உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 11, 2011

புவனகிரி (பொது) சட்டமன்றத் தொகுதி பார்வை

 தொகுதி பெயர் : 
புவனகிரி
தொகுதி எண் :
157
 அறிமுகம் : 
       கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக திகழ்கிறது.
எல்லை : 
                 புவனகிரி தொகுதியில் உள்ள கிராமங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. பழைய புவனகிரி தொகுதியில் இடம் பெற்றிருந்த பரங்கிப்பேட்டை ஒன்றியம், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. புவனகிரி, சேத்தியாத்தோப்பு. கங்கைகொண்டான் ஆகிய 3 பேரூராட்சிகள், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கம்மாபுரம் ஒன்றியத்தின் 41 ஊராட்சிகள், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கீரப்பாளையம் ஒன்றியத்தின் 43 ஊராட்சிகள், மேல்புவனகிரி ஒன்றியத்தின் 40 ஊராட்சிகள் ஆகியவற்றை இணைத்து புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. 
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
 பேரூராட்சிகள்:
புவனகிரி  18 வார்டுகள் 
சேத்தியாத்தோப்பு15 வார்டுகள் 
ங்கைகொண்டான்  15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள்: 
124 
 கம்மாபுரம் ஒன்றியம்: (41)
                      பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம் வடக்கு, சேப்ளாநத்தம் தெற்கு, கோட்டகம், உய்யகொண்டராவி, கீழ்பாதி, மேல்பாதி, நெய்வேலி, வடக்குவெள்ளூர், கூனங்குறிச்சி, ஊ.அகரம், இருப்புக்குறிச்சி, ஊத்தாங்கல், ஊ.மங்கலம், மும்முடிச்சோழகன், கம்மாபுரம், சு.கீணலூர், ஊ.கொளப்பாக்கம், வி.சாத்தமங்கலம், கோ.மாவிடந்தல், கார்குடல், கோ.ஆதனூர், வி.குமாரமங்கலம், கோபாலபுரம், கார்மாங்குடி, ஏ.வல்லியம், சி.கீரனூர், மேலபாலையூர், மருங்கூர், கே.தொழூர், கீழப்பாலையூர், தேவங்குடி, சிறுவரப்பூர், வி.சாத்தப்பாடி, ஊ.ஆதனூர், தர்மநல்லூர், கோட்டிமுளை, பெருவரப்பூர், பெருந்துறை, டி.பழவக்குடி, காவனூர்.
மேல்புவனகிரி ஒன்றியம்: (40) 
               அழிச்சிக்குடி, அகர ஆலம்பாடி, அம்மன்குப்பம், அம்பாள்புரம், ஆணைவாரி, பூதவராயன்பேட்டை, பு.கொளக்குடி, பு.சித்தேரி, பு.உடையூர், பு.ஆதனூர், சி,ஆலம்பாடி, சின்னநற்குணம், சொக்கன்கொல்லை, எல்லைக்குடி, எறும்பூர், ஜெயங்கொண்டான், வடகிருஷ்ணாபுரம், கத்தாழை, குமுடிமூலை, கிளாவடிநத்தம், மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதூர், மேலமணக்குடி, நெல்லிக்கொல்லை, நத்தமேடு, பெரியநற்குணம், பிரச்சனராமாபுரம், பின்னலூர், சாத்தப்பாடி, தெற்குதிட்டை, துறிஞ்சிக்கொல்லை, உளுத்தூர், வடதலைக்குளம், வடக்குதிட்டை, வத்தராயன்தெத்து, வீரமுடையானநத்தம், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரைமேடு.
கீரப்பாளையம் ஒன்றியம்: (43)
                 கே.ஆடூர், ஆயிப்பேட்டை, அ.அக்ராமங்கலம், பூதங்குடி, தேவன்குடி, இடையன்பால்சேரி, எண்ணநகரம், கண்ணங்குடி, கீரப்பாளையம், கீழ்நத்தம், கிளியனூர், கூளாப்பாடி, மதுராந்தகநல்லூர், டி,மணலூர், சி,மேலவண்ணியூர், முகையூர், டி.நெடுஞ்சேரி, ஓடாக்கநல்லூர், ஒரத்தூர், பாளையஞ்சேர்ந்தன்குடி, பண்ணப்பட்டு, பரதூர், பெருங்காலூர், பூந்தோட்டம், சாக்காங்குடி, சி.சாத்தமங்கலம், செங்கல்மேடு, சேதியூர், சிறுகாலூர், தரசூர், தென்ஹரிராஜபுரம், தெற்குவிருதாங்கன், வடக்குவிருதாங்கன், துணிசிரமேடு, வடஹரிராஜபுரம், வடபாக்கம், வாக்கூர், வாழைக்கொல்லை, வயலூர், சி.வீரசோழகன், வெள்ளியங்குடி, வெய்யலூர், விளாகம். 
வாக்காளர்கள் :  
ஆண் -  1,04,753
பெண் - 1,00,511
மொத்தம் -  2,05,264
வாக்குச்சாவடிகள் :  

மொத்தம் : 254  
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:  
மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.கல்யாணம் : 9445000209

Read more »

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை எதிர்த்து மோதுவது யார்?


எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
கடலூர்:

          மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை எதிர்ப்பு போட்டியிடுவது. அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.வா, ம.தி.மு.க.வா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

              தி.மு.க. அணியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடுவது, பெரும்பாலும் உறுதியாகிவிட்டதாக தி.மு.க. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3 முறை குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு எம.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தற்போது போட்டியிடப் போவது 4-வது முறை ஆகும். அமைச்சர் என்ற முறையில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை இத்தேர்தலில் எப்படியும் வீழ்த்துவதற்கு அனைத்து திட்டங்களையும், வியூகங்களையும் அ.தி.மு.க. வகுத்து இருப்பதாக அ.தி.மு.க. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

            பெரும்பாலான நலதிட்டங்களை குறிஞ்சிப்பாடி தொகுதிக்கே நிறைவேற்றி இருக்கிறார் என்று அ.தி.மு.க. பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறது.அப்படி இருக்கும்போது அமைச்சருக்கு எதிராக, யாரை நிறுத்துவது என்பதில் அ.தி.மு.க. அணியில் தீவிர சிந்தனை எழுந்துள்ளது. கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலருமான எம்.சி.சம்பத் மனு அளித்து இருக்கிறார். 

               எம்.சி. சம்பத் பெரும்பாலும் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதையே அதிகம் விரும்புகிறார், ஆனால் கட்சி மேலிடம் அவரை குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரது ஆதரவாளர்களோ கடலூரில் போட்டியிடுமாறு அறிவுரை கூறுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.குறிஞ்சிப்பாடி தொகுதியை ம.தி.மு.க.வுக்குக் கொடுப்பதாக இருந்தால், அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் என்.ராமலிங்கம்தான், அமைச்சருக்குச் சரியான போட்டி வேட்பாளராக இருக்கும் என்று, அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

                 ஆனால் என்.ராமலிங்கமோ குறிஞ்சிப்பாடி தொகுதியில், அமைச்சரை எதிர்த்துப் போட்டியிடுவதைத் தவிர்க்க விரும்புவதாகவே அவரது சமூகத்தினரும், அவரது கட்சியினரும் தெரிவிக்கிறார்கள். இதே தொகுதியில் தே.மு.தி.க. விவசாய அணிச் செயலாளராக இருக்கும், ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியரும் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான வி.சி. சண்முகமும், குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்றும், விருப்ப மனுகூடத் தாக்கல் செய்யவில்லை என்றும், அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

                  அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்களில் ஒருவரான சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்து இருக்கிறார். அவரும் நெய்வேலி தொகுதியையே அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் தே.மு.தி.க. சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டியிட விரும்புவதாலும், பண்ருட்டி தொகுதி கிராமங்கள் பலவும், தொகுதி சீரமைப்பில் நெய்வேலி தொகுதியில் சேர்க்கப்பட்டு இருப்பதாலும், நெய்வேலி தொகுதியை அவர் விரும்பினால், தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

               அமைச்சர் பன்னீர்செல்வத்தை எதிர்த்து அ.தி.மு.க.வைத் தவிர வேறு எந்த கட்சிகள் போட்டியிடுவதும், வலுவான போட்டியாக இருக்காது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். எனவே அமைச்சரை எதிர்த்து, அ.தி.மு.க.வைச் சேர்ந்த வலுவான நபர் அல்லது தேர்தலுக்குப் புதியவரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர், அல்லது ம.தி.மு.க. வேட்பாளர் ஒருவர் போட்டியிடக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Read more »

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலை விபத்து: இன்சூரன்ஸ் சட்டப்படி நிவாரண தொகை வழங்க கோரிக்கை

கடலூர்:

              கடலூர் சிப்காட் தனியார் ரசாயனத் தொழிற்சாலை விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பொதுமக்கள் பாதிப்பு இன்சூரன்ஸ் சட்டப்படி நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் கோரிக்கை விடுத்தார்.  

              கடலூர் சிப்காட் தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் 7-ம் தேதி இரவு ஏற்பட்ட விஷ வாயுக் கசிவினால், அப்பகுதி கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து, நிஜாமுதீன்  கூறியது:  

              தனியார் ரசாயனத் தொழிற்சாலை விபத்து மிகவும் மோசமானது. சம்பவம் நடந்து 3-வது நாளில்கூட, மக்கள் கிராமத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு நுரையீரல் கோளாறுகள் ஏற்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் நீண்டகால சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர். பலரது அன்றாட வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. பலர் தொடர்ந்து வேலை செய்வதிலும் உடல் ரீதியான சிரமம் ஏற்பட்டு உள்ளது. வீட்டில் ஆடு, கோழி உள்ளிட்ட உடமைகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.  

              இத்தகைய பாதிப்புகளுக்கு நிரந்தரமாகவும், இடைக்காலமாகவும் பொதுமக்கள் பாதிப்பு இன்சூரன்ஸ் சட்டப்படி நிவாரணம் கோரிப் பெற முடியும். நிவாரணம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.  சம்பவம் நடந்த அன்று மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், தொழிற்சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தும், பாதிக்கப்பட்ட தொழிற்சாலைக்குள் செல்ல, மாஜிஸ்திரேட் அதிகாரம் பெற்ற, ஆட்சியரை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று அறிகிறோம். அவ்வாறு அனுமதிக்கப்படவில்லை என்றால் அது சட்டப்படி குற்றமாகும்.  

                 விபத்து நிகழ்ந்த தனியார் ரசாயனத் தொழிற்சாலை உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகள் பலவும், அனுமதி புதுப்பிக்கப்படாமலேயே இயங்கிக் கொண்டு இருக்கின்றன. ரசாயனத் தொழிற்சாலை விபத்து போன்று, அவற்றிலும் விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான ரசாயனங்கள் பல, பயன்படுத்தப்படுகின்றன.  எனவே ரசாயன தொழிற்சாலை விபத்து குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு இருப்பதுபோல், ஏனைய தொழிற்சாலைகளின் நிலை குறித்தும் விசாரணை நடத்த, அரசு உத்தரவிட வேண்டும்.  

                 சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் நிலம், நீர், காற்று மாசு குறித்து, தற்போது ஆய்வை மேற்கொண்டு இருக்கும், தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் (நீரி), தனியார் ரசாயனத் தொழிற்சாலை விபத்தையும் பதிவு செய்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  ஏற்கெனவே 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீரி ஆய்வறிக்கையில், சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள 22 கிராமங்களில், மக்களின் சுகாதார நிலை குறித்து, பொதுவான ஆய்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டும், இதுவரை அந்த ஆய்வை நடத்த தமிழக அரசு, முயற்சிகூட மேற்கொள்ளவில்லை. தனியார் ரசாயனத் தொழிற்சாலை விபத்து நிகழ்ந்துள்ள இந்த நேரத்திலாவது, சுகாதார ஆய்வைத் தொடங்க அரசு உத்தரவிட வேண்டும் என்றார் நிஜாமுதீன்.

Read more »

தமிழ்நாடு முழுவதும் வரும் கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பில் ஒரே பாடத்திட்டம்

           தமிழ்நாடு முழுவதும் அடுத்த கல்வி ஆண்டு முதல் பி.எட்.படிப்பில் ஒரே பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பத்மநாபன் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பத்மநாபன்  கூறியது:-

           தமிழ்நாட்டில் அரசு பி.எட். (கல்வியியல் கல்லூரிகள்) கல்லூரிகள், அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள், சுயநிதி பி.எட். கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கும் மேலாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் தபால் வழியில் பி.எட். படிப்பு உள்ளன.. ஆனால் பாடத்திட்டத்தில் மாற்றம் உள்ளது. இதை சரியாக ஒரே பாடத்திட்டமாக கொண்டு வர தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

            அதன்படி வருகிற கல்வி ஆண்டு முதல் அனைத்து பி.எட். படிப்பிலும் ஒரே கல்விதிட்டம் கொண்டுவரப்படுகிறது மேலும் பிளஸ்-2 படித்துவிட்டு அந்த மாணவர்கள் பட்டப்படிப்புடன் பி.எட். படிப்பும் சேர்த்து படிக்கும் ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட். படிப்புகள் தொடங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த படிப்பு கல்லூரிகளில் தான் தொடங்கப்பட இருக்கிறது.
இந்த படிப்பு 4 வருட படிப்பாகும். நல்ல கட்டமைப்பு வசதி உள்ள கல்லூரிகளில் தான் இந்த படிப்புக்கு அனுமதி கொடுக்கப்படும். இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கான பாடத்திட்டம் தயாராக உள்ளது. முதல் மற்றும் 2-வது செமஸ்டர் படிப்புக்கு பாடத்திட்டம் எழுதப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளோம். அனுமதி கிடைத்த உடன் படிப்பு தொடங்கப்படும்.
            பி.எட். படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு தேதியில் எந்த வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே அறிவித்தபடி மே மாதம் 25-ந்தேதி தேர்வு தொடங்குகிறது. இந்த பல்கலைக்கழகம் தொடங்கிய பின்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு துணைவேந்தர் பத்மநாபன் தெரிவித்தார். 

Read more »

நிலுவையில் உள்ள புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்

            தற்போது நிலுவையாக உள்ள புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

இது குறித்து தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,


             13-4-2011 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பேரவைத்தேர்தலில் தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க ஏதுவாக 100 சதவீதம் பிழையற்ற புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க முனைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 2010-ம் ஆண்டிலும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பின்போதும் வாக்காளராக பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கடந்த மாதம் 12-ந் தேதி, 19-ந் தேதி மற்றும் 20-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

             தற்போது நிலுவையாக உள்ள அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த முகாம்கள் ஊரகப்பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்களிலும், நகர்ப்புறங்களில் நகராட்சி அலுவலகங்களிலும் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும் சென்னையைப் பொறுத்தவரையில் மண்டல அலுவலகங்களிலும் நடைபெறும். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் மையங்களிலும் வழக்கமாக இந்த அட்டை வழங்கப்படும்.

               எனவே, 2010 மற்றும் 2011 வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்தின்போது பதிவு செய்துகொண்டு இதுவரை அடையாள அட்டை பெறாத வாக்காளர்கள் அனைவரும், வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அடையாள அட்டை பெற இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டையை தடுக்க ஆலோசனை

கடலூர்:
              கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 242 பேருக்கு செல்போனில் பேசுவதற்கான சிம்கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் சீத்தாராமன் கலந்து கொண்டு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சிம்கார்டுகளை வழங்கினார். 

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-
                மாவட்ட எல்லையோரங்களில் இரட்டை வாக்காளர் அடையாள அட்டையை பயன் படுத்துவதை தடுக்கும் வகையில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநில கலெக்டர்களின் ஆலோசனை கூட்டம் புதுச் சேரியில் விரைவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1,945 வாக்குச்சாவடிகளில் கிராமப் புறங்களில் 1,200 வாக்காளர் கள் உள்ள வாக்குச்சாவடி களையும், நகர்புறங்களில் 1,400 வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளையும் இரண்டாக பிரிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

               அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர், துணைவேந்தர், தொழில் நுட்ப துறை தலைவர் ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பதட்டம் நிறைந்த 230 வாக்குச்சாவடிகளில் எம்.இ, எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை அமர்த்தி வெப் கேமரா மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்து இருக்கிறார்கள். இவற்றை ஒருங்கிணைந்து பயிற்சி அளிப்பதற்காக கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) நியமிக்கப்பட்டுள்ளார்.

               அதேபோல மாவட்டத்தில் உள்ள 1,945 வாக்குச்சாவடிகளையும் நேரில் பார்வையிட்டு அங்கு கதவு, ஜன்னல்கள் முறையாக உள்ளனவா, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல வசதியாக சாய்தள வசதி உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று 188 மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். தேர்தல் பார்வையாளர் கள் தங்குவதற்கு வசதியாக கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், பெண்ணாடம் ஆகிய 5 இடங்களில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

                மேலும் அங்கு கம்ப்யூட்டர், டெலிபோன், இன்டர்நெட் மற்றும் டி.வி. உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தபால் ஓட்டுக்கான படிவங்கள் வந்துள்ளன. அதை யாரிடம் கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் என்பது பற்றி தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவுரை கடிதம் வந்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அந்த பணியை கண்காணிப் பார்கள். ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அடங்கிய புத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

Maintaining vigil round the clock for Tamilnadu Assembly Election 2011


Election control room functions at the Collector's camp office in Cuddalore.


CUDDALORE: 

          The election control room set up in the Collector's camp office here has been monitoring poll-related activities in the district. Functioning round the clock, the control room acts as a nerve centre for gathering and disseminating information connected to polls.
People can contact the room at 04142-220029, 230651 with extension numbers 213, 214, 219 and 247. It is equipped with two television sets to constantly monitor broadcast of political messages and advertisements in the electronic media.

          Through this, the expenditure incurred by political outfits and candidates on advertisements can be accounted for. In fact, the District Election Officer has sought advertisement tariff from all print and electronic media to calculate the likely amount being spent on advertisements by political parties and their candidates. The control room is also equipped with nine computers, one each for every Assembly segment. Any complaint about poll violation such as open or stealthy distribution of money or any other kind of incentive to woo the voters, intimidation of voters, bringing in a large number of outsiders, surreptitious movement of any unlawful element , etc., could be passed on to the control room.

            According to official sources, details of informants would be kept confidential. All complaints received would be immediately processed and sent to the authorities concerned. The control room would also coordinate the activities of expenditure flying squads, static surveillance squads, model code of conduct squads with the District Electoral Officer and the Election Commission for the smooth conduct of polls.

Read more »

Acid leak: villagers can return home, says official

CUDDALORE: 

             The environs of the Shasun Pharmaceuticals Ltd, located on the premises of the SIPCOT Industrial Estate here, have been cleared of toxic fumes.

           Hence, the villagers can return home and resume their regular chores, according to V.Thangaraj, Deputy Chief Inspector of Factories. Joint Director (Health) Kamalakannan told The Hindu that of the 155 people admitted in the Cuddalore Headquarters Hospitals on the complaints of burning eyes, breathing problem and itching of the skin caused by the dense fumes emanating from an acid-leak in the unit on the night of March 7, only nine were still undergoing treatment. With the help of modern gadgets, the concentration of fumes that remained at 58—60 mg per metric cube soon after the leak, was nullified within 12 hours.

Read more »

Annamalai University Varsity results posted online

CUDDALORE: 

          A statement from the Annamalai University has said that the results of examinations of various distance education regular stream programmes, such as B.G.L, M.A., M.Sc, M.Com, M.B.A, postgraduate diploma courses and certificate courses, held in December 2010, 

are hosted on the following websites:

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior