உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 06, 2010

கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் அழுகும் அபாயம்: விவசாயிகள் கவலை


பலத்த மழையால் கடலூர் வேளாண் பல்கலைக்கழக கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் மூழ்கிய நெல் பயிர்.
 
கடலூர்:

                   கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள், 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

                 கடலூர் மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி பாசனம் மூலம் பயன் பெறுகின்றன. வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்கு, கொள்ளிடம் கீழணையில் இருந்து ஆகஸ்ட் 7-ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. தாமதமாக தண்ணீர் கிடைத்ததால், கடலூர் மாவட்டக் கடைமடைப் பகுதிகளில் கடந்த 10 தினங்களுக்கு முன்புதான், சம்பா நடவுப் பணிகள் முடிவடைந்தன. 

              சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெல் நட்டு 10 முதல் 15 நாள்கள் பயிராக உள்ளன. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைவிட, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்த மழையினால், கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் மிகவும் அதிகம் என்று, விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

               பிற மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ளாறு, பரவனாறு, உப்பனாறு, கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை, மணிமுத்தாறு, கெடிலம், பெண்ணையாறு ஆகியவற்றின் வழியாகப் பாய்ந்து ஓடி, வடிகால் வசதியற்ற கடலூர் மாவட்டத்தை வெள்ளக் காடாக மாற்றி விட்டது. இதனால் 250 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. 

              கடலூர் டெல்டா பாசனப் பகுதிகளில் திருநாரையூர், எடையார், பிள்ளையார் தாங்கல், வையூர், கண்டியமேடு, அகரநல்லூர், பெராம்பட்டு, கீழத்திருக்கள்ளிப் பாலை, கோவிலாம் பூண்டி, மீதிக்குடி, கீழ் அணுவம்பட்டு, மடுவங்கரை, நஞ்சைமகத்து வாழ்க்கை, கீழச்சாவடி, பூவாலை, வயலாமூர், எல்லைகுடி, கல்குணம், சின்ன குமட்டி, பி.முட்லூர், கொமட்டிக் கொல்லை மற்றும் இக்கிராமங்களை அடுத்துள்ள பகுதிகளில், 10 முதல் 15 நாள் நெல் பயிர்கள், 8  முதல் 10 நாள்களாகத் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இவை 90 சதவீதம் அழுகி வீணாகி விடும் என்கிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                ""வடகிழக்குப் பருவ மழையால் கடலோர மாவட்டங்களில் இந்த ஆண்டு நல்ல மழை இருக்கும் என்று, வானிலை ஆய்வு மையத் தகவலை மேற்கோள் காட்டி, மேட்டூர் அணையே முன்னரே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரினோம். மேலும் கடலூர் மாவட்டத்தில் பெய்யும் மழையைவிட பிற மாவட்டங்களில் பெய்யும் மழையால், வடிகால் வசதியற்ற, கடலூர் மாவட்ட கடைமடைப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தோம். 

                ஆனால் அதிகாரிகள் எங்கள் ஆலோசனையை புறம் தள்ளினர்.நாங்கள் பயந்தபடி நடந்து விட்டது. சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 25 ஆயிரம் ஏக்கரில் மூழ்கி இருக்கும் பயிர்கள் தேறாது, அழுகிவிடும்'' என்றார்.

Read more »

கனமழை: சிப்காட் பகுதி கிராமங்களில் ரசாயனக் கழிவுகள் கலந்தனவா?


கடலூர் சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதி குடிகாடு கிராமத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்.
 
கடலூர்:

              கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கிராமங்களில் கன மழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரில், ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்து இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

               கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 20-க்கும் மேற்பட்ட பெரிய ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றினால் நிலம், நீர், காற்று மாசுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் உள்ளன. இதனால் குடிகாடு, காரைக்காடு, செம்மங்குப்பம். சங்கிலிக்குப்பம் உள்ளிட்ட 20 கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிப்காட் ரசாயத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான டன் திடக்கழிவுகள் சேகரித்து வைக்கப்படுகின்றன. 

               இவற்றை பாதுகாப்புடன் வைக்கவும், பாதுகாப்புடன் வெளியேற்றவும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில், ஏராளமான விதிமுறைகள் உள்ளன. தற்போது பல்வேறு தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான ரசாயனத் திடக்கழிவுகள் பல்வேறு நிலைகளில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. கன மழை காரணமாக இந்த ரசாயனக் கழிவுகள் மழைநீரில் கரைந்து ஆலைகளை விட்டு வெளியேறி, கிராமங்களில் தேங்கியுள்ள நீரில் கலந்து இருப்பதாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் புகார் தெரிவித்தார்.

                    ஏற்கெனவே பல தொழிற்சாலைகள் சட்ட விரோதமாக ஆலைக் கழிவுகளை அருகில் உள்ள உப்பனாற்றில் கலந்தது, பல நேரங்களில் கண்டுபிடித்து உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது உப்பனாற்று நீரும், சிப்காட் பகுதி கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால் ரசாயனக் கழிவுகளும் அதன்மூலம் கிராமங்களுக்குள் புகுந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் சேகர் கூறியது 

                 ""ரசாயன ஆலைகளின் திடக் கழிவுகள் மழைநீரில் கரைந்து கிராமங்களுக்குள் செல்ல வாய்ப்பில்லை. ஆலைகளில் நூற்றுக்கணக்கான டன்கள் திடக்கழிவுகள் மிகுந்த பாதுகாப்புடன் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. கழிவுகள் மிகுந்த பாதுகாப்புடன் விதிமுறைகளுக்கு உள்பட்டு, கும்மிடிப்பூண்டியில் உள்ள திடக்கழிவுகள் சேமிப்பு இடத்துக்கு அவ்வப்போது கொண்டு போகப்படுகிறது. அங்கு கான்கிரீட்டால் ஆன தொட்டிகளில் அடைத்து மூடப்படுகிறது. எனவே திடக்கழிவுகள் மழைநீரில் கரைந்து செல்ல வாய்ப்பில்லை'' என்றார்.

                 மேலும் சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் பெரும்பாலும் அடைபட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. இதனால் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள, பச்சாங்குப்பம் முதல் சங்கிலிக்குப்பம் வரை, காரைக்காடு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் உப்பனாற்றில் வடியாமல், தேசிய நெடுஞ்சாலைக்கும் ரயில்வே பாதைக்கும் அருகில் உள்ள விளை நிலங்களில் தேங்கி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

                 பல ஆண்டுகளாக இப் பிரச்னை பேசப்பட்டும், அரசு நடவுடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

Read more »

கடலூரில் கன மழை: இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பு

கனமழை மற்றும் சிதம்பரம் அருகே, சனிக்கிழமை நந்திமங்கலம் கிராமத்தில் சாய்ந்து கிடக்கும் சம்பா நெல் பயிர்கள்.

கடலூர்,:

                   கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

             வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. வெள்ளிக்கிழமை லேசாகக் குறைந்திருந்த மழை, இரவில் மீண்டும் பலத்த மழையாக மாறியது. சனிக்கிழமையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

                தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்துவோர், கட்டுமானத் தொழிலாளர்கள், சுமை தூக்குவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். வர்த்தக நிறுவனங்களிலும் முறையான வியாபாரம் இல்லை என்று வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

              தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பல இடங்களில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மழை காரணமாக துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை சரிசெய்ய மின் ஊழியர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். தொடர்ந்து மழை பெய்து புனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பெருகிய போதிலும் கடலூர் மாவட்டத்தில் தினமும் 2 மணி நேரத்துக்குக் குறையாமல் மின் வெட்டு நீடிக்கிறது.

           தரைவழி தொலைபேசி இணைப்புகளும் பெருமளவுக்கு பழுதடைந்து துண்டிக்கப்பட்டு உள்ளன. மழை காரணமாக இவற்றை உடனடியாகப் பழுதுபார்க்க ஊழியர்களால் முடியவில்லை. 

மீன்பிடி பாதிப்பு: 

           6-வது நாளாக கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்வரத்து இல்லாததால், மீன் அங்காடிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகள் போக்குவரத்தும், மழை காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் காய்கறிக் கடைகளில் புதிய காய்கறிகள் இன்றி, பழைய வீணாய்ப்போன காய்கறிகளை, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

                    தொடர் மழையால் தோட்டக்கலைப் பயிர்கள் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. இதனால் அங்காடிகளுக்கு வரும் உள்ளூர் காய்கறிகளான வெண்டைக்காய், அவரைக் காய், கத்தரிக்காய் போன்றவை பெரிதும் பூச்சிகள் தாக்கியவைகளாக உள்ளன.

சாலைகள் சேதம்: 

                கடலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளும் கடுமையாகப் பழுதடைந்து உள்ளன. இதனால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால், பல இடங்களில் சாலைகள் பழுதடைந்து கிடப்பதால், கிராமங்களுக்குச் செல்லும் பஸ்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டு விட்டன. நகரப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வேர் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

               ஏராளமான நகர்களில், வடிகால் வசதி இன்றி மழைநீர் ஏரி போல் தேங்கி நிற்பதால், பலர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள். கன மழையால் சாலைகள், தெருக்கள், அங்காடிகள் சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகிறது. இதனால் சாக்கடை, குப்பை கூளங்கள் கலந்து தேங்கிக் கிடக்கும் மழை நீர் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அவற்றில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

                  பள்ளிகள் பலவற்றில் மழைநீர் பெருமளவுக்குத் தேங்கி உள்ளது. தொடர்ந்து கன மழை பெய்வதால், பழைய வீடுகள் பல ஒழுகத் தொடங்கி விட்டன. அரசுக் கட்டடங்களும் மழையினால் பாதிக்கப்பட்டு உள்ளன. 

மழைப் பதிவு: 

கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் முக்கிய ஊர்களில் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

கடலூர் 59. 
கொத்தவச்சேரி 45. 
வானமாதேவி 35. 
புவனகிரி 30. 
காட்டுமயிலூர் 28. 
பரங்கிப்பேட்டை 27. 
அண்ணாமலை நகர் 24.8. 
சிதம்பரம் 22. 
வேப்பூர் 22. 
ஸ்ரீமுஷ்ணம் 20. 
சேத்தியாத்தோப்பு 19. 
குப்பநத்தம் 14.2. 
காட்டுமன்னார்கோயில் 14. 
லால்பேட்டை 14. 
விருத்தாசலம் 10.3. 
பெலாந்துரை 10. 
பண்ருட்டி 10.
மேமாத்தூர் 4. 
கீழ்செறுவாய் 3. 
தொழுதூர் 3.

Read more »

கடலூரில் கடல் சீற்றம்


கடலூர் துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட அலை சுழற்சி.
 
கடலூர்:

              கடலூர் மாவட்ட கடல் பகுதி ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக பலத்த காற்று மற்றும் சீற்றத்துடன் காணப்பட்டது. 

                அதைப் போன்று ஞாயிற்றுக்கிழமையும் கடலில் பலத்த காற்று வீசியது. அலைகள் 20 அடி உயரத்துக்கு மேல் எழுந்து ஆர்ப்பரித்தன. தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனங்குப்பம், சிங்காரத் தோப்பு, கோரி, பெரியக்குப்பம், தம்பனாம்பேட்டை, நஞ்சலிங்கம் பேட்டை, ரெட்டியார் பேட்டை, நாச்சியார்பேட்டை உள்ளிட்ட பல மீனவர் கிராமங்களில் கடல் நீர், 100 மீட்டர் தூரம் வரை நிலப்பரப்பில் புகுந்தது.

                 ஞாயிற்றுக்கிழமையும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நூற்றுக்கணக்கான விசைப் படகுகள், துறைமுகம் உப்பனாற்றின் கரையில் இழுத்துக் கட்டப்பட்டு இருந்தன. படகு கட்டும் தொழிலும் 15 நாள்களாக முடங்கிக் கிடக்கிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தச்சுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 15 நாள்களாக கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முற்றிலும் முடங்கி விட்டது. மீன் அங்காடிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடல் அரிப்பு, ராட்சத அலைகளின் சீற்றம் காரணமாக, மீன்பிடி வலைகள் பலவும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விட்டதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Read more »

கடலூர் சேவை இல்ல வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் அபாயம்

கடலூர்:

               கடலூர் சேவை இல்ல வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் அங்கு தங்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

               மாவட்டத்தில்  கடந்த நவம்பர் 22 தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 26ம் தேதி கன மழை பெய்யத் தொடங்கியதால் கடலூர் நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கடலூர் நகரில் 50க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.  கடலூர் - நெல்லிக்குப்பம் ரோட்டில் உள்ள அரசு சேவை இல்லம் வளாகத்தில் அன்னை சத்யா அரசு காப்பகம் உள்ளது. இங்கு ”னாமியால்பாதிக்கப்பட்டு தாய் , தந்தையர்களை இழந்த 300க்கும்÷  மற்பட்ட ஆதரவற்ற சிறுமிகள் தங்கியுள்ளனர்.

          மேலும் இவ்வளாகத்தில் சமூக நலத்துறை அலுவலகமும் உள்ளது.கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் இவ்வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. சேவை இல்லத்திலிருந்து கழிவு நீர் பின்புறம் உள்ள கெடிலம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இங்கு தேங்கியுள்ள மழை நீர் வடிய வழியில்லாமல் கடந்த ஒரு வாரமாக  சாக்கடை போல் காணப்படுகிறது.இதனால் இங்குள்ள சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தேங்கிய நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Read more »

அண்ணாமலைப் பல்கலையில் மூன்று நாள் கட்டமைப்பு மாநாடு: துணைவேந்தர் தகவல்

சிதம்பரம்:

                 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியல் மாநாடு வரும் 8ம் தேதி துவங்குகிறது என துணைவேந்தர் ராமநாதன்  கூறினார்.

இதுபற்றி அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமநாதன் கூறியது:

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏழாவது கட்டமைப்பு பொறியியல் மாநாடு வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கட்டமைப்பு பொறியியல் வல்லுனர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதே மாநாட்டின் நோக்கமாகும். பல்வேறு ஐ.ஐ.டி., களிலும், 2008ம் ஆண்டு சென்னை கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (எஸ்.இ.ஆர்.சி.,) மாநாடு நடந்தது.

                  முதல் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடக்கும் இம்மாநாட்டில், இந்திய மற்றும் சர்வதேச அளவில் கட்டமைப்பு பொறியியல் சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து விவாதிக்கின்றனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கட்டமைப்பு துறையில் உள்ள ஆய்வுக் கூடங்கள் தேசிய அளவிலான ஆய்வுக் கூடங்களுக்கு சமமானவை. மாநாட்டின் மையக் கருத்து கட்டமைப்பியல் பொறியியல் முன்னேற்றம் மற்றும் அதன் சீரான வளர்ச்சி என்பதாகும்.

                 இக்கருத்தை உள்ளடக்கி பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட உள்ளனர்.மாநாட்டை முன்னிட்டு, வரும் 7ம் தேதி "ஜியோ பாலிமர்' குறித்த ஒரு நாள் சர்வதேச செயற்பயிற்சி முகாம் ஏற்பாடு நடக்கிறது. மாநாட்டில் நடைபெறும் கட்டட பொருட்காட்சியில் 75 நிறுவனங்கள் பங்கேற்கிறது. ஜியோ பாலிமா குறித்த முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பேராசிரியர் ஜோசப் டேவிட விட்ஸ் எகிப்திய பிரமிடுகள் குறித்து 9ம் தேதி பேசுகிறார்.முதன்மை விருந்தினராக என்.எல்.சி., மேலாண் இயக்குனர் அன்சாரி பங்கேற்கிறார்.

                ஆஸ்திரேலியா கர்டின் பல்கலைக்கழக பேராசிரியர் விஜயரங்கன், அமெரிக்கா வடக்கு கரோலினா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் ஷென் என் சென், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் பரமசிவம் மற்றும் பலர் சிறப்புரையாற்றுகின்றனர். இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் கூறினார்.

Read more »

பரங்கிப்பேட்டையில் வண்ண மீன்கள் உற்பத்தி குறித்து ஆராய்ச்சி குறுந்தகடு வெளியீடு

பரங்கிப்பேட்டை : 

              லட்சத்தீவில் கடல் வண்ண மீன்கள் உற்பத்தி செய்வது குறித்த ஆராய்ச்சி செய்த திட்ட முடிவுக்கான புத்தகம், குறுந்தகடு கேரளாவில் வெளியிடப்பட்டது.

              பரங்கிப்பேட்டையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் உள்ளது. லட்சத் தீவில் கடல் வண்ண மீன்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு அதற்கான திட்ட முடிவு புத்தகமாகவும், குறுந்தகடாகவும் தயார் செய்யப்பட்டது.குறுந்தகடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத்குமார் தயார் செய்தார். 

                அதற்கான வெளியீட்டு விழா கேரள மாநிலம் கொச்சினில் நடந்தது. குறுந்தகடை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சக செயலாளர் சைலேஷ் நாயக் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய புல முதல்வர் பாலசுப்ரமணியன் மற்றும் கடல் அறிவியல் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரம் பகுதியில் 7 நாட்களாக வெள்ளத்தில் மிதக்கும் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்: பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சிதம்பரம்:

                  புயல் சின்னம் காரணமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

              காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒரே நாளில் 220 மி.மீ மழை கொட்டியதால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை, சேத்தியாத்தோப்பு மதகு வழியாக 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

                கடந்த 2 நாட்களாக ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளியங்கால் ஓடை மதகு மூடப்பட்டது. வீராணம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டதால் கிராமங்களில் புகுந்த வெள்ள நீர் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு வெள்ள அபாயம் நீங்கியது.

               மேட்டூர் அணை நீர்வரத்தை பொறுத்தும் மழை நீர் வந்தால் ஒழிய மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. என்றாலும் காட்டு மன்னார்கோவில், சிதம்பரம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியபடி உள்ளது. கடந்த 7 நாட்களாக நெற்பயிர்கள் முழுவதும் வெள்ளத்தில் மிதப்பதால் விவசாயிகள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளனர்.

                நந்திமங்கலம், திருநாரையூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இன்னும் வெள்ளம் சூழ்ந்தபடி உள்ளது. இந்த பகுதிக்கு கிராம மக்கள் படகு மூலம் சென்று வருகின்றனர்.வெள்ளம் வடியாததால் இந்த பகுதியில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்கள் தீவுபோல காட்சி அளிப்பதால் மாவட்ட நிர்வாகத்தினர் நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

                தொடர்ந்து தண்ணீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ளதால் கொள்ளிடம் ஆற்று படுகையில் உள்ள முதலைகள் ஊருக்குள் புகுந்துள்ளது. மேலும் விஷ பூச்சிகளும் சர்வ சாதாரணமாக நடமாடுவதால் பொது மக்கள் பீதியில் உரைந்து போய் உள்ளனர். தொடர் மழை காரணமாக சிதம்பரம் பகுதியில் காய்கறி விலைகள் 2 மடங்காக உயர்ந்துள்ளது. காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் மல்லிகை பூ, சாமந்தி பூ, வெற்றிலை உள்ளிட்ட தோட்ட பயிர்களான சுமார் 500 ஏக்கர் அடியோடு நாசமாகி உள்ளது. எனவே அரசு நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

வெள்ளாற்று தரைப்பாலத்தில் வெள்ளம்: பொதுமக்கள் கடந்து செல்ல சிறப்பு ஏற்பாடு


திட்டக்குடி:

             திட்டக்குடி வெள்ளாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதையொட்டி திட்டக்குடியில் இருந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு அரசு, தனியார் பேருந்துகள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு ஆபத்தையும் உணராமல் பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் பாலத்தை கடந்து சென்றனர். இதில் பலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை இளைஞர்கள் காப்பாற்றினார்கள்.

              இதை அறிந்த திட்டக்குடி தாசில்தார் கண்ணன் பொது மக்கள் பாலத்தை பாதுகாப்புடன் கடந்து செல்ல தீயணைப்பு துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். தொடர்ந்து திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் கருணாநிதி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் வெள்ளாற்றில் கயிறு மூலம் பொது மக்களை பாதுகாப்புடன் அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

             கடும் மழையில் சொந்த ஊர் செல்ல பல கிலோ மீட்டர் சுற்றி சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறையினர் எடுத்த நடவடிக்கையால் வெள்ளாற்றை கடந்து செல்லுவது எளிதாகியதால் தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டி சென்றனர்.

Read more »

Areas in Cuddalore inspected

CUDDALORE: 

         On the direction of the State government, Gagandeep Singh Bedi, Managing Director, Tamil Nadu Water Supply and Drainage Board, visited flood-affected areas in Cuddalore district on Sunday.

         Accompanied by Collector P. Seetharaman and District Revenue Officer S. Natrajan, he went to places such as B. Mutlur, Sivayam, Poolamedu, Nandimangalam, Meyyathur, Veeranatham, Thirunaraiyur, Lalpet, Marudhur and Kalgunam. He also inspected storage level in the Veeranam tank and community kitchens set up many places. Later, he told presspersons that according to the account given by the district administration, as many as 145 villages in the district were surrounded by water.

          Vast stretches of farmlands, particularly paddy fields, remained submerged. Several huts and roads had been damaged. Residents told Mr. Bedi that they were facing the flood problem year after year. Mr. Bedi said that after assessing the damage on Monday, he would submit a report to the Chief Secretary on Tuesday. As former Collector of the district, he was familiar with the terrain. During his interaction with people, he heard suggestions on permanent measures, which could be taken to tackle floods. He said that he would incorporate all that in his report.

Read more »

NLC to help the flood-hit

CUDDALORE: 

         The Neyveli Lignite Corporation has come to the rescue of flood-affected people in peripheral villages at Neyveli. NLC Chairman-cum-Managing Director A.R.Ansari visited several villages and interacted with villagers to get firsthand knowledge of flood damage. Mr. Ansari said that he had constituted an official team headed by NLC General Manager (land acquisition) N.S.Ramalingam to assess the flood damage and file a report. So far, the NLC had distributed 1.7 lakh food packets in affected villages such as Melpathi, Keezhpathi, Pudhu Eri, Romapuri, Oothakkal, Kalgunam, Kumaratchi and Melpappanapattu.

Read more »

Barrages, check-dams in Cuddalore sought

CUDDALORE: 

          Vice-president of Cauvery Delta Farm Producers' Welfare Association and president of Kollidam-Keelanai Paasana Vivasayigal Sangam K.V. Kannan said it was time permanent flood control measures were put in place in Cuddalore district.

         In a representation addressed to Collector P. Seetharaman, he suggested construction of barrages and check-dams at regular intervals across rivers such as the Kollidam, the Gedilam, the Vellar, the Then Pennaiyar and the Manimutharu. Particularly, the Kollidam, which used to carry large quantum of water, needed at least seven barrages, each to be built at a height of 7.5 metre with protective walls on either side stretching to a distance of five km. Already, the Cauvery system had four such barrages, with three more under construction. This system too required nine more barrages.

Heavily silted

          Mr. Kannan also said that the Ponneri, popularly known as Chola Gangam, near Gangaikonda Cholapuram, was heavily silted. So, it used to get filled quickly and the excesses were flowing through the Karuvattu Odai to the Vadavar and then into the Veeranam tank. If the Karuvattu Odai flow was directed to the Kollidam, the flood problem in this region could be tackled.

           The Veeranam tank and the Ponneri should also be deepened and bunds strengthened. A regulator should be set up on the Velliangal Odai which carries discharge from the Veeranam tank at Kumaratchi. At the time of floods, the flow should be directed through a drainage channel (to be dug at this point) to Keezhparuthikudi to join the Kollidam. Another channel from Manavaikkal to the Kollidam via Udaiyur would also mitigate the flood problem. Mr. Kannan said that if these measures were implemented Kattumannarkoil and Chidambaram taluks could be protected from floods on a permanent basis.

Read more »

Tripartite meeting takes stock of mines safety

CUDDALORE: 

          A tripartite meeting organised by the Neyveli Lignite Corporation on the Training Complex, Neyveli, on Thursday, took stock of safety measures adopted in mines as well as health and environmental aspects.

          D. Sengupta, Deputy Director-General of Mines Safety, Southern Region, Bengaluru, presided over the meeting. He appreciated the NLC for acting in accordance with safety provisions and recommendations of the tenth conference on mines safety. NLC Chairman-cum-Managing Director A.R. Ansari highlighted welfare measures implemented by the management for employees. He laid special emphasis on healthcare services made available to contract workers and their dependents.

         Mr. Ansari also gave an elaborate account of the peripheral development scheme launched by the NLC for the betterment of people in the nearby areas. Mr. Sengupta released books on “Safe operating procedures,” and “Code of practices.” The meeting also reviewed the status of the recommendations of the previous tripartite meeting on mines safety. B.K. Panigrahi, Director of Mines Safety, Bengaluru, B.P. Ahuja, Director of Mines Safety, and S.K. Gangopadhyay, Deputy Director of Mines Safety, Chennai region, participated.

             Apart from representatives of the Labour Progressive Front and the Pattali Thozhir Sangam, NLC directors B. Surender Mohan (Mines), R. Kandasamy (planning and projects), J. Mahil Selvan (power) and K. Sekar (finance and personnel in-charge) were present.

Read more »

“Raise relief for damaged crops”

CUDDALORE: 

             Viduthalai Chiruthaigal Katchi leader and MP Thol.Thirumavalavan has called upon the government to enhance the compensation for agricultural crops damaged in the floods from Rs 7,500 to Rs 15,000 a hectare and Rs 25,000 for an acre of betel leaves raised mainly by the minority community.

           After inspecting the flood-affected areas, along with D.Ravikumar, MLA, at Chidambaram on Friday, Mr Thirumavalavan told the presspersons that there were complaints in certain places that the relief had not properly reached them. So, he urged the district administration to provide necessary relief to all the affected people without delay. As Chidambaram was repeatedly battered by recurring floods it deserved special attention, he said.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior