உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 22, 2012

விருத்தாசலத்தில் தே.மு.தி.க.வினர் மோதல்: கட்சி அலுவலகம் சூறை

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/9d4cdf20-0b31-4b4b-b64b-d725ce437b62_S_secvpf.gif
விருத்தாசலம்:
       விருத்தாசலம் நகர தே.மு.தி.க. செயலாளராக பதவி வகித்து வந்தவர் சங்கர். சமீபத்தில் நகர செயலாளர் பதவியில் இருந்து சங்கர் மாற்றப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் புதிய நகர செயலாளராக சரவணன், தலைவராக கார்த்திக், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் கடந்த 18-ந் தேதி நியமிக்கப்பட்டனர். இது சங்கரின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
          புதிய நிர்வாகிகள் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் பரிந்துரையின் பேரில் தான் நியமிக்கப்பட்டதாக சங்கரின் ஆதரவாளர்கள் எண்ணினர். இதனால் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் கொடும்பாவியை எரித்தனர். மேலும் முத்துகுமார் எம்.எல்.ஏ. வீட்டின் ஜன்னலை உடைத்தனர்.
     இதுகுறித்து முத்துக்குமார் எம்.எல்.ஏ. விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் தனது வீட்டு ஜன்னலை உடைத்ததாக கூறி இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே செவ்வாய்கிழமை காலை சங்கரின் ஆதரவாளரான ஜல்லி செந்தில் என்பவர் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பாலக்கரை ரவுண்டானாவில் கண்டன போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த முத்துகுமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களான ஆசிரியர் பாஸ்கர், பாலமுருகன், சரவணன், ஜானகி ஆகியோர் ஜல்லி செந்திலை திட்டி தாக்கியதாக தெரிகிறது.
          மேலும் சங்கரின் ஆதரவாளரான வேல்முருகன் என்பவரின் காரையும் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் பொதுப் பணித்துறை ஆய்வு மாளிகை அருகே செயல்பட்டு வந்த சங்கரின் கட்சி அலுவலகத்தில் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் யாரோ புகுந்து அங்கிருந்த டி.வி., நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சில ஆவணங்களையும் கிழித்து எறிந்து விட்டு சென்று விட்டனர். இன்று காலை இதனை பார்த்த சங்கரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர்.
        போலீசார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். விருத்தாசலத்தில் தே.மு.தி.க.வினரிடையே தொடர்ந்து மோதல் சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 

Read more »

தமிழக அரசில் அரசியலில் மாற்றம்: வைகோ

சிதம்பரம்:
 
 சிதம்பரம் பி.முட்லூரில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல புதுமனை புகுவிழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியது:-  
 
           ம.தி.மு.க.வுக்கு தற்போது ஒளிமயமான எதிர்காலம் உருவாகி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் அதிக பாதிப்பு ஏற்பட்டு முந்திரி, பலா, வாழை, தென்னை மற்றும் நெற் பயிர்கள் அதிகமான பாதிப்பை ஏற்பட்டுத்தி இன்னும் 15 ஆண்டுகளுக்கு மக்கள் மத்தியில் இந்த அழிவு நீங்காத நிலையை ஏற்படுத்திவிட்டது.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு கான்கிரீட் வீடுகள் மட்டும் கட்டி கொடுக்காமல் அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
 
             தமிழக அரசில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த நடைபெற உள்ள சங்கரன் கோவில் இடைத்தேர்தல் ம.தி.மு.க. மகத்தான வெற்றிபெற என்னை ஆசிர்வதித்து அனுப்புங்கள். இந்த இடைத்தேர்தலில் ஊழலை எதிர்த்து எழுச்சியான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ம.தி.மு.க.வுக்கு மக்கள் கண்டிப்பாக ஒரு வாய்ப்பு தருவார்கள்.
 
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதலாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் அரசு வழங்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் மோகனசுந்தரம், கந்தசாமி, மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior