உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 25, 2011

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவர் அடித்து கொலை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/8aba1341-2d5d-4d3d-a260-ec2b7679c256_S_secvpf.gif
சிதம்பரம்:

        சிதம்பரத்தில்  அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி யில் வெளிமாநில மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இதில் அசாமை சேர்ந்த துருபஜோதி தத்தா (வயது 21) பி.இ. மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் பீகாரை சேர்ந்த ராஜேஷ் ரோஷன் (19), அங்கித் குமார் (19) ஆகியோரும் படித்து வந்தனர்.

            அவர்கள் 3 பேரும் நண்பர்கள். துருபஜோதி தத்தா, அங்கித்குமார் ஆகியோர் சிதம்பரத்தில் உள்ள முத்தையா நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். ராஜேஷ் ரோஷன் இன்னொரு வீட்டில் நண்பருடன் தங்கி இருந்தார். இவர்கள் 3 பேருக்கும் போதை பழக்கம் இருந்து வந்தது. பேப்பரில் எழுத்தை அழிக்க உதவும் ஒயிட்னரை போதை மருந்தாக மாற்றி அதை பயன்படுத்தி வந்தனர். நேற்று இரவு துருபஜோதி தத்தா வீட்டுக்கு ராஜேஷ் ரோஷன் வந்தார். 3 பேரும் போதை மருந்தை பயன்படுத்தினார்கள்.

               அப்போது ராஜேஷ் ரோசன் போதை அதிகமாகி தகராறில் ஈடுபட்டார். இதனால் துருபஜோதி தத்தா, அங்கித்குமார் இருவரும் ராஜேஷ்ரோசனை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை பூட்டினார்கள். இன்று அதிகாலை 4 மணிக்கு ரோஜேஷ்ரோசன் மீண்டும் அங்கு வந்தார். வீட்டு கதவை எட்டி உதைத்து தகராறு செய்தார். இதனால் கோபம் அடைந்த துருபஜோதி தத்தா மரக்கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். ஆனால் ராஜேஷ்ரோசன் அந்த மரக்கட்டையை பறித்து துருபஜோதி தத்தாவை சரமாரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துருபஜோதி கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திர் ஓடிவந்தனர். அவர்கள் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

                ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் ரோஷனை பிடித்து விசாரித்து வருகின்றனர். அங்கித்குமாரிடமும் விசாரணை நடக்கிறது. இன்று காலை வரையில் ராஜேஷ்ரோசன் போதை மருந்து மயக்கம் தெளியாமலேயே உளறியபடி இருந்தார்.

Read more »

கடலூர் அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ளாட்சி தேர்தல் தகராறு: 8 பேர் மீது வழக்கு பதிவு

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/5e5311f4-e5a9-4ac2-bf0a-2fc20708cd4f_S_secvpf.gif
 
 
கடலூர்
 
           கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆரங்கியும், அருள்நாதனும் போட்டியிட்டனர். இதில் ஆரங்கி வெற்றிப்பெற்றார். தோல்வி அடைந்த அருள்நாதன் கோபம் அடைந்தார். நேற்று மாலை 4 மணிக்கு ஆரங்கியின் மருமகன் பழனிவேல் (32) எம்.புதூரில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

            வெங்கடேஸ்வராநகர் அருகே அவர் வரும் போது அருள்நாதன் காரில் அங்கு வந்தார். டிரைவர் இளம்வழுதி காரை ஓட்டி வந்தார். பழனி வேலுவை அருள்நாதன் வழி மறித்து திட்டினார். உடனே பழனிவேல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வேகமாக சென்றார். ஆனால் அருள்நாதனும் இளம் வழுதியும் வேகமாக காரை ஓட்டிச்சென்று பழனிவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.  இதில் கீழே விழுந்தத பழனிவேல் அங்கிருந்து தப்பி ஓடினார். அருள்நாதனும், இளம் வழுதியும் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக திருப்பாபுலியூர் போலீசில் அவர் புகார் செய்தார்.

              இதையொட்டி அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.   இந்த நிலையில் எம்.புதூரில் ஆரங்கியன் வீட்டில் அவரது மனைவி குப்பு, உறவினர்கள் காந்தி, வெங்கடேசன், இளையபெருமாள், பூங்கொடி ஆகியோர் வீட்டில் இருந்தனர். மாலை 5.30 மணிக்கு அருள்நாதன், லெனின், சவுந்தர்ராஜன் உள்பட சிலர் வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டிலிருந்த டி.வி, மின்விசிறி, டியூப்லைட்டுகளை அடித்து உடைத்தனர்.

                இதை தடுத்த வெங்கடேசனை கத்தியால் குத்தினார்கள். குப்பு, காந்தி, இளையபெருமாள், பூங்கொடி ஆகியோரை இரும்பு குழாயால் தாக்கி விட்டு ஓடிவிட்டனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்தும் திருப்பாபுலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக அருள்நாதன், லெனின், சவுந்தர்ராஜன், சக்திவேல், சிவநாதன், ராஜீவ்காந்தி, வின்சென்ட், கண்ணன் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

Student from Assam killed in group clash at Annamalai University

Cuddalore:

           An engineering student from Assam has been killed in a group clash between students from Bihar and Assam studying at Annamalai University in Chidambaram in the district, police said. Dharupa Joth Dhatha (23), a third-year student, was killed last night when the students used deadly weapons in their they clash with each other near the university, police said. Two students of the university, including one from Bihar, has been arrested, they said. Adding that the clash took place due to previous enmity, they said police has been posted at the university in the aftermath of the incident. 









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior