உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 23, 2011

நெய்வேலி இளைஞரின் மனிதாபிமானம்

2 கால்களும் இல்லாத பெண்ணை காதலித்து மணந்த வாலிபர் : வடபழனி கோவிலில் பெற்றோர் முன்னிலையில் இன்று திருமணம்



 
பொன்னை விரும்பும் பூமியிலே...
என்னை விரும்பும் ஓருயிரே... 
புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே...

 
             என்று ஆலயமணி படத்தில் கால்களை இழந்த கதாநாயகி சரோஜாதேவியை தள்ளுவண்டியில் வைத்து தள்ளியபடி நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பாடுவார்.  

          அதேபோல 2 கால்களும் இல்லாத ஒரு பெண்ணை மோகன் என்ற வாலிபர் திருமணம் செய்து புரட்சி செய்து இருக்கிறார்.   வடபழனி முருகன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ( 19.06.2011)  காலை நடந்த 50 ஜோடிகள் திருமணத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மோகன்- கற்பகம் திருமணம்தான்.

         பட்டுவேட்டி கட்டி கம்பீரமாக காட்சி அளித்த மணமகன் மோகன் தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு வந்தார். அதில் 2 கால்களையும் இழந்த ஊனமுற்ற இளம்பெண் கற்பகம் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தார். பெற்றோர் முன்னிலையில் அவர்கள் மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டார்கள்.

ஊனமுற்ற பெண்ணை மணந்த மணமகன் மோகன் கூறியது:-  

            எனக்கு சொந்த ஊர் நெய்வேலி. எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக் டிப்ளமோ படித்து உள்ளேன். புரசைவாக்கத்தில் ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறேன். அந்த கடையில்தான் கற்பகமும் வேலை பார்க்கிறார். தினமும் தள்ளுவண்டியில் தாயார் கடைக்கு அழைத்து வருவார்.

           எனக்கு சிறுவயது முதலே ஊனமுற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கற்பகத்தை பார்த்ததும் அந்த எண்ணம் மேலும் அதிகரித்தது.   கால்களை இழந்தபோது தன்னோடு பழகியவிதமும், நடந்து கொண்டவிதமும் என்னை கவர்ந்தது. அவரை உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கினேன்.  எனது விருப்பத்தை பெற்றோர்களிடம் தெரிவித்தேன். எல்லோருடைய சம்மதத்துடன் கற்பகத்தை வாழ்க்கை துணையாக ஏற்று உள்ளேன். வெற்றிகரமாக எங்கள் வாழ்க்கை பயணத்தை நடத்துவோம்.  

மணமகள் கற்பகம் கூறியது:-

           எ  னக்கு 2 1/2 வயது இருக்கும்போது போலியோ தாக்கியதால் 2 கால்களும் செயல் இழந்து விட்டது. 10-ம் வகுப்பு வரை படித்தேன். எனது தந்தை சண்முகம் இறந்து விட்டார். அம்மா சண்முகசுந்தரிதான் ஊன்றுகோலாக இருந்து என்னை தினமும் தள்ளு வண்டியில் வைத்து பார்மசிக்கு அழைத்து செல்வார்.  எல்லோரையும் போல் எனக்கும் வாழ்வு கிடைக்குமா? அம்மாவுக்கு பிறகு யார் நமக்கு துணை இருப்பார்கள் என்று ஏங்கி கொண்டு இருந்தேன். எனது ஏக்கத்துக்கு நல்ல தீர்வு கிடைத்து உள்ளது. மோகன் கடவுள் போல் கணவராக கிடைத்து உள்ளார்.  இவ்வாறு அவர் கூறினார்.

          கற்பகத்தின் அக்காள் பிரேமா ஆரோக்கியமானவர். ஆனால் அவரது கணவர் வள்ளிநாயகம் ஊனமுற்றவர். கற்பகத்தின் தங்கை கவுரி எந்த குறையும் இல்லாதவர். அவரது கணவர் அய்யனார் ஊனமுற்றவர். 2 கால்களையும் இழந்த கற்பகத்துக்கு எந்த குறையும் இல்லாத மோகன் கணவராக கிடைக்கப்பெற்றுள்ளார். கற்பகத்துக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி. 
 

 
 
 

Read more »

விருத்தாசலத்தில் எரிசாராய ஆலை கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பு

விருத்தாசலம்:
        
            விருத்தாசலம் தாலுக்கா கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ள தனியார் எரிசாராய ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பதாகவும், அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  
               இந்த தனியார் எரிசாராய ஆலையிலிருந்து மதுபானத்துக்கு தேவையான மூலப்பொருள் தயாரிக்கப்பட்டு மதுபான ஆலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் எரிசாராயத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை அருகிலுள்ள முந்திரிக் காடுகளில் ஊற்றிவிடுவதால், முந்திரி விவசாயம் பாதிப்பதாகவும், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, இது கழிவுநீரல்ல உர வடிநீர். இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என விளக்கமளித்துள்ளனர்.  
              ஆனால் கிராம மக்களோ இந்த ஆலை வந்த பிறகுதான் முந்திரி விளைச்சல் குறைந்து விட்டதாகவும், இந்த கழிவுநீரிலிந்து உற்பத்தியாகும் ஒருவித ஈக்கள், கால்நடைகளை தாக்கி நோய்க்கு ஆளாக்குகிறது என்கின்றனர். மேலும் இந்த கழிவுநீரை விளைநிலங்களில் ஊற்றுவதால், மழைக்காலங்களில் மழைநீருடன் இந்த கழிவுநீரும் மண்ணில் கலந்து, குளங்களையும், ஆழ்துளைக் கிணறுகளையும் பாதித்து வருவதாகக் கூறுகின்றனர்.  இந்த ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றால் சுமார் 20 கி.மீ தொலைவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்படுவதோடு, கண் எரிச்சல், மழைக் காலங்களில் மர்ம காய்ச்சல் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.  
              இந்த கழிவுநீரை லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் போது, கழிவுநீர் கசிந்து சாலையில் ஊற்றிக்கொண்டே செல்வதால் சாலை சேதமடைவதோடு, இரு சக்கர வாகனங்களில் செல்வோர், வழுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் இந்த கழிவுநீரை பொது வடிகால்களில் ஊற்றிவிடுவதால் சாலையோரத்தில் துர்நாற்றம் வீசுகிறது.  இதனால், பொதுமக்கள் வசிக்குமிடத்தில் சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதோடு, விளைநிலங்களையும் பாழாக்கும் தனியார் ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆய்வு நடத்தி, உரிய முறையில் கழிவு நீரை அகற்றிடவும், துர்நாற்றத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதி மக்கள் சுகாதாரமான முறையில் வாழ வழிவகை செய்ய வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Read more »

சிதம்பரம் பொன்னேரியில் பெயரளவுக்கே தூர்மண் அள்ளப்படும் அவலம்


பொக்லைன் மூலம் பெயரளவுக்கே தூர்மண் அள்ளப்படும் பொன்னேரி.

சிதம்பரம்:
 
           சிதம்பரம் அருகே பொன்னேரியில் பெயரளவுக்கே தூர்மண் எடுப்பதால் விவசாயிகள் மிகவும் ஏமாற்றமும், கவலையும் அடைந்துள்ளனர்.  

              அணைக்கரையிலிருந்து சிதம்பரத்தை அடுத்த சின்னகாரமேடு வரை கொள்ளிடத்தின் இடது கரை ரூ.108 கோடி செலவில் பலப்படுத்தி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கரையை பலப்படுத்த வீராணம் ஏரி மற்றும் பொன்னேரியிலிருந்து தூர்மண்ணை எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.  

            ஆனால் வீராணம் ஏரியிலிரும், பொன்னேரியிலும் பெயரளவுக்கு மண் அள்ளப்படுவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். வீராணம் ஏரி, பொன்னேரியிலிருந்து மண் அள்ளுவதால் ஏரியும் தூர்வாரப்படும், கூடுதல் கொள்ளளவு நீர் தேக்கலாம் என அங்கிருந்து மண் அள்ளுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

             ஆனால் பெயரளவுக்கு அங்கு மண் அள்ளப்படுவதாலும், இதை காரணம் காட்டி குறுவை சாகுபடிக்கு இதுவரை தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.  ஒப்பந்தத்தின்படி பொன்னேரியிலிருந்து 7.012 லட்சம் கன மீட்டர் மண் அள்ள வேண்டும். ஆனால் இதுவரை 2 லட்சம் கனமீட்டர் மண்கூட அள்ளப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கனமழைக்காலங்களில் பொன்னேரியில் ஆண்டுதோறும் வெள்ளப் பெருக்கெடுத்து விவசாயப் பணி பாதிக்கப்படுகிறது.  

            இந்தாண்டாவது பொன்னேரி தூர்வாரப்பட்டு கூடுதல் நீர் தேக்கப்படுவதால் வெள்ளப் பெருக்கை தவிர்க்கலாம் என இருந்த விவசாயிகள் மத்தியில் சரியாக மண் அள்ளப்படாததால் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர் என கண்ணங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் கே.ராஜசேகரன் தெரிவித்தார்.




Read more »

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளைக் கடனாளிகளாக்கிய வங்கிகள்!

கடலூர்:

         விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை நம்பி இருக்கும் மாவட்டம் கடலூர்.  

            எந்தப் பருவ காலமானாலும் நெல்லும், கரும்பும் இங்கு சாகுபடியும், அறுவடையும் தொடர்ந்து நடைபெறுகிறது. வேளாண் கருவிகள் எத்தனை வழங்கினாலும், இன்னும் போதாது, போதாது என்ற நிலைதான் இங்கு இருந்து வருகிறது. வேளாண் பணிகளுக்கும், ஆலைகளுக்குக் கரும்பு உள்ளிட்ட சுமை தூக்கும் பணிகளுக்கும், டிராக்டர்கள் ஆயிரக் கணக்கில் பயன்படுத்தப்படுகின்றன.

              "கடலூர் மாவட்டத்தில் 2004 முதல் 2008-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் பல்வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளால், விவசாயிகளுக்கு டிராக்டர் கடன்கள் வழங்கப் பட்டன. பாரத ஸ்டேட் வங்கி மூலம் 800, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் 730, இந்தியன் வங்கி மூலம் 750 என ஏராளமான டிராக்டர்களுக்குக் கடன்கள் வழங்கப் பட்டன. ஆனால் இக்கடன்களில் 90 சதம் இதுவரை வசூலாக வில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பல, டிராக்டர் கடன் கொடுப்பதையே நிறுத்திவிட்டன. 

              தனியார் வங்கிகள் மூலம், கடலூர் மாவட்டத்தில், மாதம் 70 டிராக்டர்கள் வீதம், கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன' என்கிறார், தனியார் வங்கி மேலாளர் ஒருவர்.  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய கடன்களை வசூலிக்க, அண்மைக் காலமாக ஜப்தி நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கிறார்கள். டிராக்டர்களைக் கைப்பற்றி பொதுஏலம் விடவும் தொடங்கி இருக்கிறார்கள் வங்கியாளர்கள். இதற்கான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.  

            வங்கிக் கடன்களைத் திருப்பி செலுத்த முடியாமல் போனதற்கான காரணம்தான் என்ன மேற்கண்ட ஆண்டுகளில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு போட்டிபோட்டுக் கொண்டு டிராக்டர் கடன் வழங்கின. இதற்காக விவசாயிகளை வளைத்துப் பிடித்து சலுகைகளையும் வாக்குறுதிகளையும் வாரி வழங்கின. தேர்தல் வந்தால் கடன்களை தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்ற விவசாயியின் நம்பிக்கை தீபத்துக்குப் பல வங்கியாளர்களே, எண்ணெய் வார்த்தார்கள் என்று விவசாயிகள் புலம்புகிறார்கள்.  டிராக்டர் மட்டும் போதுமென்ற விவசாயிக்கு ரூ. 80 ஆயிரம் விலையுள்ள ரோட்டோ வேட்டர், ரூ. 30 ஆயிரம் விலையுள்ள கேஜ்வீல், ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள டிப்பர் போன்றவற்றையும் சேர்த்து வாங்குங்கள் என்று, வங்கிகள் நச்சரித்தன. 

             இதனால் டிராக்டர் மட்டும் வாங்கி ரூ. 4 லட்சம் கடனாளியாக வேண்டிய விவசாயிகள், வேண்டா வெறுப்பாக ரூ. 8 லட்சம் கடன் வாங்கி, மிகப்பெரிய கடனாளிகளாக மாறிவிட்டார்கள் என்கின்றனர். டிராக்டர் வழங்கும் நிறுவனங்களுக்கு இடையேயும் போட்டா போட்டி. ரூ. 4 லட்சம் மதிப்பில் டிராக்டர் வாங்கினால் ரூ. 80 ஆயிரம் மதிப்பு ரோட்டோ வேட்டர் இலவசம், ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் இலவசம் என்று அறிவித்து, இலவசங்களின் விலைகளை டிராடக்டர் விலையில் ஏற்றிவிட்டனர், என்கிறார்கள் விவசாயிகள். 

              கடனைத் திருப்பிச் செலுத்தத் தகுதியான நபர்தானா என்றுகூட பார்த்ததில்லை. தனது வங்கிக்கு ஒதுக்கப்பட்ட இலக்கை அடைந்தால் போதும் என்ற நிலையில், பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாளர்கள் கடன்களை திணித்தனர் விவசாயிகளிடம்.  தனியார் வங்கிகளோ அப்படி இல்லை. டிராக்டர் கடன் கேட்ட விவசாயின் வீடு தேடிச் சென்று, கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா பெண் பிள்ளைகள் திருமணத்துக்குக் காத்து இருக்கிறார்களா, மகன், மகள் மேல்படிப்புக்கு செல்ல இருக்கிறார்களா என்றுகூட தனியார் வங்கியாளர்கள் அலசி ஆராய்ந்து பார்க்கிறார்கள். ஒரு தவணை கட்டத் தவறினாலும் ஜப்தி நடவடிக்கைதான் என்கிறார், முன்னோடி விவசாயியும் டிராக்டர் டீலருமான சங்கொலிக்குப்பம் கு. ராமலிங்கம். 

              வேளாண் கருவிகளுக்கு வரிகளைக் குறைத்து, நியாயமான விலையில் விவசாயிகளுக்குக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜப்தி, ஏலம் நடவடிக்கைகளை வங்கிகள் உடனே கைவிட வேண்டும், கடன் கிடைக்கிறது என்பதற்காக விவசாயிகள், கடன் சுமையை ஏற்றிக் கொள்ளக் கூடாது. கடன் வசூலிப்பதில் கெடுபிடியின்றி, தவணை முறையில் வங்கிகள் கடன் வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார், மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி. ரவீந்திரன்.  

 இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 

                  5 ஆண்டுகளில் வங்கிகள் வழங்கிய கடனில், 90 சதம் வசூல் ஆகவில்லை. வசூல் நடவடிக்கைகளைக் கடுமை ஆக்குவதைத் தவிர வேறு வழியில்லை. எனினும் சமரச தீர்வு மையம், லோக் அதாலத் மூலமாகவும் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  கடன் வசூல் செய்யாத வங்கிகளை மட்டுமே, டிராக்டர் கடன் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம் என்றார். 




Read more »

கடலூர் மாவட்டத்தில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி

 கடலூர்:

         கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குள், 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

         உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் விழா கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. கடலூர் கிரீன் கிராஸ் சங்க உதவியுடன் இந்த விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. 

அப்போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில், 

          உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவற்றை மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொருவரும் மரக்கன்றுக்கு ஒருவர் வீதம் பொறுப்பேற்று, பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

            கடலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து, 15-8-2011-க்குள் 2 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. பொதுமக்களும் தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டுப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார் ஆட்சியர்.

           நிகழ்ச்சியில், மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் கமலக்கண்ணன், கிரீன் கிராஸ் சங்கச் செயலர் சங்கர், துணைத் தலைவர் ரங்கராஜன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா, சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்திரகுமார், கெம்ப்ளாஸ்ட் தொழிற்சாலை முதன்மை நிர்வாகி மோகன், மாசுக் கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Read more »

சி.முட்லூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை 27ல் துவக்கம்

கிள்ளை : 

        சி.முட்லூர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை வரும் 27ம்தேதி துவங்குகிறது. 

இது குறித்து கல்லூரி முதல்வர் வாசுதேவன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

          சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை வரும் 27ம் தேதி முதல் துவங்குகிறது. அதில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் அறிவியல், இயற்பியல் பிரிவிற்கு 27ம் தேதியும், கணிதம், பொது வேதியியல் பிரிவுகளுக்கு 28ம் தேதியும், தொழில் வேதியியல், தாவரவியல், விலங்கியல் பிரிவுகளுக்கு 29ம் தேதியும், பி.பி.ஏ., மற்றும் பி.காம்., பிரிவுகளுக்கு 30ம் தேதியும், ஆங்கில இலக்கிய பிரிவிற்கு ஜூலை 1ம் தேதியும், பொருளியல் மற்றும் தமிழ் இலக்கியம் பாடப் பிரிவுகளுக்கு 4ம் தேதி ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
 

          தகுதியுள்ள மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அசல் மற்றும் நகல் சான்றுகள், உரிய கட்டணம் மற்றும் பெற்றோருடன் காலை 9 மணிக்கு கல்லூரிக்கு வரவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




Read more »

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கிள்ளை : 

          சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் உள்ள அரசு கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

           கோடை விடுமுறைக்கு பின் கடந்த 15ம் தேதி கல்லூரி துவங்கியது. நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு வந்த இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததையும், கல்வி உதவித் தொகையை வழங்காததை கண்டித்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்தனர். இந்திய மாணவர் சங்க சிதம்பரம் நகர செயலாளர் கோபால் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்



.

Read more »

Owners of Nagarjuna Fertilisers and Chemicals to use circuitous route to raise holding


      Roughly how much would a 13% stake in Hyderabad-based Nagarjuna Fertilisers and Chemicals cost if one were to pick it up in the market? About Rs 175 crore (based on Monday's closing price on the BSE). The company's promoters, however, are going to increase their stake by 13 percentage points by investing just Rs 30 crore.

       The shortcut taken by the KS Raju-run company, the flagship of the Nagarjuna group, has gone unnoticed. Sure, the market has been showing a sort of indifference, which is not how it usually reacts to merger schemes. And analysts, for want of clarity on the merger, are keeping mum.



Read more »

Move to expand green cover says, Cuddalore Collector V. Amuthavalli



Collector V. Amuthavalli inspecting the paediatric ward in the Cuddalore government hospital.


CUDDALORE: 

       Collector V. Amuthavalli has fixed a target of planting as many as two lakh saplings across the district before August 15.

        She said this after planting a sapling at the Cuddalore headquarters government hospital here on Tuesday. Ms. Amuthavalli told presspersons that in a bid to expand greenery across the district, employees of the Revenue Department, Education Department and the district rural development agency, school and college students, and, private organisations would be involved.

         Ms. Amuthavalli said that a total of 200 saplings were planted at the government hospital on Tuesday under the aegis of the Green Cross Society. She entrusted the responsibility of taking care of the saplings to employees of the hospital. She said that the surgical unit in the hospital would be renovated at a cost of Rs. 13 lakh and the expenditure would be met by the Chemplast Sanmar Ltd. here.

           Later, Ms. Amuthavalli inspected various wings of the hospital, including the labour ward, paediatric wards, surgical wings and dialysis unit. She also inspected the intensive care unit for children. She said that she would carry out surprise checks at government hospitals to ascertain their functionality and cleanliness. Joint Director (Health Services) Kamalakannan, Hospital Superintendent Ramachandran, Resident Medical Officer Govindarajan, Green Cross Society secretary Sankar, Chief Executive Officer of Chemplast Mohan, District Environmental Engineer (Tamil Nadu Pollution Control Board) Raja and others were present.





Read more »

Officials urged to be cautious as old age pension applicants rise in Chidambaram

CUDDALORE: 

       After the government increased the old age pension amount to Rs.1,000 a month from Rs.500, there has been an overwhelming response to the scheme and it is discernible from the spate of applications received in the Chidambaram unit of the Social Welfare Department, according to C.D.Appavu, secretary, Consumer Guild of Tamil Nadu.

        In a representation addressed to the Secretary of the Social Welfare Department, Mr. Appavu noted that though it was a welcome trend the officials ought to exercise caution in identifying the real target groups from among the flux of applicants. Certain claimants may not deserve to get the benefit and yet they might persist with their attempt to get the assistance through covert means. It would be a gigantic task for the officials to scrutinise each application. It was also learnt that middlemen had already cropped up to exploit the situation. Hence, to streamline the disbursement of old age pension, without leaving out the really deserving persons, the government ought to make public the eligibility criteria in simple terms so even the illiterate can understand them and stake their claim, Mr. Appavu added.




Read more »

The Federation of the Cuddalore District Parents-students' forum plea to government

CUDDALORE: 

        The Federation of the Cuddalore District Parents-Students' Associations has appealed to the State government to arrange for the prominent display of the new fee structure determined by the Justice Raviraja Pandian Committee in schools.

        President of the Federation Balki said the schools that had gone in for appeal against the recommendations of the Justice Govindarajan Committee were fighting shy of putting up the new fee structure on their notice boards. Therefore, in a recent meeting held here, the Federation adopted a resolution. It said that in the interest of parents and students, these schools should adopt a transparent fee structure and return the excess amount, if any, already collected from them. The Federation has called upon the Collector and the District Education Officer to take action against the schools that defy the rules. It also decided to stage a demonstration in front of the Educational Department on June 29.



Read more »

Government department property attached

CUDDALORE: 

       The Chidambaram sub-court on Tuesday attached the property of the office of Adi Dravidar Special Tashildar for non payment of compensation for land acquired in 1986.

        Two persons deployed by the court took away tables, chairs and ceiling fans from the office located on the premises of the Revenue Divisional Officer at Chidambaram. It is stated that through the special tashildar, land measuring 129 cents at Valaiyamadevi in Sethiathope block was acquired in 1986. But, the payment promised was not made to the original owners. Hence, six of them sought legal recourse to claim the money. Though the trial court and subsequently the Madras High Court directed the official to pay compensation, it was not complied with. Since the case was reverted to the trial court, it ordered for attachment of the property.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior