உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 01, 2011

சூரிய சக்தியில் இயங்கும் மொபைல்போன் அறிமுகம் : வோடபோன்

            சூரிய சக்தியில் இயங்கக் கூடிய வகையிலான மொபைல் போன்களை இந்தியாவின் முன்னணி தொலை‌தொடர்பு நிறுவனமான வோடபோன் எஸ்ஸார் நிறுவனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

           சென்னையில் உள்ள பழைய தலைமைச் செயலகத்தில், மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வோடபோன் தமிழ்நாடு சர்க்கிள் உயர் அதிகாரி சுரேஷ்குமார் மொபைல்போன்களை அறிமுகப்படுத்தினார்.


இந்த அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு வோடபோன் தமிழ்நாடு சர்க்கிள் உயர் அதிகாரி சுரேஷ் குமார், 

       சூரிய ஒளியின் மூலம் சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‌மொபைல்போன்கள் விரைவில் விற்பனைக்கு வரும்.  மலைப்பகுதி, வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் எலெக்டிரிக் லைட் மூலமும் இந்த மொபைல்போன் சார்ஜ் ஏறும். 

            இதுபோன்ற சிறப்பான வசதிகள் கொண்ட சோலார் சார்ஜிங் மொபைல்போனின் விலை, ரூ. 1,500 என அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

Read more »

கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி விடுதியில் மாணவன் மர்ம சாவு



கடலூர் : 

           கடலூர் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த மாணவன், மர்மமான முறையில் இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் அடுத்த சின்னமாறன் ஓடையைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். உளுந்தூர்பேட்டையில், அரசு போக்குவரத்துக் கழக பஸ் டிரைவர்; இவரது மகன் ஜாய்ஸ் ஆல்வின் போஸ்(12); கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில் விடுதியில் தங்கி, 6ம் வகுப்பு படித்து வந்தான்.

               நேற்று மாலை, 3.30 மணிக்கு, ஜாய்ஸ் ஆல்வின் போஸ், விடுதியில் மயங்கி விழுந்தான். கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான். கடலூர் புதுநகர் போலீசார், மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால், திடீர் பதட்டம் நிலவியது.

மாணவனின் தந்தை ஆரோக்கியதாஸ் கூறியது: 

         நேற்று (நேற்று முன்தினம்) மாலை ஜாய்ஸ் ஆல்வின் போஸ் எனக்கு போன் செய்து, உடல்நிலை சரியில்லை என கூறினான். அப்போது பணியில் இருந்ததால் நாளை வருகிறேன் என்றேன். இன்று (நேற்று) மாலை கடலூர் வந்த போது, பள்ளி முதல்வர் எனக்கு போன் செய்து, உங்கள் மகனுக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான் என்றார். அங்கு சென்று பார்த்தபோது என் மகன் இறந்து விட்டான். 

             கடந்த வாரம் என் மனைவி மகனை பார்க்க வந்தபோது அவரிடம், உடனிருந்த மாணவர்கள், விடுதி வார்டன், ஜாய்ஸ் ஆல்வின் போசை அடித்ததாக கூறியுள்ளனர். இதனால் என் மகன் சாவில் சந்தேகம் உள்ளது. இவ்வாறு ஆரோக்கியதாஸ் கூறினார். 

பள்ளி முதல்வர் ஆக்னல் கூறுகையில், 

                "விடுதியில் உள்ள மாணவர்களுக்கு உடல் நிலை சரியில்லை எனில் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். ஜாஸ் ஆல்வின் போஸ் இன்று (நேற்று) பள்ளி ஆரம்பித்த பின் உடல் நிலை சரியில்லை என ஆசிரியரிடம் கூறி விடுமுறை எடுத்துள்ளான். இந்நிலையில், அவன், விடுதியில் திடீரென மயங்கி விழுந்துள்ளான். உடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்' என்றார்.

Read more »

கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் "ஒன்டே விசிட்' முறை அமல்

           "தத்கல்" முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுக்கு, ஒரே நாளில் அனைத்து ஆய்வுகளையும் முடிக்கும் வகையில், "ஒன் டே விசிட்' எனப்படும் புதிய முறை, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

            கோவை பாஸ்போர்ட் அலுவலகம், 2008 செப்., 15ல் துவக்கப்பட்டது. கடந்த வாரம் வரையிலும் 1 லட்சத்து 10 ஆயிரம் சாதாரண பாஸ்போர்ட்களும், 47 ஆயிரம், "தத்கல்' பாஸ்போர்ட்களும், 1,500 ஜம்போ பாஸ்போர்ட்களும் வினியோகிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள, "தத்கல்' பாஸ்போர்ட்களுக்கு, "ஒன் டே விசிட்' என்ற புதிய முறை, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவை நேற்றிலிருந்து அமல்படுத்தப்பட்டது. "தத்கல்' முறையில் விண்ணப்பிப்போருக்கு, அதே நாளிலேயே விண்ணப்பத்திலுள்ள விவரங்களும், ஆவணங்களும் சரி பார்க்கப்படும்.

             காலையில் உதவி பாஸ்போர்ட் அலுவலரும், மதியத்திலிருந்து மாலை வரை பாஸ்போர்ட் அலுவலரும் விண்ணப்பதாரர்களைச் சந்தித்து, ஆவணங்களைப் பரிசோதிப்பர். இந்த ஆய்வுகள் முடிந்த பின், விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு மீண்டும் வர வேண்டிய அவசியம் இல்லை. 

              ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்ட பின், அடுத்த ஓரிரு நாட்களிலேயே பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, தபாலில் அனுப்பப்படும். இதுவரை, "தத்கல்' முறையில் விண்ணப்பிப்போருக்கு ஒரு வாரத்திலிருந்து 10 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைத்து வருகிறது. புதிய நடைமுறையினால், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைத்து விடும் வாய்ப்புள்ளது. இதனால், கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில், "தத்கல்' முறையில் பாஸ்போர்ட்டுக்கு நேற்று விண்ணப்பித்த பலரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

Read more »

சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியீடு

வரும் கல்வியாண்டில் அமலுக்கு வர உள்ள, சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் www.pallikalvi.in  காணலாம்.  
 

Read more »

தமிழகம் முழுவதும் இடுபொருட்கள் பெற விவசாயிகளுக்கு அரசு அடையாள அட்டை அறிமுகம்

நெல்லிக்குப்பம் : 

            தமிழக அரசு மூலம் வழங்கப்படும் இடுபொருட்களை எளிதாக பெற விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 

             தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு "ராஜராஜன் 1000' நெல் நடவு, பயிறு வகை பயிர்களுக்கு இலவசம் மற்றும் மானிய விலையில் இடுபொருட்களும், சொட்டு நீர் உட்பட பல திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இவற்றை பெற ஒவ்வொரு முறையும் பல்வேறு விவரங்களை விவசாயிகள் வழங்க வேண்டியுள்ளது. இதற்காக செலவு அதிகமாவதுடன், நேரமும் விரயமாகிறது. 
            இதனைத் தவிர்க்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள அட்டை வழங்கி அதில் விவசாயி பெயர், வங்கி கணக்கு எண், நிலத்தின் சர்வே எண் போன்ற விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து விட்டால் போதும், அதன் பிறகு விவசாயிகள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து விவசாய டெப்போவில் இடுபொருட்களை பெற்றுக் கொள்ளலாம். 

              இதற்காக ஒவ்வொரு முறையும் அதிகாரிகளை பார்க்கத் தேவையில்லை. எளிதாக இடுபொருட்களை பெறமுடியும். மானிய தொகைகள் மற்றும் நிவாரண நிதிகளை இனி விவசாயிகள் வங்கிகளில் நேரடியாக பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். அண்ணாகிராமம் வட்டாரத்தில் 5,600 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை உதவி இயக்குனர் சம்பத்குமார் செய்து வருகிறார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

கடலூர் : 

           வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். 

கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

           எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை தொடர் சுருக்க முறை திருத்தப் பணி மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதனையொட்டி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியில் பெயர் விடுபட்டவர்கள், தொகுதி மாற்றம், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். 

            படிவங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நகராட்சி மேலாளர், தாலுகா அலுவலகங்களில் தலைமையிட துணை தாசில்தார் அல்லது ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர்களிடம் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, வேட்பு மனுத்தாக்கல் முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை கொடுக்கலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 படிவங்கள் தரவிறக்க 

Forms
Forms Details
Form 6
Application for inclusion of name in electoral roll after draft publication of roll (if your name is not included in the draft roll).
Form 7
Application for objection to inclusion of name in electoral roll.
Form 8
Application for correction of particulars in electoral roll.
Form 8A
Application for transposition of entry in electoral roll.
Form 001C Application for obtaining duplicate / Replacement EPIC

Read more »

கடலூர் அருகே ஓடும் பேருந்துலிருந்து குதித்த மாணவர் சாவு

கடலூர் : 

           கடலூர் அருகே ஓடும் பேருந்துலிருந்து  ஜன்னல் வழியே குதித்த பள்ளி மாணவர் இறந்தார். 

            கடலூர் முதுநகர் அடுத்த காரைக்காடு அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் மகன் ராகுல்காந்தி (19). கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை கண்ணாரப்பேட்டையில் நடந்த தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பின்னர் கடலூரில் இருந்து வேகாக்கொல்லை செல்லும் அரசு டவுன் பஸ்சில் நண்பர்களுடன் வீடு திரும்பினார். பஸ்சில் டிக்கெட் எடுக்காததால் கண்டக்டருக்கும், ராகுல்காந்திக்கும் தகராறு ஏற்பட்டது. 

             இதற்கிடையே காரைக்காடு பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காததால் ராகுல்காந்தி பஸ்சில் இருந்து ஜன்னல் வழியாக திடீரென குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ராகுல்காந்தி இறப்புக்கு காரணமான டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் இரவு 9 மணிக்கு காரைக்காடு பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இம்மறியல் போராட்டத்தால் கடலூர் - விருத்தாசலம் சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Read more »

Youth Red Cross volunteers clean up tsunami-hit island

CUDDALORE:

         The first-ever State-level ‘Field study camp' for Youth Red Cross volunteers was held at Pichavaram near Chidambaram on Monday under the auspices of Annamalai University and Killai Town Panchayat.

          As many as 120 volunteers, including a fair number of girls, drawn from 12 universities such as Annamalai University, Anna University-Tiruchi, Bharathiar University, Bharathidasan University, Madurai-Kamaraj University, Periyar University, Sathyabama University and Sastra University participated in the week-long camp. On the penultimate day of their soujourn on Monday, the volunteers wearing red T-shirts and white caps with the Red Cross symbol and, accompanied by Annamalai University YRC coordinator K.V.Balamurugan and Killai Town Panchayat Chairman S.Killai Ravindran, set out on at least 10 motorised boats that sailed through the mangrove forests to the tsunami-hit Chinna Vaikkal island to clean up the place.

           En route, they scooped up with hand-held nets the litter left by tourists and holidaymakers from the backwaters. On landing at the island, the volunteers, armed with sweep sticks and bins, segregated the garbage dump there as bio-degradable and non-biodegradable categories and collected them in big containers to be shifted to the mainland for incineration. Mr. Killai Ravindran told The Hindu that for the past six days the local body was hosting the volunteers. They had been carrying out a series of service activities such as organising a veterinary camp in which 1,200 animals were vaccinated, a dental camp in which 2,200 students were screened and planted scores of saplings, thereby endearing themselves to the residents of the place.

           They were also imparted training in disaster management by the fire service and rescue personnel. They took out a rally in Killai to create awareness among the people about the adverse impact of plastic articles on ecology. Mr. Balamurugan said that Annamalai University had the distinction of having organised the maiden State-level camp approved by the Indian Red Cross Society that had funded the event to the extent of Rs.1 lakh.

             Based on the feedback to be obtained from the volunteers, a comprehensive report would be compiled and the copies sent to the Indian Red Cross Society and Annamalai University, Mr. Balamurugan said. S. Nithyanandan, a volunteer from Madurai-Kamaraj University, said that the camp helped in bonding with his counterparts from other parts of the State and the Killai residents, besides giving him an insight into the topography and the demography of the areas.

           He would share the experience with his fellow students in his university to motivate them to take up social services. For Vinodhini of Anna University-Tiruchi, both academic career and YRC camp were equally important. Nursing students Raisy Raja and Sirija, both from Eranakulam, felt that after attending the camp they were well informed about health care and conservation methods which would definitely improve their career prospects. There were specialised lectures and cultural programmes at the end of each day. The programme officers and the volunteers kept up the spirit throughout and were full of delectable episodes to share with their family members, friends, peers and neighbours.

Read more »

Electors Photo identity cards for Aravanis

CUDDALORE: 

        In the Grievance Day session held here on Monday, District Collector P. Seetharaman distributed Electors Photo Identity Cards to 50 Aravanis.

         The Collector also issued identity cards to 11 persons enrolling them in the Cable Television Employees' Welfare Board. The Collector received a total number of 419 petitions seeking house site pattas, old age pension, and, roads and other facilities. 


Read more »

Student falls sick, dies in a private school in Manjakuppam

CUDDALORE: 

         A. Joy Alwin Bose (12), hailing from Thirunavalur in Villupuram district and studying in Class VI in a private school in Manjakuppam here, fell sick in the classroom on Monday morning.

        Since, he was staying in the hostel the school management arranged for his admission in a private hospital where he breathed his last. The body was taken to the government hospital for post-mortem. The police sources said that only after the post-mortem report was obtained, the cause of death would be known.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior