடைகோவிந்தசாமி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். அப்போது சேர்மன் ஜெயசித்ரா, ஒன்றிய கவுன்சிலர்கள் சக்திவிநாயகம், வெங்கடாசலம், துணை செயலாளர் கருப்புசாமி உடனிருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இருதய சிகிச்சைக்காக 52 சிறுவர்கள் பிரபலமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பு

சிதம்பரம்:

              இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை சிகிச்சைக்காக வழியனுப்பும் விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.,பன்னீர்செல்வம் பங்கேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

                  கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இருதய நோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இருந்து வழியனுப்பும் விழா நடந்தது. விழாவிற்கு துணை இயக்குனர் மீரா தலைமை தாங்கினார். பொது சுகாதார இயக்குனர் பொற்கை பாண்டியன் முன்னிலை வகித்தார். அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் பங்கேற்று இருதய அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறுவர்களை சென்னை மருத்துவமனைகளுக்கு கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார்.

அப்போது எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியது: 

                     தமிழகம் முழுவதும் இருதய நோயால் பாதிக் கப்பட்ட பள்ளி சிறுவர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் மூலம் படிப்படியாக உயிர் காக்கும் இருதய அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட 15 வயதிற்குட்பட்ட 3 ஆயிரத்து 264 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

                இதில் கடலூர் மாவட்டத்தில் 113 சிறுவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். முதல் கட்டமாக இன்று மாவட்டத்தில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 52 பேர் அறுவை சிகிச்சைக்காக குலோப், செட்டிநாடு, பிம்ஸ் போன்ற 8 பிரபல மருத் துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். தொடர்ந்து இன்னும் 2 மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படும்.இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Read more »

வடக்கு சென்னிநத்தம் பஸ் நிறுத்தம்:கலெக்டருக்கு பொதுமக்கள் மனு

சேத்தியாத்தோப்பு:

           சேத்தியாத்தோப்பில் வடக்கு சென்னிநத்தம் சாலை சந்திப்பில் வேகத் தடை அமைக்கவும் பஸ் நிறுத்தம் உருவாக்கக் கோரியும் பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் பகுதி பொதுமக்கள் சார்பில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:

            சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு சென்னிநத்தம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ஊராட்சி சாலையும், நெடுஞ்சாலையும் சேருமிடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சாலை சந்திக்கும் பகுதியில் வடபுறம் மற்றும் தென்புறம் பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பஸ் ஏறவும், இறங்கவும் 2 கி.மீ., தூரம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் பஸ் நிறுத்தம் உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பபட்டுள்ளது.

Read more »

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரியில் ரத்த தான முகாம்

கிள்ளை:

                சிதம்பரம் அருகே ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.

                  செஞ்சுருள், நாட்டு நலப்பணித் திட்டம், காமராஜர் அரசு மருத்துவமனை மற்றும் அரிமா சங்கம் சார்பில் நடந்த ரத்ததான முகாமை தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். அறக்கட்டளை தலைவர் மணிமேகலை கோவிந்தராஜன், மாவட்ட துணை நிலை ஆளுனர் சுவேதாகுமார் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர் நடராஜன், ரத்த வங்கி அலுவலர் சரவண குமார், காதர் அலி, செந்தில்வேலன், கல்லூரி ஆலோசகர் கனகசபை, முதல்வர் அப்துல்ரகிம், முருகப்பன் உள்ளிட்ட பலர் பேசினர். கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர். ஏற்பாடுகளை கிளை தலைவர் தர்பாரண்யன் செய்திருந்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior