உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 13, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஓட்டுச் சீட்டுகள் தயார்

கடலூர்:

              உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டுகள் நேற்று அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள், 16 பேரூராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகளுக்கு 17, 19 தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் உறுப்பினர் என இரண்டு பதவிகள் மட்டுமே உள்ளதால் இந்த தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

              ஆனால் ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளதால், இப்பதவிகளுக்கான தேர்தலுக்கு ஓட்டுச் சீட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக விருத்தாசலம் அரசு அச்சகத்தில் நான்கு வண்ணங்களில் 50 லட்சம் ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது.

          முதல் கட்டமாக வரும் 17ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் விருத்தாசலம் நகராட்சிகளுக்கும், மேல்பட்டாம்பாக்கம், தொரப்பாடி, கங்கைகொண்டான், மங்கலம்பேட்டை மற்றும் பெண்ணாடம் ஆகிய பேரூராட்சிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

                  அதேப்போன்று வரும் 17ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ள அண்ணாகிராமம், பண்ருட்டி, கம்மாபுரம், விருத்தாசலம், நல்லூர் மற்றும் மங்களூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேவையான ஓட்டுச் சீட்டுகள் விருத்தாசலம் அரசு அச்சகத்தில் அச்சடித்து அங்குள்ள அரசு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று கிராம ஊராட்சி வார்டு, கிராம ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான ஓட்டு சீட்டுகள் ஒன்றியம் வாரியாக பிரித்து அந்தந்த ஒன்றியங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.








Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 27 ஓட்டு எண்ணும் மையங்களில் 9 மையங்கள் மாற்றம்

கடலூர்:

       கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 27 ஓட்டு எண்ணும் மையங்களில் 9 மையங்கள் மாற்றப்பட்டுள்ளது.
 
கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

        உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. 13 ஒன்றியங்களுக்கான தேவையான ஓட்டுப்பெட்டிகள் மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு தேவையான ஓட்டுச் சீட்டுகள் அரசு அச்சகத்தில் அச்சடித்து விருத்தாசலம் அரசு குடோனிலிருந்து 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.ஒன்றியக்குழு கவுன்சிலர் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டுகள் மாவட்ட அளவில் அச்சடித்து 100 சதவீதம் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
 

          பதிவாகக்கூடிய ஓட்டுகளை எண்ணுவதற்காக ஏற்கனவே 27 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், தற்போது நிர்வாக மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், கம்மாபுரம், மங்களூர் ஒன்றியங்களுக்கும், பண்ருட்டி, நகராட்சி மற்றும் குறிஞ்சிப்பாடி, வடலூர், பெண்ணாடம், திட்டக்குடி ஆகிய பேரூராட்சி ஓட்டு எண்ணும் மையங்களை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஒன்றியம்: 

        காட்டுமன்னார்கோவில் - ஆர்.சி., மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை-சி.முட்லூர் அரசு கல்லூரி, விருத்தாசலம்-அரசு கல்லூரி, கம்மாபுரம்-வடலூர் வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளி, மங்களூர்-திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

நகராட்சி: 

                பண்ருட்டி-பண்ருட்டி சுப்ராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம்-விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

பேரூராட்சி: 

           குறிஞ்சிப்பாடி, வடலூர்-குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. திட்டக்குடி, பெண்ணாடம்-திட்டக்குடி அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளி. அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் குடிநீர், கழிவறை, மின் விளக்கு, ஒலிப்பெருக்கி வசதிகள் மற்றும் பாதுகாப்பிற்காக கம்பி வேலி மற்றும் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது என செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.






Read more »

Cuddalore Students spending their exam holidays for local body election

CUDDALORE: 

       While every other student is spending their exam holidays in leisure, some have taken the initiative to help their friend’s father, who is contesting for a ward member post, in the local body election.

         S Karthikeyan, father of a Class nine student K Kaviya Arasan, is contesting from ward number eight in Cuddalore Municipality for the Congress party. It was Kaviya and his seven friends who took up the duty of spreading the message of the arrival of Union Minister GK Vasan in Cuddalore on Sunday evening. They disseminated the message to the residents by using loudspeakers attached to an auto.

          The children began their canvassing on October 3 after Karthikeyan was announced as the Congress candidate. They are also campaigning for AS Chandrasekaran who is a chairman candidate. These students, who are not even eligible to vote, said they are doing this only for the reason of friendship and not for money. R Anandhan, a student, said, “Many people are campaigning for money. But we are campaigning merely for the sake of friendship and without expecting anything from my friend. Friendship is above money.”

      The group hired an auto and has been canvassing 10 am to 5 pm everyday during the holidays. “We have decided to spend our holidays in campaigning for my classmate’s father as he is very close to all of us. During free time we play together at Kaviya Arasan’s house. His father knows us well,” said S Revinkumar and G Ajay, schoolmates of Kaviya Arasan. Karthikeyan, congress candidate, said, “They have been coming to my house every day and are very close to my son. They do not know much about politics and moreover they may not have any knowledge of how politics work. But they are doing this solely because of friendship. ”

           In most of the campaigns it is very common to see people campaigning for certain parties because of leaders or ideologies or caste or money but in this case it is rather surprising to see how the children value their friendship.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior