உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 25, 2011

கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடும் வீழ்ச்சி!


 
கடலூர்:
 
          கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளதால், நெல்லை சேமித்து வைத்து, உரிய விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்ய வசதியாக, சேமிப்புக் கிடங்கு வசதிகளை அரசு உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.  
 
            கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 1.24 லட்சம் ஏக்கர் உள்பட 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.  தற்போது காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், வடவாறு பாசனப் பகுதிகள் பெண்ணாடம், கறிவேப்பிலங்குறிச்சி பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை தொடங்கி விட்டது.  இதுவரை 15 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிவடைந்து விட்டது.  
 
              நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், 112 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.  இந்நிலையில் நெல் வியாபாரிகள் அறுவடை இயந்திரங்களுடன், நெல் கொள்முதலில் களத்தில் இறங்கி உள்ளனர்.  ÷தற்போது அறுவடை ஆகும் சன்னரக நெல்லுக்கு, அரசு நேரடிக் கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு ரூ. 1,100 வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 11 வரை தற்போது விலை கிடைக்கிறது.  
 
           ஆனால் தனியார் நெல் வியாபாரிகள், சன்னரகம் மூட்டை (62 கிலோ) ரூ. 628-க்கு கொள்முதல் செய்கிறார்கள் (கிலோ விலை சுமார் ரூ. 11).  ÷பொதுவாக சம்பா அறுவடை காலத்தில் சன்னரக நெல்லுக்கு அரசு கொள்முதல் நிலையங்களைவிட, தனியார் வியாபாரிகள் குறைந்தது ரூ. 100 ஆவது கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்வார்கள்.  மேலும் டிசம்பர் மாதத்தில் பி.பி.டி. நெல் (பழையது) குவிண்டால் ரூ. 1,500-க்கு விவசாயிகள் விற்பனை செய்து உள்ளனர்.  
 
          எனவே இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தற்போது தனியார் வியாபாரிகளின் கொள்முதல் விலை, அடிமாட்டு விலை என்றும், நெல் சாகுபடிச் செலவைக் கணக்கிட்டால் இந்த விலை கட்டுபடியாகாது என்றும் கூறுகிறார்கள் விவசாயிகள்.  ÷களத்துக்கே வந்து தனியார் கொள்முதல் செய்கிறார்கள் என்பதைவிட, அரசு கொள்முதல் நிலையங்களைவிட எந்த வகையிலும் தனியார் வியாபாரிகளால் விலையில் ஆதாயம் இல்லை என்றும் விவாயிகள் கூறுகிறார்கள்.  
 
          எனவே நெல்லை சேமித்து வைத்து நியாயமான விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்வதற்கு ஏற்றவகையில், அரசு சேமிப்புக் கிடங்கு வசதிகளை மேம்படுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்கிறார்கள் விவசாயிகள்.  
 
இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களில் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 
 
             "சன்னரக நெல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க, மத்திய மாநில அரசுகளின் சேமிப்புக் கிடங்குகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சேமிப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இங்கு சேமிக்கும் விவசாயிகளுக்கு விளைப் பொருளின் அடக்க விலையில் 90 சதவீதம் கடன் வழங்கப்படுகிறது. இந்த வசதியை விரிவுபடுத்த வேண்டும்.  ÷நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்து இருக்கும் கூடுதல் விலை அடிப்படையில் தமிழகத்தில் நெல் விலையை உயர்த்த வேண்டும்' என்றார்.  
 
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கண்ணன் கூறுகையில், 
 
               "டிசம்பர் மாதத்தில் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 1,500 கிடைத்தது. ஆனால் தற்போது ரூ.1,100-க்கு மேல் கிடைக்கவில்லை.  தனியார் வியாபாரிகள் நெல் வாங்கவே தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் கர்நாடக மாநிலத்தில் இருந்து சன்னரக நெல்லும் அரிசியும் வந்து குவிந்து கொண்டு இருக்கிறது.  சன்னரக நெல் குவிண்டால் ரூ. 1,100-க்கு கொள்முதல் செய்தால் அதில் இருந்து கிடைக்கும் அரிசி விலை, மூட்டைக்கு லாபம் ரூ. 250 உள்பட கிலோ ரூ. 20 தான்.  
 
              ஆனால் சந்தையில் சன்னரக அரிசி விலை, கிலோவுக்கு ரூ. 30-க்குக் கீழ் குறையவில்லை. அந்த விலை விவசாயிக்குக் கிடைக்கவில்லையே. காரணம் இடைத்தரகர்கள். ÷தற்போது நெல் கொள்முதல் செய்பவர்கள் பெரும்பாலும் இடைத்தரகர்கள்தான். குறைந்தபட்சம் மத்திய அரசு அறிவித்து இருக்கும் புதிய விலை அடிப்படையில், தமிழக அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்' என்றார்.

Read more »

நெய்வேலியில் தங்க இடமின்றி தவிக்கும் தியாகி காளமேகம் குடும்பம்


மழையினால் சேதமடைந்த வீட்டின் முன் நிற்கும் தியாகி காளமேகத்தின் மனைவி பூங்காவனம்.
 
நெய்வேலி:

         நெய்வேலியில் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த தியாகி காளமேகத்தின் குடும்பத்தினர் தற்போது தங்க இடமின்றியும், அரசின் உதவி எதுவுமில்லாமல் பரிதாப நிலையில் இருந்து வருகின்றனர்.  

          நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகி காளமேகம், 50 ஆண்டுகளுக்கு முன் நெய்வேலிக்கு வந்து, சிறிதுகாலம் என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.  இவருக்கு பூங்காவனம் எனும் மனைவியும், ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர். இவர் ஓய்வுபெற்ற பின், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் கடலூர்-விருத்தாசலம் சாலை மார்க்கத்தில் வசித்துவந்த போது, கடந்த 2007-ம் ஆண்டு இறந்தார்.  

            இவரது மறைவை அறிந்த மாவட்ட நிர்வாகம், தியாகிக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில், விருத்தாசலம் வட்டாட்சியரை அனுப்பிவைத்து இறுதி மரியாதை செய்தது.  இதையடுத்து தியாகியின் மனைவி பூங்காவனத்துக்கு, தியாகிக்கு அளிக்கப்படும் பென்ஷன் ரூ.2500, சிவகங்கை மாவட்டக் கருவூலத்திலிருந்து மாதாமாதம் கிடைத்து வருகிறது.  தியாகியின் இரு மகன்களில் ஒருவர் என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

                     மற்றொரு மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும், போதிய வருவாயின்றி குடும்பத்தை சிரமத்துடன் கவனித்து வருகிறார்.÷அனைவரும் மந்தாரக்குப்பம் சாலையோரத்தில் உள்ள குடியிருப்பில் வசித்த வந்தனர். இந்நிலையில் அண்மையில் பெய்த மழையில், அவர்களது குடியிருப்பு இடிந்து விழுந்ததில் முற்றிலும் சேதமடைந்தது.  மழையினால் சேதமடைந்த வீட்டுக்கு, அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ.2500-ல், தியாகியின் குடும்பம் என்று கூட பார்க்காமல், அந்த நிவாரணத் தொகையில் ரூ.500-ஐ பிடித்தம் செய்துகொண்டுதான் வழங்கியுள்ளார் 

               வடக்குவெள்ளூர் கிராம நிர்வாக அலுவலர்.  போதிய வருவாயின்றி, அரசு வழங்கும் ரூ.2500 பென்ஷன் தொகையைக் கொண்டு, ஒரு குடும்பம் தற்போதுள்ள விலைவாசி நிலவரப்படி வாழ முடியுமா? தங்கியிருந்த குடியிருப்பும் வசிக்க தகுதியற்ற நிலையில்  உள்ளதே?.  ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினவிழாவின் போது, அரசு சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தியாகிகளை அழைத்து ஒரு சால்வை அணிவித்து கெüரவப்படுத்துவதோடு, அரசின் வேலை முடிந்துவிடுகிறது.

             நாட்டுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தியாகிகளையோ அவர்களது குடும்பங்களின் நிலையைப் பற்றியோ, அவர்களுக்கு உதவ வேண்டுமே என்ற எண்ணமோ அரசுக்கு ஏன் தோன்றவில்லை. குறைந்தபட்சம் அவர்களது துணைவியாருக்காவது அரசு உதவிட வேண்டாமா?  யார் யாருக்கோ இலவச நிலம், சமத்துவபுரத்தில் குடியிருப்பு உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கிவரும் தமிழக அரசு, இது போன்ற தியாகிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவச நிலமோ, சமத்துவபுரத்தில் குடியிருப்போ வழங்குவது குறித்து பரிசீலிக்கலாமே?

Read more »

இன்று தேசிய வாக்காளர் தினம்: 11.5 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

           நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான 11.5 லட்சம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. 

              இந்தியத் தேர்தல் ஆணையம் ஜனவரி 25-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இந்த தினத்தை வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. "வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன்! வாக்களிக்கத் தயார் என்பேன்!' என்ற முழக்கத்துடன் தேசிய வாக்காளர் தினம் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. 

            ஆளுநர் மாளிகையில் விழா: மாநில அளவிலான வாக்காளர் தின விழா, ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறுகிறது. ஆளுநர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்கவைத்து ஆளுநர் சிறப்பு உரையாற்றுகிறார். புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையையும் அவர் வழங்குகிறார். 
  
மாவட்ட அளவில்...

            மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை அனைவரையும் ஏற்கவைக்கின்றனர். புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை மற்றும் பேட்ஜ்களை வழங்குகின்றனர்.  சுய உதவிக் குழுக்களின் பஞ்சாயத்து நிலையிலான கூட்டங்களில் வலுவான ஜனநாயகம் அமைக்க பெண்களின் பங்கேற்பின் முக்கியத்துவம் உணர்த்தப்படும். 

           குடியரசுத் தினத்தன்று கூட்டப்படும் கிராம சபைக் கூட்டங்களின் அலுவல் பட்டியலில் வாக்காளர் உரிமைகள், கடமைகள் மற்றும் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்தல் என்ற சிறப்பு அலுவலும் அடங்கி இருக்கும்.  இந்த ஆண்டு 11.5 லட்சம் பேர் புதிய வாக்காளர்களாக தகுதி படைத்துள்ளனர். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, 54 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள 29 ஆயிரம் அமைவிடங்களில் விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. 

             எனவே, அவற்றில் சிறப்பு விருந்தினராக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இருப்பார்.  வாக்குச் சாவடிகளில் நடைபெறும் விழாக்களில் வாக்காளர் புகைப்பட அட்டை அளிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.  

Read more »

தமிழகத்தில் 20 ஆண்டுகளாக வேளாண்துறை புறக்கணிப்பு: வேளாண் பட்டதாரிகள்

சிதம்பரம்:

          தமிழக அரசு வேளாண்துறையில் 90 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக வேளாண்துறை புறக்கணிக்கப்பட்டு வருகிறது என அனைத்து வேளாண் பட்டாதாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.  

இது குறித்து வேளாண் பட்டாதாரிகள் சங்கம் மாநிலத் தலைவர் கா.பசுமைவளவன் சிதம்பரத்தில் சனிக்கிழமை தெரிவித்தது: 

             தமிழகத்தில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்காக தாரை வார்க்கப்பட்டு வருகிறது.  இதனால் வேளாண் தொழில் அழியும் நிலை உருவாகி உணவு பஞ்சம் ஏற்படும். எனவே விளைநிலங்களை விற்பதைத் தடுக்க அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.  அமெரிக்கா உள்ளிட்ட பன்னாடுகளில் தடை செய்யப்பட்ட எனடோசல்மான், டிடிடி போன்ற மருந்துகள் இந்தியாவில் கொள்ளைப் புறமாக விற்கப்பட்டு வருகிறது.  

            தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 933 கிராமப்புற வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டுள்ளன.  தமிழகத்தில் 14 ஆயிரம் வேளாண் பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஆனால் காலியாக உள்ள பணியிடங்களை அரசு நிரப்பவில்லை.  அனைத்து பள்ளிகளிலும் வேளாண்மை அடிப்படை பாடமாகக் கொண்டு வரப்படும் என திமுக அரசு பதவி ஏற்றவுடன் சட்டமன்றத்தில் 4.8.2006-ல் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்தார்.  

            இதை நடைமுறைப்படுத்தி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டதாரிகள் பதவி மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணிநியமனம் செய்ய வேண்டும்.  தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 30.6.2009-ல் வேளாண் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 200 பேர் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது.  அவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். வேளாண் பட்டதாரிகளின் வாழ்வுரிமையான தமிழ்நாடு வேளாண் மன்றம் நிலுவையில் உள்ளதை சில திருத்தங்கள் செய்து நடைமுறைபடுத்த வேண்டும்.  

               மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 28-ம் தேதி சென்னை அண்ணாசாலை காயிதேமில்லத் மணி மண்டபம் முன்பு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் போராட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.  அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடல் தமிழகத்தில் உள்ள வேளாண் கல்லூரிகளில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என கா.பசுமைவளவன் தெரிவித்தார்.  அப்போது மாநிலப் பொருளர் ப.உதயகுமார், மாவட்டத் தலைவர்கள் கே.சத்தியநாராயணன், கே.முத்துக்குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சைசுத்தம் செய்த கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள்

கடலூர்:

            கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சை, கடலூர் கல்லூரி மாணவிகள் சனிக்கிழமை சுத்தம் செய்தனர்.  

           உப்பங்கழிகள், சவுக்குத் தோப்புகள், மணல் குன்றுகள், பூங்கா, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் படகுத் துறையுடன் அழகிய தோற்றம் கொண்டது, கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்.  வடகிழக்குப் பருவமழை காலத்தில் இக்கடற்கரை கெடிலம் ஆற்று வெள்ளப்பெருக்காலும் ராட்சத அலைகளாலும் சிதைந்து காணப்பட்டது.  

          அத்துடன் பொங்கல் பண்டிகையின் வரவைத் தொடர்ந்து, கடற்கரைக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்ததால், கடற்கரை முற்றிலும் அசுத்தமாகி விட்டது. பாலித்தீன் பைகள், காகிதக் குப்பைகள் நிறைந்து காணப்பட்டன.  இதைச் சுத்தம் செய்யும் பணியை கடலூர் இளைஞர் எக்ஸ்னோரா சனிக்கிழமை மேற்கொண்டது.  இப்பணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தொடங்கி வைத்தார். 

            நிகழ்ச்சிக்கு, மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம் முன்னிலை வகித்தார்.  புனித வளனார் கல்லூரி பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன், சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியை சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ÷கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியில், கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள் 100 பேர் ஈடுபட்டனர்.

Read more »

நாடு முழுவதும் தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகங்கள் மார்ச் 31க்குள் கம்ப்யூட்டர் மயமாகும்

             இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலாளர் வைப்பு நிதி (பி.எப்.,) நிறுவன அலுவலகங்களும், வரும் மார்ச் 31க்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். தொழிலாளர்களுக்கு தாமதம் இல்லாமல் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, மதுரை மண்டல கமிஷனர் விஜயக்குமார் தெரிவித்தார்.

விருதுநகரில் நடந்த தொழிலாளர்களுக்கு பென்ஷன் உத்தரவு வழங்கும் விழாவில் மதுரை மண்டல கமிஷனர் விஜயக்குமார் பேசியது: 

             ஓய்வு பெற்ற பின், தொழிலாளரின் வைப்பு நிதி விண்ணப்பத்தில் மொபைல்போன் எண் பெறப்படும். இது இல்லையெனில் நிறுவனம், தொழிற்சங்க பிரதிநிதி, தொழிலாளர்களின் உறவினர் போன் எண் பெறப்படும். விண்ணப்பம் பெறப்பட்டு பதிவு செய்தவுடன், பதிவு எண்ணுடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். பின், கணக்கு முடிக்கப்பட்டு அந்த தொகை தயாரானவுடன், மீண்டும் செக் நம்பர், வங்கி, கணக்கு முடிக்கப்பட்ட தேதியுடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். 

              ஒரு தொழிலாளர், வைப்பு நிதி பெறும் காலம் ஒரு மாதத்திற்கு மேல் என இருந்த நிலை மாறி, உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பி.எப்., அலுவலகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, "கோர் பேங்கிங்' வசதி செய்யப்படவுள்ளது. பி.எப்., பெறுவதற்கான விண்ணப்பத்தில், வங்கி பாஸ் புக் எண்ணுடன் நகல் எடுத்து இணைத்து அனுப்பினால், உடனடியாக தொழிலாளி கணக்கு வைத்துள்ள வங்கிக்கு, பணம் மாறுதல் செய்யப்படும். 

              மூன்று ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள பி.எப்., கணக்குகளை முடித்து வட்டியில்லாமல் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு பணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு விஜயக்குமார் தெரிவித்தார்.

Read more »

கடலூரில் புதிய வழித்தடத்தில் 2 பேருந்துகள்: எம்.எல்.ஏ. அய்யப்பன் துவக்கி வைத்தார்

கடலூர் : 

            புதிய வழித் தடங்களில் செல்லும் இரண்டு பஸ்களை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார். 

              கடலூர் தொகுதிக்குட்பட்ட நல்லவாடு பகுதியிலிருந்து கடலூர் நகருக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் வசதிக்காகவும், கடலூரிலிருந்து புதுச்சேரி பகுதியில் உள்ள கடலூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி கோரி பொதுமக்கள் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் கடலூர் அரசு போக்குவரத்துக் கழகம் தடம் எண். 40 ஏ பஸ் நாள் ஒன்றுக்கு நான்கு முறை கடலூரிலிருந்து கன்னியக் கோவில் வழியாக நல்லாவாடுக்கும், தடம் எண். 40 பி புதுச்சேரி பகுதியில் உள்ள தமிழக கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கடலூரிலிருந்து திருவந்திபுரம், பில்லாலி, வெள்ளப்பாக்கம், அழகியநத்தம், வில்லியனூர் வழியாக பெரம்பைக்கு ஒரு பஸ்சையும் நேற்று முதல் இயக்கியது.

              தூக்கணாம்பாக்கத்தில் நடந்த துவக்க விழாவில் எம்.எல்.ஏ., அய்யப்பன் கொடியசைத்து புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கி துவக்கி வைத்தார் .நிகழ்ச்சியில் ஒன்றிய கல்விக்குழு உறுப்பினர் ஜெயபால், ஊராட்சி தலைவர்கள் ராதாகிருஷ்ணன், மீனாட்சி ஜெயமூர்த்தி, கவுன்சிலர் கஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஜெயச்சந்திரன், போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் முருகானந்தம், கிளை மேலாளர்கள் கணபதி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

         கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை முடிவடையும் காலாண்டிற்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது.
 
கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

            பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தவறியவர்கள், பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்து, தொடர்ச்சியாக புதுப்பித்து வந்தவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், மற்றவர்களுக்கு 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு, தனியார் அலுவலகத்தில் பணிபுரிபவராகவோ, கல்வி நிறுவனத்தில் படிப்பவராகவோ இருக்கக்கூடாது. தொலைதூரக் கல்வி படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் படித்தவராகவோ, பெற்றோர் அல்லது பாதுகாவலர் தமிழ்நாட்டில் தொடர்ந்து 15 ஆண்டு வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

               கல்வி அசல் சான்றுகள், வேலை வாய்ப்பு அலுவலக அசல் அட்டையுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து இதற்கான விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. பதிவு செய்து 5 ஆண்டு முடித்த புதியவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்டவை பிப்ரவரி 15ம் தேதி வரை பெறப்படுகிறது. உதவித் தொகை பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் சுய உறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். 

              மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து உதவித் தொகை பெறாதவர்கள் 2010 -11ம் ஆண்டு சுய உறுதி மொழி ஆவணத்துடன், வேலைவாய்ப்பு அடையாள அட்டை புதுப்பித்த ஆதாரத்துடன், இதுவரை பயன் பெற்ற வங்கி புத்தகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணம் அனுப்பிய விவரங்களின் நகலை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

தமிழகத்தில் 40 மருத்துவமனைகளில் சிசு பராமரிப்பு மையம் ; அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர்:

           கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை களை விளக்கும் வகையில் பல்துறை பணி விளக்க கண்காட்சி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அமைக்கப்பட்டள்ளது.

          இந்த கண்காட்சியின் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல். ஏ., கடலூர் நகர் மன்ற தலைவர் தங்கராசுகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் முத்தையா வரவேற்றார். நகர்மன்ற தலைவர் தாமரைச் செல்வன் வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர் எம்.ர்.கே. பன்னீர் செல்வம் கல்நது கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து பேசினார்.

அமைச்சர் எம்.ர்.கே. பன்னீர் செல்வம்  பேசியது:-


                 செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் விதத்தில் குறுகிய நாட்களில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டு களிக்க வேண்டும். அங்கு உள்ள 24 ஸ்டால்களில் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தையும் நினைவு படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எந்த அரசும் செய்யாத சாதனைகளை செய்து வரும் தமிழக அரசின் ஒவ்வொது துறை திட்டமும் மக்களிடையே நேரடியாக செல்கிறது.

                அதாவது மருத்துவ துறையில் சாதனை, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் சாதனை, மீனவர், கூட்டுறவுதுறை என அந்தந்த துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனை செய்து வருகிறது.   குழந்தை சிசுக்கள் இறப்பு விகிதம் இந்தியாவிலே தமிழகத்தில் தான் குறைவு. இதனை மேலும் குறைக்கும் விதத்தில் பிறந்த குழந்கைதளுக்கு 1 வயதாகும் வரை உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையினை தனியார் மருத்துவமனையிலும் இலவசமாக பெறலாம். அதைப்போன்று தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 40 மருத்துவமனையில் சிசு பராமரிப்பு மையம் தொடங்கப்பட உள்ளது.

                 அதன்படி கடலூர் அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்படும். இதற்கென்று சிறப்பு பயிற்சி பெற்ற டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து விழா மேடையில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் வெங்கடேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சாய்பாபா நன்றி கூறினார்.

Read more »

Ancient Padaleeswarar temple all set for Maha Kumbabhishekam



Padaleeswarar temple getting ready for Kumbabhishekam on Wednesday


CUDDALORE: 

           The ancient Padaleeswarar temple, situated in the heart of the Cuddalore town, is all set for Maha Kumbabhishekam on January 26. It is one among the renowned 274 Siva temples whose history reportedly dates back to 2,000 years.

          The entire premises of the temple has been given a facelift at an estimated cost of Rs 1.25 crore, of which the share of the Hindu Religious and Charitable Endowment Department, that is running the affairs of the temple, is hardly Rs 10 lakh. The HR & CE Department has undertaken to renovate and repaint only the Raja gopuram while the Sri Padaleeswarar Temple Worshippers' Association has taken care of all other works through donors.

        Association secretary V.Balu who has been closely supervising the works, told The Hindu that the kumbabhishekam was last performed nearly 14 years ago on March 26, 1997 It is being done under the guidance of Kannangudi Balamani Sivachariar, an authority on Agama Sastras. Mr Balu could not say whether any other worshippers' association had undertaken works of such magnitude elsewhere. The Association came into being with Dr K.Krishnamurthy as president, Mr Balu as Secretary and K.Karthikeyan as treasurer with the specific purpose of preparing a temple car as the original one was gutted in a fire accident over a century ago.

          The Association mobilized an amount of Rs 50 lakh out of which it carved out a new temple car by spending Rs 32 lakh. The remaining Rs 18 lakh had been set aside as a corpus to meet the expenditure of conducting the annual car festival that might run into Rs 1 lakh to Rs 1.5 lakh. Mr Balu said that emboldened by the temple car experiment, the Association had embarked upon the relatively un-charted territory of renovating the temple and organizing the kumbabhishekam and the works were going on smoothly.

          The 29 vimanams (top portions of the gopurams) in the temple were renovated and the 24-pillar mandapam had been beautified. The flooring of Sri Periyanayagi Amman temple and that of the Singapore mandapam (so named because it was built from the funds contributed by Singapore citizens) were elevated with granite slabs. All the sculptures and pillars were given a chemical wash to remove the oil smudges and metallic barricades had been put up in front of the sanctum sanctorum. The flag posts had been given a copper coating.

       Scores of compact fluorescent lamps (CFLs) in glass domes light up the inside of the temple, perfectly matching the traditional lamps. While 40 of the existing Vahanams (mounts) were repaired and repainted, two new ones—Anna Vahanam and Rishaba vahanam—were made anew, thus taking the total number to 42. A separate ‘go shala' had been built in which at least a dozen cows were being fed. The compound wall of the temple pond ‘Siva kara theertham' had also been raised to protect its sanctity. The Maha Kumbabhishekam would be performed between 9 a.m. and 10 a.m. on January 26.

Read more »

Annamalai University to offer lessons over mobile phones

CUDDALORE: 

           From the coming academic year (2011-2012) Annamalai University, Chidambaram, will adopt an innovative method for delivering the lessons over mobile phones for a particular distance education programme. According to a statement issued by Vice-Chancellor M.Ramanathan, the Directorate of Distance Education (DDE) of the university had recently entered into an agreement with the Mobisir Technologies Pvt.Ltd, Bangalore, for offering the certificate course. The syllabus, regulations, lessons, and practical records would be delivered to students through the mobile phones.

Read more »

Federation condemns arrests

CUDDALORE: 

         The Federation for People's Rights—Puducherry has condemned the arrest of the leaders of the Tamil Maanavar Peravai and the Tamil Ilaignar Peravai who organised the Martyrs' Day meeting in support of the Sri Lankan Tamils here on Saturday.

        In a statement here, G.Sugumaran, federation secretary, stated that 10 leaders of those organisations, including Prabha Kalvimani, Balaguru and Nagaimugan, were arrested on the charges of delivering alleged inflammatory and seditious speeches against the sovereignty of the country and lodged in the Cuddalore Central Prison. He also noted that the meeting was organised after obtaining permission from the Madras High Court and yet the police who barged into the venue in strength removed all the posters and hoardingsput up there and brought the session to an abrupt end.

Indisposed

         Meanwhile, Balaguru and Nagaimugan, who were indisposed, were getting treatment in the Cuddalore Headquarters Government Hospital. Another person had been admitted to the Cuddalore Central Prison hospital. The remaining seven persons have been shunning food in the jail ever since their detention, the sources said.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior