உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 16, 2011

கடலூர் மாவட்டத்தில் நடக்கும் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் நடக்கும் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 
             உள்ளாட்சித் தேர்தல் நாளை (17ம் தேதி) முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் எஸ்.பி., பகலவன் தலைமையில், 2 ஏ.டி. எஸ்.பி.,க்கள் 11 டி.எஸ். பி.,க்கள் 53 இன்ஸ்பெக்டர்கள், 101 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2,700 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை, ஓய்வு பெற்ற ராணுவத்தினர், போலீசார் உட்பட 1,300 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 106 மொபைல் டீம் கண்காணிப்பில் ஈடுபடுவர். மேலும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு கம்பெனி (120 பேர்) படையினர், தமிழ்நாடு சிறப்புப் படையினர் 120 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர் .வரும் 19ம் தேதி நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 127 மொபைல் டீம் போலீசாரும் பணியில் ஈடுபட உள்ளனர்.

              ஒவ்வொரு மொபைல் டீமிலும் ஆயுதம் தாங்கிய ஒரு சப் இன்ஸ்பெக்டர், இரண்டு போலீசார் இருப்பர்.மேலும் ஏ.டி.எஸ். பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான 60 அதிரடி படைகள் தயார் நிலையில் இருக்கும். ஒவ்வொரு அதிரடி படைக்கும் ஐந்து போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்கள் 120, தனியார் வாகனங்கள் 135 பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. முதல் கட்ட தேர்தலுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார் நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் இருந்து அந்தந்த பகுதிக்கு வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.









Read more »

அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி படிப்பில் சேருவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

சிதம்பரம்:

        அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி படிப்பில் சேருவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் தொலைதூரக் கல்வி படிப்பில் சேருவதற்கு சலுகை கட்டணம் மற்றும் தற்போதைய மாணவர்கள் கூடுதல் படிப்பில் சேருவதற்கான கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களும் அமலில் உள்ளது.பொதுமக்களின் வசதிக்காக தொலைதூரக் கல்வியில் சேருவதற்கான தேதி நவம்பர் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

          படிப்புகள் பற்றி முழு விவரங்களையும் இந்தியா முழுமையும் உள்ள படிப்பு மற்றும் தகவல் மையங்கள், 

04144-238610, 238043, 238044, 238045, 238046, 238047 தொலைபேசி, www.annamalaiuniversity.ac.in

என்ற இணையதளம்

dde@annamalaiuniversity.ac.in
 

 என்ற மின்னஞ்சல், 

தொலைத்தூரக் கல்வி இயக்ககம், 
அண்ணாமலை நகர் - 608 002 

ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read more »

சிதம்பரத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பழுதாகி நின்றது

சிதம்பரம்:
 
          திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு வந்தது. இன்று காலை 6.25 மணிக்கு சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வரவேண்டிய இந்த ரெயில் 6.55 மணிக்கு தாமதமாக வந்தது. சிதம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது ரெயில் என்ஜினில் இருந்து பெரும் புகை கிளம்பியது.

            ரெயில் என்ஜின் டிரைவர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் பார்த்தபோது என்ஜின் வால்வு பகுதியில் பழுதாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயிலை புதுசத்திரத்தில் நிறுத்தி அதில் இருந்த என்ஜினை கொண்டு வந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொறுத்தினர். இதைத்தொடர்ந்து 7.40 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சுமார் 2 மணி நேரம் ரெயில் என்ஜின் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior