உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 12, 2011

பண்ருட்டியில் வாக்காளர்களுக்கு சேலை கொடுக்க சென்ற தே.மு.தி.க. பெண் வேட்பாளர்

பண்ருட்டி
           பண்ருட்டியில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக புதுவை மாநில பதிவு எண்ணுடன் ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. அந்த ஆட்டோவை போலீசார் வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் சேலையால் கட்டப்பட்டிருந்த 10 மூட்டைகளை பிரித்து பார்த்த போது 182 சேலைகளும், 335 சட்டைகளும் இருந்தன.  

              ஆட்டோவில் பயணம் செய்து வந்த பெண்ணிடம் விசாரித்தனர். இதில் அவர் பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த முருகனின் மனைவி சவுமியா என்பதும், பண்ருட்டி நகராட்சி 27-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க அந்த சேலைகள், சட்டைகளை அவர் ஆட்டோவில் கொண்டு வந்தது தெரிய வந்தது.  அந்த துணிகளின் மதிப்பு சுமார் ரூ.19 ஆயிரம் ஆகும்.   அதைத்தொடர்ந்து சவுமியாவும், ஆட்டோ டிரைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பிரச்சாரம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/1e78f8a7-085a-4ec9-8d74-652ca810a8da_S_secvpf.gif

கடலூர்:

கடலூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து  மத்திய மந்திரி ஜி.கே. வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:-

             தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அமைப்புகளுக்கான தேர்தல் மிக முக்கியமான கட்டத்தில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி 43 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி ஆதரவால் திராவிட கட்சி ஆண்டதோடு நிறைய உள்ளாட்சி இடங்களையும் கைப்பற்றியது.  
 
            தமிழகத்தில் உள்ளாட்சி உறுப்பினர்கள் செயல்பாடுகள் மக்களின் எண்ணத்திற்கு ஏற்றவாறு இல்லை. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் செயல்படுவார்கள். மக்களால், மக்களுக்காக தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர்கள்.இந்த உயர்ந்த நிலையை உருவாக்கிய காங்கிரசையும், ராஜீவ்காந்தியையும் வாக்காளர்கள் மறந்து விடக் கூடாது. உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படுத்தும் வகையில் காங்கிரசார் செயல்படுவார்கள்.  

               மத்தியில் சோனியாகாந்தி வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசின் திட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசின் கிராமப்புற, நகர்புற வளர்ச்சிக்கு உறுதுணை யாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்த வரையில் மாநகராட்சி, நகராட்சி கிராமங்களுடைய வளர்ச்சி குறித்து மத்திய அரசு அக்கறை கொண்டு உள்ளது. மேலும் பல திட்டங்களுக்கு பல கோடி ஒதுக்கி தமிழகத்தில் கிராமப்புற, நகர்புற வளர்ச்சிக்கு அடித்தளமாக செயல்படு கிறது.

                இதனை பெருமையுடன் கூறுகிறேன். இதற்கு உதாரணமாக அகில இந்திய திட்டங்கள் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க கூடிய பலதிட்டம் உள்ளது. பாரத நிர்வாண் திட்டம் மூலம் நகரங்கள் அருகாமையில் உள்ள கிராமத்தில் நகரங்களுக்கு கிடைக்ககூடிய அனைத்து வசதிகளும் கிடைக்க ரூ.58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தனர். இந்த நிதி கடந்த ஆண்டை விட 21 சதவீதும் உயர்வாகும்.

               மேலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் ஏழை எளிய மக்கள் அதிகளவில் பயன் பெறுகிறார்கள். இதைத்தொடர்ந்து அடிப்படை கட்டமைப்பு வசதிக்காக மத்திய அரசு ரூ.2 லட்சத்து 16 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், கிராமங்கள் மென்மேலும் வளருவதற்காகவும் மத்திய அரசு அடித்தளமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.



Read more »

K.N.Nehru stays away from electioneering from Cuddalore prison on bail

        Former transport minister and DMK candidate in Trichy west assembly by-election, K N Nehru, who was released from Cuddalore prison on bail on Monday night after 45 days in custody, chose to stay away from campaigning on the last day of electioneering for the October 13 bypolls on Tuesday.

      Nehruas release from the jail followed Trichy judicial magistrate V Maheswari Banurekhaas refusal to extend his remand. His brother K N Ramajayam and Trichy deputy mayor M Anbazhagan were also released on Monday. Amidst reports that police were planning to arrest him again, Nehru did not surface in Trichy on Tuesday. He met DMK president M Karunanidhi at the Chennai railway station on Tuesday morning and sought his blessings. Later, he went through a health check-up at a private hospital in Chennai and since then there is no trace of him. Meanwhile, the government filed a revision petition before the Madurai bench of the Madras high court to set aside the lower court order. Court has served notice on Nehru. asThe governmentas idea is to keep Nehru on his toes until the first phase of the local body elections are over on October 17,a? charged one of the lawyers appearing for him.

           The first by-election since the AIADMK came to power is special to both the arch-rivals, the DMK and AIADMK. The DMK is banking on the 30% Muslim population in the segment. It is hoping against hope that Muslims will ditch the AIADMK for not fielding a member of that community in the place of late Mariam Pitchai. It also seeks to capitalize on the DMDKas walking out of the AIADMK camp. It may be noted that Pitchai had managed a lead of just 7,179 votes in the last polls.

          On the contrary, Jayalalithaa had won with a comfortable margin of 41,848 votes in the neighboring Srirangam constituency. K N Nehruas losing margin was the lowest among all the nine seats in the district, seven of which were captured by the AIADMK. Out of the remaining two, one went to the DMDK, and another to the DMK. In the campaign, the DMK is focusing on the asvindictivea? politics of the AIADMK government. Though the DMK cadres were all set make it a sort of victory parade on Monday evening when K N Nehru was granted bail, their enthusiasm was doused by the delay in his release. Also, his going underground on Tuesday is a dampener.

         DMK Rajya Sabha MP, T M Selvaganapathy who is part of Stalinas entourage in the electioneering, told TOI that Nehru did not appear in public because he would be required to appear in the court any time.








Read more »

கடலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்


 முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை 

             கடலூர் மேற்கு மாவட்டம் கீரப்பாளையம் துணை செயலாளர் கர்ணன், ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி சுகந்தி, கே ஆடூர் காலனி கிளை செயலாளர் ஆசைத்தம்பி, ஒன்றிய மாணவரணி துணை தலைவர் ஜெயச்சந்திரன், பரங்கிப்பேட்டை ஒன்றியம் பிச்சாவரம் ஊராட்சி செயலாளர் பால்ராஜ், மடுவன்கரை காலனி கிளை செயலாளர் ஜெயபால், மஞ்சக்குழி ஊராட்சி செயலாளர் மாலிக், 6-வது வார்டு பாலையா, குமாராட்சி கிளை செயலாளர் ராஜேந்திரன், நந்திமங்கலம் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், வல்லம்படுகை மெயின்ரோடு காலனி கிளை செயலாளர் ராஜேந்திரன், மங்களூர் ஆ.களத்தூர் கிளை செயலாளர் ராமலிங்கம், பரங்கிபேட்டை பேரூராட்சி 8-வது வார்டு செயலாளர் ஜெயசங்கர், 14-வது வார்டு செயலாளர் ரவிச்சந்திரன்.  அண்ணாமலை நகர் பேரூராட்சி அவை தலைவர் குஞ்சுபாண்டியன்,         பேரூராட்சி இணை செயலாளர் கலாவதி, 11-வது வார்டு செயலாளர் நடராஜன், பேரூராட்சி செயலாளர் செல்வராஜ், பொருளாளர் லோகநாதன், 12-வது வார்டு செயலாளர் ஜெயராமன். பெண்ணாடம் பேரூராட்சி பாபு ராஜேந்திரன், கெங்கைகொண்டான் பேரூராட்சி அவை தலைவர் பிரபு. ஆகியோர் இன்று முதல் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் அ.தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior