உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 20, 2011

தமிழகத்தில் மின் கட்டண மதிப்பீட்டு முறையில் மாற்றம்: எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டண அறிவிப்பு

          தமிழகத்தில் மின் கட்டண மதிப்பீட்டு முறையில் விரைவில் மாற்றங்களைச் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

               இப்போதுள்ள மீட்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் மீட்டர்களைப் பொருத்தி, மின் பயன்பாட்டு அளவைக் கணக்கிட வரும் அலுவலருக்காக வீட்டில் அட்டையை வைத்துக் கொண்டு எதிர்பார்க்கும் நிலையை முடிவுக்குக் கொண்டு வரவும் அது தீர்மானித்துள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த நவீன வசதி காரணமாக மின் பயன்பாட்டு கட்டணம் குறித்த தகவல் நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் மூலம் வந்து விடும்.

பெரிய நகரங்களில்...

           முதல் கட்டமாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம்,திருநெல்வேலி உள்ளிட்ட 110 நகரங்களில் ரேடியோ அதிர்வலைகளைக் கொண்ட டிஜிட்டல் மின் கணக்கீட்டு மீட்டர்களைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

              இப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் மின் கணக்கீட்டு அலுவலர் வந்து கையடக்க கருவியில் மின் பயன்பாட்டு அளவை பதிவு செய்து கொண்டு, அதற்குரிய மின் கட்டணத்தைமின் நுகர்வோர் பயன்பாட்டு அட்டையில் எழுதிக் கொடுத்தும் செல்கின்றனர். இவ்வாறு மின் பயன்பாட்டு அளவை அலுவலர் பதிவு செய்த பிறகு, அலுவலகத்துக்குச் சென்று கம்ப்யூட்டரில் மீண்டும் பதிவு செய்யும் நிலை உள்ளது. இதனால் அலுவலர் பதிவு செய்த அடுத்த தினமே இப்போது மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்த முடியாத நிலை உள்ளது.

              அறிமுகமாக உள்ள நவீன டிஜிட்டல் முறை மின் கணக்கீட்டின்படி, கணக்கீட்டு அலுவலர் குறிப்பிட்ட குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்றவுடன் அங்குள்ள டிஜிட்டல் கருவிகளில் உள்ள மின் பயன்பாட்டு கணக்கீடுகள் அனைத்தும், அலுவலரின் கையடக்க கருவிக்குள் சேமிக்கப்பட்டு விடும். இதையடுத்து மத்திய கம்ப்யூட்டர் தொகுப்புக்கு மின் பயன்பாட்டு கணக்கீடு மற்றும் மின் கட்டண தகவல்கள் அனுப்பப்படும். இதைத் தொடர்ந்து எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் மூலம் நுகர்வோருக்கு மின் கட்டணத் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்









Read more »

கடலூரில் தொடர்ந்து சேதம் அடையும் பாதாள சாக்கடை மூடிகள்


கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் பாதாள சாக்கடைத் திட்ட, ஆள் இறங்கு குழியில் விழுந்து கிடக்கும் சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்ட லாரி.
கடலூர்:
 
           கடலூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளில், ஆள்இறங்கு குழிகளின், மேல்மூடிகள் இப்போதே தொடர்ந்து சேதம் அடைந்து வருகின்றன. 
 
                 இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன.ரூ.60 கோடியில் நிறைவேற்றப்பட்டு வரும் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தில், 25 ஆயிரம் ஆள்இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதாளச் சாக்கடையில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டால், இக்குழிகள் வழியாக இறங்கி அடைப்புகளை அகற்ற முடியும். இவைகள் ஆள் இறங்கு குழிகள் என்று அழைக்கப்பட்டாலும், திட்டப் பணிகள் முடிவடைந்து, செயல்படும் காலத்தில் அடைப்புகளை அகற்ற, இயந்திரம் பயன்படுத்தப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.எப்படி இருப்பினும் திட்டம் செயல்படத் தொடங்கும் முன்னரே, இந்த ஆள் இறங்கு குழிகளில் போடப்படும் மூடிகள் பெரும்பாலானவை, உடைந்து விடுகின்றன.
 
                இதனால் பெருமளவில் ஆபத்தும் காத்து இருக்கிறது என்று பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். மூடிகள் தரமானதாக இல்லாததே இப்பிரச்னைகளுக்குக் காரணம். திட்டம் செயல்படத் தொடங்கு முன்னரே, நூற்றுக்கணக்கான மூடிகள் உடைந்து, நாள் கணக்கில் கேட்பாரற்றுக் கிடந்து, பலரும் புகார் தெரிவித்த பிறகு, அவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.ஆள்இறங்கு குழிகளில் மூடிகள் உடைந்து, லாரிகள் உள்ளிட்ட பல வாகனங்களும் அடிக்கடி குழிகளில் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு இத்தகைய விபத்து நேரிட்டால் அவரது கதி என்னவாகும் என்பதே மக்கள் தெரிவிக்கும் அச்சம்.
 
                    திட்டம் செயல்படும் காலத்தில், சாக்கடை நிரம்பியிருக்கும் நிலையில், மூடிகள் உடைந்து இத்தகைய விபத்து நேரிட்டால், சுற்றுப்புற சுகாதாரம் கேள்விக் குறியாகுமே என்பதும், மக்கள் எழுப்பும் மற்றொரு சந்தேகம்.
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் உள்ளாட்சி கட்ட தேர்தலில் 81 சதவீதம் ஓட்டுப்பதி

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 81 சதவீதம் ஓட்டுப்பதிவானது.

கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவில் கடலூர், சிதம்பரம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்களின் ஓட்டுப்பதிவு சதவீதம் விவரம்:

நகராட்சி: 

கடலூர் 71, 
சிதம்பரம் 75.1.
 
பேரூராட்சி:

குறிஞ்சிப்பாடி 84,
வடலூர் 79, 
திட்டக்குடி 80, 
சேத்தியாத்தோப்பு 79, 
ஸ்ரீமுஷ்ணம் 83, 
காட்டுமன்னார்கோவில் 75, 
லால்பேட்டை 65, 
அண்ணாமலை நகர் 81, 
புவனகிரி 82, 
கிள்ளை 77, 
பரங்கிப்பேட்டை 71.

ஊராட்சி ஒன்றியங்கள்: 

கடலூர் 86, 
குறிஞ்சிப்பாடி 88, 
மேல்புவனகிரி 87.83, 
கீரப்பாளையம் 86.58, 
பரங்கிப்பேட்டை 83.36, 
குமராட்சி 68.28, 
காட்டுமன்னார்கோவில் 84.72.

மாவட்டம் முழுவதும் 81 சதவீதம் ஓட்டுப் பதிவானது.




Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியம் : நோயாளி இறந்ததால் மருத்துவமனை சூறை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/1ee4a85d-bc68-4108-9bd5-fd1167de57dc_S_secvpf.gif
 
கடலூர்:

          கடலூர் முதுநகர் அருகே உள்ள சுத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமகுரு (வயது 40) இவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இவரது உறவினர்கள் பரமகுருவை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

             அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பரமகுருவுக்கு அங்கு பணியில் இருந்த டாக்டர் தம்பையா சிகிச்சை அளித்தார். பின்னர் தீவிர இருதய சிகிச்சை பிரிவில் பரமகுரு அனுமதிக்கப்பட்டார். டாக்டர் தம்பையா சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் பரமகுரு இறந்து போனார். பரமகுருவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்காததால்தான் இறந்ததாக கருதி ஆத்திரம் அடைந்த பரமகுருவின் உறவினர்கள் நோயாளிகள் பரிசோதனை அறை மற்றும் மருந்து-மாத்திரை வழங்கப்படும் அறை ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

              மேலும் டாக்டர் அறையில் இருந்த மேஜை-நாற்காலிகளை தூக்கி வீசி சூறையாடினார்கள். மேலும் டாக்டர் வைத்திருந்த ஸ்டெதஸ்கோப்பையும் பிடுங்கி வீசினர்.   இதனால் டாக்டர்கள், நர்சுகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.  இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. வன்முறை கும்பல் ஆஸ்பத்திரி கண்ணாடிகளை கைகளால் உடைத்ததால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு ஆங்காங்கே ரத்தம் வழிந்தோடியது.  

              இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  மேலும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மனோகரன், நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.    மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
 

Read more »

பி.எஸ்.என்.எல் அறிமுகம் : குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் பூஸ்டர் கார்டு

         மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம், தனது 2ஜி, 3ஜி “பிரி பெய்டு” வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் வசதிக்கு பூஸ்டர் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது.

          கனடா, அமெரிக்கா,  ஹாங்ஹாங், சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு நிமிடத்துக்கு 1.49 செலவில் பேச மாதம் ரூபாய் 41-க்கு பூஸ்டர் கார்டு உபயோகிக்கவேண்டும். இதே வசதியை 7 நாட்களுக்கு மட்டும்  வேண்டுமானால் ரூபாய்-18.கான பூஸ்டர் கார்டுகளை பயன்படுத்தலாம். பூஸ்டர் கார்டு இல்லாமல் பேசுபவர்களுக்கு நிமிடத்திற்கு ரூபாய் 7.20, கட்டணம் வசூலிக்கப்படும்.

             இதேபோல, வங்கதேசம், ஜெர்மனி, மலேசியா ஆகிய நாடுகளுக்கு நிமிடத்திற்கு ரூபாய் 2.99 செலவில் பேச மாதத்திற்கு ரூபாய் 27.க்கான பூஸ்டர் கார்டு உபயோகிக்கவேண்டும். பக்ரைன், பிரான்சு, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கு நிமிடத்துக்கு 4.49 கட்டணத்தில் ஒரு மாதத்திற்கு பேச, ரூபாய் 38,க்கு பூஸ்டர் கார்டு பயன்படுத்த வேண்டும். இதே நாடுகளுக்கு ஒரு வாரத்துக்கு மட்டும் பேச ரூபாய்-16,க்கான பூஸ்டர் பயன்படுத்தினால் போதும். மேற்கண்ட நாடுகளுக்க் சாதாரணமாக இப்போது பேசும் திட்டத்தில் நிமிடத்திற்கு 9 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

              ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பூட்டான், குவைத், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு நிமிடத்திற்கு 6.49 செலவில் பேச, மாதம் 24 ரூபாய்க்கான “பூஸ்டர் கார்டு” உபயோகிக்கவும். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேடு ஆகிய நாடுகளுக்கு நிமிடத்திற்கு 4.80 கட்டணத்தில் பேச மாதம் 26- ரூபாய்க்கான “பூஸ்டர் கார்டு” போட வேண்டும். இந்த ஐந்து “பூஸ்டர்” கார்டுகளையும் ஒரே நேரத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று பி.ஏ.என்.எல் சேலம் கோட்ட மேலாளர் வழங்கிய  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.  








Read more »

80 per cent polling recorded in second phase Local Body Election

         Around 80 per cent of the 1.92 crore electors on Wednesday cast their votes in the second phase of local body elections. Polling went off without any major violence.

      In the second phase, 65 municipalities, 270 town panchayats and 194 panchayat unions were covered. Elections to the posts of about 30,450 village panchayat ward members, 5,900 village panchayat presidents, 3,160 panchayat union ward members and 320 district panchayat ward members were also held.

Among those districts which crossed the 80 per cent mark were 

Tiruchi – 83.5 per cent;
Perambalur – 82.5 per cent;
Dindigul – 81 per cent and 
Cuddalore – 80 per cent. 

           Eighty-three town panchayats and 37 panchayat unions in the western districts registered polling in the range of 81 to 84 per cent. In the first phase held on Monday, about 77 per cent of eligible voters exercised their franchise.

          In Ramanathapuram district where a Dalit boy was murdered in early September, about 600 voters of Pachery village, from where the boy hailed, boycotted the elections as they demanded probe by the Central Bureau of Investigation into the Paramakudi firing. The village formed part of Mandalam Manickam village panchayat.

          In Tirunelveli, one person was stabbed in a scuffle at Mottaiyanur near Alangulam. Kandasamy, candidate of the Communist Party of India (Marxist) in a ward of Palani municipality, was injured in an attack.

          In Krishnagiri district where a booth in Chengazhaneerpatti was said to have been rigged by members of the ruling AIADMK, the authorities ordered repoll, which would be held on Thursday. In a ward of Thuraiyur municipality of Tiruchi district, the police had to use to mild force to disperse a group after a candidate was reported to have canvassed in front of a booth which was objected to by a rival candidate.

         In the village panchayats of Pappapatti, Keeripatti and Nattarmangalam of Madurai district which had eluded till 2006 the conduct of proper elections owing to opposition of certain sections of residents to the posts of presidents being reserved for Scheduled Castes, the polling was peaceful. In the same district, Dalit residents of Gramapatti village exercised their franchise for the first time in a local body election. 







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior