உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 10, 2012

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ராணுவ தேர்வில் பங்கேற்கவுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி

கடலூர்:

நெய்வேலியில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாமில் பங்கேற்கவுள்ள மாவட்ட இளைஞர்களுக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


        இந்திய ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் நவம்பர் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நெய்வேலி, பாரதி விளையாட்டரங்கில் நடக்கிறது. இந்த முகாமில் சிப்பாய், நர்சிங் உதவியாளர், எழுத்தர் மற்றும் தொழில் நுட்பப் பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு பெற்ற மற்றும் பதினேழரை வயதிலிருந்து 23 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். இந்த முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு கலெக்டர் சிறப்பு பயிற்சி முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் படி நெய்வேலியில் நடைபெறவுள்ள ராணுவ ஆள் தேர்வு முகாமில் பங்கேற்க விருப்பம் மற்றும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

          அதேப்போன்று எழுத்து தேர்விற்கான பயிற்சி முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கப்பட உள்ளது.ராணுவ ஆள் தேர்வு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள், சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க வரும் 15ம் தேதி மாலை 4 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ஆஜராகி பெயரை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கூறியுள்ளார். .

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior