உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 27, 2012

கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில்பட்டமளிப்பு விழா


கடலூர்: 

     ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரை, மாணவர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா, பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்று ஊரகத் தொழில்கள் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.


கடலூர் புனித வளனார் கல்லூரி 18-வது பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கி, அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது:
 

   கிராமப்புற ஏழை எளிய மாணவ மாணவியருக்கும், இக்கல்லூரியில் ஆங்கிலக் கல்வி மற்றும் கணினிக் கல்வி சிறப்பாகக் கற்றுக் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் முன்னேற்றம் இளைஞர்களின் கைகளில் இருக்கிறது. கல்லூரிகள் பாடங்களைக் கற்கும் இடங்களாக மட்டுமன்றி, ஒழுக்கத்தையும் கற்றும்கொள்ளும் இடமாகத் திகழும்போது, பெற்றோர் மகிழ்ச்சி அடைகிறார்கள். மாணவப் பருவத்திலேயே சமூகப் பணி ஆற்றுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழகக் கல்லூரிகளில், விளையாட்டுத் துறையில் சிறந்த மாணவர்களை அதிகமாக இக்கல்லூரி உருவாக்கி இருப்பது பாராட்டத்தக்கது.


         முதலாம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரை மாணவர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்க, பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இலவச மடிக்கணினி வழங்க முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். வரும் ஆண்டில் 9.12 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட இருக்கிறது என்றார் அமைச்சர் சம்பத்.  பட்டமளிப்பு விழாவில் 682 மாணவ, மாணவியருக்கு பட்டங்களும், 25 மாணவ, மாணவியருக்கு பல்கலைக்கழக சிறப்புத் தகுதிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 

      விழாவுக்கு கடலூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முனைவர் அருமைச் செல்வம், தேர்வுத்துறை இயக்குநர் பெரியநாயகசாமி, துறைத் தலைவர்கள் சின்னப்பன், ஜெயந்தி ரவிச்சந்திரன், கிறிஸ்டி பெர்டினாண்ட் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 

Read more »

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் வினாடி வினா


காட்டுமன்னார்கோவில்:

   காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு 4 நாள் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. நான்காம் நாள் கருத்தரங்கில் கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கை கல்லூரி சேர்மன் கதிரவன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பொறியியல் கல்லூரி கம்யூட்டர் துறை பேராசிரியர் ஜெயராஜ், கியூமேக்ஸ் மேலாளர் கிருஷ்ணகுமார், சென்னை குரூப் ஆப் கம்பெனி டாக்டர் லதா பார்த்திபன் உட்பட பலர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். வினாடி வினாவில் பேராசிரியர் நக்கீரன் நடுவராக இருந்தார். மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினர். சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ஆனந்தவேலு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Read more »

பண்ருட்டி அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததானம் விழிப்புணர்வு கலந்துரையாடல்


பண்ருட்டி :

    பண்ருட்டி அடுத்த அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் எய்ட்ஸ் மற்றும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது.


  கல்லூரி முதல்வர் சவரிராஜ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். ரெட் ரிப்பன் கிளப் மாவட்ட மேலாளர் கதிரவன், பண்ருட்டி அரசு மருத்துவமனை ஆலோசகர் ரமாதேவி, மாவட்ட எச்.ஐ.வி., உள்ளோர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் எய்ட்ஸ் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் ரத்ததானம் வழங்குவதன் அவசியம் குறித்து பேசினர். 
என்.எஸ்.எஸ்., அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior