உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 04, 2011

கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வி. அமுதவல்லி பொறுப்பேற்பு

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பு ஏற்ற வி. அமுதவல்லி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், சொல்வதைவிட செயல்படுவதே சிறந்தது என்று குறிப்பிட்டார். 
                 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பெ. சீதாராமன் சுனாமி மறுவாழ்வுத் திட்ட இயக்குநராக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய மாவட்ட ஆட்சியராக வி.அமுதவல்லி நியமிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பதவி ஏற்றார். மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இருந்து அவர் பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டார். 

 பின்னர் கடலூர் ஆட்சியர் அமுதவல்லி  கூறியது:  

                      அரசின் திட்டங்களை மக்களிடம் விரைவில் கொண்டு செல்வதே மாவட்ட ஆட்சியரின் பணி. அந்தப் பணியை சிறப்பாக செய்ய இருக்கிறேன். எனது செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பத்திரிகைகளில் எழுதலாம், நேரில் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்வு காணப்படும். சொல்வதை விட செயல்படுவதே சிறந்தது.  கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்கு என்ன காரணம் தடைக்கல் என்ன என்று கண்டறிந்து, திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

              கடலூர் நகர போக்குவரத்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.  அதைத் தொடர்ந்து அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொண்டு பேசினார். 


              புதிய ஆட்சியர் அமுதவல்லி மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர். எம்.எஸ்.சி. (வேளாண்மை) எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.பி.ஏ. பட்டங்கள் பெற்றவர்.  1990- 91ல் கடலூர் வேளாண்துறையில் மண்ஆய்வு நிலையத்தில் வேளாண் அலுவலராகப் பணிபுரிந்தார். 1997-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு எழுதி துணை ஆட்சியர் ஆனார். 2003-ல் மாவட்ட வருவாய் அதிகாரியானார். 2007-ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்றார். கூட்டுறவுத் துறையில் கூடுதல் பதிவாளராக இருந்த அமுதவல்லி, கடலூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு ஏற்றுள்ளார். 









Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மாணவர்களுக்கு மேற்படிப்பு ஆலோசனைகள்

கடலூர்:
        
             கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம்? என்பது குறித்த ஆலோசனைகள், அகதிகள் மறுவாழ்வுத் துறை மூலமாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.  

             தமிழகத்தில் 113 அகதிகள் முகாம்களில் வசிக்கும் மாணவ, மாணவியர் 1,010 பேர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.  இவர்களில் 87 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர். 165 பேர் 400-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.  

               கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 22 மாணவ, மாணவியர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.   மேற்கொண்டு அவர்கள் என்ன படிக்கலாம்? அரசு அவர்களுக்கு வழங்கும் சலுகைகள் என்ன? என்பது குறித்து ஆலோசனை வழங்கும் முகாம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது.  

              மாவட்ட அகதிகள் மறுவாழ்வுத் துறை இதற்கு ஏற்பாடு செய்து இருந்தது. ஈழ எய்திலீயர் மறுவாழ்வுக் கழகம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் பத்மநாதன், சுரேஷ்குமார் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.  





Read more »

கடலூர் உள்ளிட்ட சிறு துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் : ஆளுநர் உரையில் அறிவிப்பு

           "கடலூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரையோரம் உள்ள சிறு துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்' என கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
        கவர்னர் உரையில், "நீண்ட கடற்கரை கொண்ட தமிழகத்தில், துறைமுகங்கள் மேம்பாடு அடைந்தால் அதையொட்டியுள்ள நிலப்பகுதிகளில் வர்த்தகம் மேம்படும். எனவே, கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கடலூர், நாகப்பட்டினம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளின் சிறு துறைமுகங்கள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். இதனால் மாநிலத்தின் சரக்கு கையாளும் திறன் அதிகரிக்கும்' என்று கூறப்பட்டுள்ளது.





Read more »

வெலிங்டன் ஏரி சீரமைக்கப்படும்: திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழ்அழகன்

திட்டக்குடி:

          திட்டக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழ்அழகன் திட்டக்குடி பகுதியில் கீழச்செருவாய், இடைச்செருவாய், பாளையம், கொரக்கை, ஏந்தல், தச்சூர் உட்பட 22 கிராமங்களில் வீதிவீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது திட்டக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழ்அழகன் பேசியது:-  

            வெலிங்டன் நீர்தேக்கத்தில் மராமத்து செய்து முழுகொள்ளவு நீர் பிடிப்பதன் முலம் விருத்தாசலம், திட்டக்குடி தாலுக்காவில் பாசன வசதி பெறும் 24 ஆயிரம் ஏக்கரில் முழு பாசன பகுதியும், பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்,  பொது மக்கள் 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான உதவிக்கு அழைக்கலாம். நான் இந்த தொகுதியை சேர்ந்தவன் தொகுதியின் நிறை, குறைகள் தெரியும் எனவே குறைகளை களைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்  

         கீழச்செருவாய், பாளையம் பொதுப்பணித்துறை ஏரிகள் முலம் பாசன வசதி பெறும் பகுதிகளில் வேளாண்மை பொறியியல் துறை முலம் சிமெண்ட பாசன வாய்க்கால் கட்டித்தர முறையிடுவேன். வெல்லிங்டன் ஏரியை சுற்றுலா பயணிகள் விரும்பி பார்வையிடும் வகையில் சீரமைக்கப்படும். கொரக்கை, ஏந்தல் வழியாக வரும் ஒடை நீர் அப்பகுதி கிராமங்களை பாதிக்காத வகையில் சீரமைக்கப்படும். இவ்வாறு தமிழ்அழகன் பேசினார்.

              இவருடன் ஒன்றிய தேமுதிக செயலாளர் ராஜமாணிக்கம், திட்டக்குடி நகர செயலாளர் கபிலன், அவைத்தலைவர் கனகசபை, பொருளாளர் செல்வகுமார், மாவட்ட நிர்வாகி மணிமாறன், மாவட்ட பிரதிநிதி வேலாயுதம், முன்னாள் விவசாய அணி செயலாளர் சிவராமன், கேப்டன் பேரவை செயலாளர் தங்கதுரை, அதிமுக இணைச்செயலாளர் வெள்ளையம்மாள் கலிய முர்த்தி, அவைத்தலைவர் ராஜகோபால், மாவட்ட கவுன்சிலர் மதியழகன், தொகுதி இணைச் செயலாளர் பொன்முடி, மாணவரணி செயலாளர் எழிலரசன், பாசறை செயலாளர் கோபி உள்பட பலர் சென்றனர். 
 
 
 
 
 
 

Read more »

Delay in underground drainage project will be studied Says Cuddalore Collector V.Amuthavalli

CUDDALORE:

         V. Amuthavalli assumed office as Collector of Cuddalore district at the camp office here on Wednesday.

         Born at Thiruparankunram in Madurai district, Ms. Amuthavalli has completed M.Sc (agriculture), M.A (economics) and M.B.A. She joined government service as Deputy Collector in 1997 and served as District Revenue Officer in January 2003.

         She was conferred IAS in 2010. Before taking up the new responsibility, she was serving as the Additional Registrar of Cooperative Societies in Chennai. Collector in-charge C. Rajendran handed over charge to her. She has been posted in the place of former Collector P. Seetharaman, who has been appointed Project Director, Post Tsunami Sustainable Livelihood Programme. Later, she told presspersons that she would take all steps for implementing government schemes. On the undue delay in execution of the underground drainage project, she said the reasons would be studied and addressed. Ms. Amuthavalli also said that among other issues, she would focus on decongesting roads in Cuddalore.




Read more »

Government aid for 13 students in Cuddalore district

CUDDALORE: 

        Thirteen Adi Dravidar and Scheduled Tribe students have been selected for the government-aided education scheme in Cuddalore district. The government will bear the educational expenses of these students from Class VI to Plus-Two in schools of their choice.

Felicitated

           Collector V.Amuthavalli felicitated the students here on Friday. Under the scheme, one meritorious student from each of the 13 panchayat unions has been selected through a special examination conducted at the Class V level by the Education Department. Those selected include seven boys and six girls.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior