உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 13, 2011

பி.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு

                தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள், தனியார் சுயநிதி பி.எட். கல்லூரிகள் மொத்தம் 649 செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளின் மூலமாக பி.எட். மற்றும் எம்.எட் தேர்வுகள் கடந்த மே மாதம் நடந்தன.

        விடைத்தாள் திருத்தப்பட்டு கம்யூட்டரில் மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. 


இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் எம்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

             தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத் தின் கட்டுபாட்டிலுள்ள 649 கல்வியியல் கல்லூரி களுக்கான பி.எட். மற்றும் எம்.எட் தேர்வு முடிவுகள் இன்று (13-ந்தேதி) வெளியிடப்படும். அதனை பல்கலைக்கழக இணைய தளம்  http://www.tnteu.in வழியாக அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவின் தொகுப்பு பட்டியல் உரிய கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக தேர்ச்சி சான்றிதழ் இந்த மாத இறுதி வாரத்தில் அவரவர் படித்த கல்வியியல் கல்லூரிகள் மூலம் வழங்கப்படும். 

                   மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மறு கூட்டல், ஒளிநகல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் அதற் குரிய விண்ணப்பங்களில் உரிய கட்டணத்துடன் 24-ந்தேதிக்குள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.  








Read more »

சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் மாலை நேர படிப்புகள்

         சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் மாலை நேர படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

                  பகுதி நேர படிப்பாக ஊடகவியல் முதுநிலை பட்டப் படிப்பும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, மாலை நேர படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. ஆனால், அதன் பிறகு இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், பல்கலைக்கழகம் இப்போது மீண்டும் மாலை நேர படிப்புகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.  

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் க. திருவாசகம் கூறியது: 

              வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகத்தில் மீண்டும் மாலை நேரப் படிப்புகளை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதல் கட்டமாக இரண்டு ஆண்டு எம்.பி.ஏ. மற்றும் எம்.எஸ்சி. ஜியோமெட்ரிக்ஸ் ஆகிய இரண்டு படிப்புகள் நடப்பு கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளன. செப்டம்பர் 15-ம் தேதி முதல் இதற்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.  

பகுதி நேர படிப்பு: 

             இதுபோல், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பணிபுரிவோர் பயன் பெறும் வகையில் ஊடகவியலில் முதுநிலை பட்டப் படிப்பு, பகுதி நேர படிப்பாக நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

                இந்த இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புக்கு, ஆண்டுக்கு 30 நாள்கள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும். 10 நாள்களுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டியது கட்டாயம்.

 கல்வித் தகுதி: 

                    இந்த மாலை நேர மற்றும் பகுதி நேர முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, ஏதாவது ஒரு இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றார்.






Read more »

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திர தினவிழா: ஆட்சியர் அமுதவல்லி கொடி ஏற்றுகிறார்

கடலூர்:

           கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நாளை மறுநாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் காலை 9.30 மணிக்கு கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                   மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 15ம் தேதி கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் காலை 9.30 மணிக்கு கலெக்டர் அமுதவல்லி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் தியாகிகளை கவுரவிக்கிறார். தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 223 பயனாளிகளுக்கு 24.38 லட்சம் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்குகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. 




Read more »

காட்டுமன்னார்கோவில் பகுதியில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் புகைப்படம் எடுக்கும் பணி

காட்டுமன்னார்கோவில் : 

             காட்டுமன்னார்கோவில் பகுதியில் முதியோர் உதவித் தொகை பெறுபவர்களை புகைப்படம் எடுக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். 

              காட்டுமன்னார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கு சமூக நல பாதுகாப்பு பிரிவின் கீழ் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த மாதம் வரை 10 ஆயிரத்து 269 பேர் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்க வங்கிகளின் மூலம் நேரடியாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட தேசிய வங்கிகளில் அந்த பகுதியில் கணக்கு துவங்கப்படுகிறது.

               கடலூர் மாவட்டத்தில் முதன் முறையாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் இப்பணி துவங்கியுள்ளது. இப்பணியை கலெக்டர் அமுதவல்லி நேற்று ஆய்வு செய்தார். தாலுகா அலுவகத்திற்கு வந்த கலெக்டர், முதியோர் உதவித் தொகை பெற வங்கிகளில் கணக்கு துவங்குவதற்காக பணிகள் எந்த நிலையில் உள்ளது. அந்தந்த கிராமங்களில் முதியோர்களுக்கு புடைப்படம் எடுக்கும் பணி எப்படி நடந்து வருகிறது என கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். குமராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் ஒன்றிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.





Read more »

ஸ்ரீமுஷ்ணம் பி.எஸ்.எஸ். சமுதாய கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

ஸ்ரீமுஷ்ணம்:

              ஸ்ரீமுஷ்ணம் பி.எஸ்.எஸ்., சமுதாய கல்லூரி நர்சிங் உதவியாளர்கள் கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது.

                கல்லூரி நிர்வாகி பிரகாஷ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் ரவிக்குமார், கமல், ஆகியோர் விபத்து காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது பற்றி செயல் விளக்க பயிற்சி அளித்தனர். முகாமில் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி மாணவிகள், விரிவுரையாளர்கள் வள்ளி சுப்ரமணியன், சதீஷ், சரவணன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.





Read more »

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

குறிஞ்சிப்பாடி : 

             குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. நிர்வாக குழுத்தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். முகாமில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மற்றும் படிப்பை முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனி 14 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கியது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சேரமான், வணிகவியல் துறைத் தலைவர் சிவசங்கரன், பேராசிரியர் தினேஷ்பாபு செய்திருந்தனர்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior