உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 04, 2011

கடலூர் மாவட்டத்தில் சூதாட்டமாக மாறிய டெல்டா விவசாயம்!


கடலூர்:

               தமிழக அரசின் நீர் மேலாண்மைக் குறைபாடுகள் காரணமாக, காவிரி டெல்டா பாசன விவசாயம் ஆண்டுதோறும் சூதாட்டமாக மாறியிருக்கிறது. அதாவது ஒன்று தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அல்லது அதிகப்படியான மழை நீரால் பயிர்கள் சேதமடையும்.

               வெள்ளப் பாதிப்பு காலங்களில் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் ரூ. 200 கோடியைத் தாண்டும்.தமிழகத்தில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரை நம்பி இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி பாசனப் பகுதிகளாகும். டெல்டா மாவட்டங்களில் உற்பத்தியாகும் நெல்தான், தமிழகத்தின் அரிசி விலையை நிர்ணயிக்கிறது.கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர் கதையாகி விட்டது. 

                2005ல் ரூ. 44 கோடியும், 2008-ல் ரூ. 36 கோடியும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல்கட்டமாக ரூ. 23 கோடி வழங்கப்பட்டு உள்ளது.முந்தைய ஆண்டுகளைவிட இவ்வாண்டு இழப்பீடு அதிகமாகும் என்கிறார்கள் அதிகாரிகள். இந்த இழப்பீட்டுத் தொகைகள் விவசாயிகளின் இழப்புக்கு, எந்த வகையிலும் ஈடாக முடியாது. நெல்லுக்கு இழப்பீடு 2005 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.இவ்வாண்டு ரூ. 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 

             டெல்டா நிலங்களில்  ஒரு ஏக்கருக்கு சாகுபடிச் செலவு ரூ. 14 ஆயிரம். மகசூல் மதிப்பு, பயிர் காப்பீட்டு நிறுவனக் கணக்குப்படி ரூ. 24 ஆயிரம்.  ஒரு டி.எம்.சி. நீரில் 6 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்ய முடியும் என்கிறார்கள் விவசாயிகள். எனவே காவிரி டெல்டா பாசன நிலங்களுக்கு, சம்பா சாகுபடிக்கு 170 டி.எம்.சி.  தண்ணீர் தேவை.  மேட்டூர் அணையின் கொள்ளளவு 94 டி.எம்.சி. எனவே அணை இருமுறை நிரம்பினால், 16.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா சாகுபடியை, நிறைவாகச் செய்யலாம். 

              அரசு முறையாக நீர் மேலாண்மை செய்தால், இதை எளிதாக நிறைவேற்ற முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.மேட்டூர் அணைக்கு இயல்பாகக் கிடைக்கும் நீர், நீதிமன்ற உத்தரவுகளின்படி  கர்நாடகத்திடம் பெறவேண்டிய நீர், ஆகியவற்றைக் கணக்கிட்டு, உரிய காலத்தில் மேட்டூர் அணையைத் திறந்து, கடைமடைப் பகுதிவரை குறித்த காலத்தில் நீர் கிடைக்கச் செய்தல் உள்ளிட்ட நீர் மேலாண்மையை மேற்கொள்வதன் மூலம், 16.5 லட்சம் ஏக்கர் நிலங்களையும் பொன் விளையும் பூமியாக மாற்ற முடியும் என்கிறார்கள் முன்னோடி விவசாயிகள்.

             கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் 70 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் அழிந்து விட்டது. வீராணத்தின் துணை ஏரிகளான வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி பாசனப் பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், வெள்ளத்தில் மூழ்கி சாகுபடி செய்ய முடியாத நிலை அல்லது கதிர் முற்றும் நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறது.  கடலூர் டெல்டா பாசனப் பகுதிகளில் வடிகால் வசதிகளை மேம்படுத்தாததும், வீராணம் ஏரியில் முறையாக நீர் மேலாண்மை செய்யாததுமே, கடலூர் மாவட்ட பயிர் பாதிப்புகளுக்குக் காரணம். இவ்வாண்டு கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் தாமதமானதே, 50 ஆயிரம் ஏக்கரில் 15 முதல் 25 நாள் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகக் காரணம் என்கிறார் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

               கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளுக்கு காவிரி நீர் தாமதமாவதால், மழை வெள்ளத்தால் நெல் பயிர்கள் சேதமாவதுடன், 1 லட்சம் ஏக்கர் உளுந்து சாகுபடியும் இல்லாமல் போகிறது. கடலூர் டெல்டா விவசாயிகளுக்கு இந்த ஆண்டு நெல் பயிரில் நஷ்டம்  ரூ.140 கோடி, உளுந்து சாகுபடியில் நஷ்டம் ரூ. 60 கோடி. கர்நாடகத்திடம் நமது உரிமையக் கேட்டுப் பெறாததும்,  உரிய காலத்தில் காவிரி நீர் கிடைக்கச் செய்யாததும், சரியான நீர் நிர்வாகம் இல்லாததுமே இந்த நஷ்டத்துக்குக் காரணம் என்கிறார் ரவீந்திரன்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கடல் நீரால் விளைநிலங்கள் பாதிப்பு புவியியல் நிபுணர்கள் நேரடி ஆய்வு


 கடலூர் : 

           கடலோரப் பகுதி கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது குறித்து, புவியியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். 

           கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி., நிறுவனம், சுரங்கம் அமைத்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுத்து வருகிறது. சுரங்கத்தில் ஊறும் தண்ணீர், ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது.

            தண்ணீரின் ஊற்று அழுத்தம் குறைப்பதற்காக சுரங்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ராட்சத மோட்டார்களைக் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் நிலத்தடியில் உள்ள நன்னீர் மட்டம் குறைவதோடு, அருகில் உள்ள கடல் நீர் உட்புகுவதாகவும், கோடையின் போது அதிக வறட்சியும், மழைக் காலத்தில் வெளியேற்றப்படும் தண்ணீரால் கூடுதல் வெள்ளமும் ஏற்பட்டு பொதுமக்கள், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அங்குள்ள மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

           அதையொட்டி, உண்மை நிலையை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க மத்திய அரசு, ஐதராபாத்தில் உள்ள புவியியல் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, ஐதராபாத் புவியியல் ஆராய்ச்சியாளர்கள், கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதியில் கடல் நீர் எந்த அளவிற்கு உட்புகுந்துள்ளது என்பது குறித்து நேற்று ஆய்வு நடத்தினர். இந்த ஆராய்ச்சியை கடலோர கிராமங்கள் முழுவதும் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

Read more »

கடலூரில் 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல் லாரி பறிமுதல்: 2 பேருக்கு வலை



கடலூர் : 

           குள்ளஞ்சாவடியிலிருந்து கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கைப்பற்றியினர், மினி லாரியை பறிமுதல் செய்தனர். 

           கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியிலிருந்து, வடலூர் நோக்கி மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. குள்ளஞ்சாவடிலியிருந்து அரிசி கடத்திச் சென்ற லாரியை விரட்டிச் சென்று குறிஞ்சிப்பாடி புறவழிச்சாலையில் மடக்கிப் பிடித்தனர். 

           லாரியில் இருந்த இரண்டு பேர் தப்பியோடி விட்டனர். லாரியை சோதனை செய்ததில் 40 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. கடலூர் உணவு கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 40மூட்டை ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர்.

Read more »

வாடகை கட்டடத்திற்கு மாறியது குமராட்சி போலீஸ் ஸ்டேஷன்

காட்டுமன்னார்கோவில் : 

           குமராட்சியில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இயங்கி வந்த போலீஸ் ஸ்டேஷன் தனியார் வாடகை கட்டத்திற்கு மாற்றப்பட்டதால் போலீசார் நிம்மதியடைந்தனர்.

            சிதம்பரம் அடுத்த குமராட்சி போலீஸ் ஸ்டேஷன் கடந்த 1939ம் ஆண்டு கட்டப்பட்டு ஒட்டு கட்டடத்தில் கடந்த 71 ஆண்டுகளாக இயங்கியது. பாழடைந்த அந்த கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. மழையில் கட்டடத்தில் ஒழுகியதால் நிற்பதற்கு கூட இடமின்றி தஸ்தாவேஜிகளை பாதுகாக்க போலீசார் படாதபாடு பட்டுவந்தனர். அத்துடன் கட்டடத்தில் அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் போலீசாரை அச்சுறுத்தி வந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே கட்டடம் மிக மோசமான நிலைக்கு மாறி போலீசார் அச்சத்துடனே பணிபுரிந்து வந்தனர். 

             புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 1ம் தேதி முதல் போலீஸ் ஸ்டேஷன் குமராட்சி அக்ரகாரத் தெருவிற்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட துவங்கியுள்ளது. குமராட்சி போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம் செய்யப்பட்டதால் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் நிம்மதியடைந்தனர்.

Read more »

மலட்டாறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது : 12 கி.மீ., தூர் வார விவசாயிகள் எதிர்பார்ப்பு

பண்ருட்டி : 

        பண்ருட்டி பகுதியில் பருவ மழை அதிகரிப்பு, மலட்டாறில் தூர் வாரப்பட்டதன் விளைவாகவும் எப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள் ளது. எஞ்சியுள்ள 12 கி.மீ., தூரத்தையும் முழுமையாக தூர் வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

            பண்ருட்டி தாலுகாவில் தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, மலட்டாறு உள்ளன. திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றின் அணைக்கட்டில் இருந்து பிரியும் மலட்டாறு திருவெண்ணைநல்லூர் அரசூர் வழியாக பண்ருட்டி அடுத்த கரும்பூர், ரெட்டிக்குப்பம், திருத்துறையூர், வரிஞ்சிப்பாக்கம், கட்டமுத்துப்பாளையம், திருவதிகை ஏரி வழியாக திருவதிகை கெடிலம் ஆறு அணைக்கட்டு சென்று கலந்தது. கடந்த 1972ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மலட்டாறு இருந்ததற்கான சுவடுகளே இல்லாமல் மணல்மேடானது. இதனையடுத்து அந்த ஆண்டு இறுதியில் மலட்டாறு பகுதி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

             அதன்பின் மலட்டாறில் தண்ணீர்வரத்தின்றி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் தோட்டப் பயிர் செய்து வந்த திருத்துறையூர், கரும்பூர், ஒறையூர், கொரத்தி, கட்டமுத்துப்பாளையம், வரிஞ்சிப்பாக்கம், பூண்டி, குச்சிப்பாளையம் உள்ளிட்ட 60 கிராம விவசாயிகள் 250 அடி வரை ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் செய்தனர். தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதைத் தடுக்க கடந்த 1993ல் "ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர்மேம்பாடு எழுச்சிகூடல்' என்ற அமைப்பு தாஜிதீன் தலைமையில் உருவாக்கப்பட்டு வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அனுமதியுடன் முதல் கட்டமாக தூர் வாரினர். இதன் பிரதிபலனாக 1996ம் ஆண்டு முதல் மலட்டாறில் தண்ணீர் வரத்துவங்கியது. அப்போதைய மறைந்த எம்.எல்.ஏ., மணி முயற்சியின் பேரில் கலெக்டர் இறையன்பு 1998ல் "நமக்குநாமே திட்டம்' மூலம் மணல்மேடுகள் கரைகள் அமைக்கும் பணி துவங்கியது.

             பின் 2005ல் ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர்மேம்பாடு எழுச்சிக் கூடல் தலைவர் தட்சணாமூர்த்தி தனது சொந்த செலவில் திருக்கோவிலூர் சுந்தரேசபுரம் முதல் திருவெண்ணைநல்லூர் வரை இரு கரைகளையும் தூர் வாரினார். 2006ல் கலெக்டர் நிதி மூலம் விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு, தனியாலம்பட்டு, ஆனத்தூர் ஆகிய 3 இடங்களில் மலட்டாறு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தற்போது எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் முயற்சியால் வரிஞ்சிப்பாக்கம் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ரெட்டிக்குப்பம், கரும்பூர், திருத்துறையூர் பாலங்கள் கட்டப்படாமல் நிலுவையில் உள்ளன.

                  தற்போது மலட்டாறு மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 15, கடலூர் மாவட்டத்தில் 55 கிராம விவசாயிகளும் பயனடைந்து வருகின்றனர். கடந்த மாதம் பெய்த கன மழையாலும், சாத்தனூர் அணை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மலட்டாறு ஓடும் கிராமங்களான சேமங்கலத்தில் 10 அடியிலும், ஒறையூரில் 20 அடியிலும், காரப்பட்டில் 5 அடியிலும் திருத்துறையூரில் 30 அடியிலும், கட்டமுத்துப்பாளையத்தில் 40 அடியிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மழைக்கு முன்பு 180 அடி ஆழம் வரை இருந்தது இப்படி வெகுவாக நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

                தற்போது விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் துவங்க உள்ளதால் ராசாப்பாளையம், திராசுகுட்டை மலட்டாற்றுற்காக பெரிய பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோவிலூர் முதல் கட்டமுத்துப்பாளையம் வரை 45 கி.மீ., வரை தூர்வாரப்பட்டிருந்தாலும் எஞ்சியுள்ள கட்டமுத்துப்பாளையம், ராசாப்பாளையம், திருவதிகை வரை 12 கி.மீ., தூர் வாரினால் மட்டுமே வரும் காலத்தில் மலட்டாறில் வரும் தண்ணீர் திருவதிகை ஏரி, அணைக்கட்டு வரை சென்று அப்பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தரமற்ற சாலை போட்டால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

கடலூர் : 

            வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் வரும் 31ம் தேதிக்குள் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.

            கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், மற்றும் சிறப்பு திட்டத்தில் புதுப்பிக்கப்படும் சாலைகளை விரைந்து முடிப்பதற்காக ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 7 கோடி ரூபாய் மதிப்பில் 116 சாலைகளும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பில் 145 சாலைகளும், பொதுப்பணித் துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் 4.32 கோடி ரூபாய் மதிப்பில் 412 பணிகளும், நகராட்சி சார்பில் 76 சாலைகள் 1.50 கோடி மதிப்பிலும் மொத்தம் 17.80 கோடி மதிப்பில் சாலைகள் போட டெண்டர் விடப்பட்டுள்ளது.

               அதன்படி வரும் 10ம் தேதிமுதல் பணிகள் துவங்கி 20ம் தேதிக்குள் சாலைபோட கற்கள் கொட்டி இருக்க வேண்டும். அனைத்து சாலைகளும் வரும் 31.1.2011ம் தேதிக்குள் தரமான சாலையாக போட்டு முடிக்கப்பட வேண்டும். அவ்வாறு சாலை தரமாக இல்லாத பட்சத்தில் ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Read more »

28 differently-abled persons issued health insurance cards

CUDDALORE: 

            District Collector P.Seetharaman on Monday issued the health insurance cards to 28 differently-abled persons to enable them to get proper healthcare services in their respective areas. The cards provided for health insurance cover of Rs 67.48 lakh under the Nirmaya programme. The scheme was available to those persons afflicted with cerebral palsy, autism, mental retardation and multiple disabilities.

            The Collector also gave away financial aid to the tune of Rs 45 lakh, with a subsidy component of Rs 5 lakh, to 16 youths, to buy vans, cars and autorickshaws to operate them on hire.

Read more »

Roads will be set right before January 31: Cuddalore Collector

CUDDALORE: 

           District Collector P.Seetharaman has set a deadline of January 31 for the contractors to complete the repair works to the roads and water bodies that were damaged in the recent rain and floods.

          Addressing a meeting of contractors and officials here on Monday, the Collector said that besides taking up the repair works on a war-footing they should also ensure the quality of works. They should draw up a schedule for the execution of the works and strictly adhere to it. He also called upon those contractors engaged under the rural road development scheme to speed up the works. The Collector pointed out that the State government had sanctioned Rs 17.67 crore to set right the damaged roads and water bodies. The work orders had already been issued and the works would commence on January 20.

Read more »

Handloom weavers stage demonstration

CUDDALORE: 

        Over 10,000 weavers' families in Cuddalore district have been affected by the recent spell of rain and subsequent floods. However, they are not given any compensation so far.

      Hence, they staged a demonstration in front of the Collectorate here on Monday. According to S.Dakshinamurthy, presiding of the Cuddalore District Handloom Weavers and Allied Services Workers Association, there were about 5,000 handloom weavers spread over places such as Sandrorpalayam, Suthukulam, Manakkuppam, Pudupettai, Bhuvanagiri, Vandipalayam and K.N.Pettai.

           Another 5,000 families were involved in the support services such as preparing the warp and weft. All these families were rendered jobless for over a month owing to rains. Mr. Dakshinamurthy said during rainy season the yarn would get dampened, rendering weaving impossible. Another drawback to the weavers in the region was that they were yet to get an exposure to modern weaving technology.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior