உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 14, 2011

நாகப்பட்டினத்தில் ரூ.30 கோடி மதிப்பில் மீன்வளப் பல்கலைக்கழகம்

                  நாகப்பட்டினத்தில் ரூ.30 கோடி மதிப்பில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் செவ்வாய்க்கிழமை அவர் படித்த அறிக்கை:

              தமிழகம் 1,076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. 591 கடல் மீனவ கிராமங்களில், சுமார் 9 லட்சம் மீனவ மக்கள் உள்ளனர். 6,200 மீன்பிடி விசைப் படகுகளும், 50 ஆயிரம் பாரம்பரிய கலன்களும் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன.

             தமிழகத்தில் கடல் மீன் உற்பத்தி 4 லட்சம் டன்னாகும். தமிழகத்தில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன .இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் இரண்டாவது மீன்வளக் கல்லூரி 1977-ல் தூத்துக்குடியில் நிறுவப்பட்டது. தமிழகத்தில் மீன்வளத்தைப் பெருக்குவதில் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே வேளையில், அதற்குத் தேவையான கல்வி அறிவைப் பெருக்குவதற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது.

                இந்த அடிப்படையில், மீன் வளத்துக்கென மீன்வளப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ அரசு முடிவெடுத்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் 188 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. மீன் பிடித்தல், உலர் மீன் உற்பத்தி, இறால் வளர்ப்பு ஆகியவை அந்த மாவட்டத்தின் முக்கியமான பொருளாதார நடவடிக்கைகள். அந்த மாவட்டத்தில் 9 ஆயிரம் மீன்பிடிக் கலன்கள் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ளன.

              நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மீன்வளப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நாகப்பட்டினம் மிகவும் உகந்த இடமாக உள்ளதால் அங்கு அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. நாகப்பட்டினம் தாலுகாவில் பனங்குடி, நாகூர் கிராமங்களில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.30 கோடி மதிப்பில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். 

 பல்கலைக் கழகத்தில் இணைக்கப்படுவது எவை? 

 முதல்கட்டமாக, தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,

மீன்வளத் துறையின் ஆராய்ச்சிப் பிரிவு, 

சென்னையில் உள்ள மீன்வளத் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம், 

சென்னையில் உள்ள மீன்வளப் பணியாளர் பயிற்சி நிலையம், 

தமிழ்நாடு கடல்சார் கழகம் 

                  ஆகியன புதிய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்.இந்தப் பல்கலைக்கழகத்தில் இறால் வளர்ப்பு, கெண்டை மீன் வளர்ப்பு, வண்ண மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல், மீன் மதிப்பு கூட்டியப் பொருள்கள் உற்பத்தி, மீன்பிடி படகு மற்றும் இயந்திர பராமரிப்பு ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் வழங்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.










Read more »

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போர் 68 லட்சம் பேர்

              வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 68 லட்சத்து 5 ஆயிரம் பேர் ஆகும்.

            இந்தத் தகவல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்த விவரம்

             வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தல், புதுப்பித்தல், பதிவு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட முக்கியப் பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.

           மாநிலத்திலுள்ள 37 வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 

           

2010-ம் ஆண்டில், 11 லட்சத்து 54 ஆயிரத்து 121 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். 

             கடந்த மார்ச் நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 68 லட்சத்து 5 ஆயிரத்து 248 ஆகும்.

                நடப்பாண்டு பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவினை ஆன்-லைன் வசதியைப் பயன்படுத்தி இணையதளத்தில் பதிந்து கொண்டனர்.

                   இத்தகைய முறையால், பிளஸ் 2 மாணவர்கள் 4 லட்சத்து 78 ஆயிரத்து 717 பேரும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 7 லட்சத்து 2 ஆயிரத்து 962 பேரும் தங்களது பதிவினை ஆன்-லைன் மூலம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









Read more »

கடலூர் மாவட்டத்தில் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிப்போர் புதிய படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்

கடலூர்:

          பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் வரும் 19ம் தேதி முதல் புதியதாக வடிவமைக்கப்பட்ட மனுவை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
 
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பாஸ்போர்ட் மையத்தில் 19ம் தேதி முதல் பாஸ்போர்ட் கோரி பெறப்படும் மனுக்கள் தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகள் வருமாறு:

              புதியதாக வடிவமைக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். புதிய விண்ணப்பப்படிவம் வெளிவிவகாரத் துறை அமைச்சக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

               மாவட்ட பாஸ்போர்ட் மையத்தில் 18 வயதுக்குட்பட்டவர் உட்பட அனைவருக்கும் புதிய பாஸ்போர்ட் கோரும் விண்ணப்பங்கள் மட்டும் பெறப்படும். விண்ணப்பத்தாரர்கள் புதிய படிவத்தில் பேனாவால் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பழைய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கப்படும் மனுக்கள் பெறப்படமாட்டாது.விண்ணப்பக் கட்டணம் மண்டல கடவுச்சீட்டு அலுவலர், சென்னை என்ற முகவரியிட்டு சென்னையில் பெறத்தக்க வகையிலான வரைவு கேட்போலையாக மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

                 பாஸ்போர்ட் மையத்தில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களின் நிலை குறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் புதிய 15 இலக்க கோப்பு எண் விவரம் இளையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.மாவட்ட பாஸ்போர்ட் மையங்களில் 15ம் தேதி வரை மட்டுமே பழைய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். 

இதர சேவை வேண்டுவோர் 

சாலிகிராமம், 
நெல்சன் மாணிக்கம் சாலை, 
தாம்பரம் 

பாஸ்போர்ட் மையங்கள்


No. 1, Bhanumathi Ramakrishna Road, Saligramam, Chennai






Navins Presidium, No. 103, Nelson Manickam Road, Aminjikarai, Chennai 


Claret Complex, Duraisamy Reddy Street, Tambaram, Chennai


ஆகிய பாஸ்போர்ட் மையங்களில் நேரடியாக சென்று விசாரித்துக் கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


MORE DETAILS






 Form Download 



 

Read more »

கடலூர் மாவட்டத்தில் 6 கோவில்களில்அன்னதான திட்டம் துவக்கம்

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் 6 கோவில்களில் அன்னதான திட்டம் துவங்கியது. இந்து அறநிலையத் துறையின் மானிய கோரிக்கையின் போது முதல்வர் ஜெயலலிதா மேலும் 106 கோவில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார். 

               அதன்படி  முதல் தமிழக கோவில்களில் விரிவாக்கப்பட்ட அன்னதான திட்டம் துவங்கியது. 

கடலூர் மாவட்டத்தில் 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவில், 

ஸ்ரீமுஷ்ணம் பூவராகவசுவாமி கோவில், 

சிதம்பரம் தில்லை காளி கோவில், 

நெய்வேலி வேலுடையான்பட்டு சுப்ரமணியசுவாமி கோவில், 

பெண்ணாடம் பிரளய காளேஸ்வரி கோவில், 

திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையா சுவாமி கோவில் 

            என 6 கோவில்களில் அன்னதான திட்டம் துவங்கியது. கடலூர் வரதராஜபெருமாள் கோவிலில் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார். கலெக்டர் அமுதவல்லி, முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், நகர செயலர் குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலர் குமார், ஜெ.,பேரவை நகர செயலர் கந்தன், ஒன்றிய செயலர் பழனிச்சாமி, கோவில் நிர்வாக அலுவலர் வெங்கடேசன், பாடலீஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் மேனகா உட்பட பலர் பங்கேற்றனர். 

               அன்னதான திட்டத்திற்கு பக்தர்கள் இதுவரை 64 ஆயிரத்து 300 ரூபாய் நன்கொடை வழங்கியுள்னர். இதில் கடலூரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா 5,000 ரூபாய் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம்: தில்லை காளி கோவிலில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன்நாதன், கோவில் நிர்வாக அலுவலர் சிவக்குமார், திருவந்திபுரம் கோவில் நிர்வாக அலுவலர் வெங்கடகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். நெய்வேலி: வேலுடையான்பட்டு கோவிலில் எம்.எல்.ஏ.,க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் துவக்கி வைத்தனர். என்.எல்.சி., செயல் இயக்குனர் சிவஞானம், அ.தி.மு.க., தொழிற் சங்க பிரமுகர்கள், ஜெ., பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.





Read more »

நெல்லிக்குப்பம் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு தே.மு.தி.க. சார்பில் நிவாரண உதவி: எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து வழங்கினார்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/9682124e-07e2-4cf5-92ff-a5093d8765dd_S_secvpf.gif
நெல்லிக்குப்பம்:

          நெல்லிக்குப்பம் மவுலி அப்துல் ரஹ்மான் வீதியை சேர்ந்த முகமதுகான் என்பவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் சரபுதீன், முகமதுகனி, முகமது அனீபா ஆகியோரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த சாம்பலானது.
 
               இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ. தீ விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதன்பின் தே.மு.தி.க. சார்பில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய், வேட்டி-சேலை, அரிசி ஆகியவைகளை சிவக்கொழுந்து எம்.எல்.ஏ. வழங்கினார். அவருடன் நகர செயலாளர் கஜேந்திரன், நகர பொருளாளர் நாகராஜன், நகர மாணவர் அணி செயலாளர் இசைவேந்தன், த.மு.மு.க. நகர தலைவர் அப்துல் ரஹீம், உசேன், ராஜாஹாஜா மொய்தீன், முகமது அனீப், அப்துல் ரஹ்மான், முகமது ஜிபேல், இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Read more »

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் அன்னதான திட்டம்: அமைச்சர் செல்விராமஜெயம் தொடங்கி வைத்தார்

சிதம்பரம்:
 
             சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் செல்விராம ஜெயம் தொடங்கி வைத்தார்.   கடந்த 1992-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்கினார்.

                   பின்னர் இத்திட்டம் மாநில அளவில் 306 கோயில்களுக்கு விரிவுப் படுத்தப்பட்டது, தற்போது மேலும் 106 கோயில்களில் விரிவுபடுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது, அதன்படி தமிழகத்தில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது,   கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை தமிழக சமூகநலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் தொடங்கிவைத்தார், இந்து அறநிலைய இணை ஆணையர் ஜகநாதன், செயல் அலுவலர் சிவக்குமார், கட்சி நிர்வாகிகள் ராபர்ட், மருதவாணன், அமைச்சரின் உதவியாளர் ஜெயசீலன், உள்ளீட்டோர் பங்கேற்றனர்.

             இந்நிகழ்ச்சியில் சுமார் 300 பெருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, தில்லைக் காளியம்மன் கோயிலில் தினந்தோறும் திங்கள்கிழமை முதல் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என செயல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். 
 
 
 
 
 
 
 
 

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே திருவாடுதுறை ஆதினமடத்தில் தூக்கில் காவலாளி பிணம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/99cf8674-00b7-443e-8102-06659624c8f1_S_secvpf.gif
 
சிதம்பரம்:

              சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே உள்ள மாலை கட்டி தெருவில் திருவாடுதுறை ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் மேலாளர் கார்த்திகேயன். சிதம்பரம் எம்.கே.தோட்டத்தை சேர்ந்த கண்ணன் (வயது 45) காவலாளியாக இருந்து வந்தார். 2 பேரும் அந்த மடத்திலேயே தங்கி வேலை செய்து வந்தனர்.  

             காவலாளி கண்ணன் தினமும் அதிகாலையில் எழுந்து அந்த மடத்தில் உள்ள மெய்கண்ட தேவநாயனார் கோவில் பூஜைக்கு தேவையான மலர்களை மடத்தில் உள்ள நந்தவனத்தில் இருந்து பறித்து வருவது வழக்கம்.   இன்று காலையில் வெகுநேரமாகியும் கண்ணனை காணவில்லை. எனவே மடத்தின் மேலாளர் கார்த்திகேயன் காவலாளியை தேடி நந்தவனத்துக்கு சென்றபோது அங்கு உள்ள மரத்தில் கண்ணன் வேட்டியால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

             இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் திருவாடுதுறை ஆதீன மடத்துக்கு விரைந்து சென்றனர். இடுப்பில் வேட்டியை மடித்துக் கட்டிய நிலையில் மரத்தில் பிணமாக தொங்கி கொண்டிருந்த கண்ணனின் உடலை மீட்டனர்.  பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 
 
அதில் கிடைத்த தகவல்கள் :-   
 
                    தூக்கில் பிணமாக தொங்கிய கண்ணனின் சொந்த ஊர் நாகை மாவட்டம் தர்காசி. திருமணமாகாத இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியுடன் சிதம்பரம் எம்.கே.தோட்டத்தில் குடியேறினார். கண்ணனுக்கு திருவாடுதுறை ஆதீனம் மடத்தில் உடனடியாக காவலாளி வேலை கிடைத்துள்ளது.

                   தினமும் தனக்கு அளித்த வேலைகளை அவர் செய்து பொறுப்பாக வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த மடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலாளர் காத்திகேயனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருட்டுப்போனது. இதுபற்றி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்யப்பட்டது.   இதுபற்றி கார்த்திகேயன் கேட்டபோது, அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ராமர் இந்த மோட்டார் சைக்கிளை எடுத்ததை பார்த்ததாக கண்ணன் கூறியுள்ளார்.

                இதுபற்றி ராமரிடம் கார்த்திகேயன் கேட்டபோது தான் திருடவில்லை என அவர் மறுத்து விட்டார். அதன் பிறகு நேற்று மாலை கண்ணனையும், மேலாளர் கார்த்திக்கேயனையும், பால்வியாபாரி ராமர் திட்டியுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் ஆதினமடத்தில் உள்ள நந்தவனத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்ணன் பிணமாக கிடந்துள்ளார். எனவே கண்ணன் சாவுக்கான உண்மையான காரணம் என்ன? அவரை யாரேனும் அடித்து தூக்கில் தொங்கவிட்டனரா? அல்லது போலீஸ் விசாரணைக்கு பயந்து கண்ணன் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டை விடுதலை செய்யக்கோரிய மனு தள்ளுபடி

             சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஜான்டேவிட் மருத்துவக் கல்வி பயின்றார். அவருடன் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரின் மகன் நாவரசு மருத்துவக் கல்வி படித்தார்.

                   இந்த நிலையில் நாவரசு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து 11.3.98 அன்று கடலூர் செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது. செசன்சு கோர்ட்டு உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜான் டேவிட் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஜான் டேவிட்டை 5.10.01 அன்று விடுதலை செய்து உத்தரவிட்டது. பின்னர் போலீஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

           அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, செசன்சு கோர்ட்டு பிறப்பித்த ஆயுள் தண்டனை தீர்ப்பை உறுதி செய்து 20.4.11 அன்று உத்தரவிட்டது. தற்போது ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அவரது தாயார் எஸ்தர் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தபோது, அவரது வயதை கருதாமல் பொது சிறையில் அடைத்துவிட்டனர்.

               சிறுவராக இருக்கும் ஒருவரை சிறுவர் சீர்திருத்தச் சட்டப்படி பொது சிறையில் அடைக்கக் கூடாது. சிறுவர் இல்லங்களில்தான் வைக்க வேண்டும். 21 வயதுக்கும் மேற்பட்டவரைத்தான் பொது ஜெயிலில் அடைக்க முடியும்.
எனவே ஜான் டேவிட்டை பொது சிறையில் அடைத்தது சிறுவர் சீர்திருத்தச் சட்டத்தை மீறியதாகும். சட்டவிரோத காவலில் அவரை போலீசார் அடைத்திருந்தனர். எனவே இந்த சட்டவிரோத நடவடிக்கைக்காக ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

                 இந்த மனுவை நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதால், மனுவை திரும்பப் பெறுவதாக எஸ்தர் தரப்பில் வக்கீல் குறிப்பிட்டார். மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.














Read more »

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1025 கல்லூரி உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமனம்

        அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப 1025 உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில்,

             ’’உயர் கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உயர்கல்வி மானிய கோரிக்கையின்போது 2011-2012-ம் ஆண்டில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1025 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன.

                கல்லூரி கல்வி இயக்குனரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. நீதிமன்றத்தில் வழக்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட 10 பணியிடங்களை தவிர்த்து 1025 உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிடலாம் என்று ஆணையிடப்படுகிறது. தேவையான விவரங்களை கல்லூரி கல்வி இயக்குனரிடம் பெற்று நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.










Read more »

Petition seeking release of lifer dismissed release of John David

             The Madras High Court today dismissed as withdrawn, a petition seeking the production and release of John David, serving life imprisonment for the 1996 murder of a first year medical student. The petition's mother J Esther said that at the time of murder her son was 19-years-old and 20 years when convicted in 1998. She submitted that as per the Tamil Nadu Borstal Schools Act and a ruling of the Supreme Court, "adolescent offenders" had to be detained in a Borstal School only upto 23 years of age. Therefore, he could not be sent to prison to serve the remaining part of the sentence. 

              Hence, the detention of her son, who had crossed the age of 23 years, was illegal, the petitioner claimed. On March 11, 1998, a Cuddalore District Sessions Judge had sentenced David, a second-year medical student to a double life imprisonment for murdering Pon Navarasu, son of former Madras University Vice-Chancellor Dr P K Ponnusamy. David was, however, absolved of the crime by the Madras High Court on October 5, 2001. On April 20 last the Supreme court overturned the High Court order and restored the trial court's verdict. Recording an endorsement by the petitioner's counsel withdrawing the petition with the liberty to raise the plea before the appropriate court, a Division Bench comprising Justices C Nagappan and M Satyanarayanan dismissed the petition as withdrawn.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior