உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 28, 2010

வள்ளலார் பிறந்த தைப்பூசம் : தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்க கோரிக்கை

கடலூர்:

           வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அவதரித்த தைப்பூச தினத்தில், தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று, திருவருள்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க நெறிபரப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  

திருவருள்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க நெறிபரப்பு சங்கத்தின் நிறுவனர் கே.மணிவண்ணன் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:  

             தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில், கடலூர் மாவட்டத்தில் அவதரித்த வள்ளலார் ராமலிங்க அடிகளார், திருவருட்பாவை இயற்றினார். திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியார், சாமிகள் இல்லை. உருவ வழிபாடு கூடாது.  நாம் அனைவரும் மனித இனம், சாதி மத பேதம் கூடாது என்று கூறினார்.  ஆனால் பெரியாருக்கு முன்னரே, ராமலிங்க சுவாமிகள் தெய்வம் எந்த உருவத்திலும் இல்லை. கோயிலிலும் இல்லை. சாதி மத பேதமில்லை. 

                 கடவுள் ஒருவரே. அவர் ஜோதி வடிவாக எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று கூறி சத்தியஞான சபையை வடலூரில் நிறுவினார். தைப்பூச நட்சத்திர தினத்தில், ஜோதி தரிசனம் செய்யவும் வழிவகை செய்தார்.  தைப்பூச தினத்தன்று, கடலூர் மாவட்டத்தில் அரசு விடுமுறை விடப்படுகிறது. மனிதனும் இறைவனாக முடியும் என்ற தத்துவத்தை, அறிவியல் முறைப்படி உலகுக்கு எடுத்துக்காட்டிய வள்ளலார் ராமலிங்க சுவாமிகளுக்கு, பெருமை சேர்க்க தைப்பூச தினத்தன்று தமிழகம் முழுவதும், அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். 

Read more »

பண்ருட்டி அருகே தொகுப்பு வீட்டில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து சிறுமி படுகாயம்



பண்ருட்டி : 

            கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, தொகுப்பு வீட்டின் சிமென்ட் காரை விழுந்ததால், 5 வயது சிறுமி படுகாயமடைந்தார். 

             பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை காலனி மாரியம்மன் கோவில் தெருவில், தொகுப்பு வீட்டில் வசித்து வருபவர் தணிகைவேல். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி செல்வி, மகன் உத்திரவேல், மகள்களுடன் தூங்கி கொண்டிருந்தார். இரவு வீட்டின் மேல் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதில் சிறுமி ஆர்த்தீஸ்வரியின் (5) வயிற்றில் விழுந்து கிழித்து, குடல் வெளியே வந்தது. சிறுமி "108' ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொகுப்பு வீட்டில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால், இப்பகுதியில் உள்ள 50 தொகுப்பு குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர்.

Read more »

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிப்பு ரூ.4.5 கோடி நிவாரணம்

சிதம்பரம் : 

               காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 4.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது. மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் ஏற்கனவே 22 கிராமங்களில் பாதிப்புகள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு 4.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. நேற்று முதல் நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது. தாசில்தார் மேற்பார்வையில் இப்பணி நடந்து வருகிறது.

Read more »

திட்டக்குடி தொகுதியை மகளிருக்கு ஒதுக்க வேண்டும்: ராகுலுக்கு மனு

திட்டக்குடி : 

         திட்டக்குடி தொகுதியை இளைஞர் காங்., மகளிர் நிர்வாகிக்கு ஒதுக்க மனு அளிக்கப்பட்டது. 

திட்டக்குடி சட்டசபை தனி தொகுதி இளைஞர் காங்., பொதுச் செயலர் இறையூர் காவேரி பிரியங்கா, இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் ராகுல்காந்தியிடம் நேரில் அளித்துள்ள மனு:

                  திட்டக்குடி தொகுதியினை இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசு மகளிர் நலனில் அதிகளவு அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில் திட்டக்குடி தொகுதி சார்பில் இளைஞர் காங்., மகளிர் நிர்வாகி போட்டியிட்டால் 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே இளைஞர் காங்., சார்பில் போட்டியிட மகளிருக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.

Read more »

நெல்லிக்குப்பத்தில் வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நெல்லிக்குப்பம்:

              வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதித்த நெல்லிக்குப்பம் 6-வது வார்டு பகுதி பொதுமக்கள் வெள்ள நிவாரணம் கோரி நேற்று  காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
             நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் அருகே நடந்த இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் போலீசாருடன் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். வெள்ள நிவாரண கோரிக்கை குறித்து அரசு அதிகாரிகளின் கவனத்துக:கு கொண்டு செல்லப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Read more »

கடலூரில் மறியல் போராட்டம் நடத்திய 600 ஆசிரியர்கள் கைது


கடலூர்:

               மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க கோரி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஊர்வலமாக சென்றனர்.

            கடலூர்-புதுவை சாலையை அடைந்த போது ஊர்வலத்தில் வந்த ஆசிரியர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் முருகேசன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் அப்துல்மஜித் உள்பட சுமார் 400 பேரை கைது செய்தனர்.

Read more »

Aid distributed to the tune of Rs 10.17 lakh to 21 persons for promoting inland fish breeding sources

CUDDALORE: 

           District Collector P.Seetharaman on Monday disbursed financial assistance to the tune of Rs 10.17 lakh to 21 persons for promoting inland fish breeding sources. A statement from the Collectorate said the State government was implementing the Central scheme with a subsidy component for enriching the inland fish resources. The government was giving away a subsidy of Rs 60,000 a hectare (in the case of Scheduled Caste/Scheduled Tribes candidates Rs 75,000 a hectare) to those who breed fish in the ponds set up in their own lands. For 2009-2010, 21 such beneficiaries who were breeding fish on a total area of 13.87 ha. were identified for aid

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior