உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 31, 2010

சிதம்பரம் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

சிதம்பரம்:

               சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் |125 லட்சம் செலவில் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

                       இதற்கான தொடக்க விழா புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன் தலைமை வகித்தார்.மாவட்ட கவர்னர் பி.குப்பசாமி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கி வைத்து பேசினார். மாவட்ட துணைநிலை கவர்னர் ஆர்.எம்.சுவேதகுமார், மாவட்டத் தலைவர் டி.சேகரன், வீரேந்திரகுமார், ஜி.துரைசாமி, டி.உச்சட்,  வட்டாரத் தலைவர் கமல்கிஷோர்ஜெயின், லியோ மதிவாணன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.செயலர் ஏ.ராமச்சந்திரன் வரவேற்றார். பொருளர் எஸ்.பாலநாகசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Read more »

தீபாவளிப் பண்டிகைக்காக தீத்தடுப்பு நடவடிக்கைகள்

கடலூர்:

                        தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தீயணைப்புத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு நடவடிக்கைள் குறித்த, ஆலோசனைக் கூட்டம் கடலூர் கோட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

                     இக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம், திருச்சி, நாகை, திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்புத் துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.÷தீபாவளியை முன்னிட்டு பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கச் செய்தல், தீவிபத்து நேராமல் பாதுகாத்தல், முறையான அனுமதியின்றி பட்டாசுக் கடைகளை நடத்தாமல் பார்த்துக் கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் தகுந்த அறிவுரைகளை, தீயணைப்புத் துறை திருச்சி மண்டல துணை இயக்குநர் ராமச்சந்திரன் வழங்கினார்.

                        கடலூர் கோட்ட தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில் ராமச்சந்திரன் மரக்கன்றுகளை நட்டார். கடலூர் கோட்ட தீயணைப்பு அலுவலர் குமாரசாமி, உதவிக் கோட்ட அலுவலர் சரவணன், நிலைய தீயணைப்பு அலுவலர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior