உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 21, 2011

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் படிப்பு கலந்தாய்வு தொடக்கம்

      தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதல்கட்ட கவுன்சலிங் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் பி.எஸ்சி. வேளாண்மை படிப்பை 96 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். 

           மாலை வரை நடந்த கவுன்சலிங்கில் 172 மாணவர்கள் பி.எஸ்சி. மற்றும் பி.டெக். படிப்புகளை தேர்வு செய்துள்ளனர்.  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. மற்றும் பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கவுன்சலிங் திங்கள்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு கவுன்சலிங் தொடங்கியது.  

       முதல் நாளில் 199 முதல் 190 கட்ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுன்சலிங் அழைக்கப்பட்டனர். மொத்தம் 302 பேர் கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்டனர். 

          இதில் 198.75 மதிப்பெண் பெற்ற அரவிந்த்ராம் என்ற மாணவர் பி.டெக். பயோ இன்பர்மேட்டிக்ஸ் படிப்பை தேர்வு செய்தார்.  இதுதொடர்பாக, பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேச பூபதி நிருபர்களிடம் கூறியது:  வேளாண் படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு உடனடி வேலை கிடைப்பதால், வேளாண் சார்ந்த படிப்புகளில் சேர மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

         வங்கி மற்றும் உர நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.  மாணவர்கள் இரு பட்டப் படிப்புகளை ஒருசேரப் பெறும் பொருட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  

10 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்: 

        கவுன்சலிங்கில் தேர்வான மாணவர்கள், 10 நாள்களுக்குள் தங்கள் மூலச் சான்றிதழ்களை கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இல்லையெனில் 2-வது கட்ட கவுன்சலிங் அறிவிக்கப்படும்.  திருச்சியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மகளிர் தோட்டக்கலை கல்லூரியில் மாணவியர் சேர்க்கை நடத்துவதற்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது என்றார் முருகேச பூபதி.  

2-வது நாள் கவுன்சலிங்: 
 
        இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (இன்று) 189.75 முதல் 186 வரையில் கட்ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
 
 

Read more »

ஜூலை 8-ல் பொறியியல் படிப்பு கலந்தாய்வு தொடக்கம்

   2011-2012 கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது.  
 
       தொடர்ந்து 35 நாள்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. இத்தகவலை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் திங்கள்கிழமை (ஜூன் 20) வெளியிட்டார்.  
 
சென்னையில் மட்டும் கலந்தாய்வு:  
 
         தமிழகத்தில் உள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் 1.25 லட்சம் இடங்களில், ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.  
 
எவ்வளவு விண்ணப்பங்கள்? 
 
          கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 509 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாளான ஜூன் 3-ம் தேதி வரை 1 லட்சத்து 48 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.  
 
விண்ணப்பித்துள்ளவர்களில் 89,298 பேர் ஆண்கள். 
59,055 பேர் பெண்கள். 
 
தொழில் பிரிவு (வொக்கேஷனல்) ஒதுக்கீட்டின் கீழ் 5,578 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
 
விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் 2,302 ஆண்கள், 1,155 பெண்கள் என மொத்தம் 3,457 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
 
மாற்றுத் திறனாளிகள் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் 464 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
 
இவர்களில் பெண்கள் 149 பேர். 
 
ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் 2,193 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  
 
விண்ணப்பித்துள்ளவர்களில் 64,410 பேர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள்.  
 
தர வரிசைப் பட்டியல் எப்போது?  
 
     கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல் (ரேங்க் லிஸ்ட்) ஜூன் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தர வரிசை எண்ணை அண்ணா பல்கலைக்கழக இணைய தளமான www.annauniv.edu/tnea2011 மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.  
 
கலந்தாய்வு எப்போது?  
 
        விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜூன் 30-ம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. முன்னதாக ஜூன் 28, 29 தேதிகளில் இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தொழில் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.  மாற்றுத் திறனாளிகள் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜூலை 7-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.  பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 35 நாள்களுக்கு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.  
 
 சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியீடு: 
 
          அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கான சம வாய்ப்பு எண் வெளியிடும் நிகழ்ச்சியை அமைச்சர் பழனியப்பன் தொடங்கி வைத்தார்.  பல மாணவர்கள் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்கும்போது அவர்களை வரிசைப்படுத்த கம்ப்யூட்டர் மூலம் இந்த சம வாய்ப்பு எண் வழங்கப்படுகிறது.  இந்த சம வாய்ப்பு எண் அண்ணா பல்கலைக்கழக www.annauniv.edu/tnea2011 இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடை விண்ணப்ப எண்ணை அதில் பதிவு செய்து, சம வாய்ப்பு எண்ணைத் தெரிந்து கொள்ளலாம்.  சம வாய்ப்பு எண் வெளியிடும் நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலர் கண்ணன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) குமார் ஜெயந்த், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர், தமிழ்நாடு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை செயலர் ரெய்மண்ட் உத்தரியராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
 
 
 
 
 

Read more »

சிதம்பரம் மேலவீதி ஸ்ரீசிறைமீட்ட விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு


ஸ்ரீ சிறைமீட்ட விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவை காணத் திரண்ட பக்தர்கள்.
 
 
சிதம்பரம்:

             சிதம்பரம் மேலவீதியில் ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுóள்ள ஸ்ரீசிறைமீட்ட விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு வெகு சிறப்பாக நடபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று வழிப்பட்டனர்.

         முன்னொரு காலத்தில் சகரபுத்திரர்கள் அறுபத்தினாயிரவர்க்கும் அவர்கள் செய்த தவறுக்காக சாபம் தந்தார் கபில முனிவர். அதனால் அவரையும் பாவ வினைப் பற்றி வருத்தியது. இப்பாவம் நீங்கிட கபில முனிவர் சிறை மீட்ட விநாயகரை வணங்கிப் போற்றினார். விநாயகப் பெருமான் அருளால் அவரைப் பாவவினை பற்றாமல் நீங்கிற்று என வரலாறு கூறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தில்லைவாழ் அந்தனர்கள் என அழைக்கப்படும் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களால் சனிக்கிழமை காலை விக்னேஸ்வரபூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு தி.குருமூர்த்தி தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் கும்பத்துக்கு கலசநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர். 

      இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிப்பட்டனர். விழாவை முன்னிட்டு அ.அறிவொளி எழுதிய விநாயகர் அகவல் வடமொழி மந்திர விளக்கம் என்ற நூல் வெளியிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் நூலை வெளியிட முதல் பிரதியை கே.வி.பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், கே.வி.பார்த்தசாரதி, எஸ்.சூரியநாராயணன், எம்.சுந்தரமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். 




Read more »

கடலூர் நகராட்சி சுனாமி குடியிருப்பில் வசிப்போருக்கு உள்ளாட்சி தேர்தலில் முறையாக வாக்களிக்க வாய்ப்பு

கடலூர்:

     தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிறுவனங்களில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான  பதவிக் காலம், அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. 

          அக்டோபர் 25ல் புதிய நிர்வாகிகள் பதவியேற்க வேண்டும். கடலூர் நகராட்சிப் பகுதியில் சுனாமிக் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போருக்கு, அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே, உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடலூரில் 2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவனாம்பட்டினத்தில் 600 வீடுகளும், ஏணிக்காரன் தோட்டத்தில் 1,300 வீடுகளும் பல்வேறு தொண்டு நிறுவனங்களால் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் வசிக்கும் 1,900 குடும்பங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. 

          இவர்கள் கடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப் பேரவைத் தேர்தலிலும், சுனாமிக்கு முன்னர் எந்தெந்த கிராமங்களில் வசித்தார்களோ, அங்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டிய நிலை இருந்தது. இவர்களின் புதிய வசிப்பிடங்கள் சுனாமிக் குடியிருப்பாகவும், வாக்காளர் பட்டியல் முகவரிகள், சுனாமிக்கு முந்தைய கிராம வசிப்பிடங்களாகவும் உள்ளன  உள்ளாட்சித் தேர்தலிலும் இதேநிலை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடலூர் நகராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் என்பது, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் நகலாகத்தான் இருக்கும் என்கிறார்கள் நகராட்சி அதிகாரிகள். 

       சட்டப் பேரவைத் தேர்தலின் போதே சுனாமிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்ற குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அவர்களின் பழைய கிராம முகவரி அடிப்படையில் தேடியபோது, அங்கு பலருக்கு வாக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுனாமிக் குடியிருப்பில் இருந்து அவர்களின் பழைய இருப்பிடங்கள் வெகு தொலைவில் இருந்ததால், வாக்களிக்க முடியவில்லை என்று பலர் தெரிவித்தனர். 

        இப்படியொரு இரட்டை நிலை இருப்பதால், பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுப் போகும் அவல நிலையும் ஏற்பட்டு உள்ளது.  இதனால் ஒரு வார்டில் உள்ள கவுன்சிலருக்கு வாக்களித்துவிட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக, மற்றொரு வார்டு கவுன்சிலரை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என்றும், இதனால் அந்த மக்களுக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார் நகராட்சி உறுப்பினர் சர்தார்.   

        மேலும் ஏணிக்காரன் தோட்டம் சுனாமிக் குடியிருப்பு பகுதி வீடுகள் மூன்று வார்டுகளிலும், தேவனாம்பட்டினம் சுனாமிக் குடியிருப்புப் பகுதி வீடுகள் இரண்டு  வார்டுகளிலும் இடம் பெற்று உள்ளன. ஏணிக்காரன் தோட்டம் சுனாமிக் குடியிருப்பு பாதாளச் சாக்கடைத் திட்ட கழிவுநீர் அகற்று நிலையம் எந்த வார்டிலும் இடம்பெறவில்லை.இதனால் கழிவுநீர் அகற்றுதல், உப்பனாற்றில் பாலம் கட்டாததால்  சுடுகாட்டுக்காக, 5 கி.மீ. தூரம் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை, பள்ளிக் குழந்தைகள் 3 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட பல்லாண்டுகளாக தீர்க்கப்படாத பொதுப் பிரச்னைகளுக்காக எந்த நகராட்சி உறுப்பினரை நாடுவது எப்படி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது என்று தெரியவில்லை என்கிறார், மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன். 

இதுகுறித்து கடலூர் நகர குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில்,   

         கடலூரில் பல வார்டுகள் முறையாகப் பிரிக்கப்படவில்லை. காலப்போக்கில் பல வார்டுகளின் நிலை பெரிதும் மாறிவிட்டது. நீண்டகாலமாக வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம். வரஇருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே, வார்டுகளை மறு சீரமைப்பு செய்தால், மக்களின் பல்வேறு குறைகள் தீரும் என்றார். 




Read more »

கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க பொதுமக்கள் உற்சாகம்

கடலூர் : 

         கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றிருக்கும் புதிய கலெக்டரை சந்தித்து தமது குறைகளை எடுத்துக் கூறி பயன் பெறலாம் என்ற நோக்கத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த மக்களால் நேற்று முகாம் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் "களை' கட்டியது. 

       தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் ஏற்கனவே கலெக்டராக இருந்த சீத்தாராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாவட்ட கலெக்டராக அமுதவல்லி பொறுப்பேற்றார். சாதாரண ஏழை மக்கள் கூட கலெக்டரை சந்தித்து தமது மனக்குறையை எடுத்துக்கூற வாய்ப்பு ஏற்படுத்துவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து வாரம் தோறும் திங்கட்கிழமை பொது மக்கள் குறைகேட்பு நாள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கலெக்டரை சந்தித்து கொடுத்து வருகின்றனர்.

       புதிய கலெக்டர் பொறுப்பேற்றது முதல் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் பங்கேற்க சென்று விட்டதால் அதிகாரிகள் மட்டுமே மனுவை பெற்று அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்த பொது மக்கள் மனுக்கள் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை. நேற்று கலெக்டர் அமுதவல்லி பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் முதல்முறையாக பங்கேற்று மனுக்களை பெற உள்ளார் என அறிந்தவுடன் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக கூடினர். 

        கலெக்டர் இல்லாத நாட்களில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தவர்கள் கூட திருப்தியடையாமல் புதிய கலெக்டரை சந்தித்து தமது குறைகளை எடுத்துக் கூறினால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் நேற்று மீண்டும் ஒரு மனுவோடு வருகை தந்தனர். அதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து முகாம் அலுவலகம் "களை' கட்டியது. நேற்று காலை மட்டும் பொது மக்களிடமிருந்து 490 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது கலெக்டர் அமுதவல்லி நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். 

பெருமை மிகு கட்டடத்தில் மனுக்கள் பெறப்படுமா: 

          மாவட்ட கலெக்டர் அலுவலகம் ராபர்ட் கிளைவ் காலத்தில் கட்டப்பட்ட வானுயர்ந்த கட்டடமாகும். இக்கட்டடம் இன்றளவும் உறுதியோடு விளங்கி வருகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்த கிளைவ் பணிக்காலத்தின் போது கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் ராபர்ட் கிளைவால் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம், முகாம் அலுவலகம் ஆகியவற்றை பார்த்து வியந்தார். இத்தனை ஆண்டுகளை கடந்தும் இக்கட்டிடம் பழுதில்லாமல் கம்பீரமாக இருக்கிறதே என பெருமைப்பட்டார். வரலாற்று புகழ்வாய்ந்த கட்டடத்தில் பணியாற்றுவதே பல கலெக்டர்கள் பெருமையாக கருதினர். 

        ஆனால் கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெறுவதை நிறுத்தி விட்டு அதிகாரிகள் கூட்டம், மனுக்கள் பெறுதல், ஃபைல் பார்ப்பது என அனைத்து பணிகளையும் வீட்டிலேயே இருந்து பார்த்து வருகின்றனர். அதற்காகவே வளர்ச்சிமன்ற கூடம் அமைத்துக்கொண்டனர். தேர்தலின்போது வேட்பு மனுக்கள் பெறுவதற்காகவும், தேர்தல் முடிவை அறிந்து கொள்வதற்காகவும் தான் கலெக்டர்கள் அலுவலகத்திற்கு வரும் நிலை இருந்து வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதென்பது அரிதான விஷயமாகி வருகிறது. 

           புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் அமுதவல்லி பொது மக்களின் குறைகேட்பு மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வாங்குவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.





Read more »

பண்ருட்டியில் 55 கிலோ எடை கொண்ட பலாப்பழம்: கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்

 
பண்ருட்டி : 

     கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நேற்று அதிக எடை கொண்ட பலாப்பழம் விற்பனைக்கு வந்தது.

       பண்ருட்டி என்றாலே அனைவரின் நினைவிற்கு வருவது பலாப்பழம் தான். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் பலாப்பழம் பயிரிடப்பட்டு விற்பனைக்கு வந்தாலும், பழத்தின் சுவை, நிறம் முதலானவை பண்ருட்டி பலாப்பழம் போல் வராது. இந்தாண்டு கடந்த மார்ச் துவங்கி ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை பலாப்பழ சீசன் களைகட்டி வருகிறது. மார்ச்சில் ஒரு கிலோ பலாப்பழம் 12 ரூபாய்க்கும், மே மாதம் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. தற்போது சீசனை முன்னிட்டு கிராமங்களில் இருந்து அதிகளவில் பலாப்பழம் விற்பனைக்கு வருவதால், ஒரு கிலோ 5 ரூபாய் என விலை குறைந்துள்ளது.

         இதற்கிடையே நேற்று பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரது நிலத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பலாப்பழம் மிகப்பெரிய சைசில், 55 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதை வியாபாரிகள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதுகுறித்து வேளாண்மை விதைச் சான்று அலுவலர் ஹரிதாஸ் கூறுகையில், 

          "அமெரிக்கா நாட்டில் உள்ள ஹாவாய் தீவில் 35 கிலோ எடை கொண்ட பலாப்பழம் அதிக எடை கொண்டது என, கின்னசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பண்ருட்டி பகுதியில் சராசரியாக 10 கிலோ முதல் 90 கிலோ எடை வரை பலாப்பழங்கள் விற்பனைக்கு வருகிறது' என்றார். அதிக எடை கொண்ட பலாப்பழம் பண்ருட்டி பகுதிகளில் உற்பத்தியாகிறது என்பதை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் ஆர்வமாக உள்ளது. 



Read more »

குடிசைத் தொழிலாக பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு: கடலூர் முதுநகரில் சுயத் தொழிலில் ஈடுபடும் குடும்பங்கள்




 http://img.dinamalar.com/data/albums/large/216114dffbb1c9e835.jpg






கடலூர் முதுநகர் :

           கடலூர் முதுநகர் அடுத்த கண்ணாரப்பேட்டையில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைத் தொழிலாக பித்தளை பாத்திரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

          பல ஆண்டுகளுக்கு முன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்த பித்தளை பாத்திரங்கள் தற்போது இந்த விஞ்ஞான யுகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவது என்னவே உண்மைதான். ஆனாலும், கிராமப்புறங்களில் இன்னும் மவுசு இருந்து கொண்டுதான் இருக்கிறது. நகர்புறத்தில் திருமண சீர் வரிசை என்றலே பூஜை சமான்களைத் தவிர பிற பொருட்கள் அனைத்தும் எவர் சில்வர்களால் ஆன பாத்திரங்கள் கொடுக்கப்படுகிறது. 

         ஆனால் கிராமப்புறங்களில் இன்னமும் அதிக இடத்தை பிடிப்பது பித்தளை பாத்திரங்கள் தான். அதனால்தான் பித்தளை பாத்திரங்கள் செய்யும் தொழிலில் ஈடுபடும் குடும்பங்கள் இன்னமும் குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர். கும்பகோணத்தில் முன்பு அதிகளவில் நடந்து வந்த இத்தொழில் தற்போது நலிவடைந்ததன் காரணமாக அங்கிருந்து தொழிலாளர்கள் பெரும்பாலானோர் கடலூரில் பணியாற்றுகின்றனர். கடலூர் முதுநகர், கண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிகளவிலான தொழிலாளர்கள் பித்தளையிலான குடங்கள், தவலைகள், அண்டா, குண்டான் உள்ளிட்ட பல பொருட்களை செய்து வருகின்றனர். 

         பித்தளை பொருட்கள் செய்வதற்காக மூலப்பொருளான பித்தளை தகடுகளை முதுநகர் பகுதியில் கிடைக்கின்றன. இந்த தகடுகள் ஒரு கிலோ 350 ரூபாய்க்கு வாங்கப்படுகின்றது. பாத்திரங்களாக மாற்றப்பட்டு கடையில் கிலோ ஒன்று 450லிருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு கிலோ பித்தளை பொருட்கள் செய்ய தொழிலாளருக்கு 50 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இங்கு செய்யப்படும் பாத்திரங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. போதுமான ஆட்கள் இன்றி தேவைக்கேற்ப பாத்திரங்களை செய்து கொடுக்க முடியாத நிலை உள்ளது. 

         இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தினமும் 400 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. பித்தளை பொருட்கள் செய்யும் பட்டறையை தொடங்க 60 ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது என இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.


Read more »

பண்ருட்டியில் பராமரிப்பின்றி பூட்டிக் கிடக்கும் அவியனூர் ஆரம்ப துணை சுகாதார நிலையம்

பண்ருட்டி : 

          பண்ருட்டி அடுத்த அவியனூர் ஆரம்ப துணை சுகாதார நிலையம் பராமரிப்பின்றி திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. 

             பண்ருட்டி அடுத்த அவியனூர் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கடந்த 1994ம் ஆண்டு டேனிடா உதவியுடன் கட்டப்பட்டது. கடந்த 2000 - 2001ம் ஆண்டு கட்டடம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக வாரம் தோறும் புதன் கிழமை மட்டும் செவிலியர் ஒருவர் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக அவரும் வருவதில்லை. தற்போது இந்த கட்டடத்தின் அருகில் கால்நடைகள் கட்டப்பட்டு சுகாதாரமற்ற முறையில் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. 

       இதனை சீரமைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க பொதுமக்கள் தரப்பில் பல முறை புகார் தெரிவித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவியனூர், பைத்தாம்பாடி, கரும்பூர், ரெட்டிச்சாவடி, காவனூர், சத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று தான் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து துணை சுகாதார நிலையம் செயல்பட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Read more »

SSLC Online employment registration on in full swing in Cuddalore District



Online employment registration being done for class X completed students in Cuddalore on Monday

CUDDALORE:
        The online employment registration for those students who have completed Class X is vigorously going on in the schools in Cuddalore district.

      After making due entries, the schools are generating the employment registration numbers of the candidates. The employment office sources said that every school had been given two user identifications and two passwords to log on to the former's portal. Soon after feeding the candidate's name, father's name, school registration number, and copy of the ration card bearing the name of the candidate, the employment registration was done in a trice.

        The sources further said that before the introduction of the online registration system, the employment offices would be teeming with students at an unmanageable level. They would gather in hundreds, thereby imposing a heavy burden on the staff of the employment office, particularly after the results were announced. Moreover, the candidates would have to wait for long hours to register their names. Hence, it used to be a cumbersome and tiresome process. But with the involvement of schools in this endeavour, employment registration had become an easy and a smooth affair.

       On an average, 50,000 students, who cleared Class X and Plus Two public examinations, register their names with the Cuddalore employment office every year. However, for the purpose of renewal and adding additional qualifications they would have to invariably go to the employment office in person. The candidates ought to renew their registration in their own interest so as to protect their seniority. In this regard, no reminder would be sent to them. But there was no data on how many students really opt for renewal, the sources said.




Read more »

Artificial limbs give the differently abled a leg-up at Neyveli



Collector V.Amuthavalli giving away a modern artificial limb to a boy in Cuddalore on Monday.
CUDDALORE: 

     The desire of S. Rathnesh of Neyveli, a differently-abled Class IV student, to walk normally like children of his age has been fulfilled with the acquisition of a new artificial limb.

     Born with a defective left leg, he has been hoping to get a suitable prosthesis that would facilitate easy mobility without causing much strain. It is a different story for R.Jayapriya of Kattumannarkoil, a Class X student, who lost her right leg in an accident. She too has been looking for a prosthesis that would enable her to move around comfortably with less effort.

        The requirements of both the students have been adequately met by the imported prostheses that have both utility and aesthetic values. The artificial limb or prosthesis, imported from the United Kingdom, has a special socket made of polypropylene, a lightweight material that can withstand constant wear and tear and cushion the friction effectively. Each artificial limb costs about Rs.32,500 and is being given away free by the State government through the Differently-abled Persons' Welfare Department. Collector A.Amuthavalli handed over the artificial limbs to the students here on Monday. She took keen interest on how the prosthesis fitted and the comfort level of the beneficiaries.

       Ortho-technician R.Balasundaram of the Welfare Department told this correspondent that the artificial limb was made of pylon, an extremely light but sturdy material, to ensure utmost comfort to the wearer. This special artificial limb dispenses with the usual belts, meant for firmly securing the prosthesis to the body. Another salient aspect about this imported limb was that it was fitted with a mechanism that would make the foot flexible from the ankle. In regular artificial limbs, the entire portion would remain static and stubborn, and therefore, while walking a visible drag in the gait could be seen. Therefore, while climbing stairs or negotiating undulating terrains or steep surfaces the wearer would face certain difficulty.

      But in this innovative prosthesis, the ankle part, supported by inlaid springs, would move in response to the type of surface. This would provide a semblance of normal walking and comfortable feeling to the wearer. Mr. Balasundaram further said that the prosthesis was custom-made to suit individual requirements and its fitting must be checked once in a year. District Welfare Officer for the Differently-abled Persons T.Srinivasan said that the imported device was exclusively meant for school and college students. However, for want of awareness there was not much of demand.

       The Department had already issued a total of 31,427 identity cards, of them 12,886, all above 10 years, had been registered with the welfare board. There was no target fixed on the number of imported artificial limbs to be given and all the requests would be conceded. It would take three months from the date of application to get ready the artificial limbs, Mr. Srinivasan added.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior