உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 07, 2011

கடலூர் மாவட்டத்தில் மூன்று முறை பெயர் மாறிய திட்டக்குடி (தனி) தொகுதி

கடலூர் : 

               தொகுதி மறுசீரமைப்பில் மூன்றாம் முறையாக பெயர் மாற்றப்பட்டுள்ள திட்டக்குடி (தனி) தொகுதியை தி.மு.க., நான்கு முறை கைப்பற்றியுள்ளது. கடலூர் மாவட்டத்தில், 1951ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி, சிதம்பரம் ஆகிய ஐந்து தொகுதிகள் மட்டுமே இருந்தன. 

                அடுத்து 1957ம் ஆண்டு நடந்த இரண்டாம் பொதுத் தேர்தலுக்கு முன் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் ஆறாவது தொகுதியாக நல்லூர் உருவானது. 1957 மற்றும் 1962ம் ஆண்டு தேர்தலை மட்டுமே சந்தித்து நல்லூர் தொகுதி பின்னர் நடந்த மறுசீரமைப்பில் மங்களூர் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது. அதன்பின் கடந்த 2006ம் ஆண்டு வரை நடந்த 10 பொதுத் தேர்தலை சந்தித்த இத்தொகுதி கடந்த 2008ம் ஆண்டு நடந்த மறுசீரமைப்பில் சிறு மாற்றத்துடன் திட்டக்குடி (தனி) தொகுதியாக அவதாரம் பெற்றுள்ளது. 

                இதுவரை நடந்த 12 சட்டசபை தேர்தலில் முதல் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட வேதமாணிக்கமும், 62ல் நடந்த தேர்தலில் காங்., கட்சியை சேர்ந்த நாராயணசாமி, 67ல் தி.மு.க., கிருஷ்ணன், 71ல் தி.மு.க., ஜெபமாலை, 77ல் அ.தி.மு.க., பெரியசாமி, 80ல் அ.தி.மு.க., கலியமூர்த்தி, 84ல் அ.தி.மு.க., தங்கராஜூ, 89ல் தி.மு.க., கணேசன், 91ல் காங்., புரட்சி மணி, 96ல் த.மா.கா., புரட்சி மணி, 2001ல் விடுதலை சிறுத்தை திருமாவளவன், 2006ல் விடுதலை சிறுத்தை செல்வப் பெருந்தகை வெற்றி பெற்றுள்ளனர்.

Read more »

குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் 136 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை

குறிஞ்சிப்பாடி : 

            குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் 136 ஓட்டுச் சாவடி பதட்டமான வாக்குசாவடி என கண்டறியப்பட்டுள்ளது. 

குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன்  கூறியதது: 

              குறிஞ்சிப்பாடி தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடைமுறை விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுவை குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்திலும், கடலூரில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடமும் அளிக்கலாம். அனைத்து மனுக்களும் கடலூர் தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலனை செய்யப்படும். தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை விசாரிக்க தனி வட்டாட்சியர், பி.டி.ஓ., சப் இன்ஸ்பெக்டர் கொண்ட குழு விசாரிக்கும்.

               தொகுதியில் ஒரு கம்ப்யூட்டர் அறை துவங்கப்பட்டு உடனுக்குடன் தகவல் அளிக்கப்படும். குறிஞ்சிப்பாடியில் 215 ஓட்டுச் சாவடியில் 136 ஓட்டுச் சாவடிகள் பதட்டமான ஓட்டுச் சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. தொகுதியை 21 மண்டலமாக பிரித்து மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர பகுதியில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் அந்த ஓட்டுச்சாவடியை இரண்டாக பிரிக்கவும், கிராமப் புறங்களில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் இரண்டாக பிரிக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான கணக்கு எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு தேர்தல் அலுவலர் நடராஜன் தெரிவித்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சுவர் விளம்பரத்தை அழிக்கும் செலவு அரசியல் கட்சியிடம் வசூலிக்கப்படும்: கலெக்டர் சீத்தாராமன் அறிவிப்பு

கடலூர்:
    
              கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கான மையத்தினை மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னிஸ் ஆகியோர் கடலூர் பெரியார் கலைக்கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.  
பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-

                 கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மற்றும் நெய்வேலி ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் செய்யப்பட்டு வரைபடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

                அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமை யாக கடைப்பிடித்து தேர்தலை அமைதியாகவும், நேர்மை யாகவும் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் உள்ள விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

             தற்போது சில அரசியல் கட்சிகள் விளம்பர பேனர்களை அகற்றி வருகின்றனர். மாவட்டத்தில், 13 தேர்தல் நன்னடத்தை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விளம்பர பேனர்களை அகற்றுவதுடன், சுவர் விளம்பரங்களை அழித்து வருகின்றனர். இதற்கு ஏற்படும் செலவினத்தை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடம் வசூல் செய்யப்படும்.  
              மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கடலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்றுள்ள 354 நபர்கள் தங்களது துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 6-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது கடலூர் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் மனோகரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாண்டியன் மற்றும் அலுவலர்கள் உடன் வந்திருந்தனர்.

Read more »

Unemployed history graduates to boycott polls

CUDDALORE:

           Unemployed history graduates and postgraduates have decided to boycott the Assembly elections.

      President of the Tamil Nadu History Graduates and Postgraduates' Right to Life Association M. Murugan said that over 30,000 candidates had been waiting for about 20 years for government appointments. The Association had been taking up the cause of unemployed history graduates and postgraduates for many years, but in vain. Such a situation had arisen because teachers handling subjects such as English, mathematics and science in government schools were allowed to conduct history classes.

             Another detrimental factor was the policy of giving cent per cent promotion to secondary grade teachers. Mr. Murugan said that the secondary grade teachers, comparatively younger, used to take away the chances of history graduates awaiting job prospects.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior