உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 07, 2011

நெய்வேலியில் இலவச மின்சாரத்துக்காக போராடும் மக்கள்


நெய்வேலி தாண்டவன்குப்பம் பகுதியில் மின் கம்பியில் கொக்கிப் போட்டு முறைகேடாக பெறப்பட்டுள்ள மின் இணைப்புகள்.

நெய்வேலி:

                நெய்வேலி தாண்டவக்குப்பம் பகுதியில் வசிக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இலவச மின்சாரம் கேட்டு அவ்வப்போது சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.  

                நெய்வேலி தாண்டவன்குப்பம் பகுதியில் என்எல்சி ஊழியர்கள் வசித்து வந்தனர். அவர்கள் நிறுவன ஊழியர்கள் என்பதால் நிர்வாகம் தரை வாடகை ரூ.1 மட்டும் வசூலித்து, சலுகை விலையில் மின் இணைப்பு மற்றும் இலவச குடிநீர் வழங்கி வந்தது.  இந்நிலையில் தாண்டவன்குப்பம் பகுதியில் என்எல்சி-யின் சுரங்க விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், அப்பகுதியில் வசித்துவந்த ஊழியர்களுக்கு நெய்வேலி நகரப் பகுதியில் நிறுவன குடியிருப்பை வழங்கியது. 

              இதையடுத்து என்எல்சி ஊழியர்கள் நகரப் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் அப்பகுதியில் என்எல்சி நகர நிர்வாம் மேற்கொண்ட சேவைப் பணிகளை நிறுத்திக் கொண்டது.  இந்நிலையில் என்எல்சி ஊழியர்கள் அல்லாதோர் சிலர் தாண்டவன்குப்பம் பகுதியில் தற்காலிக குடிசை அமைத்து வசித்துவந்தனர். அவ்வாறு வசித்த வந்தவர்கள், நெய்வேலி தெர்மல் - மந்தாரக்குப்பம் சாலை மார்க்கத்தில் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பிகளில் முறைகேடான வகையில் மின் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். 

               இதையடுத்து அவ்வாறு முறைகேடான மின் இணைப்பில் ஈடுபடுவோர் மீது என்எல்சி சார்பில் காவல்நிலையத்தில் புகார் செய்தும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து நிர்வாகம் அவ்வழியே செல்லும் மின் இணைப்பை துண்டித்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அண்மைக் காலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்மையில் ஒரு இளைஞர் என்எல்சி அனல் மின் நிலைய கூலிங் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.  

இதுகுறித்து என்.எல்.சி. நகர நிர்வாக மின் பராமரிப்பு அலுவலர்கள் கூறுகையில்,

            என்எல்சி-யில் பணிபுரியும் ஊழியர்களிடம் மின் உற்பத்திக்கான செலவினங்களை கருத்தில் கொண்டு கட்டண அடிப்படையில் மின் இணைப்பு வழங்கி வருகிறோம். அதேபோன்று மாநில அரசுக்கும் அனல்மின் நிலைய கட்டுமான மதிப்பீட்டின் அடிப்படையில் மின்சாரத்தை விற்பனை செய்து வருகிறோம். மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்பது புரியவில்லை என்கின்றனர். 

             ஆனால் காவல்துறை தரப்பிலோ, "இவ்வுளவு நாள்கள் அவர்களை தங்கவும், மின் திருட்டைக் கண்டும் காணாமல் இருந்தும் அனுமதித்தவர்கள் தற்போது திடீரென புகார் கொடுப்பது ஏன்? பொதுமக்களையும் போலீûஸயும் மோதவிட்டுப் பார்க்கிறார்களா? அப்பகுதியில் மின் இணைப்பு தரமுடியாது, அந்த இடத்தை நிறுவனத்திற்கு தொடர்பில்லாத வேறு சிலர் ஆக்கிரமித்துள்ளனர் எனக் கூறும் நிர்வாகம், அவ்விடத்தை அகற்ற தயங்குவதேன்?' என்கின்றனர்.  

இதுகுறித்து தாண்டவன்குப்பம் பகுதி மக்களின் போராட்டக் குழுவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், 

               சுமார் 40 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்துவரும் இவர்கள் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.  தற்போது இவ்விடத்தை காலி செய்யச்சொல்லும் நிர்வாகம், எங்களுக்கு மாற்றுஇடம் வழங்க வேண்டும். இல்லையேல் மாற்றுஇடம் வழங்கும் வரை இப்பகுதிக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் வழங்கவேண்டும். இதுகுறித்து அமைச்சர் செல்வி ராமஜெயத்திடம் முறையிட்டுள்ளோம். அவரும் எங்களது நிலைக்குறித்து நிறுவனத் தலைவரை சந்தித்து விளக்கியுள்ளார். மேலும் தமிழக முதல்வரின் பார்வைக்கும் எங்களது கோரிக்கையை கொண்டு சென்றுள்ளார். எனவே நல்ல முடிவு கிடைக்கும் வரை மின் இணைப்பு வழங்கவேண்டும் என்றார் ராஜேந்திரன். 







Read more »

கடலூரில் 20 மணி நேரம் அரசு கேபிள் டி.வி. துண்டிப்பு

கடலூர்:
          கடலூரில் திங்கள்கிழமை இரவு முதல் சுமார் 20 மணி நேரம் கேபிள் டி.வி. துண்டிக்கப்பட்டது.  அரசு கேபிள் டி.வி.யில் 50 சேனல்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது அரசு. 

               ஆனால் அரசு கேபிள் டிவி. தொடங்கியது முதல் கடலூரில் 33 சேனல்கள் மட்டுமே கிடைத்து வந்தன. அதிலும் பொதிகை உள்ளிட்ட பல சேனல்கள் தெளிவாக இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் கட்டணச் சேனல்களான சன் குழுமச் சேனல்கள், ஸ்டார் விஜய் சேனல்கள், ஜீ தமிழ் சேனல்கள் போன்றவை முற்றிலும் கிடைக்க வில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பிட்ட சில சேனல்களில் குறிப்பிட்ட நல்ல நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தவர்களுக்கு அவை அரசு கேபிள் டிவியில் கிடைக்கவில்லை என்றதும் கவலை அடைந்துள்ளனர்.  

               சன் குழுமம் உள்ளிட்ட கட்டண சேனல்கள் கிடைப்பது குறித்து, அந்த சேனல்களின் நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்திய பிறகே அந்தச் சேனல்கள் கிடைக்கும் என்கிறார்கள், உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள். மேலும் உள்ளூர் கேபிள் டிவிக்களில் பணியாற்றுவோர் குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்காததால், கேபிள் டிவி லைன்களில் பாதிப்பு ஏற்பட்டால் யார் சரிசெய்வது என்ற சிக்கலும் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை பகல் வரை சுமார் 20 மணி நேரம் கடலூரில் கேபிள் டிவி முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 
  
இதுகுறித்து கடலூரில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறியது 

                   அரசு கேபிள் டிவி. தொடங்கப்பட்டு இருப்பதால், இதைச் சரிசெய்ய தொழில்நுட்ப ரீதியாக எங்களால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.  செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து கேபிள் டிவி இணைப்பு கிடைத்த போதிலும், 10 சேனல்கள் மட்டுமே கிடைத்தன. அதிலும் ஜெயா டிவி சேனல்கூட தெளிவாகக் கிடைக்க வில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.  இந்த நிலையில், பலர் டிஷ் ஆன்டென்னா மூலம் டிடிஎச் சேவையைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
          
 இதுதொடர்பாக முதல் அமைச்சர் மற்றும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு:  
            அரசு கேபிள் டிவியில் சில சேனல்கள் மட்டுமே கிடைக்கின்றன. கட்டணச் சேனல்கள் கிடைக்கவில்லை. அடிக்கடி கேபிள் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. பல சேனல்கள் தெளிவாக இல்லை. அரசு கேபிள் டிவியில் அளிக்கப்படும் சேனல்கள் வெளிப்படையான தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

                 தற்போது தமிழகத்தில் சென்னையில் மட்டும் அமலில் இருக்கும் மத்திய அரசின் கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.  மத்திய அரசின் கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டத்துக்கு உள்பட்டதாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் அமைக்கப்பட வேண்டும். நுகர்வோர் விரும்பும் சேனல்களை பார்ப்பதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கேபிள் டிவி நுகர்வோருக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்த, உள்ளூர் சேனல்களை மீண்டும் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும்.  கேபிள் டிவி இணைப்பில் பிரச்னைகள் ஏற்படும்போது புகார்களைத் தெரிவிக்க மாவட்ட அளவிலும் தாலுகா அளவிலும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.






Read more »

Proceedings against Cuddalore Prison officials

            The State government has ordered both criminal and departmental proceedings against certain officials of the Central Prison in Cuddalore, who caused the death of a prisoner in 2009. The goverment, by an order dated August 5 this year, had directed the Cuddalore District Collector to take criminal action and the Additional Director General of Police (Prisons) to initiate departmental action against the officials responsible for the death of Amul Babu alias Amul on August 4, 2009.
 
           A copy of the GO was produced before Justice D Hariparanthaman of the Madras HC on Tuesday in connection with a writ petition praying for action against the perpetrators of the crime and seeking adequate compensation to Amul’s family. The order follows a report filed by the inquiry officer stating that Amul’s death was not a case of suicide and that it was a murder, the recommendations of Cuddalore District Collector and a direction from the State Human Rights Commission.

           The accused persons are M Balasubramanian, Sivakozhundhu, Sivaprakash, Mandiramurthy, Ganeshan, M Ramakrishnan, M Maruthapandian, Sekar, Jagannathan, Natarajan and Jayaraman. Amul had been arrested in connection with a case registered by Puliyanthope police and he was lodged in the central prison in Vellore. He was transferred to Cuddalore prison in July, 2009. When Amul, who sustained serious injuries inside the prision, was taken to a hospital, he died on the way on August 4, 2009.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior