உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 12, 2011

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி அலைகள் தாக்கின

             ஜப்பானின் வடக்கு பகுதியில் நேற்று  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 20 மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்து கொண்டுள்ளது. 

            ஜப்பான் நேரப்படி 11.03.2011 அன்று பிற்பகல் 2.45 மணி அளவில் ஜப்பானில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ஹொன்சு மாகாணத்தில் உள்ள சென்டாய் நகரில் இருந்து 81 கி.மீ. தொலைவில் பூகம்பம் மையம் கொண்டது. பூமிக்கு கீழே 15 மைல் ஆழத்தில் தோன்றிய அந்த பூகம்பம், ரிக்டர் அளவு கோலில் 8.9 ஆக பதிவானது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டதால் ஜப்பானே குலுங்கியது.

        இதற்கு முன் 1933 ம் ஆண்டு ஜப்பானில் 8.1 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்துக்கு 3 ஆயிரம் பேர் பலியாகினர். தற்போது, அதை விட பயங்கரமான பூகம்பம் தோன்றியுள்ளது. முதலில், 8.9 ரிக்டரில் பதிவான பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 18 முறை பூமி குலுங்கியது. திடீர் என பூமி குலுங்கியதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுரங்க ரெயில்களில் பயணம் செய்தவர்கள், ஒருவர் மீது ஒருவர் உருண்டு விழுந்தனர். பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகள் மற்றும் மண் சரிவுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.

             ஜப்பானில் 140 ஆண்டுகளுக்கு பிறகு, மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. 1923 ம் ஆண்டு 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு டோக்கியோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியாகினர். இது போல 1995 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தினால் ரூ.5 லட்சம் கோடி சேதம் ஏற்பட்டது. தற்போது, நிகழ்ந்த தொடர் பூகம்பத்தால், சுனாமியும் அடுத்தடுத்து தோன்றியது. எனவே, ஜப்பான் மக்கள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர். மொத்த சேத மதிப்பும் உடனடியாக தெரியவில்லை. எனினும், நிதி நெருக்கடி ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜப்பான் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

           இத்தகைய சூழ்நிலையில், டோக்கியோவை மையமாக கொண்டு மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும் என புவியியல் ஆய்வு அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலி வாங்கும் அளவுக்கு அந்த பூகம்பம் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் சுனாமி: 100 பேருடன் சென்ற கப்பல் மாயம்

            ஜப்பானில் பயங்கர பூமி அதிர்ச்சியை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கின. இதில் பேரழிவு ஏற்பட்டது. லட்சக்கணக்கான வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.  சைதாமே, இவாதே போன்ற இடங்களில் ஏராளமான பாலங்கள் நொறுங்கி விழுந்தன. ஆமோரி அருகே உள்ள ஹச்சினோகே என்ற இடத்தில் ஒரு கப்பலையே சுனாமி அலை உருட்டி விட்டது. இதனால், தண்ணீருக்குள் அந்த கப்பல் குப்புற கவிழ்ந்தது. ஹோன்சு தீவு மற்றும் இஷினோமாகி, ஆமோரி போன்ற துறைமுகங்களில் கப்பல்கள் அடித்துச் செல்லப்பட்டு தெருக்களில் வந்து சேர்ந்தன.

               ஆமோரி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்ற 5 கப்பல்களை சுனாமி அலைகள் சுக்கு நூறாக உடைத்து வீதிகளுக்கு கொண்டு வந்தன. ஏற்கனவே, வீதிகளில் நின்ற கார்களும் சேர்ந்ததால் வீதிகளில் கப்பலின் பாகங்களும் கார்களும் ஒன்றாக மிதந்து கொண்டிருந்தன. மேலும், மரங்கள் உள்ளிட்ட பொருட்களும் சேர்ந்து சகதி ஆறாக ஓடின. இதனால், ஜப்பானில் உள்ள அனைத்து துறைமுகங்களும் மூடப்பட்டுள்ளன. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து 100 பயணிகளுடன் கடலுக்குள் சென்ற ஒரு கப்பல், சுனாமியில் சிக்கி தூள் தூளானது. அதில், இருந்தவர்களின் நிலைமை தெரியவில்லை.

Read more »

கடலூர் சட்டமன்றத் தொகுதி பார்வை


கடலூர்
  
தொகுதி பெயர்
கடலூர்
தொகுதி எண்
155 
அறிமுகம் : 

               மாவட்டத் தலைநகரம். மூன்றில் ஒரு பங்கு நகர்ப்புற வாக்குகள் நிறைந்த, ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதி. 1952-ம் ஆண்டு தேர்தலில் இரு உறுப்பினர் தொகுதியாக இருந்து, 1957 முதல் ஒரு உறுப்பினர் தொகுதியாக மாற்றப்பட்ட, பழமையான தொகுதி.

எல்லை : 

                தொகுதிகள் சீரமைப்பின்போது, கடலூர் தொகுதியில் சேடப்பாளையம், காரைக்காடு, செம்மங்குப்பம், பச்சாங்குப்பம், குடிகாடு, அன்னவல்லி, அரிசிபெரியாங்குப்பம், கரையேறவிட்டகுப்பம் ஆகிய 8 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமங்கள், கடலூர் தொகுதியில் இருந்து தற்போதைய குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாற்றப்பட்டு விட்டன. கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 45 வார்டுகளைக் கொண்ட கடலூர் நகராட்சி, 38 ஊராட்சிகளைக் கொண்ட கடலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றைக் கொண்ட தொகுதியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் : 

 நகராட்சி: 

கடலூர் நகராட்சி : 45 வார்டுகள்

கடலூர் ஊராட்சி ஒன்றியம்: (38)

                  கடலூர் துறைமுகம், மேலக்குப்பம், நல்லாத்தூர், தூக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம், செல்லஞ்சேரி, புதுக்கடை, வடபுரம் கீழ்பாதி, கிளிஞ்சிக்குப்பம், சிங்கிரிகுடி, மதலப்பட்டு, கீழ் அழிஞ்சிப்பட்டு, நாகப்பனூர், மேல் அழிஞ்சிப்பட்டு, ஒடலப்பட்டு, கீழ் குமாரமங்கலம், காரணப்பட்டு, பள்ளிப்பட்டு, மலையப் பெருமாள் அகரம், உள்ளேரிப்பட்டு, திருப்பணாம்பாக்கம், களையூர், அழகியநத்தம், இரண்டாயிரம் விளாகம், வெள்ளப்பாக்கம், மருதாடு, நத்தப்பட்டு, வெளிச்செம்மண்டலம், சின்னகங்கனாங்குப்பம், சுபஉப்பளவாடி, குண்டு உப்பளவாடி, உச்சிமேடு, பெரியகங்கனாங்குப்பம், கோண்டூர், தோட்டப்பட்டு, செஞ்சி குமராபுரம், வரகால்பட்டு, காராமணிக்குப்பம்.

வாக்காளர்கள் : 

ஆண் - 88,650
பெண் - 88,716
மொத்தம் - 1,77,366
  
வாக்குச்சாவடிகள் :  

மொத்தம் : 
208 

 தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்: 
கோட்டாட்சியர் வி.முருகேசன், 9445000425

Read more »

கடலூர் மாவட்டத்தில் 4,801 பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்


பெ.சீதாராமன்
கடலூர்:
 
      தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, கடலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
 
             தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. 
 
கூட்டம் முடிந்ததும் ஆட்சியர் கூறியது: 
 
                கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் 11 ஆயிரம் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது. 
 
             எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர், தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, 9,954 நபர்களுக்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளது.9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,945 வாக்குச் சாவடிகளுக்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த காமே என்பவர் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
 
              மற்ற தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட்டு, 17-3-2011 அன்று பொறுப்பு ஏற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் நடத்தை விதிமுறைகள், முழுமையாக செயல்படுத்துவது குறித்து, விடியோ பார்வைக் குழு, கணக்குக் குழு, விடியோ கூர்ந்தாய்வுக் குழு, பறக்கும் படை, ஊடகச் சான்று மற்றும் மேற்பார்வைக் குழு ஆகிய குழுக்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த 4,801 விளம்பர பேனர்கள், சுவர் விளம்பரங்கள் ஆகியன இதுவரை அகற்றபட்டு உள்ளன. 
 
                மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அனைத்து நிதிஉதவிகளும் நிறுத்தப்பட்டு விட்டன. தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கும் மகளிர் சுயழுதவிக் குழுக்களுக்கும் எவ்வித நிதி உதவியும் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊரக வளர்ச்சித் துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் எவ்வித புதிய பணிகளும் தொடங்கக் கூடாது என்றும், தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் தொடங்கிய பணிகளை மட்டுமே செயல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
                 கிராமங்களில் உள்ள நூலகக் கட்டடங்கள், ஊராட்சி மன்றக் கட்டங்கள் மற்றும் ஏனையக் கட்டடங்களில் விளம்பரம் செய்யக்கூடாது.அரசு அலுவலகக் கட்டடங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தொடங்கப்பட்ட பணிகளை மட்டுமே தொடர வேண்டும்.புதிதாக எந்தப் பணிகளும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தொகையை வேலைக்கு ஏற்றார்போல் வழங்க வேண்டும்.
 
                கூடுதலாக தொகை வழங்கக் கூடாது என்று, ஊராட்சி மன்றத் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.புதிய ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் ஏலங்கள் கோரக் கூடாது. ஏற்கெனவே ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இருந்தால், அவற்றை ஆய்வு செய்து வைக்க வேண்டுமே தவிர, பணி ஆணைகள் வழங்கக் கூடாது.தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

Read more »

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க.வேட்பளாராக பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டி


பண்ருட்டி:
 
           அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்படும் என திட்டவட்டமாக தெரியவருகிறது.

             கடந்த சட்டப்பேரவை தேர்தல் வரை தனியாக இருந்த நெல்லிக்குப்பம் தொகுதி சீரமைப்பின் காரணமாக பண்ருட்டி தொகுதியுடன் இணைக்கப்பட்டும், பண்ருட்டி தொகுதியில் இருந்த பெரும்பாலான கிராமங்கள் (கெடில நதிக்கு தெற்கே) புதிதாக உருவாகியுள்ள நெய்வேலி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

            ண்ருட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத், முன்னாள் மாவட்ட ஜெ.பேரவை செயலர் பி.பன்னீர்செல்வம், அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் விபீஷ்ணன், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் கோபு (எ) ரகுராமனும், கூட்டணி கட்சியில் உள்ள தேமுதிக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.சி.தாமோதரன், மாவட்டச் செயலர் சிவக்கொழுந்து, டாக்டர் அறிவொளி ஆகியோரும் விருப்பு மனு செய்துள்ளனர்.

               பண்ருட்டி தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், மாவட்டச் செயலர் சிவக்கொழுந்து ஆகியோர் முன்னுரிமை பட்டியலில் இருந்து வருகின்றனர்.இதில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு போட்டியிட வாய்ப்பு உறுதியாகிவிட்டதாக தேமுதிகவினர் தெரிவிக்கின்றனர்.

Read more »

நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குள் வராத நெய்வேலி ஊராட்சி

நெய்வேலி:

                நெய்வேலி ஊராட்சி நெய்வேலித் தொகுதிக்குள் இல்லாமல் புவனகிரி தொகுதியில் இடம் பெறுகிறது.

              கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை நெய்வேலி நகரம் குறிஞ்சிப்பாடி தொகுதியிலும், நெய்வேலி ஊராட்சி விருத்தாசலம் தொகுதியிலும் இருந்து வந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பின் குறிஞ்சிப்பாடித் தொகுதியிலிருந்த நெய்வேலி நகரம், நெய்வேலியைத் தலைமையாகக் கொண்டும், பெரும்பாலான பண்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களை உள்ளடக்கி நெய்வேலித் தொகுதியாக உருவெடுத்துள்ளது.

              இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பின்கீழ் விருத்தாசலம் தொகுதியிலிருந்த கம்மாபுரம் ஒன்றியங்களைச் சேர்ந்த பெரும்பாலான கிராமங்கள் புவனகிரி தொகுதிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கம்மாபுரம் ஒன்றியத்திலிருந்த நெய்வேலி ஊராட்சியும் புவனகிரி தொகுதியில் இடம்பெற்றுள்ளது .புதியதாக உருவான நெய்வேலித் தொகுதியில் நெய்வேலி ஊராட்சியும் இடம்பெறும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் புவனகிரிக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் நெய்வேலி ஊராட்சி புவனகிரி தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

              தொகுதி மறுசீரமைப்பின்கீழ் கடலூர் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி புவனகிரியாகும். புவனகிரி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 5 ஆயிரத்து 264 பேர் ஆகும். இதில் ஆண் வாக்களார்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 753 பேர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 511 பேர்.

Read more »

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி

பண்ருட்டி:

          பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி வெள்ளிக்கிழமை நடந்தது. பண்ருட்டி வட்டாட்சியர் அ.அனந்தராம் தலைமையில் நடந்த இப்பணியில் பண்ருட்டி, நெய்வேலி சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்கள் பட்டியல் 100 சதவீதம் சரிபார்க்கப்பட்டது. இப்பணியில் தனித்துணை ஆட்சியர் நிலம் எடுப்பு, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட 48 பேர் ஈடுபட்டனர்.

Read more »

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்ற தி.மு.க.வினருக்குள் போட்டி


சபா.இராஜேந்திரன். - டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் - வி.கே.வெங்கட்ராமன்
பண்ருட்டி:
 
           2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் நிற்பதற்கு தி.மு.க.வினருக்குள் கடுமையான போட்டி நிலவுகிறது. 
 
               இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், தற்போதைய நெல்லிக்குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் சபா.இராஜேந்திரன், அண்ணா கிராம ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமன் ஆகிய மூன்று பேரும் தங்களின் மேலிட செல்வாக்கை பயன்படுத்தி பண்ருட்டி தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வரையில் தனியாக இருந்த நெல்லிக்குப்பம் தொகுதி தற்போது பண்ருட்டி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. 
 
               பண்ருட்டி தொகுதியில் இருந்த பெரும்பாலான ஒன்றிய கிராமங்கள் புதிதாக உறுவாக்கப்பட்டுள்ள நெய்வேலி தொகுதிக்கு சென்று விட்டன. தற்போதைய பண்ருட்டி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 1,89,368. இதில் 95,037 ஆண் வாக்காளர்களும், 94,331 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.2001-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியிலும், 2006-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியிலும் இருந்த பா.ம.க.வுக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் இரண்டு முறையும் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட தி.வேல்முருகன் வெற்றி பெற்றார்.
 
                இந்நிலையில் நெய்வேலி தொகுதியை பெற பா.ம.க. தீவிரம் காட்டி வரும் நிலையில் தி.வேல்முருகன் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வருகின்றன. 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.வேல்முருகனை எதிர்த்து போட்டியிட்ட சொரத்தூர் இரா.இராஜேந்திரன் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மேலும் பா.ம.க.வின் செல்வாக்கு நிறைந்த பண்ருட்டி ஒன்றிய கிராமங்கள் தற்போது நெய்வேலி தொகுக்கு சென்று விட்டதால் பா.ம.க. பண்ருட்டியை தவிர்த்து நெய்வேலிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.      
 
                தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. பண்ருட்டி அருகே உள்ள நெய்வேலி தொகுதிக்கு குறிவைத்துள்ளதால் பண்ருட்டி தொகுதி தி.மு.க.வுக்குதான என உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்து பின்னர் ம.தி.மு.க., அ.தி.மு.க. என பல்வேறு கட்சிகளுக்கு சென்று தற்போது மீண்டும் திமுகவுக்கு வந்துள்ள டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் பண்ருட்டி தொகுதியை பெற தீவிரம் காட்டி வருகிறார்.
 
           2006 தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் நின்று வெற்றிப் பெற்ற சபா.இராஜேந்திரன், கருணாநிதியின் மகன் தமிழரசன் ஆதரவுடன் பண்ருட்டி தொகுதியை பெற்று விட்டதாக கூறி கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து தேர்தல் பணியில் களம் இறங்கி விட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதேபோல் அண்ணா கிராம ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமன். 
 
                மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தியின் மகனாவார். இவர் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியுடன் நெருங்கி பழகிய தற்போதைய தி.மு.க. அமைச்சர்கள் வீரப்பாண்டி ஆறுமுகம், ஆற்காடு வீராசாமி மூலம் பண்ருட்டி தொகுதியை பெற தீவிரம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.இந்நிலையில் மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும், நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.வான சபா.இராஜேந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு பலமாக உள்ளது. 
 
                 இதனால் அமைச்சரின் ஆதரவாளர்களான டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணனுக்கோ, அண்ணா கிராம ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமனுக்கோ அல்லது கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களுக்கோ மாவட்ட அமைச்சர் ஆதரவு தெரிவிக்கலாம் என அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடு மறுபுறம் உட்கட்சி பூசல் இருக்கையில் எது எப்படி இருந்தாலும் பண்ருட்டி தொகுதியை பெற்று விட்டதாக எண்ணி சபா.இராஜேந்திரன் தேர்தல் பணியை தொடங்கி விட்டார்

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

மதுரை: 

         மதுரை காமராஜ் பல்கலை எம்.எல்.ஐ.எஸ்.சி., - பி.ஜி.எல்., (அல்பருவம்) 2010 நவம்பர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. www.mkudde.org வெப்சைட்டில் தெரிந்துக் கொள்ளலாம். மறு மதிப்பீட்டு விண்ணப்பங்களை www.mkudde.org ல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திருக்க வேண்டாம். பி.ஜி.எல்.,மார்ச் 19, எம்.எல்.ஐ.எஸ்.சி., மார்ச் 22 க்குள் கூடுதல் தேர்வாணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. கட்டணம் திரும்ப வழங்கப்படமாட்டாது என, கூடுதல் தேர்வாணையர் (பொறுப்பு) சேதுராமன் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் வழியாக கோடை கால சிறப்பு ரயில்கள்:தென்னக ரயில்வே அறிவிப்பு

கடலூர் : 

             கடலூர் வழியாக ஏப்ரல் மாதத்தில் முதல் 6 கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 

            பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தொடங்குவதால் வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் 6 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல் 6, 13, 20, 27 மே 4, 11, 18, 25 ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து கடலூர் வழியாக சென்னை எழும்பூர் வரை வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் இரவு 11.53 வந்தடைந்து 11.55 புறப்படும்.
 

              சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் ஏப்ரல் 7, 14, 21, 28 மே 5, 12, 19, 26 ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இயக்கப்படும். திருப்பாதிரிப்புலியூரில் இரவு 1.58 மணிக்கு வந்தடைந்து 2.00 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து கடலூர் வழியாக சென்னை சென்ட்ரல் வரை வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் ஏப்ரல் 11, 18, 25 மே 2, 9, 16, 23, 30 ஜூன் 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் இயக்கப்படும். 

               இந்த ரயில் திருப்பாதிரிப்புலியூரில் இரவு 9.58 வந்தடைந்து 10 மணிக்கு புறப்படும். சென்னை சென்டரில் இருந்து கடலூர் வழியாக இராமேஸ்வரம் வரை வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் ஏப்ரல் 12, 19, 26 மே 3, 10, 17, 24, 31 ஜூன் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் இயக்கப்படும் இந்த ரயில் காலை 7.48 திருப்பாதிருப்புலியூர் ரயில் நிலையம் வந்தடைந்து 7.50 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து கடலூர் வழியாக திருச்செந்தூர் வரை வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் ஏப்ரல் 4, 11, 18 ,25 மே 2, 9, 16, 23, 30 ஜூன் 6, 13, 20 ஆகிய நாட்களில் இயக்கப்படும். 

                திருச்செந்தூரில் இருந்து கடலூர் வழியாக சென்னை எழும்பூர் வரை வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் ஏப்ரல் 5, 12, 19, 26 மே 3, 10, 17, 24, 31 ஜூன் 7, 14, 21 ஆகிய நாட்களில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read more »

Maintaining vigil round the clock for Tamilnadu Assembly Election 2011



Central Reserve Police Force personnel checking a vehicle near Cuddalore on Friday.

CUDDALORE: 

          Central Reserve Police Force personnel have been deployed on the Cuddalore-Puducherry boundary to carry out vehicle-checks round the clock.

          All vehicles passing through Cuddalore are checked to verify whether passengers were carrying any unaccounted cash or inducements meant for wooing voters, or liquor to be served to political party cadres. Collector P. Seetharaman has directed polling officials to keep a tab on the sales turnover of all TASMAC retail outlets. If they come across any bulk purchase from any outlet, the officials should immediately inform the District Election Officer and police.

          They should also keep a vigil on any feast or mass feeding at marriage or community halls. Even the number of meals served in these halls should be accounted for. Superintendent of Police Ashwin Kotnis said that a CRPF company, comprising 84 personnel, had arrived in Cuddalore and all of them had been posted at all 13 check-posts. For poll duty, over 3,500 security personnel, including 648 CRPF personnel and 340 armed police, would be posted in all nine Assembly segments.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior