உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 29, 2011

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு மே 16 முதல் விண்ணப்பம்

              தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான (எம்.பி.பி.எஸ்.) விண்ணப்பங்கள் மே 16-ல் இருந்து வழங்கப்படுகின்றன.

              தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப் படிப்பிற்கு 1653 இடங்களும், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு கலந்தாய்வு மூலமான சேர்க்கைக்கு 635 இடங்களும் உள்ளன. ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்களும், 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு கலந்தாய்வின் மூலமான சேர்க்கைக்கு 891 இடங்களும் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு மே 15-ல் வெளியாகிறது. விண்ணப்பங்கள் மே 16-ல் இருந்து ஜூன் 2 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூன் 2. மாணவர்களின் தகுதிப் பட்டியல் ஜூன் 21-ல் வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ல் தொடங்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் ஷீலா கிரேஸ் கூறியது:

            இந்த கல்வி ஆண்டுக்கான (2011-12) எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 30-ல் தொடங்குகிறது. அன்று சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 1 முதல் பொதுவான கலந்தாய்வு நடைபெறும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பம் மே 16 முதல் ஜூன் 2-ம் தேதி வரை வழங்கப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசம். மற்ற மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ளன. 

              விண்ணப்பத்தை இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் விண்ணப்பங்கள் கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு தட்டுப்பாடியின்றி விண்ணப்பப் படிவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பொறியியல் கல்லூரிகளுக்கு...

                  பொறியியல் கல்லூரிகளுக்கும் மே 16 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாணவர்கள் அவதி

விருத்தாசலம்:

            விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தும், கல்லூரி மாணவர்கள், கல்லூரி செல்வோருக்கு காவலர்களின் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நாள்தோறும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

                விருத்தாசலம், திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வரலாற்றுத்துறை கட்டடத்தை சுற்றிலும் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் உயர் கோபுரங்கள் அமைத்து போலீஸôர் மையத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.கல்லூரியில் தற்போது மாணவர்களுக்கு அரசு பல்கலைக் கழகத் தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. 

                இத்தகைய நிலையில் பலத்த பாதுகாப்புகள் இருந்தும் கல்லூரி செல்லும் மாணவர்களை சோதனை செய்த பின்னரே கல்லூரிக்குள் அனுப்புகின்றனர்.தற்போது தேர்வுகள் நடைபெறுவதால் இதுபோன்ற நிலை ஏற்படும் போது மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் தேர்வுகளை சரியாக எழுத முடியவில்லை என அவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும் போலீஸôர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற நடவடிக்கைகளை கையாளும் நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு காலந்தாழ்ந்து செல்லும் அவலமும் நிலவுவதாக கூறுகின்றனர்.

                ஜங்ஷன் சாலையில் உள்ள கல்லூரி முதன்மை நுழைவுவாயிலில் காவலர்கள் சோதனைசாலை அமைத்து இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை என மறுக்கின்றனர். இதனால் கல்லூரி வழியில் உள்ள வீடுகளுக்குச் செல்வதற்கு சுமார் 500 மீட்டர் தூரத்துக்குச் சுற்றி வர வேண்டிய நிலையும் உள்ளது. மேலும், கல்லூரி வழியாக கல்லூரி நகர், நாச்சியார்பேட்டை, கல்லூரி மாணவர் விடுதி, நகர விளையாட்டரங்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்களிடம் காவல்துறையினர் சோதனை என்ற அடிப்படையில் அவர்களின் காலத்தை வீணடிப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர். 

                  இதனால் பொதுமக்கள் காவல்துறையினர் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர்.வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பலகட்ட பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மையம் அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுத்துறையும், தற்போது கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வரும் மற்ற துறை கட்டடங்களும் வெவ்வேறு பகுதியில் இயங்கி வருவதால் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, மாணவர்களையும், மாணவர்களை தேடிவரும் பெற்றோர்களையும், கல்லூரி அலுவல் நிமித்தமாக வருபவரிடமும் காவல்துறையினர் கெடுபிடிகள் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என கருதுகின்றனர்.

Read more »

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆலைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர்:
            கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயன ஆலைகளை அகற்றக் கோரி, கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
                 கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவினால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். உடனடியாக மூடப்பட்ட அந்த ஆலை, ஒரு மாதத்துக்குப் பின், நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கிறது.சிப்காட் ரசாயன ஆலைகள் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமலும், விதிமுறைகள் பின்பற்றப் படுகின்றனவா என்று முறையாகக் அதிகாரிகளால்  கண்காணிக்கப் படாததாலும், இந்த ரசாயன ஆலைகளால் கடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் சுற்றுச்சூழல், வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
                  எனவே சுற்றுச்சூழலை நாசமாக்கும் ரசாயன ஆலைகளை அகற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மனித உரிமைப் பாதுகாப்பு மையம், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். குடிகாடு ரவி, வீரமணி, ராஜு, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Read more »

Sathya Sai Baba remembered in Cuddalore

Tamil Nadu Brahmins Association paying homage to Sri Sathya Sai Baba in Cuddalore on Thursday

CUDDALORE: 
            The Tamil Nadu Brahmins' Association organised special bhajans here on Thursday to condole the demise of Sri Sathya Sai Baba of Puttaparthi.

          Devotees paid homage to flower-bedecked portrait of Baba kept on the premises of the Manjakuppam branch of the Association. As Baba liked spotless white, an empty chair covered with a snow white cloth was put beside the portrait. A white scarf decorated with a rose was placed on the chair and a white silken cloth was spread along the path leading to the chair. K.Thirumalai, branch president, lit the lamp.

          K. Thirumurthy, a nonagenarian, recalled that since Baba preached love and brotherhood he could not be confined to any religious sect. His appeal was universal because he had propagated the ideal that service to humanity was service to God. His concern for the well being of the people transcended the geographical limits and the salient example in this regard was his generous monetary assistance extended to Tamil Nadu for the implementation of the canal project for bringing the Krishna water to Chennai. The multi-specialty hospitals set up by him had been rendering yeomen services to the poor and the needy.

         Cleanliness was next to godliness and this principle was close to the heart of Baba as it could be gauged by the spick and span premises of the Prasanthi Nilayam at Puttaparthi and also the neat surroundings of all his establishments. Mr Thirumalai said that Baba had rendered unparalleled social services for the betterment of humanity, and, his warmth and humaneness swelled the rank of his followers.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior