உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 19, 2011

கடலூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலால்அழிந்து வருகின்றன


சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைகள்.
 
சிதம்பரம்:

          விவசாயத்தில் லாபமின்றி நலிந்து போனதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் விளைநிலங்கள் தற்போது தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தாரால் வாங்கப்பட்டு வீட்டுமனை அமைக்கப்பட்டு நகர்களாக மாறி வருகிறது.  

            கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள் காவிரி டெல்டா பாசன பெறும் கடைமடை பகுதியாகும். குறிப்பாக இரண்டு தாலுகாக்களில் விவசாயம் தொழிலாக தொன்று, தொட்டு நடைபெற்று வருகிறது.  இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் 3 போக சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் அதிகம் லாபம் பெற்று வந்தனர். ஆனால் குறிப்பிட்ட 10 ஆண்டுகளாக வறட்சி, வெள்ளம் போன்றவற்றாலும், வேளாண் இடுபொருள்கள் விலையேற்றம், ஆள் பற்றாக்குறை, நூறு நாள் வேலை திட்டத்தால் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் விவசாயம் லாபமின்றி நலிந்து வருகிறது. 

              இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலங்களை விற்றுவிட்டு நகர்புற பகுதிக்கு குடியேறி வருகின்றனர். இதனை ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு விவசாயிகளிடம் விளை நிலங்களை பெற்று நகர்களை அமைத்து வீட்டுமனைகளை விற்று வருகின்றனர். பொதுமக்களும் வங்கியில் பணத்தை டெபாசிட் போடுவதை விட மனையை வாங்கி பின்னர் அதிக விலைக்கும் விற்று லாபம் பெறும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விளைநிலங்களில் பிளாட் போட்டாலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.  

             குறிப்பாக சிதம்பரம் நகரின் கிழக்கு பகுதியில் நக்கரவந்தன்குடி, மீதிகுடி உள்ளிட்ட பகுதிகளிலும், தெற்கு பகுதியில் வல்லம்படுகை வரையும், வடக்குப் பகுதியில் சி.முட்லூர் வரையிலும், மேற்குப் பகுதியில் கண்ணங்குடி மற்றும் புத்தூர் குறுக்குரோடு வரையிலும் விளை நிலங்கள் முழுவதும் ரியல் எஸ்டேட் அதிபர்களால் நகர்கள் அமைக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதே போன்று காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, சிவாயம், பி.முட்லூர், புதுச்சத்திரம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு நகர்கள் போடப்பட்டுள்ளது.  

               ரியல்எஸ்டேட் நிறுவனத்தினர் நகர்கள் அமைத்தால் ஒன்று அல்லது 2 மனைகளை அந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கு இலவசமாக வழங்குவதால் அவர்கள் நகர் அமைக்க ஊராட்சி மன்ற அனுமதி வழங்கி வருகின்றனர். இதனால் விவசாயத் தொழில் அழிந்து வரும் நிலை உள்ளது. எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் விளைநிலங்கள் நகர்களாக அமைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  





Read more »

வீராணம் குடிநீர் இன்றுமுதல் சென்னைக்கு விநியோகம்

வீராணம் ஏரி நீரை சென்னைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி, சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்

நெய்வேலி:

          நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து நீரேற்று நிலையத்திலிருந்து வீராணம் நீரை சென்னைக்கு அனுப்பிவைக்கும் பணி மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது. 

                இதை நகர்ப்புற நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து சென்னை நகர மக்களுக்கு வீராணம் குடி நீர் விநியோகிக்கும் பணி செவ்வாய்க்கிழமைமுதல் மீண்டும் தொடங்கப்படும் என அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.  கடந்த 2004-ம் ஆண்டு ரூ. 720 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட புதிய வீராணம் திட்டத்தின் மூலம் 13. 288 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் சென்னைக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வீராணம் ஏரியில் நீர் இருப்பு குறைந்தததாலும், தூர்வாரும் பணி நடைபெற்றதாலும், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் இந்த ஆ மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. 

               இதையடுத்து இம்மாதம் 10-ம் தேதி வீராணம் ஏரியிலிருந்து நீர் எடுக்கப்பட்டு வடக்குத்து சுத்திகரிப்பு நிலையம் வரை 22 கி.மீ. நீளமுள்ள குடிநீர் குழாய் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, வடக்குத்து நீரேற்று நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீரை சென்னைக்கு அனுப்பிவைக்கும் பணியினை திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.  இதன் மூலம் நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு வழங்கப்படவிருப்பதாகவும், திங்கள்கிழமை இரவு 8.30 மணிக்கு அனுப்பப்பட்ட இந்த தண்ணீர் ராட்சத குழாய்கள் வழியாக 6 மணி நேரத்தில் சென்னை போரூரை சென்றடையும் என்றும், அதன்பின்னர் சென்னை நகர பகுதிகளில் செவ்வாய்க்கிழமைமுதல் குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார். 

             சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், மற்றும் வீராணம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் 6095 மில்லியன் கன அடி நீர் உள்ளது.  இது மொத்த கொள்ளளவில் 48.67 சதவீதமாகும். இதன்மூலம் சென்னைக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க இயலும் எனவும் அமைச்சர் கே.பி.முனுசாமி மேலும் தெரிவித்தார். 





Read more »

கடலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் இலவச தொழிற்பயிற்சி

கடலூர்:

            தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த, 540 மாணவ மாணவியருக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி திங்கள்கிழமை தெரிவித்தார். 

 இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

            மேற்கண்ட இலவச தொழிற்பயிற்சிகளை அளிக்க, கடலூர் மாவட்டத்துக்கு ரூ. 33.54 லட்சம் நிதியை அரசு ஒதுக்கி இருக்கிறது. கீழ்காணும் நிறுவனங்களில் இலவச பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை.  

பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்: 

         ஏ.சி.டி இன்டர்நேஷனல் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் ஆப் ஐ.டி. டெக்னாலஜிஸ், 

         சிதம்பரம். மல்டிமீடியா மற்றும் அனிமேஷன் பயிற்சி. 6  மாதம். கல்வித் தகுதி 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு.

           ஸ்ரீ விருத்தாம்பிகை குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், விருத்தாசலம். எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், ஏ.சி. மெகானிக், ஃபுட் புரொடக் ஷன், ஃபுட் பெவரேஜ் சர்வீசஸ். 12 மாதம். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. 

            கிரியேட்டிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்ட்ன்ஸி, கடலூர். ரீடெய்ல் மேனேஜ்மெண்ட் பயிற்சி. 12 மாதம். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. 

            நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூல். காட்டுமன்னார்கோயில். ஏ.சி. மெகானிக். 12 மாதம். 10-ம் வகுப்பு தேர்ச்சி. 

           ஸ்ரீ சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூல், வண்டிகேட் ,சிதம்பரம். ஏ.சி. மெகானிக்,  ஃபுட் புரொடக் ஷன். 12 மாதம். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. 

             வள்ளலார் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூல், வளையமாதேவி. ஏ.சி. மெகானிக், ஃபுட் புரொடக் ஷன். 12 மாதம். கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி. 

           மகாலட்சுமி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் இன்டஸ்ட்ரியல் ஸ்கூல், மஞ்சக்குப்பம், கடலூர். ஃபுட் புரொடக் ஷன், ஃபுட் பெவரேஜ் சர்வீசஸ். 12 மாதம். 10-ம் வகுப்பு தேர்ச்சி. 

             சி.எஸ்.சி. கம்ப்யூட்டர் எஜுக்கேஷன், திருப்பாப்புலியூர், கடலூர். டேலி இ.ஆர்.பி. 9. பயிற்சி காலம் 4 மாதம். 12-ம் வகுப்பு தேர்ச்சி. 

           மேற்கண்ட பயிற்சிகளில் சேர விரும்பும் மாணவ மாணவியர், சாதிச்சான்று, ஆண்டு வருமானச் சான்று (ரூ. 2 லட்சத்துக்குள்), ரேஷன் அட்டை, மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன், 

மேற்கண்ட நிறுவனம் அல்லது 

கடலூர் மாவட்ட மேலாளர்,
  
தாட்கோவிடம் விண்ணப்பப் படிவங்களை இலவசமாகப் பெற்று, பூர்த்தி செய்து,  29-7-2011 மாலை 5 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.






Read more »

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு

விஏஓ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 

முடிவுகளைத் தெரிந்து கொள்ள : 


அல்லது, 




Read more »

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு: 23ம் தேதி சிறப்பு முகாம்

கடலூர் : 

          கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 23ம் தேதி தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 

இதுகுறித்து கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

           சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் "செயின் கோபெயின்' நிறுவனம் உற்பத்தி தொழில் நுட்பம் என்ற ஐந்தாண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்க முன் வந்துள்ளது. இதில் சேர 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியின் போது மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் இதே நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர். 

            தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 23ம் தேதி காலை கடலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



For More Details










Read more »

கடலூருக்கு இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் ஸ்ரீகாந்த் வருகை

கடலூர்  முதுநகர் :

           "கிரிக்கெட் மூலம் அனைவரிடமும் எளிதாக ஐக்கியமாக முடியும்'' என இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் ஸ்ரீகாந்த் பேசினார். கடலூர் ரோட்டரி கிளப் மிட்டவுன் 2011 - 12 புதிய தலைவராக கூத்தரசன், செயலராக மணிகண்டன் பதவியேற்றனர். 

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர் இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் ஸ்ரீகாந்த் பேசியது: 

           கடலூர் கிரிக்கெட் கவுன்சிலும், ரோட்டரி கிளப்பும் இணைந்து கடலூர் நகரின் வளர்ச்சி பணிக்காக பாடுபட வேண்டும். எனது சொந்த ஊரான கடலூரில் கல்வியறிவு படைத்தவர்கள் அதிகம் உள்ளனர். எனது தந்தை மற்றும் உறவினர்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள். எனது பூர்வீக வீடு இப்பகுதியில் உள்ளது. கடலூரில் பொது நிகழ்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி அதிகமான பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். ஆன்லைன் மூலம் கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறேன். கிரிக்கெட் ஒரு சிறந்த மொழி இதன் மூலம் அனைவரிடமும் எளிதாக ஐக்கியமாக முடியும். இவ்வாறு ஸ்ரீகாந்த் பேசினார். விழாவில் நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், நடராஜன் பங்கேற்றனர். 




Read more »

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்

குறிஞ்சிப்பாடி : 

           குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது. 

              கல்லூரி நிர்வாக குழுத் தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முத்துக்குமரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சேரமான் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் வணங்காமுடி, அரசு கல்லூரி பேராசிரியர் தமிழ்செல்வன், அறிவழகன், முன்னாள் மாணவர் விஷ்ணுதாஸ் அகியோர் பேசினர். கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாக உறுப்பினர் ராமலிங்கம், வைத்தியலிங்கம், சுந்தரமூர்த்தி, மோகன் உட்பட கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.








Read more »

கடலூரில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மரக்கன்று நடுகிறார்

          சென்னையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து, தமிழகத்தில் இருந்து பசுமை புரட்சி தொடங்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறினார்.

          பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து, தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பசுமை கலாம் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் 17.07.2011 அன்று தொடங்கியது. வளசரவாக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, எக்ஸ்னோரா அமைப்பு, விவேக் நற்பணி மன்றம் மற்றும் அமெரிக்கன் கண் மருத்துவ மையம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சியில் நடிகர் விவேக் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை நட்டு, பசுமை கலாம் திட்டத்தை தொடங்கிவைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விவேக்,

           பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவில் மீண்டும் பசுமை புரட்சி ஏற்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். நாட்டில், நீர் வேண்டும் என்றால் மழை வேண்டும். மழை வேண்டும் என்றால் மரம் வேண்டும். நாட்டில், விவசாயம், மண் வளம், ஆக்சிஜன் ஆகியவை குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்னிடம் கூறினார். 10 லட்சம் மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்று, திருச்சியில் பசுமை கலாம் திட்டம் தொடங்கப்பட்டது.

           சென்னையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இன்று தொடங்கிவைத்துள்ளேன். வரும் 23 ந் தேதி கோவையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 25 ந் தேதி சேலத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்படும்.

         அதன்பிறகு, வேலூர், வேதாரண்யம், தஞ்சாவூர், அடுத்து நான் பிறந்த திருநெல்வேலி என ஒவ்வொரு ஊராக இந்த திட்டம் நிறைவேற உள்ளது. இறுதியாக 10 லட்சம் மரக்கன்றுகளின் இறுதி மரக்கன்றை கடலூரில் உள்ள கிராமம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நட்டுவைப்பார். ஒவ்வொருவரும் வீட்டில் 2 மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த விஷயம் மக்கள் மனதில் பதிய வேண்டும். இவ்வாறு மரக்கன்றுகள் நட்டால் காற்றில் நச்சுத் தன்மை குறையும். எனவே, தமிழகத்தில் இருந்து பசுமை புரட்சி தொடங்க வேண்டும்.  இவ்வாறு நடிகர் விவேக் பேசினார்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior